Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:16:40 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5562
#KOTW5562
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 28, 2011
அறுப்பிடத்தில் சுகாதாரக் கேட்டை சரிசெய்யுமாறு நகர்மன்றத்தில் இறைச்சி வணிகர்கள் கோரிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2738 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அறுப்பிடங்களில் நிலவும் சுகாதாரக் கேட்டை சரிசெய்து தருமாறு, காயல்பட்டினத்திலுள்ள இறைச்சி வணிகர்கள் நகர்மன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

காயல்பட்டினம் கிடா இறைச்சி வணிகர்கள் சங்கத் தலைவர் செய்யித் இப்றாஹீம் தலைமையில், இறைச்சி வணிகர்கள் இணைந்து 25.01.2011 அன்று காலை 12.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்திற்குச் சென்றனர்.

அங்கு நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்காரை சந்தித்த அவர்கள், நகர்மன்றத்தால் கட்டப்பட்டு வரும் தனி அறுப்பிடத்தை விரைவில் துவக்கித் தருமாறும், தற்காலிகமாக நகர்மன்ற அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறுப்பிடத்தில் நிலவும் சுகாதாரக் கேட்டை சரிசெய்து தருமாறும், தினமும் அறுக்கப்படும் பிராணிகளுக்காக அந்தந்த கடை வணிகர்களுக்கு பணம் செலுத்தியதற்கான ஒப்புதல் சீட்டை தனித்தனியே வழங்குமாறும் கோரியதோடு, இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணம் செலுத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் நகர்மன்ற அலுவலர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசனை செய்த துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், தனி அறுப்பிடம் துவக்குவது தற்போது நடைமுறைச் சிக்கலில் உள்ளதாகவும், விரைவில் அது தீர்க்கப்பட்டு, வரும் மார்ச் மாத இறுதிக்குள் துவக்கி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.



நகர்மன்ற அலுவலகத்தில் பணியாட்கள் குறைவாக உள்ளதால் தினமும் அறுப்பிடத்தை சுத்தம் செய்யவியலவில்லை எனவும், எனினும் பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அப்போது கூறினார்.

இறைச்சி வணிகர்கள் பணம் செலுத்தியதற்கான ஒப்புதல் சீட்டை கணினி மூலம் தினமும் தனித்தனியே வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என்றும், எனினும் நகர்மன்ற முத்திரையிட்டு ஒரு காகிதத்தில் தனித்தனியாகவும், கணினி மூலம் மொத்தமாகவும் தினமும் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவரது கருத்துக்களால் மனநிறைவடைந்த இறைச்சிக்கடை வணிகர்கள் தமது பணம் செலுத்தா போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

நகர்மன்ற அலுவலகத்திலுள்ள தற்காலிக அறுப்பிடம் மிகுந்த சுகாதாரக் கேட்டுடன் காணப்பட்டது. அறுக்கப்பட்ட பிராணிகளின் இரத்தங்கள் அறுத்த இடத்திலேயே உறைந்து துர்வாடையுடன் காணப்பட்டது. சுத்தப்படுத்துவதற்குத் தேவையான ப்ளீச்சிங் பவுடர் தேவைக்கேற்ப இல்லாமலும், சுண்ணாம்பு முற்றிலும் இல்லாமலும் இருந்தன.











இதுகுறித்து நகர்மன்ற அலுவலர்களிடம் வினவுகையில், அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு தினங்களில் அவை நகர்மன்ற அலுவலகத்திற்கு வந்தடையும் என்றும் தெரிவித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Disgusting
posted by Ahamed mustafa (Dubai) [28 January 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2428

I & the general public won't think or compromise such situations, remains of the meat and blood which can prove a major health hazard. The answer by the municipality as to lack of sufficient cleaners is not a matured reply, given the situation. It should be the other way round. The butchers want a clean space, but the municipality won't.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பொறுத்தமான பதில் இல்லை.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [28 January 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2431

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தனி அறுப்பிடம் துவக்க கால தாமதம் ஆகும் என்றும், இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் மாத இறுதிக்குள் அது துவக்கி வைக்கப்படும் என்று உறுதி கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
--------------------------------------
"நகர்மன்ற அலுவலகத்தில் பணியாட்கள் குறைவாக உள்ளதால் தினமும் அறுப்பிடத்தை சுத்தம் செய்யவியலவில்லை எனவும், எனினும் பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் " கூறி இருப்பது பொறுத்தமான பதில் இல்லை.

பணியாட்கள் பற்றாக்குறை என்றால் தற்காலிகமாக தினக்கூலிக்கு வேலையாட்களை நியமித்து சுத்தம் செய்ய வேண்டும் தவிர "பொதுமக்கள் நலன் கருதி இனி இயன்றளவுக்கு தினமும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய பதில் அல்ல.
--------------------------------------
" நகர்மன்ற அலுவலகத்திலுள்ள தற்காலிக அறுப்பிடம் மிகுந்த சுகாதாரக் கேட்டுடன் காணப்பட்டது. அறுக்கப்பட்ட பிராணிகளின் இரத்தங்கள் அறுத்த இடத்திலேயே உறைந்து துர்வாடையுடன் காணப்பட்டது. சுத்தப்படுத்துவதற்குத் தேவையான ப்ளீச்சிங் பவுடர் தேவைக்கேற்ப இல்லாமலும், சுண்ணாம்பு முற்றிலும் இல்லாமலும் இருந்தன."

இப்படி நகர்மன்ற அலுவலகத்தின் பார்வையின் கீழ் செயல்படும் அதுவும் நகர்மன்ற வளாகத்திலேயே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த தற்காலிக அறுப்பிடம் சுகாதாரமின்றி செயல்பட்டால் பொதுமக்கள் யாரிடம் போய் சுகாதாரத்தை பற்றி கேட்க முடியும்?
---------------------------------------
நகர்மன்ற உறுப்பினர்களே!
பொது மக்களின் சுகாதாரகேட்டிற்கு வழி வகுக்காமல் , சுகாதார வாழ்விற்கு வேண்டியதை அவசியம் செய்யுங்கள். வஸ்ஸலாம்.
Moderator's note: message edited.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. என்னத்தை சொல்ல!!.
posted by சாளை.ஜியாவுதீன் (அல்கோபார்) [29 January 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2439

என்னத்தை சொல்ல!! நாங்கள் படிக்கும் போது L.K.SCHOOL (தாமரை ஸ்கூல்) பின்னாடிதான் இந்த டெப்போ இருந்தது. ஐந்து வருடங்கள் கூவம் நதிக்கரையில் படித்த அனுபவம்.

பின்பு ஒருமுறை என்னமோ பல்குத்தி பல்குத்தி என்று சொல்லுவார்களே அது வாங்க டெப்போ சென்று பார்த்தபோது, என்னுடைய பல்குத்தி வாய்வழியாக வந்துவிடும் அளவிற்கு சுகாதாரம் இருந்தது. அங்கு அவர்கள் பண்ணுகிற பந்தாவா ("நான் பல்குத்தி வாங்கிய கதை" என்று ஒரு பதிவே போடலாம்.. அவ்வளவு அனுபவம்).

முக்கியமான இடமாகிய இங்கு சுகாதாரம் பேணாமல், ஊரில் அந்த நோய் அதிகம், இந்த நோய் அதிகம், அதற்க்கு விழிப்புணர்வு, இதற்க்கு விழிப்புணர்வு என்று சொல்லுவது வடிவேலு பாணி இல் சின்னபுள்ள தனமாக அல்லவா உள்ளது. முதலில் யாருக்கு விழிப்புணர்வு கொடுக்கனும்!!..சொல்லுங்க?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved