Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:01:38 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9360
#KOTW9360
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 13, 2012
வடக்கிழக்கு பருவமழையை எதிர்பார்த்து தமிழகம்! ஒரு பார்வை!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5217 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவின் இரண்டு முக்கிய மழை காலங்கள் - தென் மேற்கு பருவமழைக்காலம் மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம் ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென் மேற்கு பருவமழை - இவ்வாண்டு தமிழகத்தில் பொய்த்தது.

வானிலை ஆராய்ச்சி நிலையம் - மழை பொய்த்ததா, இல்லையா என முடிவு செய்ய அளவுகோல் ஒன்றினை கையாளுகிறது. அதன்படி - சராசரியை விட + அல்லது - 19 சதவீதம் மழை பெய்தால் அதனை சாதாரண (Normal) முடிவாக எடுத்துக்கொள்கிறது. - 20 முதல் - 59 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை, குறைப்பாடு (Deficient) என்றும், - 60 முதல் - 99 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை மிகவும் குறைந்த மழை (Scanty) என்றும் - வானிலை நிலையம் முடிவுசெய்கிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 20 இல் இயல்புக்கு குறைவான மழையே (Deficient) - இவ்வாண்டு - தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் - பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட மழையே பெய்யவில்லை (Scanty) (0.4 மி.மி. மழையே பதிவாகி உள்ளது).

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் - வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பின்னணியில் - தமிழக மக்கள், வடகிழக்கு பருவமழையை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அக்டோபர் 20 இல் இருந்து ஏழு நாட்களுக்கு முன்னரோ, பின்னரோ வடகிழக்கு பருவ மழை பொதுவாக துவங்கும் என வல்லுனர்கள் கூறுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்த பருவமழை துவங்கிய தேதியினை காண்போம்:

2001 - அக்டோபர் 16
2002 - அக்டோபர் 25
2003 - அக்டோபர் 19
2004 - அக்டோபர் 18
2005 - அக்டோபர் 12
2006 - அக்டோபர் 19
2007 - அக்டோபர் 22
2008 - அக்டோபர் 15
2009 - அக்டோபர் 29
2010 - அக்டோபர் 29
2011 - அக்டோபர் 24

வடக்கிழக்கு பருவ மழை காலம் - தென் இந்தியாவின் தென் பகுதி பெரும் மழையைப் பெறும் காலம். தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகள் இந்த பருவமழை மூலம் பயனடைகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டு மழையில் 48 சதவீதம் இந்தக் கால கட்டத்தில் பெறப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் ஆண்டு மழையில் 60 சதவீதமும், உள் மாவட்டங்கள் ஆண்டு மழையில் 40 முதல் 50 சதவீதம் வரையும் பெறுகின்றன.

உள் கர்நாடகம், கேரளா மற்றும் லச்சதீவுகள் தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரும் மழையைப் பெற்றாலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆண்டு மழையில் 20 சதவீதம் மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவ மழை முடியும் தருவாயில் உள் மாவட்டங்களே கடலோர மாவட்டங்களை காட்டிலும் அதிக மழையைப் பெறும். இது பொதுவாக மாலை இரவு நேரங்களில் நிகழும். நாட்கள் செல்லச் செல்ல, கடலோர பகுதிகளில் மழை நிகழ்வு அதிகமாகி உள் மாவட்டங்களில் குறையும். தமிழக ஆந்திர கடற்கரைப் பகுதிகளில், அக்டோபர் மத்தியில் மழை அதிகமாவதையே வடகிழக்குப் பருவ மழைத் தொடக்க காலமாகக் கொள்ளப்படும்.

பொதுவாக இந்த மழை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிகழும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நிகழும். பொதுவாக பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில் நாள் முழுவதும் தொடர் மழை நீடிக்கும்.

வடகிழக்குப் பருவமழை என்பது தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் நிகழ்வுகள் என்பது 20 சதவீதத்திற்கும் குறைவாக நடக்கும் நிகழ்வுகள் ஆகும். வறண்ட வானிலையோ / குறைந்த அல்லது மழையோ இல்லாத நீண்ட தொடர் நாட்கள் என்பது சாதரணமாக இந்தக் காலக் கட்டங்களில் நடக்கும் நிகழ்வுதான்.

2004 ஆம் ஆண்டு முதல் இயல்புக்கு அதிகமாகவே வடக்கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்துள்ளது. ஆண்டுவாரியாக - இயல்பை விட எத்தனை சதவீதம் - அதிகமாக மழை, கடந்த ஆண்டுகளில் பெய்தது என்பதை காண்போம்:

2004 - +1%
2005 - +79%
2006 - +15%
2007 - +21%
2008 - +31%
2009 - +13%
2010 - +42%
2011 - +23%

புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டுவரும் ஏறத்தாழ கடந்த 100 ஆண்டுகளில், இயல்புக்கு அதிகமாக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக (தொடர்ந்து 8 ஆண்டுகள்) மழை பெய்துள்ள காலகட்டத்தில் நாம் இருப்பதாக துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் - இவ்வாண்டும் இயல்பான மழையே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மூலம்:
மண்டல வானிலை மையம், சென்னை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [14 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22805

புள்ளி விவரங்களை இவ்வளவு நேர்த்தியாக கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒன்று. மனிதனின் பேராசை அவனது அறிவை மழுங்கடித்து அதன் காரணமாக இறைவனின் அருள்மிக்க இயற்கையின் கொடைகளையும் அவன் தடுத்துவிட்டான்.

ஒரு பக்கம் ஜனத்தொகை பெருக்கம். அதனால் குடியிருப்புகளின் தேவை. எனவே மரங்களையும் காடுகளையும், வயல்வெளிகளையும், ஆற்றுப்படுகைகளையும் அழித்து, இன்னும் எங்கெங்கெல்லாம் இண்டு இடுக்குகள் உண்டோ அத்தனையும் ஆக்கிரமித்து, கண்மூடித்தனமாக பிளாட் போட்டு விற்கும், ரியல் எஸ்டேட் அரக்கத்தனம், இத்தனையையும் செய்துகொண்டு பருவ மழையும் வராதா என்று ஏங்குவதை மடமை என்றுதானே சொல்ல வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...malai
posted by NIZAR AL (kayalpatnam) [14 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22812

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை ஆரம்பிப்பதுதான் கொஞ்ச தாமதமாகும்,மழை துவங்கியபிறகு போதுமே என்று சொல்லும் கூடுதலாக பெய்வது சில ஆண்டுகளாக வழமையாக உள்ளது.இன்ஷாஅல்லாஹ் இவ்வருடமும் இறைவன் நல்ல மழையை தர இறைஞ்சுவோம்.

YOURS,
NIZAR AL
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.ஸலாத்துஷ் ஷுக்று .தொழுவோம்..
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [20 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22928

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்து லில்லாஹ், இவ்வளவு நாளாக அழுது தொழுது மழை தா., மழை தா என்று அனுதினமும் ”அல்லாஅஹும்ம அஸ்கினல் கைத வர் றஹ்மத்த வலா தஜல்னா மினல் கானித்தீன் என அல்லாஹ் இடம் துஆ கேட்டோம். இன்று இதுவரைக்கும் போதும் என்றும் சொல்கிறோம். இனியும் தருவான். அவனுக்குத் தெரியும் நம் தேவையைப் பற்றி. எனினும் அல்லாஹ் தந்த இந்த றஹ்மத்தான மழையாகப் பெய்தமைக்கு நன்றி கூறி இரண்டு றக்கா அத் ஸலாத்து ஷுக்ரும் தொழுது நன்றிக்கடன் இறுத்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. கட்டாயம் செய்யவும் வேண்டும். இதுவரை தொழுது இருந்தால் அன்னவர்களுக்கும் எங்கள் நன்றி, இல்லாவிடில் இதனைப் பார்த்த மூமீன்களுக்கும் இது ஒரு ஞாபக்க் குறிப்பேயன்றி வேறில்லை..

ல இன்ஷக்கர்த்தும் அஸீதன்னகும் வல இன்கஃபர்த்தும் இன்ன அதாபகும் லஷதீத்- எனும் குற் ஆன் வசனமும் நினைவில் கொள்ளவும் வேண்டும். அல்லாவிடில் ? .......
அல்லாவிடில்? என்றால் என்ன?
அல்லாஹும்ம ஹவா லைனா................. வலா அலைனா - அல்ல் ஆகாமி.......வழ்ழிராப்பி வ........ மனாபதிஷ் ஷஜர் எனும் துஆ வும் ஓத வேண்டியதும் வரலாம். அல்லாஹ் காப்பாத்துவானாக. வல்லாஹு அஃலம். வஸ்ஸலாம்.

கீழ் வரும் மன்கானியின் குறிப்பை நினைவூட்டுகிறோம் ;-

ஆண்டின் துவக்கத்தில் பெய்கின்ற மழையில் அல்லது வெள்ளத்தில் குளித்து வழூவும் செய்து மழை பெய்யும் போது

== அல்லாஹும்ம ஸ்ய்யிபன் ஹ்னீ அன் வ ஸைபன் நாஃபி அன்” யா அல்லாஹ் மகிழ்ச்சிகரமான மழையை ,பலன் தரும் மழையை பொழியச்செய்வாயாக!”

என்று ஓதியபின் மழை பெய்து நின்ற உடன் பின் வரும் துஆ வை ஓத வேண்டும். “முத்திற்னா பி ஃபழ்லில்லாஹி வ றஹ்ம்த்திஹீ” பொருள்{ அல்லாஹ்வின் கருனையாலும் அவனது அருளாலும் நாங்கள் மழை கொடுக்கப்பட்டோம் என்ற பொருள்பட ஓதி நன்றி பாராட்டவும்.

நூல் மஙானி பக்கம் 237 .
தகவல் தைக்கா றஹ்ம்த்துல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1433)?  (14/10/2012) [Views - 3010; Comments - 1]
இன்று காலையில் இதமழை!  (14/10/2012) [Views - 2308; Comments - 1]
இன்று நள்ளிரவில் இதமழை!  (13/10/2012) [Views - 2564; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved