Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:34:21 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19948
#KOTW19948
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 24, 2017
காயல்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்! கூடுதல் தகவல்களுடன் “நடப்பது என்ன?” குழுமம் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 11015 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, 22.11.2017. புதன்கிழமையன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது திறந்து வைத்தார். முன்னதாக, விழாவில் பங்கேற்க வந்த முதல்வரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, மேடைக்கு அழைத்துச் சென்றார்.



தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள – காயல்பட்டினம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களின் விபரப் பட்டியல்:-



தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள – காயல்பட்டினம் நகராட்சிக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அவற்றின் விபரப் பட்டியல்:-



புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து – தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆற்றிய உரை வருமாறு:-
































தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

















காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிய கட்டிடம் அமைய முழுக் காரணமான – நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் – அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இன்று - புதிய நகர்மன்ற கட்டிடம் - எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நாளை - ஊழல், லஞ்சம் இல்லாத காயல்பட்டினம் நகர்மன்றம் - இறைவன் நாடினால்!!

அன்புடையீர்,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நகர்மன்ற கட்டிடம் - இன்று (நவம்பர் 22, 2017) - தமிழக முதல்வரால், அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது - எல்லாப்புகழும் இறைவனுக்கே!

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்புக்கு வந்த புதிய நகர்மன்றம் செயல்பட - ஒழுங்கான நகரமன்ற கட்டிடம் கூட கிடையாது. நகர்மன்றத்தலைவரின் அறை பழுதடைந்த நிலையில் மூடப்பட்டிருந்தது. பழுதடைந்த கூட்டரங்கில்தான், நகர்மன்றத்தலைவர் - தனது பணிகளை செய்து வந்தார்.

இந்த சூழலில் தான் சென்னை சென்ற நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், நிலைமையை எடுத்துரைக்க - நகர்மன்றதீர்மானம் இயற்றித்தந்தால் - புதிய கட்டிடம் கட்ட, அனுமதி தருவதாக அப்போதைய நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் - திரு சந்திரகாந்த் காம்ப்ளே IAS, நகர்மன்றத்தலைவரிடம் உறுதியளித்தார்.

மார்ச் 2012 இல் மாதிரி கட்டிடம் வரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 17, 2012 இல் நடந்த நகர்மன்றக்கூட்டத்தில் - தீர்மானம் எண் 198 மூலமாக தூவப்பட்ட விதை, இன்று வளர்ந்து - கம்பீரமான கட்டிடமாக காட்சியளிக்கிறது.

2012 - 13 நிதியாண்டிலேயே இதற்கான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் ஓர் ஆண்டு ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவிக்க - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. அரசு மூலம் நிதி ஒதுக்கப்படும் வரை காத்திராமல், புதிய கட்டிடம் உருவாக்க - தனிப்பெண்மணியாக - அதற்கான பணிகளை துவக்கினார்.

நகராட்சியினை முடக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் நகர்மன்றக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் காட்சிகளும், வெளிநடப்பு செய்யும் காட்சிகளும் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்க - புதிய நகர்மன்ற கட்டிடம் உருவாக்குவதற்கான ஆயத்தப்பணிகளை முழுவீச்சில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் முன்னின்று செய்தார்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவரை பதவி நீக்கம் செய்ய உறுப்பினர்கள் முழுவீச்சில் பணியாற்றி வந்த மார்ச் - ஏப்ரல் 2013 காலகட்டத்தில், 2013-14 பட்ஜெட்டில் காயல்பட்டினம் நகர்மன்றம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட - முழுமுயற்சியில் நகர்மன்றத்தலைவர் ஈடுபட்டிருந்தார்.

ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெறவிருந்த முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டத்திற்கு ஏப்ரல் 3 அன்று உயர்நீதிமன்றம் தடைவழங்கிய அதே வாரத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா - காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நகர்மன்ற கட்டிடத்திற்கு 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.









கட்டிட வரைப்படம் சமர்ப்பிக்கப்பட்டு, DTCP அனுமதி பெற சில சிக்கல்கள் எழ, அப்போதைய DTCP ஆணையரை சென்னையில் நேரடியாக சந்தித்து - அனுமதியையும் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் பெற்றார்.

வழமையான அரசு கட்டிடமாக இல்லாமல், நவீன கட்டிடமாக இருக்கவேண்டும், பொது மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இருக்கவேண்டும், கூட்டரங்கம் பொது மக்கள் வருகைபுரிந்து அவதானிக்க வசதியாக இருக்கவேண்டும், என்பதில் உறுதியாக இருந்த நகர்மன்றத்தலைவர், கட்டிடத்திற்கான வரைபடமும் - அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் தயாரிக்கப்படவேண்டும் என முடிவு செய்து, அதற்கான தனி ஒப்பந்தப்புள்ளியும், மாநில அளவில் - ஆகஸ்ட் 2013 இல் கோரினார். பல்வேறு நாடுகளில் அலுவலகம் கொண்ட RAYYAN IBRAHIM ARCHITECTS (P) LIMITED என்ற நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியும், வடிவமும் தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து பிப்ரவரி 2014 இல் புதிய நகர்மன்றம் கட்டிட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. தளவாணிமுத்து என்பவர் ஒப்பந்தப்புள்ளியும் பெற்றார். ஓர் ஆண்டு கழித்து - ஜனவரி 2015 இல் - பழைய கட்டிடத்தை அகற்ற ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு - பழைய கட்டிடம் அகற்றப்பட்டது.

பிப்ரவரி 2015 இல் - அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடந்த விழாவில் - புதிய நகர்மன்றத்திற்கான - அடிக்கல் நாட்டப்பட்டது. நகர்மன்றத்தலைவருடன் பல கருத்துவேறுபாடுகளில் இருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் - இக்கட்டிடம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் தனிப்பெரும் முயற்சி என அக்கூட்டத்திலேயே அறிவித்தார்.

கட்டிட மாதிரி வரைபடம்:-



கட்டிட திட்ட வரைபடம்:-



கட்டிட மாதிரி வரைபடத்தை அரசு விழாவில் அறிமுகப்படுத்துகிறார் அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்:-



நகர்மன்றத் தலைவரின் பெயர் இக்கட்டிட கல்வெட்டில் இடம்பெறக்கூடாது, அவர் பதவி காலத்தில் இப்பணிகள் நிறைவுபெற்று அவ்வளாகத்தில் இருந்து அவர் பணியாற்றக்கூடாது என உறுதியாக சில நகர்மன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், ஆதிக்க சக்திகளும் இருந்தார்கள். அந்த அளவில் வெற்றியும் கண்டார்கள். அதன் விளைவாக - ஓர் ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவேண்டிய பணிகள், இரண்டரை ஆண்டுகள் கழித்து நிறைவு பெற்றுள்ளன.

இன்று துவக்கப்படும் அக்கட்டிடத்தில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் பெயர் இல்லை; தனி பெண்மணியாக உருவாக்கிய அக்கட்டிடத்தில் இன்று அவர் நகர்மன்றத்தலைவராக இல்லை.

ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியில், ஐந்தாண்டுகளாக - ஊழல் - லஞ்சத்திற்கு எதிராக, நகரின் ஆதிக்க சக்திகளின், பணம் படைத்த அதிகார வர்க்கத்தின் சதி திட்டங்களை எதிர்த்து - ஐ.ஆபிதா சேக் என்ற பெண்மணி துணிச்சலாக நின்று, வெற்றிக்கண்டத்திற்கான அடையாள சின்னமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் புதிய கட்டிடம் - திகழும்; வரலாறும் அவ்வாறே சான்றுரைக்கும்.

நம் வரிப்பணத்தில் சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு, நமக்கு சேவை செய்ய லஞ்சம் கோரும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கேள்விகேட்டு, சட்டத்திற்கு முன்பு நிறுத்தும் துணிவுக்கொண்டவர்களும்,

தங்கள் சுய லாபங்களுக்காக திட்டங்களை கொண்டுவராமல், மக்கள் வரிப்பணம் - முழுமையாக மக்கள் பணிகளிலேயே செலவு செய்யப்படவேண்டும் என்ற தூய நோக்கம் கொண்டு செயலாற்றும் நகர்மன்றத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினர்களும் - எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று

அப்புதிய கட்டிடத்திற்குள் - இறைவன் நாடினால், மக்கள் பிரதிநிதிகளாக நுழைந்து - நல்லாட்சி வழங்கிட, இத்தருணத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: நவம்பர் 22, 2017; 10:30 am]
[#NEPR/2017112201]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிய கட்டிடம் திறக்கப்பட்டதையொட்டி, அக்கட்டிடம் மின் விளக்குகளாலும், கட்டிடத்தின் முன் வண்ணக்கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fuad (Singapore ) [24 November 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45920

அஸ்ஸலாமு அலைக்கும்.

நகர்மன்ற முன்னாள் தலைவரின் பெயர் நகர்மன்ற கட்டிட கல்வெட்டில் இடம்பெறாவிட்டால் என்ன? காயல் நகர மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம்பிடித்துள்ள தலைவர் சகோதரி ஆபிதா அவர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..உங்கள் ஆதங்கம் புரிகிறது
posted by mackie noohuthambi (colombo) [24 November 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45921

நமது ஊர் நகர்மன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் அவர்களே ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள். கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் சுதேசி கப்பலை வாங்குவதற்கு நிதி உதவி அளித்ததே ஒரு முஸ்லிம்தான் என்ற செய்தி அவருக்கு தெரியாதா..இன்னி விரலால் சூரியனை மறைத்து விட முடியாது.

கடந்த நகர்மன்றம் ஆபிதா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றதா நலத்திட்டங்கள் மக்கள் மனம் குளிர நிறைவேற்றப் பட்டதா என்ற கேள்விகள் அதற்கான விடைகளை நாம் எளிதில் சொல்லி விடமுடியாது. அவர் தலைவியாக மட்டும் இருந்தார்களே தவிர அவர்களுடன் பணி செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டவர்களுக்கும் தலைவி அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பனி போர் முடிவுக்கு வருமுன் ஆட்சி காலம் முடிந்து விட்டது. மீண்டும் ஒரு தேர்தல் நடக்கும்போதுதான் மக்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்பது தெரிய வரும்.

ஆனால் ஒரு கட்டிடத்துக்கு அடிக்க கல் நாட்டிய ஒருவரின் பெயரை இருட்டடிப்பு செய்வதால் மட்டும் அவரை அவருடைய அடையாளத்தை அளித்து விட முடியாது. காயல்பட்டினம் சரித்திரத்தை எழுதும்போது நகர்மன்ற வரலாற்றை எழுதும்போது ஆபிதா அவர்கள் தலைவியாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்யாமல் அந்த சரித்திரம் முழுமை பெறாது.ஆனால் தமிழக அரசியலில் இப்படி இருட்டடிப்பு செய்வது ஒன்றும் புதிதல்ல.

வள்ளுவர் கோட்டம் கலைஞர் அழகுபார்த்து கட்டிய கட்டிடம் . அதன் திறப்புவிழா வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது அவரது ஆட்சி கலைக்க பட்டது. யாரோ ஒருவர் வந்து அதை திறந்து வைத்தார். அண்ணா சாலையில் அழகுற கட்டப் பட்ட புதிய சட்டமன்றம் கலைஞர் கை வண்ணத்தில் உருவாகியது. அடுத்து வந்த அம்மாவின் ஆட்சியில் அது ஒரு மருத்துவமனையாக மாற்றப் பட்டது. சிவாஜி கணேசன் சிலை கடற்கரை சாலையில் கம்பீரமாக நின்றது. காவல் துறைக்கு அப்போது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக அந்த சிலை நிறுவப்பட்டது என்று தெரியவில்லை.அம்மாவின் ஆட்சியில் அது அகற்றப்பட்டது. கண்ணகி சிலை இன்னொரு கதை. எனவே இது பற்றி மிகவும் அலட்டிக் கொள்ள தேவை இல்லை. சேவை செய்வது அல்லாஹ்வுக்காக என்று இருந்தால் அல்லாஹ் அதற்கு நிறைவான கூலியை கொடுப்பான்

காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அதிகாரிகள் அவரை ஒரு பெரிய கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். கோயிலை சுற்றி பார்த்த முதல்வர் இதை யார் கட்டினார்கள் என்று கேட்டார். அதிகாரிகள் விழித்தார்கள். இவ்வளவு பெரிய கோயிலை கட்டியவர் பெயர் இங்கே கல்வெட்டில் இல்லை. ஆனால் இங்கே இருக்கும் குழல் விளக்குகள் மின் விசிறிகளில் அந்த வெளிச்சத்தையும் காற்றையும் மறைக்கும் அளவுக்கு அதை நன்கொடையாக வழங்கியவர்கள் பெயர் விலாசம் பொறிக்கப் பட்டுள்ளதே என்ன தர்மம் இது என்று வருத்தப் பட்டுக் கொண்டாராம்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்று கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை. புதிய நகர்மன்றம் எவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும் அங்கே ஊழலற்ற வெளிப் படையான மக்கள் ஆட்சி நடந்தால் அதுவே நமதூருக்கு பெருமை. நம் ஊர் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எப்போதும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதற்கு மாறாக எதிரும் புதிருமாக நின்றே செயல்படுவதால்தான் நாம் நினைக்கும் இலக்கை அடைய முடியவில்லை என்பதை நடுநிலையாளர்கள் வேதனையுடன் அவதானித்து வருகிறார்கள்.ஆதித்தனார் அவர்கள் அப்போதே அதை வெளிப்படையாக ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். உண்மைகளை உரக்க பேச முடியவில்லை என்பதுதான் இப்போதுள்ள சிக்கலான பிரச்சினை.காலம் ஒரு நல்ல மருந்து

TIME IS THE BEST MEDICINE அந்த காலம் கனிந்து வரும் போது எல்லாம் சரியாகி விடும்.

AFFECTION IS MORE IMPORTANT THAN PERFECTION .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved