Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:23:52 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8563
#KOTW8563
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 2, 2012
குடிநீர் குழாய்களில் முறைகேடாக உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3222 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விளாத்திகுளம் அரசு மருத்துமனையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் 29.05.2012 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்தகம், ஸ்கேன் எடுக்கும் கருவி, உள் நோயாளிகள் பிரிவு, சமையலஅறை, கழிவறைகள் என அனைத்து பிரிவுகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அதன் செவிலியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். பின்னர் அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனைக்குத் தேவையான குடிநீர் தடையின்றி வழங்கிட டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு உத்திரவிட்டார்.

பின்னர், கீழவேம்பார், சிப்பிகுளம், குழந்தை ஏசு நகர், குண்டலபெருமாள் புரம், கல்லூரனி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனுடன் சென்று குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வோர் இடத்திற்கும் வருகின்ற தண்ணீரின் அளவு மற்றும் அது முறையாக வழங்கப்படுகிறதா என்பன குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

குடிநீர் வரும் பாதையில் முறைகேடாக உறிஞ்சுவோர் மற்றும் வேறு பயன்பாட்டிற்கு அந்நீரைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சிறப்புக் கவணம் செலுத்தி கண்காணித்திடவும், முறைகேடுகளில் யாரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின்போது கோட்டாட்சியர் பொன்னியின் செல்வன், வட்டாட்சியர் குமார், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குடிநீர் குழாய்களில் முறை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19130

இதைதான் எனது முந்திய விமர்சனத்தில் கூறி இருந்தேன்.

மிக்க மகிழ்ச்சி. ஆட்சி தலைவர் அவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றியளிதுக்கொண்டிருக்கின்றன. அவரது தொலைதூர பார்வை, பதவி போய்விடுமோ என்ற பயமின்மை, மக்கள் நலனில் அக்கறைகொண்டு மட்டுமே செயலாற்றும் போக்கு எல்லாமே அவருக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் பிரச்சினையின் ரிஷி மூலம் நதி மூலம் என்ன வென்பதை அவர் உணர்ந்து கொண்டதால், அவர் இதில் ஒரு தீர்வை எட்டுவார் என்று தெரிகிறது.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற ......என்றும் நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே ....நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்கோ கண்ணு முன்னாலே....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நீரின்றி வாழ்வேது...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [02 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19131

முதல் முதலில் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் ரைடு நடக்க பட வேண்டும் அப்போது தான் இதில் தீர்வு கிடைக்கும்...

நீரின்றி வாழ்வேது...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முறைகேடாக உறிஞ்சினால் கடும் நடவடிக்கை!
posted by s.s.md meerasahib. (riyadh) [02 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19134

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை வரவேற்க்கத்தக்கது. ஆளு நீங்க.... டாப்பு சார்........ உங்களுக்கு அதிரடி ஆஷிஷுண்டு புனைப்பெயர் வைக்கலாம் போல தெரியுது. கூடிய சீக்கிரம் அதிரடியை துடங்குங்கள். உங்களின் எல்லா நடவடிக்கைகளும் சூப்பர். வாழ்த்துக்கள்.

முறைகேடாக உறிஞ்சினால் கடும் நடவடிக்கை! என்று சொல்லி இருக்றீர்கள் ஆகையால் எங்களிடம் இருந்து அனுமதி இல்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் மீதும் உங்களின் நடவடிக்கை பாய்ந்தால் டபுள் சலியூட் போடலாம் சார்......... உங்களுக்கு. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. 'தண்ணீர் திருடர்கள் ஜாக்கிரதை !
posted by M.S.Kaja Mahlari. (Singapore) [02 June 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19137

கலெக்டரின் எச்சரிக்கை ,நடவடிக்கை கொஞ்சம் காயல் பக்கம் திரும்பவேண்டும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். முன்பு மர்ஹூம் வீ.எம்.எஸ். லெப்பை மாமா நகர்மன்ற தலைவராக இருந்தபோது "இப்படி மோட்டர் வைத்து தண்ணீரை எடுப்பவர்கள் மீது நகர்மன்ற நடவடிக்கை எடுத்து ,இதுபோன்ற தில்லுமுல்லு பார்டிகளின் திருட்டுதன இணைப்பை,மின்சார மோட்டரை கைப்பற்றும் நடவடிக்கை எடுத்தார்கள். இதன் மூலம் "திருட்டுதனம்" குறைந்தது.

திருடர்கள் மக்கள் முன் அடையாளம் காட்டப்பட்டார்கள்.அதுபோன்ற நடவடிக்கை ,அதைவிட கடும்நடவடிக்கை இப்போதுள்ள நகர்மன்றம் மேற்கொள்ளவேண்டும். இதில் தயவுதாட்சம், வேண்டியவன்,வேண்டாதவன்,ஏழை,பணக்காரன் ,மேல்ஜாதி, கீழ்ஜாதி, என எந்தப்பாகுபாடும் பாராமல் "இந்த கௌரவ திருடர்களை ,நவீன திருடர்களை கண்டுப்பிடித்து மக்கள் முன் நிறுத்தவேண்டும்.

இறுதியாக ஒரு எச்சரிக்கை !

ஏ! தண்ணீர் திருடர்களே ! நீங்கள் பிறரின் தண்ணீரை திருடவில்லை. பிறரின் இரத்தத்தை உறிஞ்சிகிறீர்கள். உங்களுக்கு ஏதும் நோய்நொடிகள், பலாய் ,முசீபதுக்கள் ,சோதனைகள் வந்தால் அதற்கு முக்கிய காரணம் இந்த திருட்டுதன தண்ணீர்கள் தான் என விளங்கிக்கொள்ளுங்கள் . எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த திருடர்களையும், திருட்டுதனதையும் நீக்கியருல்வானாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குடிநீர் குழாய்களில் முறை...
posted by Vilack SMA (Nanhai) [03 June 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19139

கலெக்டர் அவர்கள் எச்சரிக்கையோடு நின்றுவிடாமல் , தீவிர நடவடிக்கை எடுத்தால் நல்லது .

விஞ்சானத்தின் புது வரவு :

------------------------------------------

இருதினங்களுக்குமுன் Guangzhou இல் கண்ட காட்சி . பிளாட்பாரத்தில் ஒருவன் செய்முறை விளக்கத்தோடு ஒரு பொருளை விற்றுக்கொண்டிருந்தான் . ஆவலுடன் எட்டிப்பார்த்ததில் அதிர்ச்சி . புதுவரவான அந்த பொருளை மீட்டரின்மேல் வைத்தால் தண்ணீர் வேகமாக வருகிறது . மீட்டரும் நின்று விடுகிறது . என்று திருந்தும் இந்த உலகம் ?
Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இதயமற்ற இழிவானவர்கள். .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (சென்னை) [03 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19140

படிப்பதற்கும்,கேட்பதற்கும் இனிமையாக இருந்தாலும் எப்படி செயலாற்றமுடியும் என்பதே என்னைப்போல் ஏராளமானவர்களின் மனதுக்குள் எழும்பியுள்ள கேள்வி.

முஸ்லிம் பெண்களாகிய கோசா நிலையுள்ள வீட்டில் எந்த அதிகாரியும் உத்தரவின்றி உள்ளே செல்ல முடியாது என்ற ஒரே ஆய்தத்தை தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துகொண்டு, பிறர் வீட்டுக்கு வரும் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சும் இதயமற்ற இழிவானவர்கள்.

தாங்கள் இஸ்லாமியர்கள் என்று பெயருக்கு வாழ்கின்ற மனித போர்வையில் வாழும் இம் மிருகங்களை,மனித சட்டங்களால் பிடிக்க முடியாது.

மறையளிக்கும் இறைவன் நினைத்தால் இமிநொடியில் இறுக்கி பிடித்துவிடுவான்.அவனைப்பற்றி எள்ளளவு பயம் கூட இக்கொடியவர்களுக்கு வராதா?

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எங்க... ரேஞ்சே வேறெ...?
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [04 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19146

திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! ஒரு யோசனை...! எல்லா வீடுகளிலும் மோட்டார் வச்சுட்டாங்கன்னா இந்தப் பிரச்சனை தீர்ந்துடுமே! வசதியற்றவர்களுக்கு அரசாங்கமே இலவச...சாரிங்க...விலையில்லா மோட்டார் தந்து உதவலாமே? தந்தாலும் தருவாங்கடோய்...!

சைனாவுலெ மீட்டர் ஓடாமெ இருக்க மெஷின் கண்டுபிடிச்சிருப்பது பெரிய விஷயமில்லீங்க.... நம்ம நாட்லெ தண்ணி வராமெயே மீட்டர் மீட்டர் ஓடும்! கரண்ட் இல்லாமலேயே மீட்டர் ஓடும்! ஆட்டோலெ அரைக் கி.மி.தூரம் போனாலெயே அஞ்சு கி.மி. க்கு மீட்டர் ஓடும்! ஃபிரீக் காலைக் கூடப் பேசாம டெலிஃபோனுக்குபில்லு வரும்! நம்ம ஊர்லெ தண்ணிக்கு பணம் கட்டினா மட்டும் போதும், போதும்ங்கிற அளவுக்கு பைப்லெ ஆக்ஸிஜன்(காற்று)யே அனுப்புவாங்க! போங்கப்பா..நீங்களும்..உங்க சைனாவும்! நாங்க என்ன சைனாவுக்கு இளைத்தவர்களா? இந்தியன்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:குடிநீர் குழாய்களில் முறை...
posted by hasbullah mackie (dubai) [04 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19151

தண்ணீரை மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்களின் கவனத்திற்கு,

நீங்கள் தண்ணீர் உறிஞ்சுவது என்பது பிற நபர்களின் ஹக்கை திருடுவது போல.

ஒரு உண்மையான முஸ்லிம் என்பவன் தனக்கு கிடைக்கும் சந்தோஷங்களை நம்முடைய சகோதரனும் பெற வேண்டும் என்று விரும்புவது. நபிமொழி

ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹுவிடம் கேள்வி கணக்கு என்பது மறுமையில் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கப்ரிலும், நரகத்தையும் அஞ்சிக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் யாவரையும் மன்னித்து கொள்ளுவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved