Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:29:41 AM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5351
#KOTW5351
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 27, 2010
கறிக்கோழி வளர்ப்பில் வேதிப்பொருள் அபாயம்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 2878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

fwpf;Nfhopfis Ntfkhf tsu itg;gjw;fhf czTld; Ntjpg; nghUs;fs; fye;J toq;fg;gLtjhy;> mij rhg;gpLfpwtHfs; Nehapy; rpf;Fk; mghak; Vw;gl;Ls;sJ

கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால், அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக அசைவ உணவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று அசைவ உணவில் கோழிக்கறி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

 

அசைவ உணவுத் தேவையில் 50 சதவிகிதத்துக்கு மேல் கறிக்கோழி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேவை அதிகரிப்பால் கறிக்கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மாநிலத்தில் முன்பு நாமக்கல் கரூர் மாவட்டங்களில்; மட்டுமே இருந்த கறிக்கோழி வளர்ப்புத் தொழில் இப்போது மாநிலம் முழுவதும் பரவி சிறந்த தொழிலாக உருவாகி வருகிறது.

 

இருப்பினும் நாமக்கல், கரூர் பகுதிகளில் இருந்தே கறிக்கோழி குஞ்சுகள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து பண்ணையாளர்கள் குஞ்சுகளைக் கொடுத்த நிறுவனத்திடமே வழங்குகின்றனர். இதில் அந்த நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்குரிய தீவனங்களை வழங்குகிறது.

 

கோழிகளைப் பராமரித்து வளர்ப்பது மட்டுமே பண்ணையாளர்களின் பொறுப்பாக உள்ளது. கோழியின் எடையைப் பொருத்து பண்ணையாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனால் கோழிப் பண்ணையாளர்களுக்கு தாங்கள் எந்த வகை தீவனத்தை கோழிகளுக்கு வழங்குகிறோம் என்பதே முழுமையாக தெரியாமல் உள்ளது.

 

தேவை அதிகரிப்பால் சில கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பல குறுக்கு வழிகளை அண்மைகாலமாக கையாண்டு வருகின்றனர். முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வெளியே வந்து 65 நாள்களில் தான் அது உணவுக்குப் பயன்படுத்துவதற்குரிய வளர்ச்சியைப் பெறுவதால் கறிக் கோழிகள் சிக்கன் 65 என சில ஆண்டுகளுக்கு முன்புவரை அழைக்கப்பட்டு வந்தது.

 

இந்த கோழிக்கறியை அதிகம் சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவில் பூப்படைகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த உணவு சுகாதாரமானதல்ல என சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகார் கூறப்பட்டது. ஆனால் கறிக்கோழி வளர்ப்பை வரைமுறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

 

இதன் விளைவாக சிலர் கறிக்கோழி வளர்ப்பில் மேலும் பல்வேறு கொடிய நோய்களை உருவாக்கும் குறுக்குவழியை கையாளத் தொடங்கி உள்ளனர்.

 

கோழிகள் வேகமான வளர்ச்சியை எட்டுவதற்கு தீவனங்களில் வேதிப் பொருள்களை கலந்து கொடுத்து வருவதாக இப்போது புகார் எழுந்துள்ளது.

 

இதில் கோழியின் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஹார்மோன்களை விரைந்து சுரக்கும் வகையில் வேதிப்பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோழிகள் சாதாரணமாக 120 நாள்களில் பெற வேண்டிய வளர்ச்சியை 35 நாள்களில் இருந்து 40 நாள்களில் பெறுகின்றன.

 

இதன் காரணமாக இந்த தீவனப் பொருள்கள் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்கள் மத்தியில் சிக்கன் 35 என்றே அழைக்கப்படுகிறது. தீவனம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் இந்த குறுக்கு வழியை கையாளுகின்றனர். கோழிகள் விரைவிலேயே வளர்ந்து விடுவதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பயன் அடைந்தாலும் அதைத் தொடர்ச்சியாக சாப்பிடுகிறவர்களுக்கு நோய் வருவது உறுதி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

புற்றுநோய் ரத்தசோகை ஆண்மைக்குறைவு பெண்களுக்கு மலட்டு தன்மை என இதைச் சாப்பிடுவதால் வரும் நோய்களைப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள். இவ்வளவு பெரிய நோய்கள் அந்த கோழிகளில் இருந்து பரவுவது தெரிந்தும் அரசு மௌனம் சாதிப்பது தான் புரியாத புதிராக உள்ளது. இதுவரை அரசு அதிகாரிகள் இந்த வகை கறிகளை எந்தக் கடைகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

 

இனியாவது மக்களின் நலன் கருதி கறிக்கோழி வளர்ப்பை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

நன்றி : தினமணி.

 

{TAGS} CHICKEN 35

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved