Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:45 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19270
#KOTW19270
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 7, 2017
கடற்கரையோர ஆக்கிரமிப்புகள், குருசடி அகற்றம் குறித்து கோட்டாட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1517 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையோர ஆக்கிரமிப்புகள், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி ஆகியவற்றை அகற்றக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் கடற்கரையோரம், சட்டவிதிமுறைகளை மீறி உருவாக்கப்பட்டுள்ள குருசடியை அகற்றுவது சம்பந்தமாகவும், கடற்கரையோரம் - அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உருவாகியுள்ள குடித்தனங்களை அப்புறப்படுத்த கோரியும் - திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு கணேஷ குமாரிடம் கோரிக்கை மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, 05.06.2017. திங்கட்கிழமையன்று கொடுக்கப்பட்டன.

==============
குருசடி அப்புறப்படுத்துதல்
==============

காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, பெண்கள் அமரும் பகுதிக்கு அருகே - மத்திய - மாநில அரசுகளின் விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிவற்றுக்கு எதிராக உருவாகியுள்ள குருசடியை அப்புறப்படுத்த கோரி - திருச்செந்தூர் வட்டாச்சியர் உட்பட மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் *அரசாணை (G.O.(Ms).No.540; Revenue [LD6(2)] Department; Dated: 04.12.2014)* படி, ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பெறப்படும் மனுக்களை, வட்டாச்சியர் - 60 தினங்களுக்குள், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குருசடி சம்பந்தமான புகார் கொடுக்கப்பட்டு 60 தினங்களுக்கு மேல் ஆகியும், ஆத்தூர் வருவாய் ஆய்வாளருக்கு விசாரணை செய்ய எழுதிய கடிதத்தை தவிர எவ்வித நடவடிக்கையும் திருச்செந்தூர் வட்டாச்சியர் எடுக்கவில்லை.

எனவே - அரசாணை தெரிவித்துள்ளப்படி, அடுத்த கட்டமாக, *கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சர்வே துறையின் துணை ஆய்வாளர்* அடங்கிய *மேல்முறையீட்டு குழுவிடம்*, இது சம்பந்தமான மேல்முறையீட்டு மனு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இன்று சமர்ப்பிக்கப்பட்டது.



=============
கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு குடித்தனங்கள்
=============

காயல்பட்டினம் கடற்கரையோரம் - பூங்காவிற்கு வடக்கே, கொம்புத்துறை வரை - அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு குடித்தனங்கள் உருவாகியுள்ளன. இக்குடித்தனங்கள் - CRZ விதிமுறைகளை மீறியும் அமைந்துள்ளன. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த திங்களன்று, மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கைக்காக மனு சமர்ப்பிக்கப்பட்டது.

அம்மனுவிற்கு பதில் வழங்கியுள்ள திருச்செந்தூர் கோட்டாட்சியர், *ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், மாற்றாக அவர்களுக்கு நகராட்சி மூலமாக இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.*

ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நகராட்சி மூலமாக வீடு வழங்கப்படும் என தெரிவித்திருப்பது ---

_ஏற்கனவே பலருக்கு சுனாமி காலனியில் இடம் வழங்கப்பட்டுவிட்டது என்ற காரணத்திற்காகவும்,_

_கடற்கரையோர ஆக்கிரமிப்புகளை வெறும் ஆக்கிரமிப்புகளாக பார்க்கக்கூடாது, அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இணைந்துள்ளன என்ற காரணத்தாலும்,_

_மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 படி, இது போன்ற கட்டுமானங்களுக்கு நகராட்சியின் நிதியை பயனப்டுத்த வழியில்லை என்பதாலும்,_

_இவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது, இது போன்ற சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் என்ற காரணத்தாலும், ஏற்புடையதல்ல என்று - அம்மனுவில் - தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

[பதிவு: ஜூன் 5, 2017; 10:00 pm]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved