Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:04:54 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9028
#KOTW9028
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 27, 2012
குடிநீர் தட்டுப்பாடு குறித்து காயல்பட்டணம் நகராட்சியின் விளக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4465 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகராட்சி சார்பாக - துண்டு பிரசூரம் மூலம் - அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காயல்பட்டினம் நகராட்சிக்கு வரும் குடிநீரானது நமதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல ஆத்தூரில் இருந்து வருகிறது. அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 20 லட்ச லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேல ஆத்தூரில் உள்ள இந்த நீர்தேக்கத்திற்கான தண்ணீர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரவருணீ நீர் தேக்கத்தில் இருந்து வரும். மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நீர்தேக்கத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

தென் மேற்கு பருவ மழை பெய்யாத காரணத்தால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டு, அதன் காரணமாக ஸ்ரீவைகுண்டத்திற்கு அனுப்பப்படும் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மேல ஆத்தூருக்கு அனுப்பப்படும் தண்ணீரும், கடந்த சில நாட்களாக முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டதன் காரணாமாக மேல ஆத்தூரில் இருக்கும் முக்கிய நீர்தேக்கத்தில் உள்ள தண்ணீர் முற்றிலும் காலியானதால், அங்குள்ள கோடைக்கால சேமிப்பு நீர் தேக்கத்தில் இருந்து தான் தற்போது குடிநீர் காயல்பட்டினத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் அளவும் 20 லட்சம் பிறகு 15 லட்சம் தற்போது 11 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்தவுடனேயே நகராட்சி அவசரகால நடவடிக்கைகள் மேற்கொண்டு, லாரி மூலம் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது. மேலும் இந்த பிரச்சனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என அறியப்பட்டவுடன், அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி நிலத்தடி நீரினை லாரிகள் மூலமும் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குடிநீர் பிரச்சனை மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் நிலவும் காரணத்தால் இது குறித்த ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியகத்தில் இருந்தும் பெறப்பட்டு அதன்படி நகராட்சி செயல்பட்டும் வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட ஆட்சியிகம் நிதிஉதவி செய்திட முன்வந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது நகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தாரரும் தேர்வு செய்யப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் நகரில் உடனடியாக துவங்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்டகால நிவாரணம் அடிப்படையில் தண்ணீர் சீராக அனைவருக்கும் கிடைத்திட நகரில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை நிறுத்திட நகர் முழுவதும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது குறித்த மேல் நடவடிக்கைகள் எடுக்க, நகர மக்கள் ஆயிரக்கனக்கானேரின் கையெழுத்துப்பெற்று மாவட்ட ஆட்சியரிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களும் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

குடிநீர் வினியோகிக்கப்படும் நேரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் சில வழிமுறை சிக்கல்கள் இருப்பதால்; இது குறித்த முடிவு தாமதமாகியுள்ளது. எனவே நகரில் நிலவும் குடிநீர் பிரசனைக்கான தீர்வு குறித்து அனைத்து முயற்சிகளையும் இந்த நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது என்பதனை நகராட்சி சார்பாக பொது மக்களுக்கு தெரிவித்துகொள்கிறோம்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட, குடிநீரை காய்ச்சி குடித்திட, குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார் இணைப்பினை துண்டித்திட பொது மக்களின் ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும் நம் பகுதிகளில் நன்றாக மழை பெய்து இந்த குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை முழுவதும் நீங்கிட நாம் அனைவரும் இறைவனிடம் அனுதினமும் பிரார்த்தனை செய்வோம்.

இவண்,
காயல்பட்டணம் நகராட்சி.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [27 August 2012]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 21516

Assalamualaikkum ,

தலைவி அவர்களே இந்த அறிக்கையை ஏன் இவ்வளவு தாமதமாக விடவேண்டும், அதுவும் ஆர்பாட்டம் என்றவுடன் தான் இந்த அறிக்கை வெளி வந்ததே தவிர உண்மையாக ஊர் மக்களுக்கு உழைக்கும் எண்ணத்தில் இல்லை,

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21517

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

நகரமன்றத்தின் அறிக்கை தற்போதுள்ள பருவ சூழ்நிலையை, தங்கள் இயலாமையை, தங்களால் முடிந்ததை செய்ய தவறாமையை சுட்டிக்காட்டுகிறது.

நாம் புனித ரமளானில் செய்த நல்ல அமல்களை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இனி வரும் காலங்களில் மழை பொழிந்து நமது தண்ணீர் பிரச்சினைகள் தீர அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [27 August 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21519

-ஆத்தூர் நீர் தேக்க நிலையத்தில் தண்ணீர் இல்லை என்ற நிலைமைக்கு காரணமான நம் நகராட்சி மன்ற செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்.

- ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரவருணீ ( தாமிரபரணி !! ) நீர் தேக்கத்தில் தண்ணீர் இல்லாத நிலைமைக்கு காரணமான நம் நகராட்சி மன்ற செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்.

- பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து இருப்பதற்கு காரணமான நம் நகராட்சி மன்ற செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்.

- பருவமழை பொய்த்து போனதற்கு காரணமான நம் நகராட்சி மன்ற செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்.

- மழை இல்லாததால், கிணத்தடி நீர் குறைந்ததற்கு காரணமான நம் நகராட்சி மன்ற செயல்படாத தலைவியை கண்டிக்கின்றேன்.

- காயல்பட்டின கடற்கரையில் ஒதுங்கிய ஆண் பிணத்திற்கு காரணமான ..... சாரி.. சாரி.. டைப் அடித்த விரல்கள் ஸ்லிப் ஆகிவிட்டது.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [27 August 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21521

தெளிவான விளக்கம் தந்த காயல்பட்டணம் நகராட்சிக்கு நன்றி. குடிநீர் தட்டுப்பாடு நீங்கிட யா... அல்லாஹ் யம் காயல் மண்ணில் உன் ரஹுமத்தை பொழிய செய்வாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...எங்கே மட்டும் வருகிறது நம் பஞ்சாயத்துலாரி?
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 August 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21522

ஊருக்குள்ளே மோட்டார் போட்டு உருஞ்சுவோர்களை தடுக்க வக்கிள்ளை நமது பஞ்சாயத்துக்கு.

ஊருக்குள்ளே தினமும் இவ்வளவு லிட்டர் தண்ணீர் வருகிறது என்று விளக்கம்வேறு நெட்டில் நமக்கு.

மோட்டார் போட்டு உருஞ்சும் தன் குடும்பத்தார்களை இனம் கண்டு நம் தலைவி பிடித்து கோர்ட்டில் நிறுத்தட்டும் முதலில்!

நம் ஊரிலே தண்ணீர் லாரி எந்த தெருவுக்கு எல்லாம் வருகிறது? விளக்கமுடன் ஃ போட்டோ எடுத்து போடுவீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அயோக்கியர்களுக்கு அறவே உரிமையில்லை!
posted by M.S.Kaja Mahlari (Singapore.) [27 August 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21524

நகராட்சின் அறிவிப்பின்படி பொதுமக்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிப்பது சிரமமே!

அடுத்து நகர்மன்றமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து நமதூரில் உள்ள அணைத்து "குடிநீர்" இணைப்புகளையும் அதிரடி சோதனை மேற்கொள்ளவேண்டும். அப்போது திருட்டுத்தனமாக பெறட்டபட்ட குடிநீர் இணைப்புக்களையும், மின் மோட்டார் மூலம் பிறரின் குடிநீரை (இரத்தத்தை) உறிஞ்சிடும் "தண்ணீர் திருடர்களையும்" அடையாளம் காண முடியும்.

அவ்வாறு இவ்வித மோசடியில் தொடர்ப்பான நபர்களின் இணைப்பை உடனடியாக துண்டிப்பதுடன், கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட வேண்டும்.

தயவு செய்து இவ்வித மார்க்க மோசடியில், (பிறர் உரிமையில்) அநியாயமாக ஈடுபடுபவர்கள் உடனடியாக அல்லாஹ்,ரசூலுக்கு பயந்து இந்த ஈனத்தனமான, இழிவான செயல்பாடுகளில் இருந்து உடனடியாக நீங்கி விடுங்கள். இந்தவித செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு மார்க்கம் பேசுவதை உடனடியாக கைவிடுங்கள்.

பிறருக்கு இவ்வித மோசடிகளை செய்துக் கொண்டு ,பிறருக்கு உபதேசம் புரிவதற்கு இதுபோன்ற அயோக்கியர்களுக்கு அறவே உரிமையில்லை!

ஆகவே! இந்த அறிவுரை இவ்வித செயல்பாடுகள் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நல்ல அறிவை, நற்குணத்தை தந்து, எவ்விதத்திலும் பிறர் உரிமையை பறிக்காமல் வாழ வழி செய்வானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Vilack SMA (Nha Bay , Vietnam ) [27 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21525

நகராட்சியின் அறிக்கை சூப்பராக உள்ளது .

( குடிநீர் வினியோகிக்கப்படும் நேரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்ள , சில வழிமுறை சிக்கல்கள் இருப்பதால்; இது குறித்த முடிவு தாமதமாகியுள்ளது )

எல்லா சிக்கலும் தீர்ந்து , மின்துண்டிப்பு வரும் காலத்தில் , பருவமழை பெய்து , தண்ணீரும் ஜோராக வந்து , மக்களும் மின்துண்டிப்பை மறந்தும் விடுவார்கள் .

எது எப்படியோ , ஜனங்களுக்கு குடிக்கவாவது தண்ணீர் கொடுத்தால் சரிதான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Past is past. start looking at forecast
posted by Riyath (HongKong) [27 August 2012]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 21526

No one control the past, but earned experience will make path towards success by forecasting.. Kindly remember this notice(excuse to the people) and try to avoid next year by focusing consequences.

All well know:: Share if you know, learn if you don't know.

**Wasslam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [27 August 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21527

தம்பி சாளை ஜியாஊதின் அருமையாக இருந்தது உங்கள் எழுத்து என்ன செய்ய உங்களை விட இதற்கு வேறு பதில் எழுத எனக்கு தெரியவில்லை. சரியாய் சொன்னிர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [27 August 2012]
IP: 91.*.*.* Kuwait | Comment Reference Number: 21530

Assalamualaikkum ,

சங்கைக்குரிய காஜா ஆலிம் அவர்களுக்கு சிறு வேண்டுகோள், குடிநீர் திருடர்களுக்கு ஆண்டவன் மறுமையில் எந்த மாதிரி தண்டனை கொடுப்பான் என்று விரிவாக சொல்லுங்களேன், அப்போதாவது இவர்கள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

காசு மற்றும் பொருட்கள் திருடினால் மட்டும் திருடர்கள் கிடையாது, தண்ணீரை திருடினாலும் திருடன்தான் அவன் ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி. ஒரு வகையில் சொல்ல போனால் இது பிச்சை எடுபதற்க்கு சமம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 August 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21532

எங்கேயோ கேட்ட குரல்:-

( நான்கு அம்மணிகள் கதைத்துக்கொண்டு இருந்தது)

- ஆமாம், மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்சினால், நம் வீட்டிற்கு நகராட்சி ஆட்கள் வந்து குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவாங்களாமே..!! அப்புடியா..!

- அது எல்லாம் சும்மா.. ஒரு முடுக்கிலே 8 வீட்டிலே மோட்டார் உள்ளது.. நகராட்சியில் உண்டான வேலை பார்க்கவே ஆட்கள் இல்லை. இந்த லட்சணத்தில் ஒவ்வொரு முடுக்கா.. ஒவ்வொரு வீடா.. ஒவ்வொரு தெருவா தோண்டி.. தோண்டி.. கட் பண்ணப்போகிறார்களாக்கும்.

- இதாவது பரவாஇல்லை.. -----------ங்க வீடு, ------- வீடு எல்லாம் 2 வருடம், ஒன்னரை வருடங்களாக குடிநீருக்கு கட்டணமே கட்டவில்லை. அதை கண்டுக்கொள்ளவே நகராட்சியில் ஆட்கள் இல்லை..

- வராத குடிநீர் இணைப்பு இருந்தால் என்ன.. கட் பண்ணினால் என்ன..!! எங்க வீட்டு லைனில் அடைப்பு இருந்ததை சரிபண்ண, ரோட்டில் குழியை நோண்டி, எங்க லைனை கண்டு பிடிக்கவே ஒரு நாள் ஆச்சு..என்னத்தை கட் பண்ண.
-----------------------------------------
ஆக, லைன் கட் பண்ணுவது என்பது முடியாத காரியம் என்று அனைவர்களுக்கும் தெரிந்தது தான்.
___________________________________
முந்திய காலத்தில், தெருவில் ஆங்காங்கு ஒன்று இரண்டு பொது குடிநீர் பைப் இருந்தது. அனைவர்களும் இங்கு வந்து தண்ணீர் பிடித்து செல்வார்கள்.

- சிறிது காலம் சென்றதும், சற்று பணம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டிற்கு குடிநீர் லைன் எடுத்தார்கள். அப்போது மற்ற மக்கள் எல்லாம் இவர்களை திட்டு.. திட்டு.. என்று திட்டினார்களாம். நாங்கள் எல்லாம் தெருவில் கஷ்டப்படனும், இவங்க வீட்டுக்கே லைன் போட்டு உறிஞ்சுவார்களாம். இது சரியா என்று விவாதம்.

பின்பு, மக்கள் அனைவர்களும் வீட்டிற்க்கே லைன் எடுத்து, இந்த தவறு சரியாக மாறிவிட்டது.

- காலம் மாறியது, குடிநீர் சரியாக வராததால், சில பணக்காரர்கள் அவர்கள் வீட்டில் கை அடிபம்பு வைத்தார்கள்.

- உடனே மற்ற மக்கள்.. பார்த்தீர்களா.. பார்த்தீர்களா.. இப்படி கைபம்பு வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கள்.. இது ஹராம்.. அப்படி.. இப்படி.. என்று கூச்சல் போட்டார்கள்.

- காலம் மாறியது. அனைவர்களும் கை பம்பு வைத்து தண்ணீர் அடிக்க ஆரம்பித்ததும், இந்த தவறு சரியாக ஆகிவிட்டது.

- இன்றைய காலத்தில், அதிக சதவீத வீட்டில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த தவறு நாளை சரி ஆக மாறலாம்..!!! ( என் வீட்டில் இல்லை).

ஆக, மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தவறு இல்லை.

ஆனால் வரம்பு மீறாதீர்கள். உங்களுக்கு குடிப்பதற்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

குளிக்க, பாத்திரம் கழுவ, ---- கழுவ என்று கீழே உள்ள தொட்டியை நிறைத்து, மொட்டை மாடியில் உள்ள தொட்டியை நிறைத்து, தோட்டத்தில் உள்ள மரம் செடிகளுக்கு குடிநீரை பாய்ச்சி கொடுமை பண்ணுகிறீர்களே.. இது தான் தவறு. சில வீட்டில் நல்ல தண்ணீரை கிணற்றில் விடும் அவலமும் நடக்கின்றது. இது மாதிரியான செயல்கள் தான் வரம்பு மீறுதல் என்பது. அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.

**** நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.****

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.ABDUL KADER (kayal patnam) [27 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21533

குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகரமன்றத்தின் தன்னிலை விளக்கம் சரியானது.

நமதூர் நகரமன்றதினை இயற்க்கைதான் சோதனை செய்கிறது என்று நினைத்தாலும் நகரமன்ற உறுப்பினர்கள் யாவரும் தலைவியுடன் ஒத்துளைக்கவில்லலை என்பது உணர்கிறது.

உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக கூடி நடப்பு கூட்ட தொடரில் தண்ணீர் நகருக்கு எப்படி கொண்டுவர வேண்டும் என்று பகிரங்க தீர்மானம் போட முன் வர தலைவி மற்றும் உறுபினர்களை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பாவம் அரு பக்கம்....! பழி ஒரு பக்கம்....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித் மக்கா.) [27 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21535

செயல்படாத தலைவி! நகராத நகர் மன்றம்! பொறுப்பற்ற தலமை! பொக்குக் கடலை! புண்ணாக்கு!

எழுதுவதற்கு ஒரு வரம்பே கிடையாதா? பருவ மழை பொய்த்திடினும், வரும் நீர் வற்றிடினும், வாய்க்கால் வரப்பெல்லாம் காய்ந்து போய் கருகிடினும் காலமெல்லாம் கடுஞ்சொல்லால் பழி போட்டு வசை பாட காயல் நகராட்சி ஒன்றேதான் காத்திருக்குமாம் கம்பன் வாழ் கன்னித்தமிழ் நாட்டினினிலே!

ஹலோ! பிரதர்! ஆர்ப்பாட்டம் நடந்தபின் தான் அறிக்கை விட்டதாச் சொல்லுறீங்களே! துரித நடவடிக்கை எடுத்த பின்னர்தான் அவங்க ஆர்ப்பாடமே பண்ணியிருக்காங்க!

சரி, முன்னோர்கள் மற்றும் பேரவை பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டிருந்தால் மட்டும் அவங்க என்ன அடை மழையை விடாமெயா பெய்ய வச்சிருப்பாங்க? இப்ப என்ன செய்யப்படுகின்றதோ? அதைத் தானே செய்யச் சொல்லியிருப்பாங்க!

ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்கிறது! தாமிரவருணீ வற்றிப் போச்சுன்னு காயல்பட்டணம் மட்டுமா தவிக்குது? பக்கத்து ஊர்களான ஆறுமுகநேரி, வீரபாண்டியபட்டணம், ஆத்தூர், அடைக்கலாபுரம், திருச்செந்தூர்...இப்படி எல்லா ஊர்களுக்கும் பிரச்சனைதானே?

அது சரி, அந்த ஊர்களுக்கெல்லாம் தனி வெப்சைட்டா இருக்கு? கண்டமேனிக்கு கண்ணாபிண்ணான்னு எழுதித் தள்ள? கொடுத்து வச்ச ஆளய்யா நீரு...!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [28 August 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21536

மச்சான் ஜியா,

நீ ஒரு தீர்க்கதரிசிடா..... இங்க வெளிநாடுகள்ள நாம தண்ணிக்கு என்ன செய்யுறமாம். 24 மணி நேரமும் தண்ணி அது பாட்டுக்கு முனிசிபாலிடி பைபுல வந்துக்கிட்டிருக்கு. வேணுங்குற நேரம் மோட்டார் போட்டு அவங்கவங்க எடுத்துக்குறாங்க. அடிபைப்பாவது மண்ணாங்கட்டியாவது. (ஊருல எங்க வீட்டுல அடிபைப்பு போட்டும் உறிஞ்சல, மோட்டார் போட்டும் உரிஞ்சலப்பா, தானா வந்து தொட்டில விழுரதத்தான் எடுத்துக்குறோம்).

மீண்டும் ஒரு முறை, மச்சான்! நீ ஒரு தீர்க்கதரிசிடா..... இறைவன் நாடினால் நாளை இந்த நிலை நமதூரிலும் வரலாம். (ஆமா ரெண்டாவது பைப்பு லைன் போடுறாங்களாமே, ஒரு வேளை அது மூலமா இந்த கனவு நெறைவேருமோ!!!!!)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Vilack SMA (Nha Bay , Vietnam ) [28 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21542

சலாம் ஜியா பாய் .

உங்களது கற்பனை கதைகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் , ஒருசில இடங்களில் உங்களின் அறியாமையை காட்டுகிறது .

< முந்திய காலத்தில், தெருவில் ஆங்காங்கு ஒன்று இரண்டு பொது குடிநீர் பைப் இருந்தது. அனைவர்களும் இங்கு வந்து தண்ணீர் பிடித்து செல்வார்கள்.

- சிறிது காலம் சென்றதும், சற்று பணம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டிற்கு குடிநீர் லைன் எடுத்தார்கள் >

வசதி உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக குடிநீர் லைன் எடுக்கவில்லை. அரசின் அனுமதி பெற்றுதான் எடுத்தார்கள். தண்ணீர் வரியும் கட்டுகிறார்கள். இதை ஹராம் என்று சொன்னால் அது அவர்களின் அறியாமை.

தெருவில் பொது லைனில் தண்ணீர் எடுப்பவர்களுக்கு அது முற்றிலும் இலவசம். அவர்கள் தண்ணீர் எடுத்ததுபோக மீதம் உள்ள தண்ணீர் தெருவில் வீணாக வழிந்து ஓடும் . இதை நாமே நேரில் பார்த்ததுண்டு. எல்லோரும் நடந்துதானே போறோம், இவர்கள் பஸ்ஸில் போகிறார்களே , ஹராமாச்சே என்று சொன்னால் எப்படி?

(காலம் மாறியது, குடிநீர் சரியாக வராததால், சில பணக்காரர்கள் அவர்கள் வீட்டில் கை அடிபம்பு வைத்தார்கள். )

அடிபம்பு வைத்ததற்கான காரணம் , தெருவில் இருந்து வீட்டுக்கு வரும் லைன் சரியான மட்டத்தில் இல்லாததன் காரணம். மற்றபடி அடுத்தவன் வீட்டு தண்ணீரை உறிஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை .

மேலும், தனியாக லைன் எடுத்த காலத்திலும், அடி பைப்பு வைத்த காலத்திலும் தண்ணீர் தாராளமாக கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போதோ, இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்களை ஹராம் என்று சொல்கிறோம். இது என்றென்றும் ஹராம்தான் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. RE ..ஆச்சரியம் ஆனால் உண்மை!
posted by OMER ANAS (DOHA QATAR.) [28 August 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21545

ஆக, மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தவறு இல்லை.

ஆனால் வரம்பு மீறாதீர்கள். உங்களுக்கு குடிப்பதற்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

குளிக்க, பாத்திரம் கழுவ, ---- கழுவ என்று கீழே உள்ள தொட்டியை நிறைத்து, மொட்டை மாடியில் உள்ள தொட்டியை நிறைத்து, தோட்டத்தில் உள்ள மரம் செடிகளுக்கு குடிநீரை பாய்ச்சி கொடுமை பண்ணுகிறீர்களே.. இதுதான் தவறு. சில வீட்டில் நல்ல தண்ணீரை கிணற்றில் விடும் அவலமும் நடக்கின்றது. இது மாதிரியான செயல்கள்தான் வரம்பு மீறுதல் என்பது. அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.

**** நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.****

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்!

தம்பி நீங்களா திருட்டுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?
ஆச்சரியமாக இருக்குகிறது.

**** நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.****

நீங்கள் மட்டும் மீறலாமா தம்பி?

ஒரு ஹதீதிலாவது திருடுவதை ஊக்கப்படுத்தி (அது அனா பைசா என்றாலும்) நம்மை படைத்த இறைவன் எங்காவது ஒரு வசனமாவது இறக்கி உள்ளானா? வார்த்தைக்கு வார்த்தை இறை வசனங்களை சுட்டிக்காட்டும் நீங்களா தம்பி திருட்டுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறீர்கள்?

உதாரணத்துக்கு என்று உங்களின் வாதத்தை வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட வங்கியில் உள்ளே புகுந்து கொள்ளை அடிப்பவன் இன்றைய பசிக்கு தேவையான காசை மட்டுமா திருடுவான்? யோசிக்க வேண்டிய விஷயம் இது!

நீங்கள் யாருக்கு இதை அறிவுறுத்த வந்தீர்களோ எனக்கு தெரியாது. உண்மையில் யார் மோட்டார் போட்டு திருடினானும் ஹராம்தான், அவன் ஹராமிதான்! Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [28 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21551

குடிநீர் தட்டுப்பாடு எதனால் என்பதற்கு தகுந்த ஆதாரம் தந்த தலைவி அவர்களுக்கு nanri.

மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்ஜாதிர்கள். என்று மைக் மூலம் சொன்னால் மட்டும் போதாது ஒவ்வொரு வீடாக வந்து செக் பண்ணி மோட்டரை துண்டித்தால் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் இதை தலைவி அவர்கள் செய்வார்கள் என நினைக்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21557

நம்முடைய நோக்கம் அனைவர்களுக்கும் தண்ணீர் கிடைக்கணும் என்பது தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

* ஒருவர் வீடு மேல் நிலை தேக்க தொட்டிக்கு அருகில் உள்ளது. தண்ணீர் திறந்து விட்டதும், மின் மோட்டார் போடாமலோ, கைபம்பு வைத்து அடிக்காமலோ அவர்கள் வீட்டிற்கு தண்ணீர் பீச்சிக்கொண்டு வருகிறது. இவர்கள் அவர்களின் வீட்டில் உள்ள அனைத்து தொட்டிகள், தோட்டம், துறவு என்று நிறைத்து வைக்கின்றார்.

* இனொருவர் வீடு, மாங்கு மாங்கு என்று கைப்பம்பு வைத்து அடித்தால்தான் தண்ணீர் வரும். இவர்களும் அடி அடி என்று அடித்து வீட்டில் உள்ள அனைத்து தொட்டிகளிலும் நிறைத்து விடுகிறார்.

* இனொருவர் வீட்டில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கின்றார்.. (பலர் கூறுவது போல உறிஞ்சுகிறார்.). ஆனால் இவர் உறிஞ்சுவது குடிப்பதற்கு என்று 5 வாளி தண்ணீர் மட்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூவரில் யார் சிறந்தவர், கூறுங்கள்.

ஆக. நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். மின் மோட்டாரா.. கை பம்பா.. என்பது பிரச்சனையா.. அல்லது தண்ணீர் அனைவர்களுக்கும் தேவை என்பது பிரச்சனையா.?

** நான் கூறுவது உங்களுக்கு தண்ணீர் திறந்தவுடன் பீச்சி அடித்தாலும், இல்லை.. கைபம்பு கொண்டு அடித்தாலும் அல்லது மின்மொட்டோர் கொண்டு உறிஞ்சுனாலும், உங்களின் குடி தேவைக்கு அதிகமாக எடுக்காதீர்கள் என்பதுதான்.

* கை அடிபம்பு வைத்து 4 தொட்டிகள், அனைத்து கேன்கள், குடங்கள் என்று நிறைத்து வைப்பது சரியா சகோதரர்களே. இது திருட்டு கிடையாதாமோ..!!

திருட்டு எந்த வழியாக இருந்தாலும் திருட்டு திருட்டுதான். கைபம்பா இருந்தால் என்ன மின் மோட்டாராக இருந்தால் என்ன. டெக்னாலாஜி வித்தியாசம்.. அம்புட்டுதான்.
--------------------------------------------
இன்னும் ஒரு சிறு தகவல்:-

நான் இந்த கருத்தை பதிவு செய்ததும், ஊரில் இருந்து ஒரு மாற்று மத நட்பு பட்சி, என் நண்பனின் போனில் இருந்து என்னிடம் கூறியது.

அதாவது நாம், நமக்கு ஒரு மணி நேரம் தான் தண்ணீர் திறந்து விடுகிறார்கள், மோட்டார் போடுகிறார்கள், தண்ணீர் கிடைக்கவில்லை என்று நமக்குள் சண்டை போட்டு வருகிறோம்.

ஆனால், புதிய பேருந்து நிலையத்தில் அமைந்து இருக்கும் தொட்டியில் இருந்து, மாலை ஆறு மணி முதல் 12 வரை அல்லது இரவு 8 முதல் 2 , 3 மணி வரை தண்ணீர் திறந்து விடுகிறார்களாம்.

அங்கு உள்ள வீடுகள் சிலவற்றில் (முத்தாரம்மன் தெரு, பூந்தோட்டம் பகுதியில்) இரண்டு மின் மோட்டர் போட்டு, நீச்சல் குளம் போல உள்ள தொட்டிகளில் நிறைத்து விடுகிறார்களாம். இவர்கள் மோட்டாரை நிறுத்திய பிறகுதான், பின்னல் உள்ள ஏழை வீடுகளுக்கு தண்ணீர் வருகிறதாம். நாங்க தண்ணீர் பிடித்து தூங்க இரவு 3 மணி ஆகுதுங்க, இதை பற்றியும் எழுதுங்க மக்கா. என்று கூறுகிறார்.

இதன் பெயர் தான் யானை போவது தெரியாது, எறும்பு போவதுக்கு பெரிய பிரச்சனை என்பதோ.!!

ஊத வேண்டிய சங்கை ஊதியாச்சு.. காதில் விழுந்ததால் சரி தான்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 August 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21567

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் நகராட்சியின் விளக்கம் நியாயமானது...... இந்த விளக்கத்தை நம் நகராட்சி காலம் தாழ்தி நம் மக்களுக்கு தந்துள்ளார்கள். இருப்பினும் நாம் நகராட்சியை பாராட்டுவோம் .காரணம் இவ்வளவு குடிநீர் தட்டுப்பாடு பிரசினை இருப்பின் லாரிகள் மூலம் நம் மக்களுக்கு குடிநீர் சப்ளை பண்ணுகிறார்களே..... ஓன்று இது போதாது ......

இயற்கை பிராப்லம் என்றாலும் சரி / பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் அணையின் நீர்மட்டம் குறைந்தது என்றாலும் சரி / ஆத்தூர் அணையின் நீர்மட்டம் குறைவு என்றாலும் சரி ..... நம் நகரமன்ற தலைவி அவர்கள் தான் காரணம் என்று குறை கூறி எழுதுகிறார்களே..... இது எந்த விததில் நியாயம் ....காயல்... ஐயா....மார்களே......கொஞ்சம் ( நம் மக்கள் ) நிதானமாக எழுதினால் நல்லது தானே.

நாம் ஒவ்வொரு ஜும்மாவிலும் வல்ல இறைவனிடம் துவா கேட்போமாக..... நிச்சயமாக வல்ல இறைவன் நம் யாவர்களின் துவாவை ஏற்று நம் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழையை தந்து நம் பகுதியை செழிப்பாகி தந்த அருள்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by syed omer kalami (chennai) [28 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21568

THIS NOT KPM PROBLEM ALONE. WHOLE TAMILNADU PROBLEM. SO ALL PRAY FOR RAIN. AND FOR GOOD MONSOON.

BY SYED OMER


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. குடிநீர் தட்டுப்பாடு தீர
posted by S.A.Muhammad Ali (Velli) (Dubai) [28 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21573

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊரில் குடிநீர் தட்டுப்பாடு தீரும் வரை அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பைப் லைனை மூடி விட்டு ஒவ்வொரு தெருவிலும் உள்ள மெயின் ஜங்சனில் இருந்து ஹோஸ் பைப் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான அளவு மட்டும் தண்ணீர் கொடுத்தால் தற்காலிகமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். இதை நீங்கள் சாத்தியம் என்று நம்பினால் நகராட்சிக்கு தெரியபடுத்துங்கள்.

தற்போதுள்ள நிலையில் தண்ணீரை காசாக்க பல பேர் காத்து கிடப்பார்கள். அதனால நமது ஊரில் உள்ள அனைத்து சமூக நல சங்கங்கள் தங்களது பகுதியில் இந்த யோசனையை பின்பற்றினால் அனைவருக்கும் குடிக்க நீர் கிடைக்கும்.

மேலும் மழை நீர் சேகரிப்பு நமது ஊரில் கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். புதிதாக வீடு கட்டுபவர்கள் இந்த முறையை கடை பிடித்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்க வேண்டும். நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam ) [29 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21575

சலாம் ஜியா பாய் .

நீங்கள் சொன்ன மூவரில் அநியாயக்காரர் மூன்றாமவர் .

முதலாமவர் , குடிப்பதற்கு 5 குடம் தண்ணீர் போதும் என்றாலும் வீணாகும் தண்ணீரைத்தான் தோட்டம் , செடிகளுக்கு பாய்ச்சுகிறார் . தவறே இல்லை .

இரண்டாமவர் , தண்ணீர் வரும் நேரத்தில் தனது உழைப்பை பயன்படுத்திதான் அடிபைப்பை மாங்கு மாங்கென்று அடித்து தனது தேவையை பூர்த்தி செய்கிறார் .

மூன்றாமவர் , உழைப்பே இல்லாமல் , அடுத்தவனுடைய ஹக்கை சுரண்டுகிறார் . இதுதான் அநியாயம் . இவரைத்தான் தண்டிக்க வேண்டும் .

மேலும் நீங்கள் சொன்ன புது பஸ்ஸ்டான்ட் தண்ணீர்தொட்டி மேட்டர் , நகராட்சி கவனிக்க வேண்டிய விஷயம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou-China.) [29 August 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21576

சகோதரர் ஜியாவுதீன் அவர்களின் கருத்து வக்கீல் வாதம்போன்று சிறப்பாக உள்ளது.

எனினும் அவர் கூறிய 3 வகைகளுக்கும் பொதுவான ஒரு தீர்வு என்பது "மின் அளக்கும் கருவி " போன்று "குடிநீர் அளக்கும் கருவி " (வாட்டர் மீட்டர்) அனைத்து இணைப்புகளுக்கும் பொருத்துவதுதான் .

அதிகமாக தண்ணீர் பிடித்தால் அதிகமாக பணம் செலுத்த வேண்டும். குறைவாக தண்ணீர் பிடித்தால் குறைவாக பணம் செலுத்த வேண்டும்.

எனினும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையை போக்க இது தீர்வாகாது.

என்ன ஆத்தூரில் இருந்து நம் ஊருக்கு வரும் தண்ணீரை அளக்கவே இன்னும் "கருவி" பொருத்தவில்லையே , இதை எப்படி செய்யபோகிறார்கள் என்று யோசிக்கிறீர்களா ! அது வேறு விஷயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21579

சகோ. விளக்கு S .M . அலி அவர்களுக்கு,

வ-அலைக்கு முஸ்ஸலாம்.

அப்பப்பா.. உங்களின் விளக்கம் மிகவும் சரிதான் போல.

நீங்கள் கூறுவது..

-------------------------------------------------

முதலாமவர் , குடிப்பதற்கு 5 குடம் தண்ணீர் போதும் என்றாலும் வீணாகும் தண்ணீரைத்தான் தோட்டம் , செடிகளுக்கு பாய்ச்சுகிறார் . தவறே இல்லை.

--------------------------------------------------

ஆக, தாங்களுக்கு போதுமான குடிதண்ணீர் கிடைத்த பின்பு, தண்ணீர் வால்வை மூட மாட்டார்களாம், அதை பெரிய பெரிய தொட்டிகளில் நிரப்புவார்களாம், தோட்டம் செடிகளுக்கு விடுவார்களாம், பின்பு தங்களின் கிணற்றில் விடுவார்களாம் (கிணற்றில் உள்ள உப்பு தண்ணீரை, நல்ல தண்ணீராக மாத்துகிறார்களாம்..!!!), பாத்திரம் முதல், வீடு கழுவ வரை இந்த குடிநீரை யூஸ் பண்ணுவார்களாம். இந்த தண்ணீர் வீணாகும் தண்ணீராம். இது தவறே இல்லையாம். சூப்பர். சகோதரரே.. சூப்பர்.. சரியாக சொன்னீங்க.!!!

ஆனால், மோட்டார் போட்டு "குடிக்க மட்டும்" தண்ணீர் எடுப்பவர்கள் ஹராமிகள், அடுத்தவர்களின் ஹக்கை உறிஞ்சுபவர்கள்.. அருமையான கண்டுபிடிப்பு.

** மீண்டும் நினைவு படுத்துகிறேன், மோட்டார் போட்டு தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டும், எடுப்பவர்களுக்கு தான் வக்காலத்து வாங்குகிறேனே தவிர, வரம்பு மீறுபவர்களுக்கு அல்ல.

** என் வீட்டிலோ, என் தாய் வீட்டிலோ குடிநீர் உறிஞ்ச மின் மோட்டார் இல்லை.

-வயதான காலத்தில் என் தாயார் மாங்கு மாங்கு என்று 3 குடம் தண்ணீர் அடித்துவிட்டு, வியர்த்து, விறுவிறுத்து 5 நாளைக்கு படுத்த படுக்கையாக இருப்பதை காண முடியவில்லை. உடம்பு சரியாகும், அடுத்த தண்ணீர் திறந்து விடுவார்கள், மாங்கு மாங்கு என்று அடிப்பார்கள்..அதே தொடர் கதை தான்.

- வீட்டு வேளைக்காரி இருக்கும் போது தண்ணீர் வராது, இருக்கும் போது தண்ணீர் வந்தால், அம்மா நானே என் வீட்டில் மோட்டார் போட்டு தான் குடிநீர் எடுக்கிறேன். இங்கு தண்ணீர் அடிக்க சொல்லுகிறீர்களே... என்கிறார்கள்.

** முன்பு தண்ணீர் பைப்புகளில் மீட்டர் பொருத்தினார்கள், அதை சாகுல் ஹமீது என்ற சகோதரர் ( உறுப்பினர் பதர் ஹக்கின் சகோதரர்) மாதம் மாதம் வந்து குறித்துக்கொண்டு சென்றார். தற்போது மீட்டர்களும் செத்து விட்டன, சகோ. சாகுல் ஹமீது அவர்களும் மரணித்து விட்டார்கள்.

** நான் பல பதிவுகளில் குறிப்பிட்டு விட்டேன். நமக்கு ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் குடிநீர், நம் ஊருக்கு சரியாக வந்து அடைகின்றதா என்று அறிந்தாலே பல கொஸ்டின்-களுக்கு ஆன்சர் கிடைத்து விடும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. வாட்டர் Meter
posted by Jahir Hussain VENA (Bahrain) [29 August 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 21584

We read the news (News ID # 7884) dt 23/01/2012 and understand that Petitioner ( Beloved Jamal Mama’s family) HAS intended to withdraw meter room case…(water flow meter -calculate inflow)

So, we hope there is no obstacles to install the water flow meter at the entry point of Kayal patnam (Jamal mama’s family place). Once the meter is installed we can have the following benefits (actually it is not benefit it is our right)

• We can measure the actual in flow of water against actual pumping and hence there is no ambiguity in the charges paid. (as I came to know that we are paying INR 4.50 /PER 1000 LTR as per pumping)

for the sake of our native place & present situation of water scarcity, this meter is essential .

We request our Chairman , Ward Members & Engg. Please expedite water meter installation work without further delay for our benefit.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam ) [29 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21586

< சகோதரர் ஜியாவுதீன் அவர்களின் கருத்து வக்கீல் வாதம்போன்று சிறப்பாக உள்ளது. > comment 21576

இவரது கருத்தில் வாதம் இல்லை , விவாதம்தான் உள்ளது .

< தாங்களுக்கு போதுமான குடிதண்ணீர் கிடைத்த பின்பு, தண்ணீர் வால்வை மூட மாட்டார்களாம் > 21579

அனேக வீடுகளில் வாழ்வு கிடையாது . தண்ணீர் நேராக தொட்டிக்குள் விழும் . தொட்டி நிரம்பியபின் வீணாக வழிந்து ஓடும் . அடிபம்பு இருக்கும் வீட்டில் இன்னும் மோசம் . அடிபம்பு அடிக்காமலேயே தண்ணீர் வீணாக வழிந்து ஓடும் .

அடுத்து , < மோட்டார் போட்டு தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டும், எடுப்பவர்களுக்கு தான் வக்காலத்து வாங்குகிறேனே தவிர, வரம்பு மீறுபவர்களுக்கு அல்ல. >

தேவைக்கு மட்டும் மோட்டார் வைத்து உறிஞ்சினால் , அது தவறில்லை என்று சொல்லும் நீங்கள் , இன்னும் உங்கள் வீட்டில் மோட்டார் வைக்காதது ஆச்சரியமாக உள்ளது .

என்னதான் மீட்டர் பொருத்தினாலும் , அதற்கும் மேலாக எத்தனுக்கு எத்தன் இருப்பான் . தண்ணீரை திருடியே பழக்கப்பட்டவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல . மன்னிக்கும் இறைவன் இதையும் மன்னிப்பான் என்ற நம்பிக்கை . அடுத்த 27 இல் அழுது தொழுது பாவமன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை .

செய்வது தவறு என்று தனக்குத்தானே வருந்தி , திருந்தினால் ஒழிய இதற்கு பரிகாரமே வராது . என்னதான் ஆபிதா மேடம் சுற்றி சுற்றி வந்தாலும் , அல்லாஹ்வையும் , அவன் அளிக்க இருக்கும் தண்டனையையும் மறந்தவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய பொருட்டே அல்ல .

இத்தோடு இந்த விவாதத்தை முடித்து , புது பஸ்ஸ்டாண்ட் தண்ணீர் தொட்டியை சம்பத்தப்பட்ட வார்டு மெம்பரை கவனிக்க சொல்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Mohideen (Jeddah) [29 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21589

***************குடிநீர் வினியோகிக்கப்படும் நேரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் சில வழிமுறை சிக்கல்கள் இருப்பதால்; இது குறித்த முடிவு தாமதமாகியுள்ளது.**************

இவர்கள் எதுக்கு மின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். தண்ணீர் விடுவது நகராட்சி கையில் தானே இருக்கிறது. மின் துண்டிப்பு எப்போது எற்படுதோ அப்பொழுது தண்ணீர் விட வேண்டியது தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 August 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21590

அன்பு சகோதரர் VMSA அவர்களே,

தாங்கள் கூறியபடி
-------------------------------------------
அனேக வீடுகளில் வாழ்வு கிடையாது . தண்ணீர் நேராக தொட்டிக்குள் விழும் . தொட்டி நிரம்பியபின் வீணாக வழிந்து ஓடும் . அடிபம்பு இருக்கும் வீட்டில் இன்னும் மோசம் . அடிபம்பு அடிக்காமலேயே தண்ணீர் வீணாக வழிந்து ஓடும் .
-----------------------------------------------
இந்த வீணாக வழிந்து ஓடும், வீணாக வழிந்து ஓடும் என்ற விசயம் தான் ஒரு பெரிய விஷம். எத்தனை மக்களுடைய குடிநீர் இப்படி வேஸ்ட் ஆகிறது. நீங்களே இந்த விடுமுறையில் குடிநீருக்காக கஷ்டப்பட்டவர்தானே. இந்த வழிந்து ஓடின நீரில், ஒரு குடம் உங்களுக்கு கிடைத்து இருந்தால் எவ்வளவு திருப்தி பட்டு இருப்பீர்கள். ஒரு வால்வு வைக்க இயலவில்லையா இவர்களுக்கு.. இதுவே அவர்களின் குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தி இருந்தால், இப்படி குடிநீரை வீண் செய்வார்களா..?? சகோதரரே.

** கூடிய விரைவில் எங்கள் வீட்டிற்கும் மின் மோட்டர் வைக்கப்போகின்றேன். வைத்து குடிக்க தேவைக்கு மட்டும் உறிஞ்சப் போகிறேன், வரம்பு மீறாமல்.

விவாதம் தவிர்க்கலாம் என்பதால் சுருக்கமாக முடித்து விடுகிறேன், சமையல் செய்யப்போகனும்..!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பிறந்தது ‘நிகழ்காலம்’!  (28/8/2012) [Views - 4650; Comments - 25]
நகரில் சிறுமழை!  (24/8/2012) [Views - 2929; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved