Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:15:42 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8561
#KOTW8561
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 2, 2012
“முத்துச்சுடர்” மாத இதழ் வெளியீட்டு விழா! நகர பிரமுகர்கள் முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3912 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வந்த இஸ்லாமிய மாத இதழான ”முத்துச்சுடர்” - அதன் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் மறைவையடுத்து நின்று போனது.

இந்நிலையில், அவ்விதழை மீண்டும் வெளியிடுவதற்கு, மறைந்த ஆசிரியரின் மகனான மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், “முத்துச்சுடர்” மாத இதழ் வெளியீட்டு விழா, 28.05.2012 அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காயல்பட்டினம் புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் - மாலை அமர்விற்கும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இரவு அமர்விற்கும் தலைமை தாங்கினர். நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.



மாணவர் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஹாஜி எம்.என்.ஷாஹுல் ஹமீத் வாழ்த்துப்பாடல் பாடினார். மன்னர் பாதுல் அஸ்ஹப் வரவேற்புரையாற்றினார்.

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



“முத்துச்சுடர்” நூலாசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ நூல் அறிமுகவுரையாற்றினார்.



பின்னர், “முத்துச்சுடர்” முதற்பிரதி வெளியிடப்பட்டது. நகரப் பிரமுகர்களில் சிலர் வெளியிட, வேறு சிலர் பெற்றுக்கொண்டனர்.



பின்னர். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரையாற்றினார்.



நிறைவாக, ஹாஜி எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார்.



இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஐக்கிய சமாதானப் பேரவை அலுவலக மேலாளர் எம்.புகாரீ தலைமையில், “முத்துச்சுடர்” மாத இதழ் வெளியீட்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாய்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [02 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19126

மாஷா அல்லாஹ்! அல்ஹம்ந்து லில்லாஹ்! காணாமல் போன தந்தை மீண்டும் வந்ததைப் போன்ற உணர்வு.

எழுத்துலகில் நான் முதல் அடி எடுத்துவைத்த முத்தான முத்துச் சுடர். சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் என் சிறுகதைகள், கட்டுரைகள், துனுக்குகள், புதிர் போட்டிகள் என அனைத்து ஆக்கங்களையும் இன்முகத்தோடு பிரசுரித்து நிறைய அறிவுரைகளையும் பாசத்தையும் வழங்கிய என் அருமை மாமா மர்ஹூம் நூஹ் தம்பி ஆலிம் அவர்களை நான் நினைவு கூருகின்றேன்.

தூத்துக்குடியில் சொந்த அச்சகத்தில் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் ஓர் கொள்கைப் பிடிப்போடு பத்திரிக்கை நடத்திய மஹான்!

தம் இதழ்களில் புன்னகையும்,நகைச்சுவை உணர்வும், மார்க்க ஞானமும் கொண்டு எக்காரணத்தை கொண்டும் தமது பத்திரிக்கையில் பீடி, சிகரேட், புகையிலை போன்ற விளம்பரங்களோ உருவப் படங்களோ வரவேக்கூடாது என உறுதியுடன் இருந்து வந்தார்.

அன்னாரின் பத்திக்கையில் நான் எழுதத் துவங்கிய பின் ஏராளமான நண்பர்களை வயது வரம்பின்றி பெற்றேன். காயல் இப்னு அப்பாஸ், காயல் ஏ.தர்வேஷ் முஹம்மது போன்றோர் தொடர்ந்து எழுதியும் வந்தனர்

அக்காலத்தில் நம்தூரில் வெளிவந்துகொண்டிருந்த நற்சிந்தனை, அல்-ஹிதாயா போன்ற இஸ்லாமிய மாத இதழ்களின் ஆசிரிய பெருமக்களோடு நல்லிணக்கத்தோடு பழகியும் வந்தார்.

சோதனைகள் பல வந்தது. சாதனை படைக்க நினைத்தார். இன்று அவரது அரிச்சுவடியை மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியிட்டு நடத்தி வரும் தற்போதைய ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள் முத்துச் சுடர் இனி எப்போதும் சுடரொளி வீசட்டும்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“முத்துச்சுடர்” மாத இதழ் ...
posted by Lebbai (Riyadh) [02 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19132

மாஷா அல்லாஹ், மீண்டும் புது பொலிவுடன் வலம் வர இருக்கும் மாத இதழை வாழ்த்தி வரவேற்ப்போம். இதன் மாத/ வருட சந்தா சந்தா எவ்வளவு, எப்படி பெறுவது, தொடர்பு முகவரிகள் போன்ற தகவல்களை வெளியீட்டாளர்கள் தந்துதவினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இல்லம்தோரும் இருக்க வேண்டிய இஸ்லாமிய சுடர்.........
posted by musthak ahamed (goa) [02 June 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 19136

என்னை போன்ற எத்தனையோ அன்றைய இளைஞர்களை அவர்கள் உள்ளுக்குள் மறைந்திருந்த அல்லது அவர்களுக்கே தெரியாமல் இருந்த எழுதும் ஆர்வத்தை தூண்டி அவர்களை அவர்களுக்கே அடையாளம் காண்பித்த இந்த இஸ்லாமிய சுடர் தொடர்ந்து தொய்வில்லாது சுடர் வீச வாழ்த்துக்கள்.

இன்னும் நினைவில் இருக்கிறது............. 80 களின் இடையில் ஒரு கபர்ஸ்தான் கதறுகிறது...... என்ற என்னுடைய கன்னி கவிதையை எழுதிக்கொண்டு ஆசிரியர் முன்னால் நின்றேன். படித்து விட்டு கவிஞரிடம் (-மர்ஹூம் எஸ் எம் பி ) ஒப்புதல் வாங்கி வரும்படி சொன்னார்கள். கவிஞரின் அனுமதியுடனே அரங்கேறியது அந்த கவிதை... இப்படி ஒவ்வொரு துறையிலும் மிகுந்த சிரத்தையுடன் செயல் பட்ட இஸ்லாமிய பத்திரிகை இடையில் நின்று போனது நம்முடைய துரதிஸ்டமே. ...

என் மதிப்பிற்குரிய முத்துச் சுடரின் இன்றைய ஆசிரியருக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்........... கடந்த காலங்களின் அனுபவங்களை மனதில் கொண்டு தங்கள் பத்திரிகை எல்லா தளங்களிலும் விரிந்து பரந்த தொலை நோக்கு சிந்தனையுடன் கூடிய விஷயங்களை உள்ளடக்கி இஸ்லாமியர்கள் வாழும் ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்க வேண்டிய இஸ்லாமிய சுடராய் ஒளி வீச அல்லாஹ் அருள் புரிவானாக .....அமீன்....

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“முத்துச்சுடர்” மாத இதழ் ...
posted by M.S.Kaja Mahlari (Singapore) [02 June 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19138

முத்துசுடர் மீண்டும் சுடர் வீச வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக!

மறைந்துவாழும் மர்ஹூம் அல்லாமா நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானி அவர்களின் மார்க்கப்பணிகள் மகானின் மகனால் மீண்டும் தொடரட்டுமாக!

கொள்கைப்பிடிப்புடன், சுன்னத் வல்ஜமாஅத் அகீதாவுடன்,வழிகேடர்களின் முகமூடிகளை கிழித்து எரிந்து ,போலிகளை அடையாளம் காட்டி தனது தூய மார்க்கப்பணிகளை எழுதுப்பனிகளின் மூலம் செவ்வனே செயல்முறை படுத்திட எல்லாம்வல்ல இறைவன் இம்முயற்சிகள் செயலாக்கம் பெற பேரருல்புரிவானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“முத்துச்சுடர்” மாத இதழ் ...
posted by s.s.Jahufer sadik (Jeddah - K.S.A) [03 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19141

மீண்டும் மலரும் முத்துச்சுடர் மாத இதழுக்கு வாழ்த்துக்கள்.

தொய்வின்றி தொடர்ந்து மார்க்க கட்டுரைகள் மற்றும் செய்திகளை மக்களுக்கு வழங்கிட வல்லநாயன் அருள் புரிவானாக -ஆமீன்.

இதன் நிறுவனர் மரியாதைக்குரிய மகான் மர்ஹூம் நூஹு தம்பி ஆலிம் ஜுமானி அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முத்துச்சுடர் சுடர்விட துடங்கியது.......
posted by s.s.md meerasahib. (riyadh) [03 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19142

அஸ்ஸலாமு அலைக்கும். எங்களுடைய அப்பாவும், குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப் சபை முன்னாள் தலைவர், மார்க்க கல்விக்கடல் அல் ஹாஜ், அல் ஹாபிழ் எஸ்.கே.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானி அவர்களால் நடத்தப்பட்டு வந்த முத்துச்சுடர் மாத இதழ் மீண்டும் சுடர் விடுவதை அறிந்து ரெம்ப சந்தோசம்.

அப்பாவின் பொறுமையையும், கொள்கைபிடிபையும், மிதவாதத்தையும், இதே முத்துச்சுடர் மாத இதழில் காண ஆவலுடன் இருக்கிறேன். முத்துச்சுடர் மாத இதழ்க்கு உயிரோட்டம் கொடுத்து இருக்கும் பன்னூல் ஆசிரியர் மவ்லவீ அல்ஹாஜ் ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ மாமா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:“முத்துச்சுடர்” மாத இதழ் ...
posted by s.e.mohideen abdul cader b/o, late misbahi aalim (bahrain) [03 June 2012]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 19145

மீண்டும் மலரும் முத்துச்சுடர் மாத இதழுக்கு வாழ்த்துக்கள்.

தொய்வின்றி தொடர்ந்து மார்க்க கட்டுரைகள் மற்றும் செய்திகளை மக்களுக்கு வழங்கிட வல்லநாயன் அருள் புரிவானாக -ஆமீன். தங்கள் மதிப்புகுரிய நண்பர் மர்ஹூம் hafil shaik abdul cader misbahi aalim - அவர்களும் இந்த மேடையில் தங்களுடன் இருர்ந்திர்த்தால் எவ்வளவு சந்தோசமாக இருந்திற்கும் .மர்ஹூம் அவர்கள் மற்றும்

இதன் நிறுவனர் மரியாதைக்குரிய மகான் மர்ஹூம் நூஹு தம்பி ஆலிம் ஜுமானி அவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved