Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:41 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6647
#KOTW6647
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 6, 2011
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011: படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள்! இறுதியில் நீங்களே வெல்லுங்கள்!! கலந்துரையாடலின்போது மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா கருத்து!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3363 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பாக, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை 2011” என்ற தலைப்பில், 24.06.2011 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் பரிசளிப்பு விழாவும், மறுநாள் 25.06.2011 சனிக்கிழமை காலையில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் மாநிலத்தின் முதன்மாணவி ஓசூரைச் சார்ந்த கே.ரேகாவுடன், காயல்பட்டினம் நகர பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சி:
கலந்துரையாடல் நிகழ்ச்சி, 25.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றார். தலைமையுரையைத் தொடர்ந்து, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், சாதனை மாணவி கே.ரேகா குறித்து அறிமுகவுரையாற்றினார்.





நேர்காணல்:
பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மாநிலத்தின் முதன்மாணவியான ஓசூரைச் சார்ந்த கே.ரேகாவை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நேர்காணல் செய்தார்.

சாதனை மாணவியின் அன்றாட வாழ்க்கை முறை, நேர மேலாண்மை, இலட்சியம், வீட்டில் பெற்றோர் - பள்ளியில் ஆசிரியர்கள் - வெளியில் நண்பர்களின் ஒத்துழைப்புகள், வருங்காலத் திட்டம், காயல்பட்டினம் மாணவ-மாணவியருக்கு அவர் கூற விரும்பும் அறிவுரை உள்ளிட்டவை குறித்து அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாதனை மாணவி கே.ரேகா விரிவாகவும், விரைவாகவும் பதிலளித்தார்.

இந்த நேர்காணலின்போது அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-

நான் புற்றுநோய் மருத்துவத் துறையில் தலைசிறந்த நிபுணராக ஆசைப்படுகிறேன்... அதன் துவக்கமாக, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன்...

பெற்றோர் ஒத்துழைப்பு...
படிக்கும் காலத்தில் எனது தாயாரின் ஒத்துழைப்பு எனக்கு நிறைவாகக் கிடைத்தது... எனது உடல் நலன் விஷயத்தில் அவர் என் மீது தனி அக்கறை வைத்திருந்தார்... எங்கள் வீட்டில் யாரும் டிவி பார்ப்பதில்லை. என் தாயாருக்கு அதற்கு நேரமுமில்லை.



தாயின் அக்கறை...
என் தந்தை அவரது பணிக்குச் சென்று வருவதற்கே போதிய நேரம் இல்லாததால், பணி முடித்து வீட்டிற்குத் திரும்பும் அவருக்கு முழு ஓய்வளிக்கும் விதமாக என் தாயார் அவருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும் அதே நேரத்தில், பிள்ளைகளாகிய எங்களுக்குத் தேவையானவற்றையும் நிறைவாக செய்து தருவார். குறிப்பாக, எங்களுக்கு அவர் ஆயத்தம் செய்து தரும் உணவில் எண்ணெய் மிகவும் குறைவாகவே சேர்க்கப்படும். ஒருவனை உடல் மற்றும் உளச்சோர்வடையும் விஷயத்தில் எண்ணெய்யின் பங்களிப்பு அதிகம் உள்ளது என நாங்கள் தெரிந்து வைத்திருந்ததே அதற்கான காரணமாகும்...

டியூஷன்...
நான் டியூஷன் சென்றதில்லை. அன்றாடம் பள்ளியில் நடைபெறும் பாடங்களை - அப்பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம் அன்றன்றைக்கே கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வேன்... ஒருவேளை பின்னர் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், எனது ஆசிரியர்களுடன் தொலைபேசி வழியே தொடர்புகொண்டு என் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வேன்... எனது ஆசிரியர்களும் சிறிதும் ஆர்வம் குறையாமல் எனது கேள்விகளுக்கு விளக்கம் தருவார்கள்...

நண்பர்கள்...
எனக்கு நண்பர்கள் வட்டம் மிக மிகக் குறைவு... எங்கள் வகுப்பில் அனைவருமே நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் எப்போதாவதுதான் அரட்டைகள் இருக்கும்.... எங்கள் கவனம் முழுவதும் இந்த ப்ளஸ் 2 தேர்வை நன்முறையில் சந்தித்து நம் வாழ்வை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றில்தான் இருக்கும்...


இவ்வாறு பல்வேறு கருத்துக்களை மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா தெரிவித்தார்.

பின்னர் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பார்வையாளர்கள் அவரிடம் பல்வேறு சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டனர்.



அதற்கு அவர் விளக்கமளிக்கையில்,

சண்டை போடுங்கள்...
படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள் நண்பர்களே... முடியாது என்று நினைப்பதே நம்மை முடியாமல் ஆக்கி வைக்கப் போதுமானது. முடியாதவற்றையும் கூட “இது ஏன் எனக்கு முடியாது? நிச்சயம் முடியும்!” என்று உறுதியாக நினைத்துக்கொண்டு செய்து பாருங்கள்... நிச்சயம் அது பலன் தரும்...



படிக்கும்போது, ஆட்காட்டி விரலை படிக்கும் வரியின் மீது வைத்தவாறு படியுங்கள்... ஆட்காட்டி விரலுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை நான் அனுபவித்துள்ளேன். குறிப்பாக ஒரு மதிப்பெண் கேள்விகள் விஷயத்தில் இம்முறையைக் கையாண்டால் நிச்சயம் அது மறக்கவே மறக்காது...

சிந்தனையை சிதற விடாதீர்கள்...
படிக்கும்போது ஒரே சிந்தனையுடன் படியுங்கள்... பல வேலைகளை உங்களுக்குள் சிந்தித்துக்கொண்டே படிக்காதீர்கள். ஏதேனும் வேலையிருந்தால் அதை முடித்துவிடுங்கள்... பின்னர் படியுங்கள்...

இந்த ஒரு வருடம்தான் உங்களுக்கு பள்ளிப் பருவம்... எனவே, பொழுதுபோக்குகளை இந்த ஒரு வருடத்திற்கு மட்டும் முழுமையாக ஒத்தி வைத்துவிடுங்கள்... அது உங்கள் வாழ்க்கை முழுவதும் பலன் தந்துகொண்டேயிருக்கும்.

தேவையிருந்தால் மட்டுமே டியூஷன் செல்லுங்கள்... இயன்ற வரை அனைத்துப் பாடங்களுக்கான விளக்கங்களையும் பள்ளியிலேயே ஆசிரியர்களிடம் கேட்டறிந்துகொள்ளுங்கள...

உங்களுக்குத்தான் அதிக வாய்ப்பு...
நாங்களெல்லாம் மாநிலத்தின் முதன்மாணவராக வருவோரை டிவி அல்லது செய்தித்தாள் வழியாகத்தான் பார்த்திருக்கிறோம்... ஆனால், காயல்பட்டினத்தைச் சார்ந்த மக்களாகிய நீங்களோ ஆண்டுதோறும் அவர்களோடு நேரடியாக கலந்துரையாடுகிறீர்கள்... எனவே, சாதனை செய்வதற்கு மற்ற அனைவரையும் விட உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது... எனவே, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, வரும் ஆண்டில் காயல்பட்டினத்திலிருந்து - இங்கிருக்கும் உங்களில் ஒருவர் மாநிலத்தின் முதன்மாணவராக வரவேண்டும் என்பது எனது ஆசை...

நகர மக்கள்...
இந்த நகருக்கு நான் வந்ததிலிருந்து இவர்களின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தேன்... ஏதோ என்னுடன் பத்தாண்டுகள் பழகிய மக்களைப் போல பாசத்தோடும், இணக்கமாகவும் நடந்துகொண்டார்கள்... அது என்னை மிகவும் மகிழச் செய்துள்ளது...


இவ்வாறு மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா தெரிவித்தார். பார்வையாளர் கேள்வி நேரத்தை ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் அப்துல் காதிர் நெய்னா ஒருங்கிணைத்தார்.

தன் மகளை தான் அக்கறையுடன் பார்த்துக்கொண்ட விதம் குறித்து அவரது தாயாரும் கருத்து தெரிவித்தார். காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரை அவரது தாய்மாமா வெற்றிவேல் வாழ்த்திப் பேசினார்.



வாழ்த்துரை:
பின்னர், அவரை வாழ்த்தி காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் அஹ்மத் சுலைமான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இறுதியாக இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நகர சாதனை மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வும் தன் பெற்றோருடன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

கலந்துகொண்டோர்:
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியரும்,







இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் எஸ்.எச்.அப்துல் காதிர், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் செயலர் ஹாஜி ஆதம் சுல்தான், ஜித்தா ஹாஜி பிரபு ஜெய்லானீ, அமீரக காயல் நல மன்றத்தைச் சார்ந்த எம்.இ.ஷேக்,

என்.டி.ஷெய்கு மொகுதூம், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் உள்ளிட்ட பார்வையாளர்களும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மோர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.



நிகழ்ச்சி ஏற்பாடு:
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஒருங்கிணைப்பில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்கள் பி.ஏ.புகாரீ, எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா ஆகியோரும், காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Boost for our students
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [06 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5774

Very nice arrangement.Actually this meeting provide boost for our students.Raka state tooper 2011 who emphasized important of studies.And also who told fight with subjects not fight with others.So students must adopt her speech,and show their ability with full concentrate their studies.Our brother Mr Amanullah is pioneer who achieved district level.On coming exam you people achieve state level.Allah will full fill our aspirations.Hard work is mother of good luck.No substitute hard work.

Best regards

Syed Mohamed Fasi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2.
posted by A.R.Refaye (ABUDHABI) [06 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5776

வரும் கல்வி ஆண்டில் இககாயல் நகர மாணவர்கள் மாநில முதல் என்ற முத்திரையை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உடன் மாணவர்களும், ஆசிரியர்களும். பெற்றோர்களும் முறையாக ஊக்குவித்து வெற்றி முரசு கொட்ட ஆவணம் செய்வோம்.

இக்ரா அமைப்பினற்கு ஒரு வேண்டுகோள், இது போல் மாணவர்கள் விழாக்களுக்கு மாணவர்களை முதல் வரிசையில் அமர்த்தி அவர்களை ஊக்க படுத்துவதில் நமது செயல்பாடுகள் வரும் நிகழ்வுகளில் முறை படுத்த வேண்டும் என்பது என் சிறிய ஆவல்.

நாங்கள் படிக்கின்ற காலத்தில் "இக்ரா" போன்ற அன்புக்கரங்கள் இல்லாமல் தவித்தோமே, மாணவர்களே உங்களை கல்வியில் வளப்படுத்த மேன்படுத்த உலகளாவிய மன்றகள் தம் அன்புக்கரங்களை உயைர்த்தி உற்சாகம் செய்வதை நீங்கள் நன்றாக பயன்படுத்தி வெற்றி வாகை சூட என் உள்ளம் நிறைந்த நல வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சிந்தனைக்கு விருந்தளித்த சகோதரி ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [06 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5782

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் எமதூர் மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தளித்த சகோதரி ரேகா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

இது போன்ற ஆக்கபூர்வமான பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கி வரும் இக்ரா கல்வி சங்கத்திற்கும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பினருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் வருங்காலத்தில் நமதூர் மாணவர்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களாக வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இரு கரம ஏந்தி பிராத்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. good encourage
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [06 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5785

Our state topper Ms. Rekha conversation is good. Her points about studies is well and good.

Insha allah our kayal students will become a state topper. I pray for them.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இரண்டு புதிய கருத்துக்கள் சொன்னது கூடுதல் பிளஸ்.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5797

இந்த நல்ல நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் அனைவர்களுக்கும் நன்றிகள்.

மாணவி கே.ரேகா அவர்களின் கருத்துக்கள் மிக அருமை. வழமையாக சொல்லும் பதிலில், இரண்டு புதிய கருத்துக்கள் சொன்னது கூடுதல் பிளஸ்.

ஒன்று, "படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள்" - நம்ம ஆட்கள் பாடத்தை தவிர மற்ற அனைவர்களுடனும் சண்டை போடுவார்கள். வீட்டில், பள்ளிக்கூடத்தில், கடைகளில் எல்லாம் சண்டைகள் நடக்கும்.

ஒரே ஒரு முறை மட்டும் படிக்கும் பாடத்துடன் சண்டை போடுவார்கள், எப்போது தெரியுமா?.. பரீட்சை முடிந்து வெளியில் வந்ததும் புத்தங்களையும், நோட்சையும் சுக்கு நூறாக கிழித்து, ஓஒய்ய்ய என்று கத்தி, எல்லோர் மேலும் வீசுவார்கள்... இந்த சண்டைதான் நம் மக்களிடம் உள்ளது.

அடுத்து, "எண்ணெய் மிகவும் குறைந்த உணவே உட்கொள்ளனும்" என்ற கருத்தும்...

நமக்கு இது நேர் எதிர்தான். ஒரு முறை ஒரு இரவு நேரத்தில், ஒரு டியூஷன் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று அவதானித்ததில், டியூஷன் முடிந்து வந்த மாணவர்கள் அனைவர்களும் ஆசிரியரை திட்டிக்கொண்டே வந்தார்கள், விசாரித்ததில் அவர்களுக்கு ஜலாலியாவில் இரவு சாப்பாடாம், ஆசிரியர் இன்று பார்த்து அதிக நேரம் டியூஷன் எடுத்து விட்டாராம்,அதற்கு அந்த வசவு.. கொடுமையே.. பாவம் ஆசிரியர்கள்.

அப்படியே புல் கட் கட்டிவிட்டு தூங்கிவிடவேண்டியதுதான். எங்கு படிக்க... திருமண விருந்தில் நம்ம ஆட்கள் வேறு "படிக்கின்ற பிள்ளைங்கப்பா,, நல்ல சாப்புடுங்க" என்று கவனிப்பு அதிகம் கூட..

என்ன நம் பிள்ளைகளை இப்படி வாறுகிரேன் என்று நினைக்காதீர்கள், ஒரு பேராசைதாங்க... இல்லை இல்லை.. நியாயமான ஆசை தான்.. நம் பிள்ளைகள் மாநில முதல் மாணவன் என்ற செய்தியை பார்க்கணும் என்ற ஆவல்.

அப்புறம், நிகழ்வு போட்டோக்கள் எல்லாம் நன்றாக உள்ளன, ஆனால் மேடையில் அமர்ந்து உள்ளவர்கள் வேஷ்டி அணிந்து இருப்பது நன்றாக தான் உள்ளது ஆனாலும் நன்றாக இல்லை. பாரம்பரியத்தை காட்டலாம் தான், ஆனால் மேடையில் சரியா என்று புரியவில்லை.

என்ன, மெஹர் அலி காக்கா, ஊருக்கு சென்றதும் புது மாப்பிள்ளை மாதிரி சூப்பராக இருக்குறீங்க. மாஷாஹ் அல்லாஹ். தாங்கள் இன்னும் ஒரு ......... வாண்டாம்... வாண்டாம்.... உங்கள் மருமகன் ஸாலிஹ் தான் ADMINISTRATOR.. அப்புறம் மொத்த கருத்துக்கும் கத்திரி போட்டு விடுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சண்டை போடுங்கள்
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [07 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5801

படிக்கும் பாடத்துடன் சண்டை போடுங்கள் என்ற கருத்தை பார்க்கும் பொழுது எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் நடந்த சம்பவம் தான் நியாபகத்திற்கு வருகின்றது .

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வின் இறுதி பரீட்சையாக எங்களுக்கு COMPUTER SCIENCE தேர்வு நடைப்பெற்றது அதே ஹாலில் மற்றொரு பிரிவு மாணவர்களும் இருந்தனர் . அவர்களுக்கு VOCATIONAL THEORY பரீட்சை நடைப்பெற்றது . அப்பொழுது எங்களுக்கு SUPERVISOR ஆக ஒரு பெண் ஆசிரியர் வந்தார். அவர் பயங்கர STRICT ..STRICT ... STRICT ....

எங்களுக்கு கணிப்பொறி பாடம் ஈசியாக இருந்ததால் நாங்கள் அமைதியாக தேர்வு எழுதி கொண்டிருந்தோம் VOCATIONAL மாணவர்கள் கேள்வித்தாளை பார்த்து செய்வதறியாது திகைத்து மனதிற்குள் புலம்பினர் எல்லாம் தெரிஞ்ச ஆசிரியர்கிட்ட விடைத்தாளை கொடுக்கிறாங்க ஒன்னும் தெரியாத நம்மகிட்ட கேள்வித்தாளை கொடுக்கிராங்கலேன்னு . இதையும் மீறி ஒரு மாணவர் எழுந்து ஆசிரியையிடம் கெஞ்சினான் ,தயவு செய்து பார்த்து எழுத விடுங்கள் , உங்களுக்கு ஒரு மகன் இருந்த இப்படி பன்னுவீங்கலான்னு வேற கேட்டான். அதற்கு அந்த ஆசிரியை சொன்ன பதிலை நினைச்சா எனக்கு இன்னும் சிரிப்பு தான் வருது .. இவன் கேட்ட கேள்விக்கு அந்த ஆசிரியை சொன்னாங்க எனக்கு இப்படி ஒரு மகனே தேவை இல்லைன்னு சொல்லி இருப்பேன்னு.கடைசி வரைக்கு அவங்க பார்த்து எழுதவே விடலே ...

எப்படியும் பெயில் ஆகிடுவோம்னு தெரிஞ்ச அந்த நான்கு மாணவர்களும் அந்த ஆசிரியை பேருந்து ஏற நின்ற இடத்துல போய் கேள்வித்தாளை கிழிச்சு அவங்க தலையில போட்டுட்டு , நல்ல அவங்க திட்டிட்டு போனாங்க ....

நீங்களாவது படிப்போட தான் சண்டை போடா சொன்னீங்க ஆனால் என் நண்பர்கள் SUPERVISOR கூடயே சண்டை போட்ட சம்பவத்த இன்னும் நினைச்சா சிரிப்பு தான் வருது ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சமூக otthulaippu
posted by vsm ali (kangxi, Jiangmen , China) [07 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5813

சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சியில் எமதூர் மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தளித்த சகோதரி ரேகா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

தாயின் அக்கறை , டியூசன் இல்லாத படிப்பு , நண்பர்கள் வட்டத்தை குறைத்துக்கொல்லுதல் , இவைகள் தவிர " சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாணவர்கள் பரீட்சைக்கு படிக்கும் நேரத்தில் , பொது நிகழ்ச்சிகளுக்காக தெருவெல்லாம் ஒலி பெருக்கி வைத்து அவர்களின் கவனத்தை சிதறடிப்பது நியாயமா ? சென்ற முறை நான் ஊர் வந்தபோது + 2 மாணவர்களுக்கான model exam நடந்து கொண்டிருந்த சமயம்.. எனது தெருவாசி ஒருவர் , அவர் தலைமையில் நடக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு donation கேட்டார். நானோ , நீங்கள் ஒலி பெருக்கிகளை உங்கள் compound உள்ளேயே வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள். வேண்டுமானால் , cable TV காரர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் ஊர் முழுவதும் ஒலிபரப்பு செய்வார்களே என்றேன். அதற்க்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். ஆனால் அவரோ , தன்னுடைய கொள்கையில் இருந்து சற்றும் மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டார். காலங்கள் மாற , மாற நாமும் சற்று மாறினால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை . இனிமேலாவது , சமூகம் மாணவர்களின் படிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved