Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:46:33 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19230
#KOTW19230
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 29, 2017
மரைக்கார் பள்ளி இமாமின் மனைவி காலமானார்! 23:00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3242 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் உடைய மனைவி - கொச்சியார் தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.சித்தி கதீஜா, இன்று 00:50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார்,

குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகளும்,

மர்ஹூம் முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மருமகளாரும்,

மரைக்கார் பள்ளி இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் உடைய மனைவியும்,

மர்ஹூம் சாமு ஷிஹாபுத்தீன் ஆலிம், குருவித்துறைப் பள்ளியின் துணைத் தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் ஆகியோரின் சகோதரர் மகளும்,

மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்க் அலீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூசுஃப் ஸாஹிப் சாபு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரி மகளும்,

ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரியும்,

எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் உடைய தாயாரும்,

மன்னர் பாதுல் அஸ்ஹப் உடைய மாமியாரும்,

நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத், அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் - முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் நூஹ், கே.எம்.ஸாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் மச்சியும்,

எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே., ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் சாலிஹ், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மாமியும்,

ஹாஃபிழ் பி .ஏ.மன்னர் செய்யித் அப்துர் ரஹ்மான், பி.ஏ.முஹம்மத் சாலிஹ் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

ஹாஃபிழ் எம்.ஐ.முத்து செய்யித் அஹ்மத், எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் டூட்டி ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (29.05.2017. திங்கட்கிழமை) 23:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [29 May 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45569

انالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [29 May 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45570

அஸ்ஸலாமு அலைக்கும்

>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்
சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (Dubai) [29 May 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45571

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

எங்கள் பகுதியில் நடைபெறும் அனைத்து நல்ல காரியங்களானாலும் சரி அல்லது சோக நிகழ்வுகளானாலும் சரி - இவர்களின் வருகையும், அந்தந்த காரியங்களின் இறுதிவரை நின்று செயலாற்றுவார்கள். எத்தனையோ ஏழை எளியவர்கள் இவர்களிடம் தங்களின் தேவைகளை முறையிட்டுள்ளனர். அவரவர்களின் தேவைகளை இருப்பவர்களிடம் எடுத்துச்சொல்லி அந்தந்த குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்துள்ளவர். அல்லாஹ் இவர்களை ஒரு கருவியாக்கி வைத்துள்ளான் என்றால் மிகையல்ல.

ஏழை குமர் காரியங்கள், வசதியற்றோர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள், வீடு இருந்தும் அவசியமான புனர் நிர்மாணங்கள், ஏழை மாணவர்களுக்கான பள்ளிக்கட்டணங்கள், சீருடை வழங்கல், மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லல் போன்ற எண்ணற்ற உதவிகள் செய்தே தங்களின் வாநாட்களை கழிப்பதில் இன்பம் கண்டவர்.

இவர்களின் மரணம் எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை தந்தபோதும், "எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாலில்லாஹ்
posted by Katheebseyedahamed (CHENNAI ) [29 May 2017]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 45572

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [29 May 2017]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45573

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:.மரைக்கார் பள்ளி இமாமின் மனைவி காலமானார்!
posted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (காயல்பட்டணம்.) [29 May 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45574

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

 ان لله وان اليه راجعون

மர்ஹூமா அவர்கள் என் மனைவியின் பெரிய உம்மா என்பதால் எனக்குமாமிஆவார்கள்.

சிரித்த முகத்துக்குச் சொந்தகாரர்கள்.
இறையச்சம் மிகுந்த இபாதத்தாளி.
குடும்பத்தினர்களுக்கும் ,
அயல் வீட்டார்களுக்கும்,ஒட்டு மொத்த
சுற்று வட்டாரத்தினர்களுக்கும்,
தன்னலம் எதிர் பாரமல் ஆற்றிய சேவைகள்
எண்னிலடங்காதவை.

பிரச்சனைகளை தன் விவேகமிக்க நுண்மதியால் சீர்படுத்தும் பக்குவமிக்கவர்கள்.

யா அல்லாஹ்! இவர்களின் சேவைகளை ஏற்றுக் கொள்வாயாக.

பல நூறு வருடங்கள் பலன் தந்து கொண்டிருக்கும் மிகப் பெரும் மரம் அழிந்தால் அம்மரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பறவைகளுக்கு ஏற்படும் பேரிழப்பைபோன்ற பாதிப்பாகும் அன்னாரின் குடும்பத்தாரகளுக்கும், வட்டார வாசிகளுக்கும்.

யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம்
செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த
குடும்பத்தையும்
கொடுப்பாயாக!
யா ரஹ்மானே !
இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!.

மொகுதும்தெரு சாளையார் குடும்பத்தினர்கள் சார்பாக
சாளைM.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி.
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [29 May 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45575

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சித்தி லாத்தா அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. சிறந்த சமூக நலப்பணிகள் சப்தமில்லாமல் ஆற்றிய பல்வேறு பணிகள் நிழலாடுகிறது .குடும்பத்தின் சிறு சிறு சரச்சரவுகளை சாதுரியமாக பேசி தீர்த்து குடும்பங்களை ஒன்றிணைத்த வீராங்கனை.யார் அழைத்தாலும் வறியவர் பணக்காரர் என்று பார்க்காமல் ஓடோடி சென்று உதவும் உத்தம பெண்மணி. நான் கூட ஊர் வரும் போது இந்த பெண்மணி ரொம்ப கஷ்ட படுகிறாள்.அவளின் சிறு தொழில் அல்லது மருத்துவத்திற்கு ஏதாவது தா என்று வாங்கி கொடுத்த நல்ல உள்ளம்.தனக்கு என்று எதுவும் கேட்காமல் வறியவர்களுக்கு சொல்லப்போனால் வீடு கட்டி கொடுக்கும் அளவுக்கு எல்லா மக்களிடமும் வசூலித்து தன்னால் முடிந்த பொருளுதவியும் போட்டு கட்டி கொடுத்த சமூக சேவகி. கல்யாண வீடுகள் கலகலப்பாக திகழ மகிழ்வுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்திய தாய். அன்னாரின் சேவை தொடரும் மீண்டு வருவார்கள் என்று எண்ணினேன். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை .போதும் என்னளவில் வந்துவிடு என்று இந்த புனித ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை தன்னளவில் அழைத்து கொண்டான். அல்லாஹ்வின் கட்டளை.ஸபூர் செய்து கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன் . கனத்த இதயத்துடன் ரியாத்தில் இருந்து நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை .
வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mdhussain kaja (Makkah) [29 May 2017]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45578

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்

யா அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து, அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக .. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுப்பாயாக , ஆமீன்

ஹுசைன் காஜா
மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by M.I. முசா நெய்னா (Buraidha - Saudi) [29 May 2017]
IP: 151.*.*.* | Comment Reference Number: 45579

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஹிவூன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து உயர்ந்த பதவியான ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் உற்றார், உறவினர்கள், மற்றும் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையினை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [30 May 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45580

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by கத்தீபு மாமூனா லெப்பை (Kayal Patnam) [30 May 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45581

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'வூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka ) [31 May 2017]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45588

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பும் பாசமும் நிறைந்த சித்திமாமி அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். சிறந்த சமூகசேவகியாகவும் ஏழைகளையும் அனாதைகளையும் அரவனைப்பவர்களாகவும் உதவி செய்யும் குணம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.

மறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு ஸபூர் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved