Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:16:50 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5948
#KOTW5948
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 9, 2011
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகரெங்கும் அடிபைப் ஒலி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4565 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அறிவியல் முன்னேற்றம் காரணமாக அவ்வப்போது புதுப்புது கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நாளடைவில் பொதுமக்களின் உடலுழைப்பு முற்றிலும் அற்றுப்போனது.

அம்மிக்குப் பகரமாக மிக்ஸி என்றும்,

ஆட்டு உரலுக்குப் பகரமாக க்ரைண்டர் என்றும்,

கிணற்றுத் தண்ணீரை தலா மூலம் எடுத்துக் குளிக்கும் நிலை மாறி, ஓவர் டேங்க் வசதி என்றும்,

கையால் சோப்பு கொண்டு துணி துவைத்த நிலை மாறி வாஷிங் மெஷின் என்றும்,

அன்றன்றைய உணவை அன்றே சமைத்து அன்றே சாப்பிடும நிலை மாறி, ரெஃப்ரிஜிரேட்டர் அல்லது ப்ரிட்ஜ் என்றும்,

வேலைகளுக்கிடையில் எப்போதாவது டிவி பார்ப்பது என்ற நிலை மாறி டிவி பார்ப்பதற்கிடையில் எப்போதாவது வேலை செய்வதென்றும்,

நடந்தோ, மிதிவண்டியிலோ சென்ற நிலை மாறி பைக், கார் என்றும்,

அலுவலகங்களுக்கு மாடிப்படி ஏறிய நிலை மாறி லிஃப்ட் என்றும்,

இயற்கைக் காற்றை சுவாசித்த நிலை மாறி மின்விசிறி என்றும், பின்னர் ஏ.சி. என்றும்...

இவ்வாறாக மனித குலத்தின் உடல் உழைப்பு முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு, அன்றாட வாழ்வின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கருவிகளையும், அதற்கான மின்சாரத்தையும் மட்டுமே நம்பி உடல் நலனையும், பொருளாதாரத்தையும் தெரிந்தே இழந்து வருவது இன்று உலகின் அனைத்துப் பாகங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. அதற்கு காயல்பட்டினமும் விதிவிலக்கில்லை.

அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் நகரில் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் தமதில்லங்களில் சேகரித்துக் கொள்வதற்காக அடிபைப் (அடிபம்பு) வசதி அனைத்து வீடுகளிலும் இருந்தும் இல்லாதது போல் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து வீடுகளிலும் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்த்தொட்டிகள் இல்லங்களில் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து இல்லங்களிலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதையடுத்து அத்தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, ஷவர் பாத் எனும் பூக்குளியல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் மட்டுமே மின் மோட்டார் நீரேற்றி பொருத்தப்பட்டிருந்த நிலை மாறி, இன்று அது இல்லாத வீடே நகரில் இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகிக்கப்படும் நேரங்களில், நகரின் பெரும்பாலான வீடுகளில் இதுபோன்ற மோட்டார்களைப் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவதன் மூலம் பகிரங்கமாக விதி மீறும் நிலை பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. காயல்பட்டினத்திலும் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரும் பெரும்பாலான இல்லங்களில் இதுபோன்றே உறிஞ்சப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நேர்மையாக அடிபைப்பை பயன்படுத்தி குடிநீர் எடுக்க நினைப்போருக்கு ஒரு சொட்டு நீர் கூட எடுக்க முடிவதில்லை. இதனால் தினமும் அவர்கள் மனம் குமுறி, இறுதியில் இதை விட்டால் வேறு வழியில்லை என்று அவர்களும் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சத் துவங்கிவிட்டனர். ஆக, ஒவ்வொரு தெருவிலும் விரல் விட்டு எண்ணுமளவுக்குள்ள மக்களே இயற்கையான அடிபைப் முறையை இன்னும் நம்பிக்கொண்டு “இளவு காத்த கிளி” போல காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நகரில் சுழற்சி முறை மின்தடை நேரம் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் காலை 06.00 மணியிலிருந்து 08.00 மணி வரை என்று ஆக்கப்பட்டதையடுத்து, குடிநீர் வினியோகிக்கப்படும் அந்நேரத்தில் மின் மோட்டாரைப் பயன்படுத்த இயலாததால் வேறு வழியின்றி அனைத்து வீடுகளிலும் அடிபைப் பயன்படுத்தப்படுகிறது.

இன்று காலையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டபோது நகர வீதிகளில் அடிபைப் ஒலியை காது குளிர அனைத்து இல்லங்களிலிருந்தும் கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது பொதுமக்களுக்கு பத்தாண்டுகளுக்கு முந்திய காயல்பட்டினத்தை நினைவுபடுத்தியது. சுழற்சிமுறை மின்தடை நேரம் அதிகாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை இருக்கும்போதெல்லாம் இவ்வினிய ஒலியை நகரில் கேட்க இயலும்.

இருப்பினும்,

ஹயாத்தழி....ன்! இந்த நேரம் பார்த்து கரண்ட்டை எடுக்கிறானே.... என்று மின் மோட்டாரை நம்பியே இருப்போரும்,

ஆகா... இந்நேரத்தையே எப்போதும் மின்தடை நேரமாக நிரந்தரப்படுத்தினால், நிம்மதியாக குடிநீரை அடிபைப் மூலம் பெற்றுக்கொள்ளலாமே... என்ற ஏக்கத்தில் அடிபைப் ஆர்வலர்களும் கருதும் நிலையில், இவைபற்றிய எந்தக் கவலையுமில்லாத வேறு சிலர்,

இப்படி அநியாயத்துக்கு நடு ராத்திரியில் (காலை 06.00 முதல் 08.00 மணி வரை) கரண்ட் கட் பண்ணி நம்மள நிம்மதியா தூங்க விடாம பண்ணிட்டானே... என்றும் ஆதங்கப்பட்டுக்கொண்டது ரசிக்கும்படியாக இருந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இதுவும் ஒன்று
posted by saha (chennai) [09 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3844

ஆகா... காயல்பட்டின வரலாற்றில் இதுவும் ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அடிபைப் ஒலி
posted by Zainul Abdeen (zain_msec@yahoo.com) [09 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3846

அடிபைப் ஒலி???????????

WHAT DO U MEAN???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Good one!
posted by Javed nazeem (Chennai) [09 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3847

பொழுது போக்கு அம்சத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டாலும், அருமையான எழுத்து நடையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள செய்திக் கட்டுரை. இறுதியாக வரும் மூன்று சிந்தனைகளும் சிரிப்பை வரவழைத்தன. ரசித்து எழுதி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள் பல.

அதே நேரத்தில், நமதூரில் எளியோர் மீது வலியோர் கொண்டுள்ள அளப்பரிய அன்பைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு நல்லது நடக்க முடியும் என்ற அரியதொரு தத்துவம் நடைமுறையில் சாத்தியமாகி இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. என்னப்பா.. தண்ணி அடிக்கின்ற மேட்டரா..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [09 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3850

என்னப்பா.. தண்ணி அடிக்கின்ற மேட்டரா..

காலம் எல்லாம் மாறி விட்டது. கம்மா காலத்தில் கை திருக்கையில் மாவு, அஞ்சு மாவு அரைத்தது, உரலில் மாசி இடித்து சாப்பிட்டு, அந்த உரலில் யார் சோற்றைப் போட்டு பிசைந்து சாப்பிடுவது என்று உறவுக்குள் செல்ல சண்டை போட்டது,அம்மியில் சட்னி அரைத்து சாப்பிட்டது,யார் பைப்பில் அதிகம் தண்ணீர் அடிப்பது என்று போட்டி போட்டது என்று பழைய நினைவுகளை அசைபோட வைத்ததற்கு நன்றி.

சும்மா..டிரை ஆனா செய்திகளுக்கு நடுவில் இந்த மாதிரி செய்தி வருவதும் ஆறுதல் தான்.

இனி சகோ.SKS அவர்களை பார்த்து மக்கள் பயப்படுவார்களோ என்ற அச்சம் உள்ளது,எதாவது news இல் போட்டுவிடுவாரோ என்று.

காலை 6 முதல் 8 வரை என்பது நடு ராத்திரியா!!.. குறும்பு தான்.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சாத்தியப்படுமா????????
posted by MOHAMMED LEBBAI (DXB) [09 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3852

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர்களே....தண்ணீர் விடும்போது மின்சாரத்தை கட்பண்ணனும் அல்லது மின்சாரம் கட்பண்ணும்போது தண்ணீர் விடனும்,,,,,,,,, சாத்தியப்பட்டால் பெரும்பாலனவர்கள் பயன்பெருவார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Agree
posted by Ibrahim (Chennai) [09 April 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 3853

I agree with Babu kaka point.

Mara vendum ena manam ullorukku matram undagum.

Oh my Dear brothers. It's our own duty to correct our family women folks in loving of electric appliances. When it make awkard to ppl who expect their water pipes. A good muslim is one who do not disturb fellow muslim by hands and tongue.(Including for myself) May Allah forgive us.

Ppl who need to understand may understand the quoted contents


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தண்ணி அடிப்போர்
posted by அப்துல் காதர் தைக்கா சாஹிப் (ரியாத்) [09 April 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3855

ஆகா!!! அப்ப ஊர்ல "தண்ணி அடிப்போர்" (அடிபைப்ப சொன்னேன்) சங்கம்னு ஆரம்பிச்சு, அடிபைப்புல தண்ணி அடிச்சி குடுத்தா நல்ல சம்பாதிக்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சிந்திக்கவும், செயல்படவும், ரசிக்கவும், சிரிக்கவும்
posted by mauroof (Dubai) [09 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3856

வாழ்த்துக்கள். படிப்பதற்கு மிகவும் இனிமையானதாகவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகவும் இருக்கிறது. சட்ட விரோதமாக மோட்டார் இணைப்பை பயன்படுத்தி குடித்தண்ணீர் உறுஞ்சுவோர் இது விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துக்கொள்ளட்டும். நகராட்சி நிர்வாகம் இது போன்ற சத்த விரோத செயலில் ஈடுபடுபவர்களின் குடிநீர் இணைப்பை அபராதத்துடன் துண்டிக்க வேண்டும்.

சகோதரர் JIYAUDDHEEN's கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. எங்கள் சாபம் EB யை சும்மா விடாது..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3857

பல சகோதரர்கள் எனக்கு மெயில் அனுப்பி, ஜியா காக்க மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது பற்றி ஒன்னும் எழுதவில்லையே என்று கேட்டது சந்தோசம் தான்.(கைப்புள்ள.. இன்னுமா ஊரு நம்ம கமெண்ட்ஸ் ஐ நம்புது.)சரி.. சரி விசயத்திற்கு வரலாம்.

நம் ஊரில்...(என்ன எல்லா ஊரிலும் தான்) தண்ணீர் மோட்டார் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்லணும்.

ஒட்டு மொத்தமாக அனைவர்களும் ஒரு தவறை செய்யும் போது, அது தவறாக தெரிவதில்லை. இது இந்த மோட்டார் மேட்டருக்கு சரியாக பொருந்தும்.

ஆகவே இதை தவறு என்று சொல்லுவதா, சரி என்று சொல்லுவதா அல்லது அறிவியல் வளர்ச்சி என்று விட்டுவிடுவதா!! புரியவில்லை.. அதான் ஆப்பு வைப்பது மாதிரி சரியாக கரண்ட் கட் பண்ணிவிடுகிறார்களே.

இதனால் பாதிப்பு எங்களை மாதிரி சின்ன பசங்களுக்கு தான். கரண்ட் இருந்ததா, தண்ணீர் விட்டார்களா,மோட்டார் போட்டு(உறிஞ்சி)தண்ணீர் எடுத்தார்களா, நாம் நிம்மதியாக தூங்கினோமா என்று இருந்ததை கெடுத்து விட்டார்களே.

இப்போ என்னவென்றால் வீட்டில் ஒரே தொனதொனப்பு.."வாப்பா தண்ணீர் வருது, வந்து பைப்பை அடிம்மா, வாப்பா...வாப்பா..."..

கொஞ்சம் அதிகம் தூங்கினால் "எருமை மாடு.. இன்னும் என்ன தூக்கம்..வந்து தண்ணீர் அடிடா"... கொடுமையோ கொடுமை.... எங்கள் சாபம் EB யை சும்மா விடாது..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. செய்தி சூப்ப்ப்ர்மா..........!
posted by zubair (riyadh) [10 April 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3859

அடிடா சக்க..... அடித்து,அடித்து.... கல்யாண சாப்பாட்டில் சேர்த்து வைத்த கொழுப்பு உருகும். கணவன் - மனைவியை கட்டழகில் காணலாம். மனைவி - கணவனை கட்டழகில் காணலாம். பைப்பு அடிப்போறை பொறுத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. power cut timings
posted by Abdul Kader (Mumbai) [10 April 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 3862

I too agree. Hand pumps are like blessing in disguise. A little bit of morning exercise is taken care of by the power cut. I just wish this continues to get some healthy life style.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உடற்ப்பயிர்ச்சி.
posted by vsm ali (kangxi ,Jiangmen , China) [10 April 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 3863

" அடி " பைப் , நல்ல ஒரு உடற்ப்பயிர்ச்சி. ஆனால் , வீட்டிற்கு ஒரு " அடி " பைப் தான் வைக்க முடியும். வீட்டில் உள்ள ஏதாவதொரு "அப்பாவி " தான் அந்த உடற்ப்பயிர்ச்சியை செய்ய முடியும். மற்றவர்கள் கண்டிப்பாக " நடைப்பயிர்ச்சி " செய்ய வேண்டும்.

" அறிவியல் முன்னேற்றங்கள் " நிறைய சாதக , பாதகங்கள் உள்ளது. " வேகாத கறி " யை , உள்ளே தள்ளினால் , " உடம்பு சூட்டில் " தானாக வெந்து விடும் , இது " அறிவியல் முன்னேற்றம் " என்று நினைத்தால் நமக்குதான் ஆபத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. என் அதிகாலை முதல் எதிரி அடி பைப்பு...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [10 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3864

ஆரவாரமில்லாத ஓர் காலைப் பொழுது அவ்வப்போது கரையும் காகத்தின் ஒலி காதுகளில் வந்து விழுந்த போதிலும் அரைத் தூக்கத்தில் அப்படியொரு சுகம்,மஞ்சள் நிறத்தில் இளம்வெயில் எட்டிப் பார்க்கும் போது மணி 6:05ஐத் தாண்டியிருந்தது.குருவிகளின் கூச்சல் கூட கோரஸ் பாடல்போலத் தான் கேட்டது. இதமான குளிர் காற்று வீசியதால் நாசித்துவாரங்கள் ஜில்லென்ன்று மரத்துப்போய் இருந்தது. யாராவது? வந்து மின்விசிறியை ஆஃப் செய்தால் நலம் எனத் தோன்றியது.தெருக்களில் கூவி விற்கும் உம்மா..சாலா வடை,பக்கடா...ரொட்டி..தேங்காப்பூ ரொட்டி..இவைகள் தூரத்திலும்,பின்னர் அருகாமையிலும்.இபோது காதுக்குள்ளேயும் வந்து ஒலித்து மறைந்தது.மணி 6:23ஐத் தொட்டுக் கொண்டிருந்தது,

“வீட்லெ ஆம்பளப்புள்ளேன்ணு இருந்து என்ன பிரயோஜனம்?எல்லாத்துக்கும் நாமதான் சாவ வேண்டியிருக்கு! இந்த சனியம் புடிச்ச பைப்ப்போடெ கிடந்து மாரடிக்கணுமாயிருக்கு” உம்மாவின் புலம்பலை விட லொக்கு லொக்குன்ணு இருமித் தொலைக்கும் அடி பைப்பின் ஒலிதான் எனக்கு எரிச்சலைத் தூண்டியது.

அப்பப்பா! சடவு முறித்து மெல்ல எழுந்து நழுவிய வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு பாத் ரூமுக்குள் நுழைந்த என்னை முறைத்துப் பார்த்து விட்டு உம்மா அடுப்பங்கறைகுள் போனாள்.ஒரு ஜொக்கில் தண்ணீரை அள்ளி அடி பைப்பின் தொண்டைக்குள் ஊற்றினேன் அது உறுமியது முக்கால் வாளி நிறைவதற்குள் அடி பைப் பெரு மூச்சு விட்டு ஓய்ந்தது. மீண்டும் உம்மாவின் குரல் “ஆமா! இன்னும் நல்லாத் தூங்கிட்டு ஒன்பது மணிக்கு வந்து அடி..! தண்ணீர் வரும், அறுத்த கைக்கு உப்பு வைக்க மாட்டியே? இருக்கிற தண்ணீலெயும் கைவுட்டு தொலைஞ்சிறாதே! அப்புறம் குடிக்க ஒரு சொட்டுத் தண்ணிகூடயிருக்காது! இந்த பால்க்கார ஒழிஞ்சு போயிருவானுக்கும் நேரங்காணாதா? எல்லா வூட்டுகும் ஊத்திட்டு ஏழாங்கடைசிலெ தான் இங்கே வருவான்” எட்டு மணி வரை உம்மா எதையாவது முனுமுனுத்துக் கொண்டேதான் இருப்பாள்....

இந்தக் கடந்த கால என் அன்றாட நிகழ்வுகளை நினைவு படுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகரெங்கும் அடிபைப் ஒலி!எனும் செய்தியை வெளியிட்ட அருமை நண்பர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களுக்கு இச் சிறுகதையை அர்பணம் செய்கின்றேன்! நன்றி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Water Supply Without bumping motor regarding
posted by M.I.Khaleelur Rahman (Bangalore) [10 April 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3865

Dear President of Municipality and other Officers,

When I have received this article (Adipipe oli) very nice and Fantastics,the middle and the poor people, who had very much affected these much of problems,and they felt heart-wounded. So,now you have revealed this cause and remeady.I think that the People of our Kayalpatnam will pleasure from today till the day resurrection.Thanking you for your kind co-ordination and also morning power cut.

Thanks & Regards.
M.I.Khaleel (S/o.S.M.S.Mohammed Ibrahim)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மவனே நீ மட்டும் என் கையில் மாட்டினே
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [10 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3866

மச்சான் முஹம்மது ரஃபீக், ஆட்டோகிராப் படத்தை நினைவு படுத்திய மாதிரி உள்ளது உன் பதிவு...

இப்போ எல்லாம் எங்கே 'குருவிகளின் கோரஸ் சப்தம்' கேட்கிறது.ஒன்னு இரண்டு குருவிகள் சாவும் போது போடும் சப்தம் தான் மிச்சம்.-உபயம் செல்போன் கோபுரங்களாம்.

உங்கள் வீட்டில் 6.30 வரை தூங்க விட்டார்களா!.கொடுத்து வைத்தவன் நீ. எங்கள் வீட்டில் சுபுஹுக்கு பின்னாடி தூங்க விட்டாதானே.

ஒரு தடவை, பல நாட்கள் மாங்.. மாங்கு(ஓல்ட் மாங் அல்ல) என்று தொட்டி நிறைய தண்ணீர் அடித்து, மோட்டார் மூலம் மாடி தொட்டிக்கு ஏற்றலாம் என்றால் மோட்டார் வேலை செய்யவில்லை, கிணற்றில் இருந்து வரும் பைப்பிலும் அடைப்பாம்.ஒரு நபர் வந்து அப்படி இப்படி என்று ரிப்பேர் பார்த்து 100 ரூபாயும் வாங்கி விட்டு சென்று விட்டார்.(பைப் மாற்றனும்,செக் வால்வு மாற்றனும் என்று தனி செலவு வேறு..)

மோட்டார் போட்டு 30 நிமிடத்தில்,அடித்து வைத்து இருத்த தண்ணீர் அனைத்தும் காலி ஆகி விட்டது,மாடி தொட்டியும் காலியாக தான் உள்ளது, என்ன சோதனை இது? ஆராய்ந்து பார்த்ததில் அனைத்து தண்ணீரும் கிணற்றுக்கே சென்று விட்டது.என்னடா இது நமக்கு வந்த சோதனை.

இப்படி தான் நம் ஊர் டெக்னீசியன்கள். நானும் பல வருடமாக அவனை தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன். மவனே நீ மட்டும் என் கையில் மாட்டினே...!!

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Automation Vs Adi pump
posted by ahamed mustafa (Dubai) [10 April 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3867

Gents, Whilst agreeing the social implications theory as to how the erstwhile Hand pump affects the common poor, we can not even rule out what modernity & technology to do with this subject of concern now.Years back owning of a cell phone was a luxury & unaffordable. Now the increasing advent of Technology has brought this tiny instrument within the reach of the common poor as well. Likewise the the usage of Motors is almost inevitable,given the reach of Technology to the common man. We can even say,5 or 10 years from now this Motorised pump sets will appear ancient.Down the line we can run this motor or fill our tanks up with the click of a button from our Laptop or notebooks. It is so easy a Technology that we nowadays run huge equipment remotely by the click of a button. I am sure the manufacturing of the so called Handpumps or Push pump will cease.Eventhough I go with Technology, still in our house at Kayalpatnam, we use the old type of Pump to deliver the water & we have not yet transformed even to the Motors to suck water, for sure..5 years from now, the guy who is sucking the water via pumps will complain against the man who is automating his pump with a touchscreen. This is how life goes.Just my take on this subject without any hidden agenda Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நமது பலம்!
posted by கவிமகன் (துபாய்) [10 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3868

விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில், விதிமீறல்களை நியாயப்படுத்த முடியாது. கொழுக்கட்டை முதல் அலைக்கற்றை வரை பணக்கட்டை பார்ப்பவர்கள், தொடர்ந்து விஞ்ஞானரீதியில் ஊழல் புரியட்டும்.அது அவர்களின் குணம். ஒவ்வொரு விஷயத்திலும்,நீதியையும் நேர்மையும், நெஞ்சத்தில் சுமந்து வாழ்வாங்கு வாழ்ந்த நமது முன்னோர்களின் அடிச்சுவட்டில் வாழ்வதே நமது பலம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. என்ன கொடுமை சார் இது....
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3870

இப்படி தான் நீங்க சொன்னத கேட்டு தான் உடம்பை குறைக்குறதுக்காக எங்க கட்சி தே.மு.தி.க தலைவர் அடிப்பை அடிச்சாரு அதை அப்படியே எதிர் கூட்டணி திசை திருப்பி அவரு தண்ணி அடிச்சுட்டு பேசுராருனு பிரச்சாரம் பண்ணுறாங்க...அதுவாது பராவயில்லை ஒரு வேட்பாளர் அடிப்பை எப்படி அடிப்பதுனு நம்ம தலைவர்கிட்ட கேட்டங்க.. அதுக்கு நம்ம தலைவர் ஒரு சாம்பிள் பண்ணி காட்டினாரு.. உடனே வேட்பாளார அடிச்சுட்டாருனு செய்தியை போட்டுடாங்க...என்ன கொடுமை சார் இது....

ஒகே.. நமக்கு எதுக்கு அரசியல் நான் மேட்டருக்கு வரேன். சாலிஹ் காக்காவின் எழுத்து நடை நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே இருக்கிறது (மாஷா அல்லாஹ்..!) வாழ்த்துக்கள். ஜியாவுதீன் காக்கா வழக்கம் போல அடிபொலி கமெண்ட்ஸ். அப்புறம் முக்கியமா நம்ம ஹிஜாஸ் மைந்தன் - முஹம்மது ரஃபீக் அவர்களை பாரட்டியே ஆக வேண்டும் .அவங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது ஏதோ ஊருக்கு ஒரு நாள் போய்ட்டு வந்த உணர்வு எனக்கு தோன்றியது அவங்களுக்கு ஒரு ஷ்பெசல் தாங்ஸ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஹலாலா ? ஹராமா ??
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [10 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3875

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

ஓரிரு வாரமாக மவுனமாக இருந்த நமது காயல்பட்டணம்.காம் " கருத்து " பதிவாளர்களை 'அடிபைப்' ஒலி மூலம் உசுப்பிவிட்டு உற்சாகப்படுத்திய சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒரு காலத்தில் எல்லா வீட்டு குழாய்களிலும் தண்ணீர் தானாகவே வரும், எவரும் அடிபைப் வைத்து அடிக்க வேண்டிய அவசியமில்லை. வீடுகளுக்கு இணைப்புகள் அதிகரித்தபோது தெருக்களில் உள்ள பொதுக் குழாய்களில் தண்ணீர் வருவது குறைந்ததால், தெரு குழாய்க்கு அடிபைப் வைத்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதுவும் அது பொது மக்களின் உபயோகத்துக்கு என்பதால்.

அந்த நேரம் நம் ஊரில் ஒரே ஒரு மேல்நிலை தொட்டிதான் இருந்தது. அளவுக்கு அதிகமான இணைப்புகள் கொடுக்கப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகி வீடுகளிலும் அடிபைப் வைக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது. மிகுதமான வீடுகளில் அடிபைப் வைத்தார்கள். நாங்களும் அடிபைப் வைத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் மன வெறுப்புடனே அடிபைப் வைத்து தண்ணீர் பிடித்தோம்.

சகோதரர் ஸாலிஹ் அவர்கள் சொல்படி இன்று மோட்டார் போல் அன்று - அடிபைப், அடுத்த வீட்டுக்கு போகிற தண்ணீரை நம்ம வீட்டுக்கு வரவழைக்கிற வேலையை செய்தது.
----------------------------------------
அல்லாஹ்! கிருபையால் தீவுத் தெருவில் மேல்நிலை தொட்டிக் கட்டியதால் எங்கள் பகுதியில் தண்ணீர் தாராளமாக வந்தது அதனால் நாங்கள் வெறுப்புடனே உபயோகித்த அடிபைப்பை துண்டிக்க வேண்டிய சந்தோசமான நிலை ஏற்பட்டது.

இன்று ஊரில் பல பகுதிகளிலும் மேல்நிலைத் தொட்டிகள் இருந்தாலும், தண்ணீர் தேவையான அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் குறைந்த வேகத்தில் வருவதால் அடிபைப் வைத்து எடுக்க வேண்டிய கட்டாயமே பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது.

இன்று வரை அல்லாஹ் உதவியால் எங்களுக்கு அடிபைப் வைக்காமலே தண்ணீர் கிடைக்கிறது மிக குறைந்த வேகத்தில் - வேகம் குறைந்தாலும் மனம் நிறைவடைகிறது அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்கவில்லையே என்று.

இந்த மாதம் வேகமாக வந்ததால் அதிக நேரம் குனிந்து தொட்டியின் உள்ளே உள்ள பைப்பிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய சிரமம் ஏற்படவில்லை, வெளியே மேலே உள்ள பைப்பிலிருந்தே தண்ணீர் எடுக்கிறோம், அதனால் முதுகு வலி இல்லை. எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே!
-----------------------------------------
மோட்டார் வைத்து தண்ணீரை ஏற்றியவர்களுக்கு இந்த மாதம் 'சிரமம்' என்றாலும் அவர்கள் சந்தோசப்படனும் ஏனென்றால் இந்த ஒரு மாதமாவது பாவச்செயலை செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறோமே என்று.

பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால்தான் இந்த சிரமம். மோட்டார் வைத்து யாருமே தண்ணீர் எடுக்கவில்லை என்றால் தாராளமாக தண்ணீர் வரத்தான் செய்யும். சில இடங்களில் வேகம் குறைவாக இருக்கும், மற்றபடி தண்ணீரே வராமல் இருக்காது.

மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் அடுத்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர் தடுக்கப்படுகிறது என்றால், அந்த தண்ணீர் ஹலாலா ? இல்லை ஹராமா ??. சிந்தியுங்கள்! சீர் பெறுங்கள் மக்களே அல்லாஹ்'வுக்கு பயப்படுங்கள்.
---------------------------------------
மக்களே!

என்னதான் அறியுரையை சொன்னாலும் கேட்கக்கூடிய மக்கள்தான் கேட்பார்கள்.

அடிபைப் , மோட்டார் இல்லாமல் தாராளமாக அதுவும் தினமும் தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் தயவு செய்து இனி வரக்கூடிய நகரசபைத் தேர்தலில் கறைபடாத கையுடைய, இறைவனுக்கு பயந்த, நல்ல சுறுசுறுப்புள்ள திறமையான வார்டு உறுப்பினர்களை நகரசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்.

அல்லாஹ்! நகரசபையை நல் மக்கள் உள்ள சபையாக செயல்படுத்திட செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. கூவோ கூவுன்ணு கூவிகினுகீறாங்க...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [11 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3880

இதாவது பரவாயில்லை முத்துவாப்பா, எங்கள் தலைவர்(?) ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை குத்தகையில் மத்தவங்களுக்கு காசு போயிடுமேன்ணு அவ்வளவு பணத்தையும் தன் குடும்பத்தாரிடம் இருந்தா பத்திரமா இருக்குமேன்ணு கொடுத்து வச்சிருக்காரு! அதப்போயி எதிர்க்கட்சிகாரங்க ஊழல்... ஊழல்ன்ணு கூவோ கூவுன்ணு கூவிகினுகீறாங்க...

எங்க ஆளு சும்மா கொய்ந்தைலேந்து கெய்வி இன்னாமா பண்ணிகினுகீறாரு அத்தெப்போயி இவனுங்கொ கலாய்கிறாங்கப்பா நா இன்னா சொல்ல வர்றென்னு புஞ்சிகினியா?

“என் அதிகாலை முதல் எதிரி அடிபைப்பு”க்கு தாங்கள் மற்றும் நண்பன் ஜியாவுத்தீன் அளித்த விமர்சனத்திற்கு நன்றி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. நல்லோர்கள் வாழ்வுக்காக...நமக்காக நம்மைக் காக்க...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [11 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3882

N.S.E.மஹ்மூது மாமா(காக்கா) உங்க கட்டுரை(கருத்துரை)யைப் படித்தேன். மார்க்கம் சார்ந்தே நாம் வாழவேண்டும் என்பதைத் தாங்கள் பல முறை உங்கள் பதிவில் அழுத்தமாகச் சொல்லி வருகின்றீர்கள். நல்ல தூய மனதுள்ள நீதவான்களை நகராட்சிக்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கும் படி வலியுறுத்தியும் வருகின்றீர்கள்.

ஏன் தங்கள் போட்டி போடக்கூடாது? இந்த முறை எதிர்பார்க்கலாமா? நோனா குடும்பத்தினர் யாரும் நோண்டி இல்லை என்பதை நிரூபிக்க இதை ஓர் அரிய வாய்ப்பாகவே கருதிக்கொள்ளுங்கள்! என் அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்!!

உங்கள் வழக்கமான அட்வைஸ்கள் பூக்கள் தொடர்ந்து மலரட்டும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. .(அநியாயங்கள் நாளை மறுமையில் இருளாக வரும்) நபிமொழி
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [11 April 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 3894

அல்ஹம்துலில்லாஹ்.! அருமையான செய்தி! தேவையான செய்தி! பவர்கட்டில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நகரில் நீர் விநியோகம் எப்போதெல்லாம் இருக்குமோ, அப்போதெல்லாம் இந்த "பவர்கட்டை" ஒரு தர்ம சங்கடத்துடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.காரணம் பிறருக்குரிய தண்ணீரை அனைத்தையுமே(மோட்டர் மூலம் ) நானே உறிஞ்சி எடுப்பேன் என நினைப்பவர்களுக்கு இந்நடைமுறை ஒரு சரியான பாடமாகும்.

இந்நேரத்தில் நமது நகரமன்ற முன்னாள் தலைவர் மர்ஹூம் V.M.S.லெப்பை மாமா (அலாஹ் அன்னாரின் கப்ரை சுவன சோலையாக ஆக்குவானாக!) தண்ணீர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் நபர்களை அடையாளம் கண்டு ,நீர் இணைப்பை துண்டித்து ,மோட்டாரையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை எடுத்தார்கள்.அது கைமேல் பலனையும் தந்தது.ஆகவே ! தற்போதுள்ள நகர்மன்றம் இந்நிலையை தொடரவேண்டும்.இதில் ஏழை,பணக்காரன்,வேண்டியவன்,வேண்டாதவன்,தெரிந்தவன்,தெரியாதவன்,விவரமானவன்,விபரமற்றவன்,உசாரானவன்,வாய் செத்தவன் என்பனபோன்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அல்லாஹ்,ரசூலை பயந்து நியாயமாக,நீதியாக குறிப்பாக நகர்மன்றமும்,பொதுவாக நகரமக்களும் செயல் படவேண்டும்.

(அநியாயங்கள் நாளை மறுமையில் இருளாக வரும்) நபிமொழி. இந்த நாயகவாக்கு எல்லோருக்கும் பொதுவானதாகும். உலகில் அநீதம் இழைக்கப்பட்டவன் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் வழக்காடுவான்.என்பதும் நபிமொழி.ஆகவே! இவ்வுலகில் அடுத்தவர்களின் தண்ணீரை அநியாயமாக உறிஞ்சுபவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.அநியாயமாக அடுத்தவரின் குடிநீரை உறிஞ்சுபவர்கள் எதார்த்தத்தில் அவர்களின் இரத்தத்தையே உறிஞ்சுபவர்கள்.ஆகவே! அனைவரும் அடுத்தவர்களின் ஹக்கில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்.அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!ஆமீன்.!வஸ்ஸலாம்!

(அன்புடன் mskaja mahlari)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. சங்கை ஊதியாச்சா
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [11 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3902

அனைவர்களும் மீண்டும் ஒருமுறை மஹ்மூத் மாமா உடைய கருத்தை படித்துப்பாருங்கள், முன்பு தண்ணீர் தானாக வந்த நாட்களில்,அடிபைப்பு வைத்து தண்ணீர் அடிப்பவர்களை இது மாதிரி தான் சொன்னார்களாம்.

இந்த மாதிரி அடிபைப் வைத்து அடித்து, அடித்து மற்றவர்களின் தண்ணீரை உறிஞ்சுகிறார்கள், இது நல்லதா,ஹராமா,ஹலாலா,அனைத்து அடிபைப்புகளையும் பறிமுதல் செய்யணும்.. என்று சொன்ன காலம், இன்று இது ஹலால்.

பிற்காலத்தில் இந்த மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது ஹலால் ஆகுமா? தெரியவில்லை.

அனைத்துக்கும் காலம் தான் பதில் சொல்லும். இப்போது நிலக்கரி தான், காலப்போக்கில் வைரமாக ஆவதில்லையா.ஆகவே தீர்மானம் செய்வது காலமே.

(என்ன... சகோ.S.K.ஸாலிஹ் அவர்களே, சும்மா இருந்த சங்கை ஊதியாச்சா, பாருங்கள் எவ்வளவு கமெண்ட்ஸ் மோட்டார் மட்டேருக்கு, நல்ல்ல்லலல ஊதுங்க... தொடரலாம்.. நாங்க ரெடி.. நீங்க..)

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
திடீர் மழை  (10/4/2011) [Views - 2524; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved