Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:08 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6706
#KOTW6706
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 13, 2011
சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு! காரசார விவாதத்தால் கோர்ட்டில் "அனல்'!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3269 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையில், மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தில், "அனல்' பறந்தது. இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் ஒத்திவைத்தார். சமச்சீர் கல்வி பாடத்திட்டம், புத்தகங்களை ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒன்பது பேர் குழு, தமது ஆய்வறிக்கையை கடந்த வாரம் ஐகோர்ட்டில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீது நடந்துவந்த, மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நேற்றுடன் முடிந்தது.

நேற்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரையிலும், உணவு இடைவேளைக்கு பின், 02.15 மணி முதல் மாலை 04.30 மணி வரையிலும், வழக்கறிஞர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் விடுதலை, சீனிவாசன், புருஷோத்தமன் ஆகியோரும், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார், மெட்ரிக் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆகியோரும் வாதிட்டனர்.

ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய, "முதல் டிவிஷன் பெஞ்ச்' முன் நடந்த வழக்கறிஞர்களின் காரசார வாதம் விவரம்:

வழக்கறிஞர் விடுதலை: தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். இதில், பெரும்பகுதி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் பயில்கின்றனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதை தரம் இல்லையென கூறி, இத்திட்டம் தொடர்பான சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது, முந்தைய அரசின் சட்டசபை நடவடிக்கைகளை மீறிய செயல். சமச்சீர் கல்விக்கு எதிரான மனநிலை கொண்டவர்களைக் கொண்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை செயலர் தயாரித்த ஆய்வறிக்கையில், குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும், இப்பாடத் திட்டத்தின் பயன் கிடைக்கும்.

வழக்கறிஞர் புருஷோத்தமன்: தேசிய பாடத்திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரையின்படி சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன், கல்வியாளர்கள், பெற்றோர் கருத்துகள் பெறப்பட்டன. இந்த ஆண்டு, பழைய பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலம், மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவர்.

அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன்: முந்தைய தமிழக அரசு, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வர அமைத்த குழுவில், சென்னை பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன் போன்ற, பள்ளிக் கல்வியில் நிபுணத்துவம் பெறாதவர்கள் இடம்பெற்றிருந்தனர். இக்குழு, கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களுக்கு ஒரே நாளில் ஒப்புதல் அளித்தது. அவசரகதியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியில் தரம் இல்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி, இதில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. இதனால், ஒரே நாளில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் அரசியலுக்கு இடம் இல்லை.

சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார்: கடந்த ஆண்டு ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, 2 முதல் 5Mம் வகுப்பு வரையிலும், 7 முதல் 10Mம் வகுப்பு வரையிலும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து நன்கு ஆராய்ந்து இக்கல்வியை கொண்டு வரும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை, முந்தைய தமிழக அரசு செயல்படுத்தாததால், அப்பணியை தற்போதைய அரசு செய்ய வேண்டியுள்ளது. 1 மற்றும் 6ஆம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை கொண்டுவர, கோர்ட் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. கல்வி போன்ற அடிப்படை விஷயங்களில், சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எல்லாரும், 200 கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதையே பெரிதாக பேசுகின்றனர்.

தமிழக அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமென எண்ணுகிறது. தற்போதைய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதாக இல்லை. சமச்சீர் கல்வியை ஆராய அமைக்கப்பட்ட குழுவில், மாநில பாடத்திட்டத்தை சார்ந்தவர்கள் இடம்பெறவில்லை என்று விமர்சிப்பவர்கள், இக்குழுவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும் ஒரு உறுப்பினர் என்பதை மறந்து விட்டனர்.

வழக்கறிஞர் விஜயன்: தற்போது ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை தேவைப்பட்டால், ஐகோர்ட் ரத்து செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு ஆகாது. எனவே, அடுத்த ஆண்டு முதல், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வியை கொண்டு வர ஐகோர்ட் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

நன்றி:
தினமலர் (12.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாணவர்களை அறுத்து எடுப்பது
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [13 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5949

என்ன நாட்டாமை தீர்ப்பை இப்படி ஒத்திவைக்கின்றீர்கள், சட்டுபுட்டுன்னு சொல்லலாம்ல...

இது மாணவர்களின் படிப்பு பிரச்சனை.. பள்ளிகளில் பாடங்களை நடத்தி மாதங்கள் ஆகின்றன. எத்தனை நாளைக்கு தான் உலக வரைபடத்தை தொங்கவிட்டு ஆப்ரிக்காவை காட்டு, அருப்புக்கோட்டையை காட்டு என்று மாணவர்களை அறுத்து எடுப்பது..

இப்படி நேரத்தை வீனாக ஆக்குவதை விட்டு விட்டு, மாணவர்களுக்கு SPOKEN ENGLISH, HINDI பயிற்சி என்று கொடுக்க அரசு ஆவன செய்யலாமே...(சில பள்ளிகளில் நடக்கிறதாம்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சமச்சீர் கல்வி வழக்கில் த...
posted by Soofi (Riyadh) [13 July 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 5954

அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது காயல் வலைதளத்தில் ஏன் தின பத்திரிகை செய்திகளை வெளியிடுகிறீர்கள் என்று எனக்கு தெரிய வில்லை. இச்செய்திகளைத்தான் தினமும் (பத்திரிகை வெப்சைட்) வாயிலாகத்தான் படித்து விடுகிறோமே!

இதனால் இந்த கருத்துக்கள் பரிமாற்றம் என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலும் நம்மிடயே வளர ஒரு வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும் நமதூரில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நமதூர் மக்கள் வாழும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை பரிமாரிகொண்டாலே போதுமென கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்துதான், சரி என்றால் தவிர்த்து கொள்ளுங்கள் இல்லையேல்...............தொடருங்கள்.

நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஓரே வெப்சைட் மூலம் பார்க்க தருகிறார் போல் தெரிகிறது
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [13 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5967

நண்பர் சூபி அவர்களின் கருத்து நியாயமானது தான் இருந்தாலும் தினபத்திரிக்கை செய்திகளின் முக்கிய ஓரிரு நல்ல செய்திகளை காயல்பட்டிணம் டாட் காம் மூலம் ஓரே வெப்சைட் மூலம் நமக்கு பார்க்க தருகிறார் போல் தெரிகிறது. இதனால் அரசியல் கருத்து வாதம் எதிர்வாதம் தொடர்வது நல்லதாக தெரியவில்லை.
(குறிப்பு:- இதில் என்னையும் சேர்த்து தான்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சமச்சீர் கல்வி வழக்கில் த...
posted by Moosa Sahib (Abu Dhabi) [13 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5972

தேவையான(முக்கியமான) செய்திகளை வெளிஇடலாம்.இந்த மாதிரி செய்திகளை தவிர்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
posted by Ahamed (Chennai) [13 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 5973

சகோதரர் சூபி கருத்து சரியே. அதுவும் ஒரே நாளிதளின் செய்தியனை பதிப்பதை தவிர்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு ....... நாம் தாம் அப்பத்திரிக்கையே தவிர்த்தோம். ஆனால் இன்று..........

ஆசிரியர் அப்பதிப்பினை இத்தளத்தில் போட விரும்பினால் தனியாக Link or Page கொடுத்தால் தேவை உள்ளவர்கள் மட்டும் அதனை பார்த்து கொள்வார்கள். மாறாக அப்பதிப்பினை இங்கு போடுவதால் சில நேரங்களில் நமது ஊர் செய்தியும் பார்க்க முடியாமல் SKIP ஆகி விடுகிறதே...

செய்வார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உங்களுடைய கடின வேலைக்கு மத்தியில் காயல் மக்களுக்காக சேவை செய்து வருகிறீர்கள்.
posted by saalih (பேங்காக்) [13 July 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 5974

சாலிஹ் காக்கா நீங்கள் தினப்பத்திரிக்கைகளில் வரும் அனைவருக்கும் தேவையான செய்திகளை உங்களுக்கே உள்ள பாணியில் அழகிய தமிழில் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காயல்பட்டணம்.காம் மூலமே அந்த செய்திகளை என்னைப்போன்றவர்கள் அறிந்து கொள்கிறார்கள். உங்களுடைய கடின வேலைக்கு மத்தியில் காயல் மக்களுக்காக சேவை செய்து வருகிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும். எக்காரணம் கொண்டும் நிறுத்துவிடவேண்டாம். அதற்கான கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவானாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சமச்சீர் கல்வி வழக்கில் த...
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [14 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5977

சாதி உணர்வும் மேலா... திக்க வெறியும் நமது பள்ளிகளில் எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இன்று வெளிவந்துள்ள ஜீனியர் விகடன் இதழில் கல்வியாளர் வே.வசந்திதேவி ஒரு முக்கியமான உதாரணத்தைக் காட்டுகிறார். ’’மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டம் ‘ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்காக பள்ளியில் 25 சதவிகிதம் இட ஒதுகீடு செய்யவேண்டும்’ என்கிறது. இதை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒரு படி மேலேபோய் கீழ்கண்ட சர்குலரை பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறது. அதில்’ மத்திய அரசு சட்டதின்படி 25 சதவிகிதம் ஏழை, பாமரக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு செய்தால் உங்கள் குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால் , உங்கள் குழந்தைகள் பாழாகிவிடுவார்கள்.

தகுயற்ற, ஒழுங்கீனமான குழந்தைகள் உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து நீங்கள் போரட்டம் நடத்த வேண்டும். ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் தாளாளரைத்தான் சமச்சீர் கல்வி ஆய்வுக் கமிட்டியில் தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்களிடமிருந்து நியாயமான அறிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்?’’ ஏழை குழந்தைகளுக்கு எதிராக பெரியவர்களை போராட அழைக்கும் பள்ளிகள் உலகத்திலேயே இங்குதான் இருக்கின்றன. இதெல்லாம் வன்கொடுமை சட்டதின் கீழ் வராதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சமச்சீர் கல்வி வழக்கில் த...
posted by kavimagan (dubai) [14 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5980

அதிக அளவில் தினமலர் பத்திரிக்கை செய்திகள் பிரசுரம் ஆவதால் ஒருவேளை நேயர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். மற்ற பத்திரிக்கை செய்திகளையும் மேற்கோள் காட்டினால் நல்லது. தினமலரில் வெளியாகும் வளைகுடா செய்திகளை பிரசுரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:சமச்சீர் கல்வி வழக்கில் த...
posted by Ahmed (Saudi Arabia) [14 July 2011]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5984

தம்பி சாலிஹு அவர்களுக்கு இந்த தினமலம் பத்திரிக்கை நம் சமுதாயத்தை எப்படி எல்லாம் கருவருக்ககூடிய பத்திரிக்கை என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் நீங்கள் அந்த பத்திரிக்கையின் ஆளும் அரசின் திட்டங்களை குறித்த செய்திகளை மட்டும் போடுவதன் மூலமும் கருத்துக்கள் மூலமும் நம் அழகிய இணையதளம் ஆளுங்கட்சி சார்புடையதாக இருக்கிறதோ என்ற தோற்றம் சமீப காலமாக தெரிகின்றது.

குளம் அஹமது முஹியத்தீன்
ஜெத்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved