Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:41 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16922
#KOTW16922
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 2, 2015
நகர்மன்றத் துணைத் தலைவர் கொடுத்த புகார் அடிப்படையிலான வழக்கில் சமூக ஆர்வலர் நிரபராதி என விடுதலை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2930 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் துணைத் தலைவர் எஸ்.எம்.முஹைதீன் என்ற மும்பை முஹைதீன் ஆவார். இவர் - கடந்த 2013ம் ஆண்டு, காயல்பட்டினம் சதுக்கை தெருவை சார்ந்த சமூக ஆர்வலரும், நகரின் மூத்த அ.தி.மு.க. உறுப்பினருமான மொஹிதீன் சதக்கத்துல்லாஹ் என்ற மீசை மொஹிதீன் மீது ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.

அதில் - ஜூன் 26, 2013 அன்று மதியம் 1:30 மணியளவில், குத்துக்கல் தெருவில் உள்ள மொஹிதீன் பள்ளிக்கு அருகே தான் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்ததாகவும், அவ்வேளையில் மீசை மொஹிதீன் - தன்னை அவதூறாக பேசியதாகவும், தன்னை மிரட்டியதாகவும், அப்போது அங்கு 17வது வார்டு உறுப்பினர் அஜ்வாது இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் - இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 294 (அவதூறான பேச்சு) மற்றும் 506 (கொலை மிரட்டல்) ஆகியவை கீழ், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (குற்றம் எண் 217/13), திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2.5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு தான் செல்லவே இல்லை என்றும், இது பொய்யான குற்றச்சாட்டு என்றும், மீசை மொஹிதீன் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுற்று, நேற்று (டிசம்பர் 1) - தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் - குற்றம்சாட்டப்பட்ட மீசை மொஹிதீன் நிரபராதி என்றும், அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
posted by Mohamed Hassan (Jeddah) [02 December 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42351

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

விடுதலை பெற்ற மொஹிதீன் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அராஜகத்தின் உச்சகட்டம்..
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [02 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42353

அல்ஹம்துலில்லாஹ்! படபடவென வெள்ளந்தியாக பேசும் பழகும் மெய்மாமா அவர்கள் 100% இந்த காரியத்தில் ஈடு பட்டிருக்கமாட்டார். புகார்தாரர்களைப் பற்றி ஊரறியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [04 December 2015]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42360

“வயசாயிடுச்சே? ஏதாவது சங்கத்துல, சதுக்கைல, கட்டிடங்கள்ல உக்காந்து கதை பேசி காலத்தை ஓட்டுவோம்!” என்ற நம்மூரின் சராசரி பெரியவர்களுக்கு இடையில், தனக்குச் சரியெனப் பட்டதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் துணிந்து சொல்பவரும், இறுதி வரை அதில் நிலைத்து நிற்பவரும்தான் எங்கள் மீசை மாமா!

அப்பேர்ப்பட்ட அவர்கள் மீதே பொய் வழக்குத் தொடுக்க ஒருவர் நாடுகிறார் என்றால், அதற்கான பலனை இந்த உலகத்திலேயே அவர் காண்பது நிச்சயம் - இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் அவர்களின் ஆயுளை சரீர சுகத்துடன் நீளமாக்கி வைத்து, இரு உலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்குவானாக, ஆமீன்.

இன்னும் ஒரு சமூக ஆர்வம் கொண்ட இளைஞர் மீதும் இதேபோன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரும் அதைத் துணிவுடன் சந்தித்து வருகிறார். விரைவில் அதிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம், இன்ஷாஅல்லாஹ்!

இப்போது தெரிகிறதா? பொதுவேலை என்றால் ஏன் யாரும் முன்வருவதில்லை என்று???

ஜா..........க்கிரதை! வழக்கு போட்டுருவோம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42406

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் .....யாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.......

விடுதலை அடைந்த ஜனாப் . ஹாஜி மாமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த '' வாழ்த்துக்கள்.....

உண்மையானர்கள் என்பது மாஷா அல்லாஹ் .... தங்களின் அழகு முகத்திலேயே தெரிகிறது ......

நேர்மைக்கு எப்போதும் வெற்றி உண்டு ......ஊரின் பொது நல சேவைகளில் தங்களின் பனி தொடரட்டும் ஹாஜி மாமா அவர்களே ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved