Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:56:59 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8566
#KOTW8566
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 4, 2012
கடற்கரைக்கு வருவோர் கையில் பை கொண்டு வாருங்கள்! நகராட்சியின் சார்பில் பிரசுரம்! பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் வினியோகித்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4316 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில், மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, குப்பை கூளங்கள் பெருமளவில் தேங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி, கடற்கரையைத் தூய்மையாக வைத்திட, நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு - தனது நேரடி மேற்பார்வையில் குப்பைகளை அகற்றச் செய்தல், கடை வைத்திருப்போர் மற்றும் நடமாடும் வணிகர்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, கடற்கரையை தூய்மையாக வைத்திருக்குமாறு கோரி பொதுமக்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 03.06.2012 அன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததைக் கருத்திற்கொண்டு, நகராட்சியின் இந்த வேண்டுகோள் அடங்கிய பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, பொதுமக்களுக்கு நேரடியாக பிரசுரங்களை வினியோகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா ஆகியோர் உடனிருந்தனர்.

அப்பிரசுரத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பின்வருமாறு:-

பொறுப்பான பொதுமக்களே!

நமதூரின் அழகிய கடற்கரையை தூய்மையாக ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்ற ஆவல் இக்கடற்கரை காற்றை சின்னசிறு வயது முதலாக சுவாசித்து கொண்டு இருக்கும் கடற்கரையின் அழகை - அமைதியை, உறவும் நட்பும் சூழ அமர்ந்து, அன்புடன் அளவளாவி அனுபவித்துக் கொண்டு இருக்கும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், எண்ணத்திலும் நிச்சயம் நிறைந்து இருக்கும்.

இந்த ஆவல் நிறைவேற நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், கடற்கரைக்கு குடும்பம் குழந்தைகளுடன் வரும்போது கையில் ஒரு பையை எடுத்து வாருங்கள்! தின்பண்டங்களைச் சாப்பிட்டு விட்டு, எச்சில் பொருட்களை மணலில் போடாமல், தயவுசெய்து பையில் போட்டு எடுத்துச் சென்று, அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போகும்போது போட்டுச் செல்லுங்கள்!

சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பார்கிங் செய்யும்போது ஒழுங்கு வரிசையைப் பின்பற்றுங்கள். ஒழுங்கற்ற வாகன நிறுத்தத்தால் குழந்தைகளும், முதியவர்களும் சுமை தூக்கிச் செல்லும் வியாபாரிகளும் தினந்தோறும் இடித்து விழுந்து அடிபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. நாளை நமது அன்பானவர்களுக்கும் இந்த நிலை ஏற்பட கூடாது என்ற அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வாகனங்களை நிறுத்தும்போது அழகான ஒழுங்குமுறையை நீங்களாகவே பின்பற்றுங்கள்.

அன்பார்ந்த வியாபாரிகளே!

நமதூர் கடற்கரையில் கடைவைத்து இருக்கும் நீங்கள் உங்களின் வாடிக்கையாளர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, நீங்கள் வியாபாரம் செய்துகொண்டு இருக்கும் கடற்கரையின் சுத்தத்தைப் பேணிட உதவி புரியுங்கள்.

அரசின் DTCP துறையானது நமதூர் கடற்கரையில் அடிப்படை வசதிகளை செய்திட மானியம்தர தயாராக இருக்கிறது.சுத்தம், சுகாதாரம் தூய்மை மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து இத்திட்டத்தினை செயல் படுத்திட நகராட்சி நிர்வாகமும் முழு முயற்சியினை எடுத்து வருகிறது நகராட்சி நிர்வாகத்துடன் பொது மக்களாகிய நீங்களும் இணைந்து செயல்பட்டு நம் ஊரில் தூய்மையான கடற்கரை அமைவதற்கு ஒத்துழைப்பு தர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

'ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை எந்த ஒரு சமூகமும், ஊரும் மாற்றம் அடைய முடியாது'.


இவ்வாறு அப்பிரசுரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by Sarjoon (Kayalpatnam) [04 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19147

கடற்கரையை சுத்தமாக வைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் நகராட்சியின் இந்த அறிவிப்பு நகைச்சுவையின் உச்சக்கட்டம். தினசரி குறைந்தது இரு நூறு பேராவது கடற்கரைக்கு வரும்பட்சத்தில் அனைவரும் கையில் ஒரு பையைக் கொண்டு வந்து அதில் தங்களின் குப்பைகளை அள்ளிக் கொண்டுச் செல்வது என்பது நடை முறைக்கு ஒவ்வாதது. அதற்க்கு பதிலாக நகராட்சியே சில குப்பை தொட்டிகளை கடற்கரையில் ஆங்காங்கே வைப்பது என்பது எளிமையானது. நடைமுறைக்கு ஒத்து வருவது. சிங்கபூர் சுத்தமாக இருப்பதற்கு காரணம் இது போன்ற எளிய வழி முறைகள் தாம். நகராட்சி கண்டுக்கொள்ளுமா இதை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by Salai S Nawas (singapore) [04 June 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19148

கண்டிப்பாக பயனளிக்காது. பழகிபோய்விட்டோம், திடீரென்று நல்ல மாறுதல் சொன்னால் மனது ஏற்றுகொள்வது சிரமம். அப்படிதான் நாமும் இருகின்றோம்.

அதற்க்கு பதில், பள்ளி கூடங்களிலும் மதரசாகளிலும் நகராட்சி தலைவியே நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லா பள்ளி NCC மாணவர்களையும் ஈடுபட வலியுறுத்த வேண்டும். புதிய தலைமுறை வேண்டுமென்றால் மாற்றப்படலாம்.

சிங்கப்பூரில் குப்பை தொட்டியில் போடாமல் வேறு இடத்தில குப்பை கொட்டி பிடிபட்டு விட்டால் பத்து முதல் பதினைந்து மணி நேரம் ரோட்டில் குப்பை அல்ல வேண்டும் என்பது சட்டம். இங்கே நாங்கள் குப்பை தொட்டியை தேடி தேடியே குப்பை கொட்டுகிறோம்.

-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by Vilack SMA (Nanhai) [04 June 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19149

" கையில் பை " ! இது சாத்தியமா ?

கடற்கரையை சுத்தமாக வைக்க வேண்டுமே என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உதித்தாலே போதும்.

வியாபாரிகளை அவரவர் இஷ்டம்போல் இல்லாமல் ஒரே இடத்தில் இருக்க செய்ய வேண்டும்.

வருமானத்தை எதிர்பாராமல் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும் .

சைக்கிள் , பைக் பார்க்கிங் இட வசதி காணாது . விரிவுபடுத்தப்பட வேண்டும் .

இவையெல்லாம் செய்துகொடுத்தபின் , தலைவி துண்டுப்பிரசுரங்களை கொடுத்து , சுத்தமாக இருக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம்.

இல்லையேல் தலைவி கையிலேயே பையை கொடுத்து , " கொஞ்சம் அந்தாண்ட போட்டுடுங்களேன் " னு சொல்லிடுவாங்க .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by ceylon fancy kazhi. (Jeddah) [04 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19150

அருமையான முயற்சி ஆனால் பலன் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷால்லாஹ் முன்பெல்லாம் கடற்கரையில் காலில் அல்லது செருப்பில் மனித கழிவு மிதிபடும் இப்போது அது இல்லை என்று நினைக்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கண்ணியமிகு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (சென்னை ) [04 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19152

அருமையான அமைப்பும் அழகும் ஒருங்கே அமைந்த,மெரினாவிற்கு அடுத்தபடியாக அழகு மிளிரும் கடற்கரை காயல் பட்டணத்தின் கடற்கரை என்று எல்லா பத்திரிக்கைகளாலும் போற்றபெரும் ஒர் பொழுதுபோக்கு பொக்கிஷத்தை பாதுகாப்பது ஒவ்வொரு காயல்குடிமகனின் கடமையல்லவா?

ஆகவே அன்பு வியாபார பெருமக்களே, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் பெயர் அச்சிட்ட பைகளை கடற்கரைக்கு வரும் மக்களிடம் இலவசமாக விநியோகித்தால்,நீங்கள் கடற்கரையை சுத்தமாவதர்க்கும் உதவுகிறீர்கள்,உங்கள் நிர்வாகத்திற்கு விளம்பரம் செயததுபோலும் அமையும். இந்த நன்மையினால் இன்ஷா அலலாஹ் உங்கள் வியாபாரமும் பெருகும்!

கண்ணியமிகு கடை உரிமையாளர்கள் கட்டாயம் முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்போமாக! அலலாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நடக்கிற காரியமா இது?
posted by OMER ANAS (DOHA QATAR.) [04 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19153

ஊரிலே இருக்கும் போது குத்துக்கள் தெரு வழியாக இரவு 10 மணிவாக்கில் வீட்டிற்கு வந்தேன் .அதே வழியாக விடியற்காலை நான்கு மணிவாக்கில் வாக்கிங் போனப்ப, குப்பை தொட்டியில் போட வேண்டிய இறால் தோடு நடு ரோட்டில் கிடந்தது! ஊருக்குள்ளேயே சுத்தம் இல்லேயே கடற்க்கரையிலா இவர்கள் சுத்தமாக இருப்பார்கள்.

துப்புரவு பணியாளர்களை கூட்டி நீங்கலாக சுத்தம் பண்ண வழியை பாருங்கோ தலைவி அவர்களே! சொன்னா கேட்க்கும் அளவுக்கு ஆறறிவு படைத்த நம் மனிதர்கள் இருப்பார்கள் என்றால், காலையில் பஞ்சாயத்து வண்டி வரும்போது குப்பையினை போட சடவுபட்டு விடியற்காலையிலேயே ,மாப்பிள்ளைமார்களிடம் குப்பையை நான்கு மணிக்கே ரோட்டில் வைக்க சொல்கிறார்கள்!

குப்பை வண்டி வருவதற்கு முன்பே காக்கையும், நாயும் பெருச்சாளிகளும் பிரித்து மேய்ந்து விடுகிறது! ரோட்டில் போட்டவை எல்லாம் அடுத்தவன் முடுக்குக்கு மீண்டும் வந்து விடுகிறது! இவர்களுக்கு வேலை முடிந்து விடுகிறது. அடுத்தவர்களுக்கு இதுவே புது வேலையாகிறது! எத்தனை கேன்சர் (அல்லாஹ் காப்பாற்றுவான்)வந்தாலும் இவர்களை திருத்த முடியாது! இதுல வேற இவங்களை கடற்கரைக்கு பையினை கொண்டு வர சொல்றீங்கோ தலைவி. சும்மா ஜோக் அடிக்காதீங்கோ! இவங்களாவது திருந்தவாவது!

ஒரு பழமொழி உண்டு. அதுதான் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது! அது நம் மண்ணின் மைந்தர்களுக்கு புரியாதோ , அல்லது பொருந்தாதோ? என்னவோ? உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by Ahamed Mohideen (Chennai) [04 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19154

இதெல்லாம் சரி .

குழந்தைகள் அமரும் இடத்தில பெரியவர்கள் விளையாடுவதையும் சில சமயம் அருகாமை ஊர்களில் உள்ளவர்கள் நமதூர் பண்பாட்டுக்கு மாறாக வளம் வருவதையும் கடக்கரை பயனாளிகள் சங்கம் கண்டு கொள்ளவில்லையா ? எது முக்கியம் ?

கைபையா ? அல்லது கலாச்சாரமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பூவா..... தலையா....... விளையாடி பார்க்கும் நகரமன்ற தலைவர்.
posted by s.s.md meerasahib. (riyadh) [04 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19161

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே............. நகர்மன்ற தலைவர் என்பவர் சாதாரண அடிமட்ட பாமர மக்களின்,குழந்தைகளின் குணத்திற்கு ஏற்ப சிந்தித்து செயல் திட்டம்களை வகுத்து..... அது 100 க்கு 75 % மாவது ஒர்க்கவுட் ஆகும் என்றிருந்தால் மட்டுமே....... செயல் ரூபம் கொடுக்கணும். இல்லை நகரமன்ற பணியாட்க்களை வைத்தே.... காரியம்களை நடத்தனும். அதை விட்டுவிட்டு இப்படி நடக்காத்த ஒரு விசயத்திற்கு டைம் பாஸ் பண்ணுவது என்பது வேடிக்கையான ஒன்று.

கடற்கரையில் உள் பகுதியில் நிலையான தூண்கள் இடை இடையே..... அமைத்து ஒவ்வொரு தூணிலும் இரண்டு,இரண்டு மிடில் சைசில் பாஸ்கட்டுகள் வைத்து..... வாரம் மூன்று நாட்கள் நகர்மன்ற பணியாட்கள் காலையில் சுத்தம் செய்து. டூட்டியை........ பியூட்டியாய் செய்தாலே......... ஒருவிதம் கடற்கரை சுத்தம் அடையும்.

தாங்களின் நோடீசில் 'ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை எந்த ஒரு சமூகமும், ஊரும் மாற்றம் அடைய முடியாது'. என்று சொல்லும் நீங்கள் இந்த வாசகத்தை சிறிய மாற்றத்துடன் 'ஒவ்வொரு பணியாட்களும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை எந்த ஒரு சமூகமும், ஊரும் மாற்றம் அடைய முடியாது'. என்று நகர்மன்ற நுழைவாயிலில் பதிக்கவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by Cnash (Makkah ) [04 June 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19162

சுலபமான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான வழிகளை சொல்லலாம்..

வீட்டில் இருந்து பையை கையோடு கொண்டு போய் குப்பையை சேகரித்து கொண்டு வந்து குப்பை தொட்டியில் போடுங்கள் என்று சொல்லுவதை விட.. கொஞ்சம் நீங்களே முயற்சி செய்து நகராட்சி மூலமோ, அல்லது வர்த்தக நிறுவனங்கள் SPONSOR மூலமோ சில நிரந்தர குப்பை தொட்டிகளை நிறுவுகின்ற முயற்சி எடுக்கலாமே!! அதை நகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றும் ஏற்பாடுகளையும் செய்யலாம்!

அப்படி வைத்த பின்னும் கூட கீழே குப்பைகளை போடாதீர்கள்!! குப்பை தொட்டியில் போடவும் என்று நோட்டீஸ் கொடுக்க வேண்டி இருக்கும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852a) [04 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19165

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுத்தம் ஈமானில் நின்றும உள்ளது என்று நாயகம் (ஸல்)அவர்களின் ஹதீதின் கருத்து என்று கூறினாலேயே அடங்கி ஒடுங்கி கட்டுப்படும் மூமின்கள் காயல்பட்டணத்தில் இல்லையா/? அல்லாஹ் இருக்க வேண்டிய மூமின் களின் கல்பில் பணம் (பொருளாசை)இருப்பதாலேயே எந்த இஸ்லாமிய உபதேசமும் எடுபட மாட்டேன் என்கிறது .

கடற்கரை சுத்தமாய் இருக்க வேண்டுமானால் 2,3 மேற்கண்டபடி த்லைவியின் அறிவிப்பு போர்டும் போட்டு 2,3 g போலீஸ்களையும் ஒரு 2,3 வாரத்துக்கு போட்டு சட்டம் மீறுபவர்களுக்கு நூறு இரு நுறு ரூபாய் அபராதமும் போட்டால்தான் மேற் சொன்ன இந்த சுத்த, சுகாதார ஏற்ப்பாடுகளெல்லாம் சரிவரும்.. எனவே, அபராதம் கட்ட (பணம் கொடுக்க ) மனம் இடம் தராது. மனம் திருந்தாமல் மனிதன் எப்போதும் திருந்தி நடக்கமாட்டான்.. ஏனெனில் ஈமானின் இடம் மனம் தானே இது நான் சொல்ல வில்லை .இதன் கருத்துப்பட அல்லாஹ்வே சொல்லுகிறான்.இதோ சூரா ரஃது ஆயத் 11 ல் மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

எனவே சுகாதார கேட்டை நமக்கு தந்து உயிர்கொல்லி நோய், இனம் தெரியாத நோய்களெல்லாம் தருகிறானா? iஇதெல்லாம் பார்த்த பிற்காவது நமக்கு நல்லெண்ணம் வராதா?. அல்லது நம்மாய் தண்டித்து சோதனை பண்ணுகிறானா? சிந்திப்போமாக.

இதே மாதிரி சுகாதார அறிவிப்புகளை பல தரம் நான் நெல்லை வானொலியில் கூறியதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்.

தகவல்:.
தைக்கா றஹ்மத்துல்லாஹ்,
59தீவுத்தெரு,
காயல்பட்னம். ஃபோன் 280852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [04 June 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 19168

அஸ்ஸலாமு அலைக்கும். நல்லதோர் முயற்சியை தான் நம் பஞ்சாயத் தலைவி அவர்கள் எடுத்துள்ளார்கள். அதுவும் தலைவியே கடற்கரைக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு பிரசுரம் வினியோகித்தார்கள் என்பதை படித்ததும் மனதுக்கு மகிழ்சியானது........ இப்படி ஓரு பஞ்சாயத் தலைவி அவர்களை பெற்றது நமக்கு டபுள் மகிழ்சி ..............

நம் ஊர் கடற்கரை அழகில் வரலாற்று சிறப்பு மிக்க அழகான கடற்கரை இதை நாம் தான் பாதுகாத்து அழகு படுத்தி பார்க்கணும். நம் ஊர் மக்கள் ஒவ் ஒவொருவரின் கடமை.நம் ஊர் மக்கள் யாவர்களும் மனது வைத்தால் தான் இது நிச்சயம் நடக்கும்.

ஓரு பழமொழி சொல்வார்கள். ஓரு கையால் தட்டினால்...... சத்தம் வராது ..... இரண்டு கையால் தட்டினால் தான் பெரும் சத்தம் வரும் என்பார்கள் ...... அது போல் நம் ஊர் மக்கள் அணைவர்களும் ஓன்று சேர்ந்தாள் தான் இது கண்டிப்பாக ( முழு சப்போட்டு செய்தால் ) நடக்கும்.

மக்கள் கையில் பை கொண்டு வருவது சாத்திய படாது என்றே நினைக்கிறேன். ஓரு நண்பர் சொல்வது போன்று கடற்கரையில் நம் நகராட்சி குப்பை தொட்டி வைக்கலாமே ???

நம் பொது மக்களோடு சேர்ந்து கடற்கரை வியாபாரிகளும் முழு ஓத்துழைப்பு கண்டிப்பாக கொடுக்கணும். தயவு செய்து நம் ஊர் கடற்கரையை காப்பாற்றுகள். நகராட்சிகும் சரி ... நம் பொது மக்களுக்கும் சரி .... இது எங்களின் அன்பான வேண்டுகோள் >>>>>>..

எனக்கு தெரிந்த வெளியூர் நண்பர்கள் சொல்வார்கள் ..... மச்சான் உங்க ஊர் கடற்கரை சூப்பராக இருக்குதுபா.......என்று ..... அப்படி பற்ற நம் ஊர் கடகரையை நாம் பாது காக வேண்டாமா >>>>> மக்களே யோசியுகள் ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தேடினேன்.. தேடினேன்.. குப்பை தொட்டியை..!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம். ) [05 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19171

சரியான நடவடிக்கை தான், பாராட்டுக்கள்.. ஆனால்..!!

காய்கறி வாங்க சென்றேன்... கையில் பையுடன்.
கறி வாங்க சென்றேன்... கையில் பையுடன்.
மருந்து வாங்க சென்றேன்... கையில் பையுடன்.

இதே லிஸ்டில்..

கடற்கரைக்கு சென்றேன், கையில் பையுடன்.

என்னது.. காற்று வாங்க கைப்பையா...சும்மா ஜோக் அடிக்காதீர்கள். குப்பை அள்ளுவதற்கு தான்..

சென்ற வாரம் மகன்களுடன் கடற்கரை சென்றேன். தின்பண்டங்கள், ஐஸ் கிரீம், கடலை தின்றோம்.

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்று மனது துடித்தது. சிறிய கீசில் அனைத்து குப்பைகளையும் ஒன்று சேர்த்து (அருகில் கிடந்த குப்பைகளையும் கூட), புறப்பட்டோம்.

கையில் உள்ள குப்பைகளை எங்கு போடுவது. தேடினேன்.. தேடினேன்.. குப்பை தொட்டிகளை. ஊஹூம்.. கண்ணில் பட்டால்தானே.

சரி போகும் வழியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிடுவோம் என்று, பைக்கின் கண்ணாடி கம்பியில் தொங்கவிட்டு, வீடு வரை வந்தும் எங்கும் குப்பை தொட்டி என்ற ஒரு வஸ்துவை காணவே இல்லை.

அப்புறம் என்ன, ஆத்துக்கார அம்மாவிடம் வழமை போல பாட்டு வாங்கியதுதான் மிச்சம். கடற்கரைக்கு சென்றாலே எப்படியாவது அம்மணியிடம் பாட்டு வாங்குவது எனபது வழமை.

" வீட்டில் உள்ள குப்பையை போடவே தாவு தீர்ந்து விடுகிறது, நீங்க என்னன்னா ஊர் உள்ள குப்பைகளை எல்லாம் பொறுக்கிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வாறீங்களே..!!, என்னமோ தின்பண்டம் கொண்டு வாறீங்க என்று ஆசையாக வந்தால்..!!" . அவங்க ஆதங்கம் நியாயம்தானே.

ஆனால் ஒரு மன நிறைவு, அனைத்து வியாபாரிகளையும் கடற்கரை மண்ணில் கடை பரப்பாமல் வெளியில் கட்டுப்பாடுடன் வைத்துள்ளது. தேங்க்ஸ்.

அப்புறம்.. நம் ஊர் பள்ளிகளில் உள்ள NCC , NSS , ஸ்கௌட் என்று பல அமைப்புகள் எல்லாம் உள்ளனவே. அவர்கள் எல்லாம் என்ன செய்கின்றார்கள் என்று கேட்கின்றீர்களா? அது தாங்க எனக்கும் தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:கடற்கரைக்கு வருவோர் கையில...
posted by ALS mama (Kayalpatnam) [05 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19178

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடற்கரையை சுத்தமாக்க...............

கடற்கரையை சுத்தமாக்க ஒரு பையை கையுடன் தூக்கி வருவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நமது நகராட்சி அல்லது பொதுசேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள் கடற்க்கரை நுழைவு வாயிலில் கடற்க்கரைக்குள் நுழைவோருக்கு ஒரு பை கொடுக்கலாம். இது பற்றி பைகொடுக்கும் இடத்தில் ஒரு நீண்ட அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும். இப்படி செய்தால் ஓரளவு நமது கடற்கரையை சுத்தமாக்க முடியும்.

சட்டம் போட்ட அத்தனை திட்டமும் வெற்றி ஆவது இல்லை, அதற்க்கு காலம் தாமதம் ஆகலாம். நாங்கள் திட்டமிட்டோம் மக்கள் உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது சுதந்திர நாட்டில் சரியானதும் அல்ல. திட்டம் நல்லதுதான். மக்கள் இதனை புரிந்து சகித்துக்கொண்டு பல்வேறு ஊருகளில் இருந்து வரும் பயனாளிகள் சுகம் பெறட்டுமே என்ற மன பக்குவம் வந்தால் மட்டுமே கையேடு பை திட்டம் வெற்றி பெறலாம்.

எழுத்தாளர், சமூக விழிப்புணர்வு ஆர்வலர்,
ALS மாமா,
ஆலோசகர் - ரஹ்மானிய பள்ளி கல்வி வளர்சிக் குழு,
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. மாற்றத்தை சுவைக்காத வரை...
posted by Salai.Mohamed Mohideen (USA) [05 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19183

பொதுவாக வெளி அல்லது மேலை நாடுகளில் இது போன்ற சுகாதார பழக்கத்திட்க்கு உள்ளானவர்கள் தாயகம் திரும்பும்போது அதனை கடை பிடிக்க முற்பட்டால் கூட, " அட போங்கங்க அது அமெரிக்கா அல்லது சிங்கபூர்... இது இந்தியா இங்கே இப்படிதான் இருக்கணும் / பண்ணனும்" என்பதுதான் நமது மக்கள் சொல்லித்தரும் 'மெசேஜ்'. அதற்க்காக அவர்கள் சொல்வது போல் சமுக அக்கறை உள்ளவர்கள் இருக்க முடியாது அல்லவா.

மேலை / வெளி நாடுகளில் நாம் பழக்கபடுத்தி கொண்ட நல்ல விசயங்களை நமதூரிலும் நமது நாட்டிலும் நாம் நடைமுறை படுத்த முயற்சிப்போம். அதுவரை நாம் நினைக்கும் / கனவு காணும், " இந்தியா எப்பொழுது ஒரு சிங்கபூர் / UK அல்லது ஒரு வளர்ந்த நாடு போல தூய்மையாக / சுகாதார நாடாக ஆகும்" என்பது ஒரு கானல் நீராகவே இருக்கும்.

நடைமுறைபடுத்த முடியாத நல்லதொரு முயற்ச்சியாக தோணலாம் அல்லது இது மாதிரி ஒரு வேண்டுகோள் விடுத்தால்... ஒரு சிலர் கடைசியில் கையோடு கொண்டுவரும் கேரி (பிளாஸ்டிக்) பையை பேச்சோடு காற்றில் பறக்க விட்டு 'கூட கொஞ்சம்' சுகாதார கேட்டை உருவாக்கி விடும் சூழ்நிலை கூட வரலாம். ஆனால் நிச்சயம் சமுதாய மாற்றத்தை கொண்டுவர முடியும்... சமுக பற்றுள்ள ஒவ்வொருவரும் இதனை 'தொடர்ந்து' கடை பிடித்தால்

நம்மை போன்று மற்றவர்களும் உடனே மாறாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் மாறுவார்கள். இது எவ்விதமான நல்லதொரு சமுதாய மாற்றங்களுக்கும் பொருந்தும்.

குப்பை தொட்டிகளை கடற்கரையில் ஆங்காங்கே வைப்பதும் மிக அவசியம். அதற்காக நடு கடற்கரையில் வைக்க முடியாது. இது போன்ற யோசனைகளை கடைபிடிப்பது மற்றும் அன்பு சகோதரர்களின் நல்ல பல கருத்துக்களை மனதில் கொள்வது நலம்.

பள்ளிகளில் விழிப்புணர்வு மட்டும் போதாது பெரியவர்கள் அனைவரும் நடை முறை படுத்தி ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

" கண்டிப்பாக பயனளிக்காது. பழகிபோய்விட்டோம், திடீரென்று நல்ல மாறுதல் சொன்னால் மனது ஏற்றுகொள்வது சிரமம்முடியாது" என்பது ஒரு பொதுப்படையான எண்ணமென்றாலும், அதனையே பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பதை விட... முடியும் என்று 'பல முறை' சொல்லி நாமும் மாறி நமது சமுதாயத்தையும் மாற்றுவோம்.

தேவையானவைகளில் தன்னை மாற்றிக்கொள்ளாத எந்த ஒரு சமுதாயமும் 'முன்னேற்றம்' அடைந்ததாக வரலாறு இல்லை !! மாறுவோம்... மாற்றத்தை கொண்டுவருவோம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved