Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:46:21 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9356
#KOTW9356
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 13, 2012
“மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளி விழா! சிறப்பு மலரை திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3820 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழும் - தமிழகத்திலிருந்து முஸ்லிம்களால் வெளியிடப்படும் ஒரே நாளிதழுமான “மணிச்சுடர்” துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடத்தப்பட்ட வெள்ளி விழாவில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவருமான மு.கருணாநிதி சிறப்பு மலரை வெளியிட்டார். விபரம் பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழ் “மணிச்சுடர்” துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கடந்த 04.10.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில் சென்னை பெரியார் திடல் கேளரங்கில் வெள்ளி விழா நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் - தமிழ்நாடு மாநில தலைவரும் - 'மணிச்சுடர்' நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விழாவிற்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.



அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும் - “மணிச்சுடர்” நிர்வாக இயக்குனருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் - மணிச்சுடர் சேர்மனும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் விழா அறிமுகவுரையாற்றினார்.



இவ்விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “மணிச்சுடர்” சிறப்பு மலரின் முதற்பிரதியை, தமிழக முன்னாள் முதல்வரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி வெளியிட, வடக்கு கோட்டையார் ஹாஜி. வி.எம்.செய்யது அஹமது அதனைப் பெற்றுக் கொண்டார்.



இவ்விழாவில், திமுக பொருளாளரும் - தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில், “மணிச்சுடர்” இயக்குநர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. “மணிச்சுடர்” செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் காயல் மகபூப், மலர் வெளியீட்டுக்கு உதவிய இப்றாஹீம் மக்கீ, விளம்பரதாரர்களான டி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் - ஹாஜி எஸ்.அக்பர்ஷா, கே.ஏ.எஸ்.ஜெய்னுலாபிதீன் அன் கோ - பூட்டு மார்க் லுங்கி நிறுவனத்தார், வாவு ஜுவல்லர்ஸ் சார்பாக ஹாஜி மஸ்னவீ, தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ், நாளிதழ் வினியோகிப்பாளர் - ஆறுமுகநேரியைச் சேர்ந்த வியாகப்பன் ஆகியோரும் அதில் உள்ளடக்கம்.

“மணிச்சுடர்” செய்தி ஆசிரியர் காயல் மகபூப் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. விழாவில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், தோழமை கட்சியைச் சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.



தகவல் & படங்கள்:
கோவை தங்கப்பா
www.mediavoicelive.com


[செய்தி திருத்தப்பட்டது @ 05:11 / 14.10.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...murasoli
posted by Mohmed Younus (muscat) [13 October 2012]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 22772

போட்டோவை பார்க்கும்போது இது முரசொலி பத்திரிகையின் விழாபோல அல்லவா தெரிகின்றது. ஒருவேளை தப்பாக (?) செய்தி பிருசுரமாகிவிட்டதவோ என்னமோ தெரியவில்லை.

எதுவாகினும் இந்த செய்தி காயல்பட்டின செய்திக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

இதுபோல் உணர்வு, மக்கள் உரிமை, நமது எம்.ஜி.ஆர்,தீக்கதிர் போன்ற பத்திரிக்கை சம்பந்தமாக செய்தி வந்தால் வெளி இடப்படுமா?

Administrator: இணையதளத்தில் வெளியிட தகுதியானதாக முடிவுசெய்யப்படும் அனைத்து செய்திகளும் - எந்த அமைப்பு பாரபட்சமுமின்றி - வெளியிடப்படும்.

எமது பார்வையில் இந்த செய்தி தகுதியானதே. இந்த நிகழ்ச்சி மாநிலத்தில் முக்கிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி - அந்த அமைப்பால் வெளிக்கொண்டுவரப்படும் பத்திரிக்கையின் வெள்ளி விழா கொண்டாட்டம். அந்த பத்திரிக்கை இஸ்லாமிய சமுதாயத்தினரால் நடத்தப்படும் - நாளிதழ். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் பங்கேற்றுள்ளார். இந்த பத்திரிகை மற்றும் அமைப்பில் பல காயலர்கள் உயர்மட்ட பொறுப்பில் உள்ளனர்.

இச்செய்தியை வெளியிட இது போல பல காரணங்கள் உள்ளன


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Misunderstood
posted by Riyath (HongKong) [13 October 2012]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 22779

Glad to see the event done well..

I thought Manichudar is a daily newspaper mainly for muslim society. If am correct then my question is Why cant Manichudar management invite muslim leaders to celebrate such a victorious function instead of some non-believers of god escpecially Mr Karuna who was not joined with muslims to support recent protests. I really dont understand why IUML cant stand by their own leg.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கோங்க்றகே டு manichuder
posted by izzadeen (chennai) [13 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22781

congragulation to manichuder, next muslimleague leader is our native people, inshaAllah.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வெள்ளிவிழா
posted by NIZAR AL (kayalpatnam) [13 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22786

வெள்ளிவிழா காணும் சமுதாய நாளிதழ் மனிசுடருக்கு நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள். வரும் இதழ்கள் புதுபொலிவுடன் ,புதிய சிறப்பு அம்சங்களை கொண்டு தொடரும் என நம்புகிறேன்.

மணிச்சுடர் பொறுத்த வரையில் ஒரு நல்ல நாளிதழாக சமுதாய மக்களுக்கு ஏற்ற பொருத்தமான நாளிதழாக இருக்கிறது, மற்ற நாளிதளில்களில் வருகிற சினிமா, ஆபாசம் ,அசிங்கமான தகவல்கள் விட்டும் நீங்கி ஒழுக்கமான சமுதாய விதிக்கு கட்டுப்பட்டு வருவது பெருமைகுரியதும் எல்லா முஸ்லிம் வீடுகளில் அவசியம் வர வேண்டிய ஒன்றாகும். வீடுகளில் பெரியோர்களால் மிகவும் விரும்பும் நாளிதழாக இருக்கிறது. இப்படி பட்ட பத்ரிகை சந்தாதார்களை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன .

அன்றைக்கு உள்ள நாளிதழ் அந்த நாளிலே கிடைப்பதில்லை. இரண்டு நாள் நாளிதழ் ஒரே நேரத்தில் கிடைக்கிறது, சில நேரங்களில் வருவதே இல்லை, இப்படியான குளறுபடிகள் பத்ரிகை வீட்டுக்கு வந்து அடைவதில் ஏற்படுகின்றன. இதனால் என் வீட்டுக்கு இப்போது வரவில்லை, மாவட்ட செய்தியாளர் மற்றும் இந்த விசயத்தில் கவனம் செலுத்துவதோடு எனக்கு பத்ரிகை ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட செய்தியாளர் பொது நல சேவகர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை வேண்டுகிறேன்.

இந்த விழாவில் இளமையாக இருக்கும் மகபூப் காக்கா அவர்களையும் மற்றும் பொதுசெயலாளர் அபூபக்கர் அவர்களுக்கும் சலாமும் வாழ்த்துக்களும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாநில தலைவராக நமது நகரை சார்ந்த சகோதரர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் வர வேண்டும்... வாழ்த்துக்கள்
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [13 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22788

“மணிச்சுடர்” நாளிதழின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளி விழா கண்டு... சிறப்பு மலர் வரை சிகரம் தொட்ட மணிச்சுடரே... நீ அடுத்த தலைமுறையில் தங்க விழா காண வேண்டும்... வாழ்த்துகிறேன்...

தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும் - “மணிச்சுடர்” நிர்வாக இயக்குனருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் நமதூரை சேர்ந்தவர் என்பதனை நினைக்கும் போது மனம் மேலும் சந்தோஷ படுகிறது... வரக்கூடிய காலத்தில் அக்கட்சியின் மாநில தலைவராக நமது நகரை சார்ந்த சகோதரர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் வர வேண்டும்... வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மணிச்சுடர் வாழிய வாழியவே!
posted by kavimagan (qatar) [13 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22791

கருத்து சுதந்திரம் என்ற பெயரிலும், ஊடக உரிமை என்ற பெயரிலும், ஜாதி, மத துவேசத்தை கக்குகின்ற பத்திரிகைகளுக்கு மத்தியில், கண்ணியமாகவும், யார் மனதையும் புண்படுத்தாத நிறை குணத்தோடும் சாத்வீகமான முறையில் நமது சமுதாய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும், ஒப்பற்ற ஊடகமாம் மனிச்சுடருக்கு ,மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தப் பத்திரிக்கை, பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து, இன்றளவும் வெற்றிகரமாக வெளிவருவதற்கு காரணமான அனைத்து சமுதாய பெரியவர்களுக்கும், குறிப்பாக நமதூரைச் சார்ந்த முன்னோர்கள் மற்றும் இதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிவரும் சகோதரர் அபூபக்கர், காயல் மகபூப் காக்கா, சகோதரர் இப்றாஹிம் மக்கி, நண்பர் எஸ்.கே.ஸாலிஹ், ஆறுமுகநேரி சகோதரர் வியாகப்பன் ஆகியோருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். இந்தப் பத்திரிகையின் நிறுவனர் மர்ஹூம் சிராஜுல் மில்லத் சமது சாஹிப் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆ செய்கிறேன்.

மகத்துவம் நிறைந்த மணிச்சுடர் பத்திரிக்கையையின் வெள்ளிவிழா மலரை வெளியிடும் தகுதி கருணாநிதிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும், நெருடலும் மனதில் இருந்தாலும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் மட்டும் அவருக்கு, இந்தத் தகுதி இருப்பதாக எனக்கு நானே தேற்றிக்கொண்டு, மணிச்சுடரை வெளியிடுவதால் கருணாநிதிக்குத்தான் பெருமை என்பதையும் பதிவு செய்து, மணிச்சுடர் என்றென்றும் ஒளிவீச மனமார வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மணிச்சுடரின் தனித்தன்மை
posted by A. Usman (Chennai) [14 October 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 22800

மணிச்சுடர் நாளிதழ் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து வெளிவருவது மிகப் பெரிய சாதனையாகும். இதில் லாட்டரி, சினிமா விளம்பரங்கள் இல்லை. சினிமா அவதூறு அனாகரிகமான செய்திகள் வருவதில்லை. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு இஸ்லாமியர்களின், தனித்தன்மை காத்தல் என்ற இலட்சியத்தோடு தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அல்குர்ஆனின் அமுத மொழிகளையும் அண்ணல் நபிகளின் கண்ணல் மொழிகளையும் சென்னை தொழுகை நேரத்தையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் தினச்சரியை நடத்த முடியாமல் இடை நிறுத்தம் செய்து விட்ட நிலையில் ஆட்சி அதிகாரமோ பொருளாதார வலிமையோ இல்லாத மணிச்சுடர் 25 வருட காலம் வெளிவருவது இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடி பயணித்து வருபவர்களின் சிறப்பையே எடுத்துக் காட்டுகிறது.

மணிச்சுடர் முலம் தீனுள் இஸ்லாத்தின் ஹிதாயத் பெற்றவர்கள் ஏராளம்.

முன்பு மணிச்சுடர் அலுவலகம் இருந்த நுங்கம்பாக்கம் வாலஸ் தோட்டம் இடம் மஸ்ஜிதாக மாற்றப்பட்டிருக்கிறது. அப்பள்ளியின் பிலாலாக பணிப்புரிபவர் மோகன் (எ) அப்துல் சுக்கூர். மணிச்சுடரின் தினமும் வெளிவந்த அல்குர்ஆன் தமிழாக்கத்தையும், நபிமொழியையும் படித்து ஹிதாயத் பெற்றவர். தற்போது மணிச்சுடர் அலுவலகத்தில் பணிபுரியும் ஏ.உஸ்மான் ஆகிய நான் மற்றும் சித்தீக் ஆகியோர் தீனுள் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டவர்கள்.

இப்படியாக அறம் சார்ந்த நெறிமுறைகளையும் உயரிய இலட்சியங்களையும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி நடத்தப்படும் மணிச்சுடர் நாளிதழ் வெள்ளி விழா செய்தியை வரலாற்றுச் சிறப்புக்குரிய காயல்பட்டினத்தின் காயல்பட்டினம்.காம் என்ற இணையதளத்தில் செய்தி வெளியிட்டுயிருப்பதை சகோதரர் யூனுஸ் கேள்வி எழுப்பி இருப்பதும் மற்ற பத்திரிக்கையோடு ஒப்பிட்டு இருப்பதும் எங்களுக்கு ஆச்சரியத்தையும் வேதனையும் அளிக்கின்றது.

இஸ்லாமியர்கள் சமுதாயப் பற்றோடு வாழ்வதுதான் இயற்கையான நியதி. இந்த உணர்வு பெற்றவர்களாக நாம் என்றும் வாழ்வோம்.... மேலும் மணிச்சுடர் நாளிதழின் நிர்வாக இயக்குநர் மற்றும் வெளியீட்டாளராக முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும், செய்தி ஆசிரியராக காயல் மகபூப் அவர்களும் அறக்கட்டளை மேலாளராக எஸ்.ஏ. இபுராஹிம் மக்கீ ஆகியோர்கள் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தாய் சபையின் சுடர் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [16 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22841

செவ்வென துடிப்புடன் நடை போட்டுக்கொண்டிருக்கும் "மணிச்சுடர் " வாழ்வாங்கு நீடூழி வாழ வல்லோனிடம் இறைஞ்சியவனாக. என் சகோதரர் மர்ஹூம் லியாகத் அலி அவர்களுடன் காயிதே மில்லத் அமைப்பில் ஒன்றிணைந்து சேவைபுரிந்த தோழர் மரியாதைக்குரிய அபூபக்கர் அவர்களின் தாய் சபை சேவை மென்மேலும் சிறக்க, எல்லா வகையிலும் சிறப்பாக்கித்தர ரப்புல் இஜ்ஜத்திடம் வேண்டுகிறேன் .

ஜனாப்-அபூபக்கர் காக்கா அவர்களுக்கு தாங்கள் நிறுவாக பொறுப்பில் இருக்கும் மணிச்சுடர் நாளிதழின் சந்தாதாரர் எண்ணிக்கையை நமதூரில் அதிகமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1433)?  (14/10/2012) [Views - 2960; Comments - 1]
இன்று காலையில் இதமழை!  (14/10/2012) [Views - 2262; Comments - 1]
இன்று நள்ளிரவில் இதமழை!  (13/10/2012) [Views - 2523; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved