Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:38:20 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19262
#KOTW19262
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 4, 2017
தம்மாம் கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு! 45 மாணவ-மாணவியர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2208 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றம், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து, ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு (Spoken English Class) நடத்தின. இதில், 45 மாணவ-மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-

தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும், இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். அது மட்டுமல்ல ஏராளமான மாணவர்கள் தமக்குள் திறமையிருந்தும் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கல்லூரிகளில் பின்னடைவை சந்திப்பதையும்,பட்டப்படிப்பை முடித்து விட்டு பணிக்குச் செல்கையில் நேர்காணலில் (Interview) தோல்வியடைந்து மனம் வருந்துவதையும், பணிசெய்யும் நிறுவனங்களில் பதவி உயர்வு (promotion) கிடைப்பதற்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது ஒரு தடையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது. இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து 2017 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) பள்ளிகளின் கோடை விடுமுறையில் நடத்தியது.இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.





இந்த கோடை கால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 24-04-2017அன்று மாணவிகளுக்கும், 01-05-2017 அன்று மாணவர்களுக்கும் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி அவர்கள், தம்மாம் காயல் நல மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இதன் முக்கியத்துவம், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும், எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கு பயிலச் செல்லும் போதும், நிறுவனங்களுக்கு பணியாற்ற செல்லும் போதும் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விரிவாக விளக்கி, தங்கள் காலத்தில் கிடைக்காத, தற்போதைய மாணவ சமுதாயத்திற்கு கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு பலனடையுமாரும், பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த வகுப்புகளுக்கு குறித்த நேரத்தில் வருகை தர வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார்.



இந்த துவக்க நிகழ்ச்சிக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.ஏ.அஹமது ரஃபீக் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத்தொடர்ந்து கல்லூரி துணைப் பேராசிரியர் திரு R.உதயவேல் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்.



இந்த ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு மாணவிகளுக்கு கடந்த 24-04-2017 முதல் 24-05-2017 வரை (காலை 8 மணி முதல் 10:30 வரை) தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும், மாணவர்களுக்கு 01-05-2017 அன்று முதல் 25-05-2017 வரை (காலை 9:15 முதல் 11:45 வரை) கீழ நெயினா தெருவில், இக்ராஃ அலுவலகத்திக்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்திலும், நடை பெற்றது.இதில் 30 மாணவர்களும், 15 மாணவியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.







நிகழ்ச்சி குறித்தும், நிறை- குறைகள் குறித்தும் கருத்துக் கேட்டு மாணவ-மாணவியரிடம் கருத்துக் கேட்புப் படிவம் (Feedback Form) அளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகள் நன்முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த spoken English course தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், பயிற்சியாளர் திரு R.உதயவேல் மற்றும் ஆயிஷா நலைன் ஆகியோர் மிகவும் அழகான முறையில், தெளிவாக புரியும் படி பாடம் நடத்தியதாகவும், துவக்கத்தில் மிகவும் தயங்கிய தங்களுக்கு தற்போது தயக்கமின்றி ஆங்கிலம் பேச ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் , ஆங்கில நூற்கள் வாசிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கோடை விடுமுறையில் தாங்கள் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், வழங்கப்பட்ட Spoken English Materials மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்த பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கும், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த பயிற்சி வகுப்பின் இறுதி நாளன்று இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மது இத்ரீஸ், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, இக்ராஃ கல்விச் சங்கத்தின் இணைச் செயலர் ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப் மற்றும் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த பல வாரங்களாக நடைபெற்ற இந்த ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களை ஆங்கிலத்தில் பேசச் செய்து கேட்டுக் கொண்டிருந்ததோடு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.



அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள், ''இங்கு பேசிய மாணவர்கள் சிலர் தயக்கத்துடனும், சிலர் தயக்கமின்றியும் பேசினர். அருமையாகப் பேசினர். மாணவர்கள் தயக்கம் காட்ட தேவையில்லை. இங்கு அமர்ந்திருப்பவர்கள் எவரும் வெளிநாட்டினரோ, ஆங்கிலேயர்களோ இல்லை.எல்லோரும் நம்மில் உள்ளவர்கள்தான். எனவே தயங்காமல் பேசுங்கள்.உங்கள் நண்பர்களுக்குள், குடும்பத்தினருக்குள் ஆங்கிலம் பேசி பழகுங்கள்.தப்பாக பேசினாலும் பரவாயில்லை.தயங்காமல் பேசுங்கள். காலப் போக்கில் பிழையின்றி பேசிவிடலாம்'' என்று கூறி ஊக்குவித்ததோடு, தற்போதைய கால கட்டத்தில் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக அதே சமயம் நகைச்சுவையுடன் மாணவர்களுக்கு புரியும் படி விளக்கினார். அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக கூறி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பை நடத்திய கல்லூரி துணை பேராசிரியர் திரு R.உதயவேல் அவர்களுக்கும் தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக திரு R.உதயவேல் அவர்களுக்கு இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி.எம்.ஐ.மெஹர் அலி, டாக்டர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோரால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்புக்கு தினமும் மிகவும் சரியான நேரத்தில் (Punctuality) வருகை தந்த 7 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.



இறுதியாக பயிற்சி பெற்ற மாணவர்களில் சிலர் ஆசிரியருடன் குழுவாக இணைந்து படம் எடுத்துக் கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்புக்கு மாணவர்களிடமிருந்து ரூபாய் 400 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.மீதமுள்ள கட்டணங்கள் மற்றும் செலவுகளை தம்மாம காயல் நற்பணி மன்றம் பொறுப்பேற்றுக் கொண்டது.ஏழ்மையான சில மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் file, Pen, Notes, course kit, Refreshments வழங்கப்பட்டது. இந்த 2017 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM ஏற்பாடுகளை இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, அலுவலகப் பொறுப்பாளர் மஹ்மூது புஹாரி ஆகியோர் செய்திருந்தனர்.

இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM துவக்கமாக 2014 ஆம் வருடம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாத காலம் நடை பெற்றது என்பதும்,இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:15 வரை மற்றும்11:30 முதல் மதியம் 01:30 வரை இரண்டு கட்டங்களாக பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்ல அரங்கிலும், மாணவியருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றதும், அதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து பயனடைந்ததும், சென்ற வருடமும் (2016) இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM நடைபெற்று ஏராளமான மாணவ-மாணவியர் பயனடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved