Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:09:37 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17237
#KOTW17237
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 28, 2016
'அதிமுக ஆட்சியில் லஞ்சம் அதிகரிப்பு'- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக பழ.கருப்பையா அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3497 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதாக பழ.கருப்பையா விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

"கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால், அப்படி விலக்கப்படுகின்ற அளவுக்கு நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும், கட்சியின் தலைமைக்கும் சிறு இடைவெளி இருந்தது. அது பற்றி ஜனநாயகத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் காமராஜர் மீது பற்று கொண்டு, அவரைப் பின்பற்றி நடப்பவன். ஒருவேளை, இதுவே என் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.

நான் 'துக்ளக்' விழாவில் பொதுவான அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய பேச்சு காரணமாகவே கட்சியில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு எப்படி செயல்படுகிறது, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். அதையொட்டிதான் பொதுவாக பேசினேன். அதற்காக நீக்கியிருக்கிறார்கள்.

என் தரப்பு நியாங்களைச் சொல்லி, கட்சித் தலைமையிடம் நான் சமாதானம் பேசப்போவது இல்லை. அவர்கள் கட்சி நடத்தும் பாங்கு என்பது வேறு. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனுபவம் கருதியும், ஈடுபாடு கருதியும் என்னை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது பேசுவார். ஆனால், ஆளும் கட்சியாக ஆன பிறகு, அவரை என்னால் நெருங்க முடியவில்லை. எனினும், அவர் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை.

என் அனுபவத்தையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சொல்வதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் சட்டமன்றத்தில் இடம் இருக்காது. ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஏற்கத்தக்கதுதான். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கூட பேச அனுமதிக்காதது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்து என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறேன். என்றாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ஆடு, மாடு மேய்ப்பது போன்ற அளவில்தான் கட்சியில் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கு மதிப்ப் இருக்கிறது. இந்தப் போக்கை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது. இப்படிப்பட்ட பின்னணியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்கிறேன். அதற்கு எதிர்வினையாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். சில காலம் இருந்தாலும் அந்தப் பதவியை வகிப்பது நெறி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். அதற்காக அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நான் மக்களுக்குத்தான் பதிலளிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.

எனவே, நான் நீக்கப்பட்ட இந்தத் தருணத்தில் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். (ராஜினாமா கடித்ததின் நகலை காண்பித்தார்). நான் மனபூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்று அதில் என் கைப்பட எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கச் சென்றால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எவரிடம் நேரடியாக கொடுக்க முடியவில்லை. எனவே, என் ராஜினாமாவை இங்கு அறிவிக்கிறேன்.

இந்த ஆட்சியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சம் தந்தாக வேண்டிய அவல நிலை. கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது. அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். இந்தப் போக்கு சரியானது அல்ல.

தமிழகத்தில் மதுவிலக்கு என்பது அவசியம். ஏழைகளின் பணத்தை வாங்கி, அவர்களிடம் இலவசம் வழங்குவது நியாயம் இல்லை.

பான்பராக் தடை செய்யப்பட்ட பொருள். அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அந்த பான்பராக் அதிகம் புழங்குவது என் துறைமுகம் தொகுதிதான். ஆனால், எல்லா மட்டத்திலும் போராடி முயற்சி செய்தும் தடை செய்ய முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக தோற்றுப்போனேன். என் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழகத்தில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது"


என்றார் பழ.கருப்பையா.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாதாக அறிவித்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. இவர் பேச்சாளர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கொழுந்து விட்டு எரியும்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [28 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42975

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக பழ கருப்பையா அவர்கள் எத்தனை காலம் தன்னை பாது காத்துக் கொள்ள முடியும்.

அம்மாவை ஆதரித்து பேசினோமோ இன்னோவா கார் ஒன்றை பரிசாக பெற்றோமா காலத்தை ஓட்டினோமா என்று இல்லாமல் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும் தன் தொகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற குற்ற உணர்வு கொப்பளித்து வந்ததால் இவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். இன்னும் எவ்வளவு பேர் இப்படி கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போக போக தெரியும். ஆனாலும் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப்படித்தான்.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழை பற்றி ஒருவர் சொன்னார்.

கூவம் சுத்தமானது - சென்னை கூவமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அடிமை விலங்கு உடைந்தது!
posted by kavimagan kader (BAHRAIN) [28 January 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 42976

சிந்தனைச் சிறகே...
சிலந்தி வலைக்குள் எப்படி
சிக்கிக் கொண்டாய் ?

சந்தனக் குயிலே....
சகதிக்குள் சாதகம் செய்ய
சொன்னது யார் உன்னிடம்?

இன மானத் தமிழனே....
எருமை மாடுகளுக்கிடையே
உனக்கு என்ன வேலை?

அண்ணாவின் தம்பியே...
ஆரியக் கை விலங்கை
ஏன் பூட்டிக் கொண்டாய்?

சரி கிடக்கட்டும்....
சங்கு சுட்டாலும்
வெண்மையே தரும்....
எங்கு தொட்டாலும் மலர்
மென்மையே தரும்...

அடிமைகளின் கொட்டடியில் இருந்து
விடுதலை பெற்றிருக்கும்
அண்ணனே வாழ்த்துகிறேன்
மீண்டும் நீ சிறகடிக்க....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [29 January 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42980

# கருப்பையா அவர்கள் 2011ல் சபாநாயகர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வெளிப்படையாக பேசுவதால் தலைமையால் நிராகரிக்கப்பட்டார்.

# சென்னை கலேக்டரெட், சுங்க இல்லம் (த.மு.மு.க.அலுவலகமருகில்) பின்புறமிருக்கும் மண்ணடி ரேவ் சேரி பகுதியில் நடக்கும் அனைத்து சமூகவிரோத செயல்பாடுகளை (விவரிக்க இயலாதபடி மிக மோசம்) பற்றி அய்யாவிடம் பலரும் முறையிட்டனர். அவரும் மா.ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் பயனில்லை. (இதை அவர் பேட்டியில் காணலாம்)

# ஆளும் பிரமுகர் வசம் இருக்கும் அங்கப்பன் தெரு உருது முஸ்லிம் கல்வி நிலைய நிலத்தை MLA போராடியும் மீட்க முடியவில்லை

# மண்ணடியில் சேரி அதிகமிருப்பதற்க்கு நம்மவர்கள் செய்யும் இரும்பு வணிகமும் ஒரு காரணம்.

# கடைசி காலத்தில் MLA பதவியை ராஜினாமா செய்து தானும் பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து விட்டார்? (சா_க_ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மலிவான விளம்பரம்
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [30 January 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42983

திரு பழ கருப்பையா அவர்கள் ராஜினாமாவை பற்றி பலரும் பலவிதமாகவும் தங்கள் வசதிகேற்ப வளைந்து நெளிந்து அவர் செயல் உதவியைகொண்டு உத்தம ஓசையை அரசியல் வாதிகள் கிளப்புகிறார்கள் என்றே எண்ணுகிறேன்!

எந்த கட்சியாக இருந்தாலும்,எந்த அமைப்பாக இருந்தாலும் ஏன் எந்த ஒரு குடும்பமாக இருந்தாலும்,அவர்களுக்கென்று ஒரு கவ்ரவம்,மரியாதை,கொள்கை கட்டுப்பாடு, தலைமையை மதித்தல் போன்றவற்றால் தான் உருவாக்கி ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட உட்கட்டமைபுடன் இயங்கும் அபைப்புகளில் திரு பழ கருப்பையா சார்ந்த அமைப்பும் ஒன்று என நினைக்கின்றேன்.

அது உண்மையாக இருக்குமேயானால்,உங்களுக்குறிய எந்த குறையையும் கட்சியின் தலைமையிடமோ, செயற்குகுழு விலோ அல்லது பொது குழுவிலோ நேரிடயாக வைக்கலாம், அதற்கு சரியாக தீர்வு வரவில்லை என்றால் அப்போதே உங்கள் பதவியை ராஜனாம செய்திருக்கலாம்.அதை விட்டு பொது தளத்தில் இப்படி பகிரங்கமாக குற்றசாட்டை வைத்து ஒரு விளம்பரம் தேடிதுடிக்கும் ஒரு செயலானது,அவர் சார்ந்த கட்சியின் கொள்கைக்கு நேர்எதிரானது மட்டுமல்ல் ஒரு துரோகமும் ஆகும்!

தவறை சுட்டிக்காட்ட எத்தனையோ வழிகள் இருக்கிறது. அந்த வழிகளை விட்டுவிட்டு ஒரு பெரிய அமைப்பின் விதிமுறை களை வீசியெறிவதுபோல அந்த அமைப்பின் ஒரு உறுப்பினர் நடப்பாரேயானால் அவர் கூறுவது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் அவர் பின்பற்றிய அணுகுமுறை மூலமாக அந்த பெரிய அமைப்பு அந்து ஒரு நபருக்காக தன்னை தாழ்த்திக்கொள்ளாது என்பதும் இந்த மூத்தவயது உறுப்பினருக்கு தெரியாதா என்ன ?

ஆக உங்களின் கூற்று உண்மையா இல்லையா என்பதைவிட நீங்கள் ஒரு கட்சின் கட்டுப்பாட்டை எந்த அளவிற்கு மதித்து உங்கள் அணுகுமுறையை அமைத்திருக்கிறீர்கள் என்பதே நடுநிலை எண்ணமுடையவர்களின் கேள்வியாகும்?

இன்றைக்கோ,நாளைக்கோ முடியப்போகிற தன் வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற ஒரு மனைவியை பார்த்து உன்னை விவாகரத்து பண்ணுகிறேன் நீ ஒழுங்கில்லை என்று கூறும் கணவனுக்கும் திரு பழகருப்பையா அவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.

கட்சி மாட்சிரியம் என்னக்குள் இருந்தாலும் என் மனதில் பட்டதை எதியுள்ளேன். அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
FaamsAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved