Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:11:42 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8560
#KOTW8560
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 2, 2012
நகரில் சீரான குடிநீர் வினியோகம் குறித்து நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3573 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்தனர். விபரம் பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நடைமுறைக் குறைகளைக் களைந்து - சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ்.-ஐ, 16.05.2012 அன்று சென்னையில் சந்தித்துப் பேசினார்.

நகருக்கு தற்போது வழங்கப்படும் குடிநீரை குறையாமல் தர ஆவன செய்வதாக அப்போது கூறிய மேலாண்மை இயக்குனர், நகரில் மேற்கொள்ளப்படும் விநியோக முறையை மேம்படுத்த தனது துறை மூலம் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

அவரது அறிவுரையின் பேரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.சங்கரன், ஆத்தூர் குடிநீரேற்று நிலைய துணைப் பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர், 31.05.2012 அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தனர்.

அன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷி ஹாப்தீன் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காயல்பட்டினம் குடிநீர் வினியோக வரைபடம் உள்ளிட்ட தேவையான விபரங்களைக் கேட்டறிந்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-

*** காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு தண்ணீர் போதுமான அளவில் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூரில் வினியோகத்தில்தான் குறை உள்ளது...

*** ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் - காயல்பட்டினத்திலுள்ள வெறுமனே 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மட்டுமே தண்ணீரை பம்பிங் செய்யும் கட்டமைப்பு உள்ளது... எனவே, மேலதிக தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட வேண்டுமானால், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியருகில் ஸம்ப் அமைக்கப்பட வேண்டும்...

*** தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது...

*** வீடுகளில் மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதை, அதற்குரிய கருவி கொண்டு கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மோட்டார் வைத்து குடிநீர் முறைகேடாக உறிஞ்சப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படாத வரை, 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தாலும் சீரான குடிநீர் வினியோகத்தை வழங்க இயலாது... இப்போது மோட்டார் மூலம் உறிஞ்சி ஒரு தொட்டிக்கு தண்ணீர் எடுப்போர், 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தால் இன்னும் பல தொட்டிகளை நிரப்புவர்...

*** தெருக்களில் பழைய லைன், புதிய லைன் என ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் அனைத்து லைன்களையும் அகற்றிவிட்டு, ஒரே பைப்லைன் வழியாக மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும்...

*** ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்து அனுப்பப்படும் தண்ணீர் அதே அளவில் பெறப்படுகிறதா என்பதை ஆராய, காயல்பட்டினம் ஊர் நுழைவுப் பகுதியில் ஒரு மீட்டர் பாதுகாப்புடன் பொருத்தப்பட வேண்டும்...

*** பம்பிங் லைனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்... வினியோகக் குழாய் மூலம் மட்டுமே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்...


இவ்வாறாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

பொதுமக்களில் சிலர் தமது பகுதிகளிலுள்ள குடிநீர் வினியோகக் குறைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தனர். அவற்றை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.



பின்னர், காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், உதவியாளர் பாஸ்கரன் ஆகியோரிடம் சில விளக்கங்களைக் கேட்டனர்.



மேலும் சில கூடுதல் விபரங்களை பட்டியலாகவும் அதிகாரிகள் கேட்டனர். அந்த விபரங்கள் பெறப்பட்ட பின்னர், முறையான செயல்திட்டத்தை வகுத்துத் தருவதாக அப்போது அவர்கள் உறுதியளித்து விடைபெற்றனர்.

வருகை தந்து, தகுந்த ஆலோசனைகளை வழங்கியமைக்காக, அதிகாரிகளுக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

[செய்தியில், விடுபட்ட ஒரு தகவல் இணைக்கப்பட்டது @ 08:08/04.06.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகரில் சீரான குடிநீர் வின...
posted by Firdous (Colombo) [02 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19120

எத்தனயோ ஜும்மா பயானில் இமாம்கள் எச்சரிக்கை செய்தாலும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறது. இதுபோன்ற நாகரிகமற்ற செயலை இரும்பு கரம் கொண்டு அடக்கினால்தான் நிறுத்த முடியும். எல்லோருக்கும் சரி சமமாக தண்ணீர் கிடைக்கும்.

மேலும் குடிநீர் இணைப்பை கொடுக்கும் நகர்மன்ற பணியாளர்கள் காசை வாங்கிகொண்டு ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட இணைப்புகளை கொடுகின்றார்கள். பழைய லைன் மற்றும் புதிய லைன் இரண்டிலும் இணைப்பு இருக்கும். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இன்ஷாஹ் அல்லாஹ் நமது நகர்மன்ற தலைவர் சகோ. ஆபிதா அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகரில் சீரான குடிநீர் வின...
posted by HAMZA (kayalpatnam) [02 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19124

*** தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது... இவ்வாறாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

(உள்ளதுகே ஆள் பற்றாகுறை என்பது இந்த அதிகாரிகளுக்கு தெரியாது என்று நினைக்கிறன் )

மின்சார வாரியத்திற்கும் , நம் நகர்மன்றதிர்க்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தாலே கள்ள மோட்டருக்கு ஒரு ஆப்பு வைத்து விடலாம் .(கரண்ட் இருந்தால் தானே கள்ள மோட்டார் வேலை செய்யும் ?)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:யார் பூனைக்கு மணி கட்டுவது?..
posted by OMER ANAS (DOHA QATAR.) [02 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19125

மாஷா அல்லாஹ்! திட்டங்கள் எல்லாம் அருமைதான்! அதிகாரி வந்து நடப்பு நிலைமையை சொல்லிவிட்டு போய்விட்டார்!யாரப்பா பூனைக்கு மணி கட்ட போவது?

முதல்லயாவது பழைய பைப் லைன் மூலம் மட்டுமே ஒரு சிலர் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சினார்கள். புது லைன் வந்தப்போ, கள்ளத்தனமாக ஒரு சில கயவர்களுக்கு லஞ்சமாக கொடுத்து அந்த லைனையும் ஒரு சிலர் எடுத்து வைத்துக் கொண்டு பயன் படுத்தும் நிலையும் உள்ளது!

ஒண்ணே ஒண்ணு செய்யலாமுங்கைய்யா ! தெருவுக்கு எட்டு ரோட்டோர பைப் போட்டு கொடுத்து எல்லா வீட்டு லைனையும் கட பண்ணி விடலாமுங்கையா! தண்ணீர் வரி என்று மாதா மாதம் வசூல் பன்னிக்கலாமுங்கைய்யா! நமது தாய்மார்களுக்கு மாரத்தான் ஓட்டம் தினமும் கொடுத்த மாதிரியும் ஆச்சு! மாத பட்ஜெட்டில் எங்களுக்கு மருத்துவர் செலவை கொஞ்சம் குரைத்தது மாதிரியும் ஆச்சு!

இந்த குழாயின் அடியில் ஓட்டை போட்டு களவாணி பயலுவோ திருடி கொடுப்பானுங்கோதான்! பின்ன என்னய்யா செய்யுறது?

திருடர்களாக பார்த்து திருந்தாவிடில் திருட்டை எங்கேயா ஒழிக்க முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகரில் சீரான குடிநீர் வின...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19127

தெளிவான செய்தி.

இரண்டாவது பைப் லைன் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதும் அதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலின்போதும் நகர்மன்ற தேர்தலின்போதும் வாக்குறுதிகள் அளிக்கின்றன.

ஆட்சி மாற்றங்கள் காட்சி மாற்றங்கள்தான். இப்போது புரிகிறது, இரண்டாவது பைப் லைன் வந்தாலும் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சும் நடைமுறை இந்த ஊரில் களையப்பட்டால் ஒழிய தண்ணீர் பிரச்சினை தீராது.

எனவே நகர்மன்றம் அல்ல, ஆட்சி தலைவர் இந்த விஷயத்தில் தலை இட்டு, அதிரடியாக ஒரு வழிப்பாதையை உண்டாக்கியதுபோல், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றியது போல் இதையும் கையில் எடுத்து செயல்பட்டால் விடிவு காலம் வரும்.

மயிலே மயிலே இறகு போடு என்று கெஞ்சிக்கொண்டிருக்காமல் மிக முக்கியமான அன்றாட மக்கள் தேவையான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் இதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

நடந்து முடிந்த தவறுகளுக்கு எந்த அதிகாரியையும் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்காமல் இப்போது நடக்க வேண்டியவைகளை கவனித்தால் அவர்களும் ஒத்துழைப்பார்கள். லைன்களை துண்டிக்க வேண்டாம். மோட்டார்களை மட்டும் பறிமுதல் செய்தால் போதும். நமது நீதிமன்றங்கள் சட்டங்கள் என்று வரும்போது வழக்கு வம்பு என்று அலைய வேண்டும், அவஸ்தைபடுபவர்கள் நமது தாய்மார்களாகதான் இருப்பார்கள்

நமது கை விரல் நம் கண்ணை குத்திவிட்டால் விரலை வெட்டி விட முடியுமா..... களைபவோ கண் குத்திற்றெண்டு கை! கண்மணி கலங்க உள்ளமும் நடுங்க கைவிரல் கண்ணில் படுவதுண்டு.

எனவே இந்த விவாரங்களை மக்களுக்கு துண்டு பீரசுரம் மூலமும் ஒலி பெருக்கி மூலமும் டீவீ மூலமும் நகர்மன்றம் மக்களுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகரில் சீரான குடிநீர் வின...
posted by jamal (chennai) [02 June 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 19129

மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது பக்கா ஹராம் என்று தெரிந்திருந்தும் மார்க்கம் பேசுபவர்களும், ஓதிப்படித்தவர்களும் இந்த செயல்களில் ஈடுபடுவதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம். பல்வேறு மார்;க்க ஆதாரங்களை காட்டி எடுத்துச் சொல்லியும் மக்கள் திருந்தியபபாடு இல்லை.

இவ்வாறு மார்க்க முரண்பாடுகளில் ஈடுபட்டால் அல்லாஹ்வின் கோபப்பார்வை விழாமல் என்ன செய்யும்? எத்தனை சர்வே எடுத்தும் என்ன பிரயோஜனம்? அல்லாஹ் வகுத்த கட்டளைப்படி நடங்கள். அதன்பிறகு பாருங்கள். சோதனைகள், துன்பங்கள், நோய்நொடிகள் எங்கே போகும் என்று. அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகரில் சீரான குடிநீர் வின...
posted by M.S.Kaja Mahlari. (Singapore) [02 June 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19133

*** தயவுதாட்சண்யமின்றி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவோரின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தல், அவர்களுக்குத் தண்டனை வழங்கல், அவர்களது குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல் உள்ளிட்ட முறையான நடவடிக்கைகளை நகர்மன்றம்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது (கவுன்சிலர்கள்) முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாதது...

*** வீடுகளில் மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதை, அதற்குரிய கருவி கொண்டு கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மோட்டார் வைத்து குடிநீர் முறைகேடாக உறிஞ்சப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படாத வரை, 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தாலும் சீரான குடிநீர் வினியோகத்தை வழங்க இயலாது... இப்போது மோட்டார் மூலம் உறிஞ்சி ஒரு தொட்டிக்கு தண்ணீர் எடுப்போர், 2ஆவது பைப்லைன் திட்டம் வந்தால் இன்னும் பல தொட்டிகளை நிரப்புவர்...

*** தெருக்களில் பழைய லைன், புதிய லைன் என ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கும் அனைத்து லைன்களையும் அகற்றிவிட்டு, ஒரே பைப்லைன் வழியாக மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும்...

*** ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்து அனுப்பப்படும் தண்ணீர் அதே அளவில் பெறப்படுகிறதா என்பதை ஆராய, காயல்பட்டினம் ஊர் நுழைவுப் பகுதியில் ஒரு மீட்டர் பாதுகாப்புடன் பொருத்தப்பட வேண்டும்...

*** பம்பிங் லைனில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்... வினியோகக் குழாய் மூலம் மட்டுமே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்...

நமதூர் முஸ்லிம் மக்கள் சிந்திக்கவேண்டிய முக்கியமான தகவல்கள் இவைகள். இதையும் மீறி செயல்படுபவர்கள் சமூக விரோதிகள். துரோகிகள். இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் சமூகம் நிறுத்தப்படக்கூடிய மூதேவிகள். இதனை சிந்தித்து செயல் படுவார்களா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved