Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:33:13 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8511
#KOTW8511
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 25, 2012
“தியாகிகளைத் தந்த காயல்பட்டினத்திற்கு நன்றி!” முஸ்லிம் லீக் சொந்த அலுவலக கட்டிடத்தைத் திறந்து வைத்து, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3573 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான - தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸில் திறப்பு விழா, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில், மே 23 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். நகர முஸ்லிம் லீக் கவுரவ ஆலோசகர்களான மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி எம்.எம்.அஹ்மத், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர பிரமுகர்களான எம்.எம்.உவைஸ், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



மாநில செயலாளர் காயல் மகபூப் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பி.மீராசா மரைக்காயர் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.





மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணைத்தலைவர் எஸ்.கோதர் முகைதீன், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், குமரி மாவட்ட தலைவர் குளச்சல் நாஸர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:-



சரித்திரப் புகழ் வாய்ந்த காயலம்பதியில் இந்த மன்ஸிலை வாங்கி, நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் பெயரில் அதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என்ற அண்ணல் நபிகளாரின் அமுத மொழிக்கேற்ப, கடந்த காலத்தில் விதையைப் போல் இருந்து விருட்சமாக பணி செய்த பெருமக்களுக்கு கடமை உணர்ச்சியோடு இங்கு நன்றி பாராட்டியுள்ள பாங்கு மனநிறைவைத் தருகிறது. இந்த செயல் அவர்களின் குடும்பத்தார், அனுதாபிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கக் கூடியதாகும்.

காயலம்பதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அதன் துவக்க காலம் தொட்டே தியாக உள்ளத்துடன் உழைத்தவர்கள் ஏராளம்... அந்த வரிசையில், இன்றளவும் உழைத்துக் கொண்டிருக்கும் நகர முஸ்லிம் லீக் தலைவர் வாவு நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட நகர நிர்வாகிகளுக்கும், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹஸன், வாவு ஷம்சுத்தீன், இப்றாஹீம் மக்கீ உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நிலைப்படுத்த இந்த ஊர் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலங்களைப் போல் இன்றைய தினமும் தமிழகத்திலும், இந்தியா முழுக்கவும் இந்த இயக்கத்தை வளர்க்க இந்த ஊர் காட்டி வரும் ஆர்வம், அளித்து வரும் ஒத்துழைப்பு, உதவி அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சங்கள்.

சமுதாயத்தின் பாதுகாப்புக் கேடயமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த இனி பத்து மடங்கு கூடுதலாக உங்களின் ஒத்துழைப்பு தேவை. அப்பேர்ப்பட்ட ஒத்துழைப்பின் மூலம், ஒன்றுபட்ட இயக்கத்திற்கு உன்னதமான - உயரிய இடத்தை நாம் பெற்றுத் தர முடியும் என்பதில் சந்தேகமில்லை.


இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து. புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு, தாம்பரம் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் சுவர் கடிகாரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அதனை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் அலீ ரஸா வழங்க, காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் பெற்றுக்கொண்டார்.

பின்னர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான சீதக்காதி நகர் சொத்தை விற்று, சதுக்கைத் தெருவில் இப்புதிய கட்டிடத்தை வாங்கிட ஒத்துழைத்த ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர், பெத்தப்பா சுல்தான், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி மாஷாஅல்லாஹ் தாவூத் ஆகியோரைப் பாராட்டி, பேராசிரியர் சால்வை அணிவித்தார்.



பின்னர், மர்ஹூம் பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் குடும்பத்தார் சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் சால்வை அணிவித்தார்.



பின்னர், நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி அபிஷா ஜூலியட் மேரி, இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களான எம்.எச்.முஹம்மத் அபூபக்கர், எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக் ஆகியோரைப் பாராட்டி நகர முஸ்லிம் லீக் சார்பில் முறையே ரூ.2,000, 1,500, 1,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.



அதுபோல, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார்.



பின்னர், மர்ஹூம் ஹாஜி வாவு சுலைமான் குடும்பத்தாரின் அனுசரணையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பாக, 17ஆவது வார்டுக்கு வழங்கப்படும் குப்பை சேகரிப்பு வாகனத்தின் சாவியை, அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அஜ்வாத் இடம் பேராசிரியர் வழங்கினார்.



முன்னதாக, மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதினார். நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில், குமரி மாவட்ட செயலாளர் நவ்ஷாத், முன்னாள் செயலாளர் நஸீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்காசி பி.டி.எஸ்.ஆர்.முஹம்மத் இஸ்மாஈல், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் தென்காசி முஹம்மத் அலீ, நெல்லை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முஹம்மத் அலீ, தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஷாஹுல் ஹமீத், தூத்துக்குடி மாநகர கவுரவ தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.மீராசா, துணைச் செயலாளர் உவைஸ், எம்.எஸ்.எஃப். ரஹ்மான், ஹாங்காங் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், கத்தர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.





நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார். மாவட்ட காஜீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ துஆ ஓதினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், வெளியூர்களிலிருந்து திறப்பு விழாவிற்கு வருகை தந்தோருக்கு, புதிய அலுவலகக் கட்டிடத்தில் சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுடன், தூத்துக்குடி மாநகர நிர்வாகிகள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.





படங்களில் உதவி:
P.K.முஹம்மத் செய்யித் அலீ ரஸா,
செய்தித் தொடர்பாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
காஞ்சிபுரம் மாவட்டம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“தியாகிகளைத் தந்த காயல்பட...
posted by T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852a) [25 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19043

.. அஸ்ஸலாமு அலைக்கும்.!

ஆயிர வருடங்கால வரலாற்றுச் சிறப்பு மிக்க கயல்நகர அகில இதிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் முத்தான நிகழ்ச்சியாகிய இந்த புதிய கட்டிட திறப்பு விழா (23-5-2012 Thursday 2-Rajab 1433) பூரண வெற்றியுடனும் மிகச்சிறப்பாகவும் நடந்தேற எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.கபூல் செய்வானாக.

அத்துடன் முஸ்லி லீக் இயக்கத்தின் முக்கிய நோக்கங்களான ”முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே வாழவும், தனக்குள்ள உரிமைகளை தன்னகத்தே பூரணமாகப்பெற்று வாழவும் அஸல் முஸ்லிம் களுக்கான் ஐவகை கடமைகளை பூரணமாகவே அறிந்து தெரிந்து வாழவும் தனக்குள்ள எல்லா தேவைகளையும் அல்லாஹ்விடமே பெற்றுக்கொள்ளும் முறையினை கற்றுகொண்டு நமது லீக்கின் கடமைகளை செய்வதற்குப் பயிற்ச்சிப் பாசறைகளை ஒவ்வொரு ஊரிலும் அமைப்போமாக. என லீக்கின் மாநிலத் தலைவர் ஆலிஜனாப். காதிர் முஹியதீன் அவர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கின்றேன்.. இதுவே நமது மதிப்புக்குரி மா பெரும் தலைவர் காயிதே மில்லத் முஹாமது இஸ்மயீல் ஸாஹிப் (றஹ்) அவர்களின் ஆசையான நோக்கங்களை நிறைவேற்ற எடுத்துக்கொள்ளும் சபதமாகும்

ஏனெனில் அல்லாஹுத் தஆலா, திருக் குற்ஆனில் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
3:139 وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக (மேலான தலைவர்களாக) இருப்பீர்கள். என்றும்- தொழுகையைக் கொண்டும், பொறுமையை கொண்டும் என்னிடமே உதவி தேடுங்கள் என்றும். வாக்களித்துள்ளான். மேலும் அல்லாஹ் திட்டமாக வாக்கு மாற மாட்டான் என்றும் பலவாறாக கூறி உள்ளான்.. இந்த மறையின் உரைகளின் படி நாம் எல்லாரும் நமது சேவைகளையும் தேவைகளையும் நிறை வேற்றிக்கொள் வோமாக். ஆமீன்.

மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கும், மாநில செக்ரட்டெரி அவர்களுக்கும், எனது பிரத்த்கியேகமான மனமார்ந்த வாழ்த்துக்களுடன் அஸ்ஸாலாமு அலைக்கும் எனும் காணிக்கையும் தெரிவிக்கிறேன். வஸ்ஸலாம்.

தைக்கா றஹ்மத்துல்லாஹ்.
-அறூஸுல் ஜன்னாஹ், மத்றதுந் நிஸ்வான்.
59 தீவுத்தெரு, காயல் பட்டணம்.
ஃபோன் 04639-280852 ஸெல்;9488507221 381200017


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தாய் மரக் கிளையின் புதிய தளிர்கள்....பளிச்செனத் தெரிகின்றது...!!!
posted by ஹிஜாஸ் மைந்தன் (புனித மக்கா.) [26 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19049

சும்மா கலக்கிட்டீங்க...போங்க! அபூபக்கர்னா சும்மாவா? இளம் ரத்தம் புத்துணச்சி துடிப்பு கன்னியமிக்கப் பெரியோர்களின் ஆசி, ஆதரவு அடேயப்பா! பார்ப்பதற்கே சந்தோஷமா இருக்கு!

தன்னடக்கத்தின் மறு உருவம் லீக்கின் தலைவர் கன்னியமிக்க காதர் முஹ்யத்தீன் அவர்களையே அழைத்து வந்து இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்தது பெருந்தன்மை! அதெல்லாம் விட கருத்துப்புயல், சாளை-ஜியாவுத்தீன் தம் தங்கை வீட்டுத் திருமனத்திற்காக நமதூருக்கு வருகை தந்து கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பது இன்னும் மெருகூட்டுகின்றது.

குறிப்பு:
மாநிலப் பொதுச் செயலாளர் அபூபக்கர் அவர்களே! காயலின் இளைஞர்களையும், இன்னும் தமிழ் நாடு இளைய தலைமுறையினரயும் ஊர் ஊராகச் சென்று சந்தித்து ஒருங்கிணையுங்கள். நல்ல பலன் தரும். இன்ஷா அல்லாஹ் யாவரும் ஒர் குடையின் கீழ் குடியிருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved