Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:07 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5566
#KOTW5566
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 28, 2011
புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு குறித்து வஜீஹா கல்லூரியில் விளக்கக் கூட்டம்! ரியாத், ஜித்தா, தம்மாம் மன்றங்கள் நடத்தின!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2804 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளிலும், பல வகைகளிலும் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர், தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோர், புற்றுநோயை வென்றோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, வயது, வகை வாரியாக பிரித்தறிந்தால் மட்டுமே புற்றுநோய் ஒழிப்பு செயல்திட்டங்கள் முழு வெற்றி பெறும் என்று, 13.01.2011 அன்று ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகியவற்றின் அங்கத்தினர், சஊதி அரபிய்யா ரியாதில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணி தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், நகரில் புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



புற்றுநோயாளிகளைக் கணக்கெடுப்பதற்காக வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முன்னாள் மாணவியரை பயன்படுத்த அக்கல்லூரி நிர்வாகம் முழு ஒப்புதலளித்துள்ளது. அது மட்டுமின்றி, கணக்கெடுப்புக்காக அவர்கள் வீடுகளுக்குச் செல்கையில் அங்கிருப்போரைத் தயக்கமின்றி ஒத்துழைப்பளிக்கச் செய்வதற்காக தற்சமயம் அக்கல்லூரியில் பயிலும் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவியருக்கு போதிய விளக்கமளிக்கும் பொருட்டு 26.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் விளக்கக் கூட்டம், கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், நிர்வாக அதிகாரி முனைவர் கம்சா முகைதீன், முதல்வர் மெர்ஸி ஹென்றி, தம்மாம் காயல் நற்பணி மன்ற உறுப்பினர் அமீர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அருணா ஜோதி நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். கடந்த ஆண்டு கே.எம்.டி. மருத்துவமனையில் காயல் நல மன்றங்கள் பல இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை முகாமில் தமது கல்லூரி மாணவியர் தன்னார்வப் பணியாளர்களாக கலந்துகொண்டனர் என்றும், தாம் அவர்களை வழிநடத்தியதாகவும், அந்நேரம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.

துவக்கமாக, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.அய்.புகாரீ விளக்கவுரையாற்றினார். புற்றுநோய் என்றால் என்ன, அது எங்ஙணம் தாக்குகிறது, புற்றுநோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்ன, அவர்களின் மனநிலையை நாம் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கு சந்தேகிக்கப்படும் காரணிகள் குறித்து தனதுரையில் அவர் தகவல்களைத் தொகுத்தளித்தார்.



பின்னர், புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பின்போது பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ விளக்கிப் பேசினார். கணக்கெடுப்பிற்காக கல்லூரியின் முன்னாள் மாணவியர் வீடுகளுக்கு வருகையில், அங்கிருக்கும் தற்போதைய மாணவியர் தமதில்லங்களிலும், தமது உறவினர்களின் இல்லங்களிலும் இதுபோன்ற புற்றுநோயாளிகள் இருந்தால் அவர்களின் தயக்கத்தைப் போக்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்வதை ஒவ்வொரு மாணவியும் தனது கடமையாக எண்ணி செய்திட வேண்டுமென அவர் தனதுரையில் தெரிவித்தார்.



இறுதியாக கருத்து தெரிவித்த தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், இதுபோன்ற நகர்நலப் பணிகளைச் செய்வதற்கு இக்கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பளிப்பது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும், முன்னாள் மாணவியரைக் கூட நகர்நலப் பணிகளில் ஈடுபடுத்தும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும், தற்சமயம் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவியர் தமது படிப்பு முடிந்து கல்லூரியை விட்டும் பிரிந்துவிட்டாலும், என்றும் தொடர்போடிருந்து, இதுபோன்ற நகர்நலப் பணிகளை முன்னின்று செய்திட ஆர்வம் காட்ட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தந்து பல பயனுள்ள கருத்துக்களை மாணவியரிடம் சேர்ப்பிக்க முழு உறுதுணையளித்த கல்லூரி நிர்வாகத்திற்கு, ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நல மன்றங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

குடியரசு தின விழா நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அன்று காலை 08.00 மணிக்கே கல்லூரிக்கு வந்திருந்த மாணவியர், குடியரசு தின விழா நிறைவுற்று, அதனைத் தொடர்ந்து புற்றுநோய் கணக்கெடுப்பு குறித்த விளக்கக் கூட்டமும் நிறைவுறும் வரை அமைதியாக அமர்ந்து அவதானித்தது தமக்கு பெரும் மனநிறைவளித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



செய்தி திருத்தப்பட்டது (29/1/2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. முழு ஒத்துழைப்பு.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [28 January 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2432

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

புற்று நோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வகையிலும் செயல்பட்டு வருவது மக்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. அதற்காக முழு முயற்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நல மன்றங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

நகரின் புற்று நோய் கணக்கெடுப்புக்காக வேண்டி தன்னார்வ தொண்டர்களாக முன்னாள் மற்றும் இந்நாள் மாணவியர்களை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியதும் நன்றிக்குரியதுமாகும்.
-----------------------------------------------
மாணவியர்கள் வந்து கணக்கெடுக்கும்போது, பொது மக்கள் அனைவரும் எதையும் மூடி மறைக்காமல் முழுமையான பதிலை கொடுப்பது நம் எல்லோருக்குமே நன்மையை தரும் என்பதால் தயவு செய்து எல்லோரும் முழு மனதுடன் ஒத்துழையுங்கள்.

மேலும் நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளில் உள்ளவர்களிடம் மாணவிகள் கணக்கெடுக்க வரும்போது முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்கூட்டியே அறிவுறுத்துவது நல்லது.
-----------------------------------------------
புற்று நோய் குறித்த ஆய்வு படிவங்கள் (CANCER SURVEY FORMS) மாதிரிக்கு இங்கேயும் (காயல்பட்டணம்.காமிலும்) பதிந்தால் உதவியாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவருடைய முயற்சிகளையும் வெற்றியாக்கி தந்து நம் ஊரிலே புற்று நோய் என்னும் அந்தக் கொடிய நோய் அடியோடு ஒழிந்திட கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved