Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:55:58 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9366
#KOTW9366
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 14, 2012
“முதியோர் சமூக நலத்திட்டம்”! சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிமுகம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நிராதரவான முதியோருக்கு உதவும் நோக்குடன், “முதியோர் சமூக நலத்திட்டம் - Old Age People Social Welfare Scheme” என்ற பெயரில் புதிய திட்டத்தை சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நிகழ்முறை:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 12.10.2012 வெள்ளிக்கிழமையன்று 20.10 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

தலைமையுரை:
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த - மன்றத்தின் மூத்த உறுப்பினர் வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி - கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் ஸதக், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அறிமுகவுரை:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அறிமுகவுரையாற்றினார். மன்றக் கூட்டங்களில் காலந்தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசிய அவர், கூட்டங்களில் தாம் பங்கேற்கும் தகவலை கூட்ட நாளன்று மன்றச் செயலாளருக்கு எஸ்.எம்.எஸ் - குறுஞ்செய்தி மூலம் அவசியம் தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். அத்துடன், நடப்பு செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் அதிகளவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“முதியோர் சமூக நலத்திட்டம்” அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து, “Old Age People Social Welfare Scheme” - “முதியோர் சமூக நலத்திட்டம்” என்ற பெயரில் புதிய திட்டம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தாயகம் காயல்பட்டினத்தில், வயது முதிர்ந்த நிலையில் - உழைக்க இயலாமலும் - ஆதரவற்ற நிலையிலும் உள்ள முதியோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் அதை செயல்படுத்துவது குறித்து ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திலீடுபட்டனர். இதுகுறித்து மன்றத்தின் அடுத்து வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட இத்திட்டம் குறித்த உறுப்பினர்களின் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தை வரவேற்றுப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தேவையுடையோருக்கு உதவ வேண்டும் என்ற மன்ற அங்கத்தினரின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், இத்திட்டத்திற்கும் - இதுபோன்ற அனைத்து திட்டங்களுக்கும் உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பு என்பது அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையிலானது மட்டுமே என்றும், நிதி தந்துதான் ஆக வேண்டும் என எந்த நிர்பந்தமும் யாருக்கும் கிடையாது என்றும் தெளிவுற கூறினார்.

கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
பின்னர், நடப்பு கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் சிற்றுரையாற்றினார். மன்றத்தின் அனைத்து செயற்பாடுகளையும் புகழ்ந்து பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டத்தை மனதார வரவேற்றுள்ள மன்ற அங்கத்தினர் அனைவரையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மன்ற உறுப்பினர்கள் அனைவரின் நல்ல பல ஆலோசனைகளைப் பெற்று, இம்மன்றம் நகர்நலன் கருதி இன்னும் பற்பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.

செயலரின் - கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து - அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். மன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் அனைத்துறுப்பினர்களும் ஆர்வத்துடன் பணியாற்றுமாறு வலியுறுத்திய அவர், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு மெருகேற்றும் வகையில் புதிய உறுப்பினர்களும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மன்றத்தின் நகர்நல திட்டங்களுள் ஒன்றான - பயன்படுத்தப்பட்ட நல்லாடை உதவித் திட்டத்தின் கீழ், மன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்ட நல்லுடைகளை, தாயகம் காயல்பட்டினத்தில் - மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் மற்றும் பொதுநல ஊழியர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து வினியோகித்த விபரங்கள் குறித்து மன்றச் செயலாளர் கூட்டத்தில் தெரிவித்ததுடன், இத்திட்டத்தை நன்முறையில் செயல்படுத்தியமைக்காக அவ்விருவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொருளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் தாக்கல் செய்தார். நடப்பு பருவத்திற்கான நிதிநிலையறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு - மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துறுப்பினர்களின் நல்லாதரவுடன் நிதிநிலையறிக்கையையும் தாண்டி நகர்நலப் பணிகளாற்றிட வேண்டும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் “தேவையுடையோருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்ட”த்தின் கீழ், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதுவரை பெறப்பட்டுள்ள பட்டியல் படி 55 பயனாளிகளுக்கு, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உண்டியல் திறப்பு:
மன்றத்தின் - “உண்டியல் நிதி சேகரிப்பு” திட்டத்தின் கீழ், உறுப்பினர்களின் அனைத்து உண்டியல்களும், வரும் டிசம்பர் மாதம் முறைப்படி திறக்கப்படும் என்றும், அதற்குள் மன்ற உறுப்பினர்கள் தங்களாலியன்றளவுக்கு உண்டியலை நிரப்பி வைக்குமாறும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பழைப்பாளர்களுக்கு மன்றம் குறித்து விளக்கம்:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டோர் கூட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தனர். அவர்களுக்கு மன்றத்தின் நகர்நலப் பணிகள் மற்றும் செயல் திட்டங்களை செயற்குழு உறுப்பினர்கள் விளக்கினர்.



சிறப்பழைப்பாளர்கள் உரை:
அதனைத் தொடர்ந்து, உரையாற்றிய சிறப்பழைப்பாளர் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் ஸதக், மன்றத்தின் இவ்வுயரிய பணிகளுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டிடும் பொருட்டு பயனுள்ள சொத்து ஒன்றை வாங்க முயற்சிக்கலாம் என்றும், அதற்காக சிறப்பு நிதியை உருவாக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

நகர்நலப் பணிகளில் மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, கூட்டங்களில் திரளாக பங்கேற்பு, வயதில் சிறிய உறுப்பினர்கள் கூட ஆரோக்கியமாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் விதம் ஆகியன குறித்து அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நிறைவில், தன் மகனது திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பிதழுடன் அழைப்பு விடுத்தார்.

அடுத்து பேசிய சிறப்பழைப்பாளர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் விரைவாக உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்ததுடன், இதற்காக சென்னை மக்கா மஸ்ஜிதில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில், பயிற்சியில் கலந்துகொள்வோருக்கு அதன் ஏற்பாட்டாளர்களால் உணவு - தங்குமிடம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல தகவல்களையும் தெரிவித்து, இதுகுறித்து சமுதாயத்திலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

புதிய இலச்சினை:
மன்றத்திற்கான இலச்சினையை தயாரிக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரால் தயாரிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் இலச்சினையை விரைவாக - சிங்கப்பூர் சங்கங்கள் பதிவாளருக்கு (Registrar of Societies - ROS) அரசு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பயனாளிகள் விபரங்களைப் பதிவு செய்ய மென்பொருள்:
மன்றத்தால் நிதியுதவியளிக்கப்படும் பயனாளிகள் குறித்த விபரங்களைப் பதிவு செய்து பாதுகாப்பதற்காக சிறப்பு மென்பொருள் ஒன்றை தயாரித்தளிக்குமாறு மன்ற செயற்குழுவால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மன்ற செயற்குழுவின் நடப்பு துணைக்குழு உறுப்பினர் எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் ஏற்றுக்கொண்டு, விரைவில் செய்து தருவதாகத் தெரிவித்தார்.

ஹஜ் பயணம் செய்யவுள்ள உறுப்பினருக்கு வாழ்த்து:
நடப்பாண்டில் தன் குடும்பத்துடன் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மன்ற உறுப்பினர் எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பைக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களனைவரின் ஹஜ் கிரியைகள் அனைத்தும் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமைந்திட கூட்டத்தில் பிரார்த்திக்கப்பட்டது.

உறுப்பினரின் திருமண அழைப்பு:
அடுத்து, வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மணவிழா காணவுள்ள மன்ற உறுப்பினர் ஜக்கரிய்யா - தனது திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு அனைத்துறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.



புது மணவாழ்வு காணவுள்ள அவர் சிறந்த திருமண வாழ்வைப் பெற்றிட வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறி, கூட்டத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உறுப்பினர் செய்யித் லெப்பை நியமிக்கப்பட்டார்.

கூட்டம் நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ துஆ - பிரார்த்தனையைத் தொடர்ந்து, 21.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணைக்குழுவினர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இடியாப்ப பிரியாணி இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.






இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22807

மிக அருமையான செயல்திட்டங்கள்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்....ஒருத்தருக்கா கொடுத்தான்...... இல்லை....ஊருக்குக்காக கொடுத்தான்....இந்த பாடல் வரிகள் சிங்கை காயல் நல மன்றத்துக்கு மிக பொருத்தமாக அமைகிறது.

எப்போதும் யாருக்காவது ஏதாவது வகையில் உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை ஊற்றேடுதுக்கொண்டே இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

அநாதை நிலையங்களை ஆதரிக்கும் இஸ்லாம் முதியோர் இல்லங்களை எதிர்கிறது. முதியோர்களுக்கு அவர்கள் மக்கள் உதவி செய்வதை கட்டயக்கடமையாக ஆக்கியிருக்கிறது இஸ்லாம். அப்படியும் உதவி செய்ய மக்கள் இல்லாதபோது அவர்கள் அநாதரவாக விடப்பட்டு தெருவிலே கை ஏந்தி திரியும் காட்சியை காண முடிகிறது. அட இவரா...ஒரு காலத்தில் ஓகோ வேண்டு வாழ்ந்தாரே, இப்போது இப்படி கை ஏந்தி நிற்கிறாரே என்று நேம் கண்கலங்கி, நமக்கு அல்லாஹ் செய்துள்ள பரோபகாரத்தை ஒரு கணம் எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி அவருக்கு அந்த நேரத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்துவிட்டு போய்விடுகிறோம்.

ஆனால் அவர் தொடர்ந்து பத்து பேரிடம் கை ஏந்தினால்தான் அவருடைய அன்றைய ஜீவனம் கழிகிறது. இதை நன்கு உணர்ந்தவர்கள் இந்த முதியோர் நல்வாழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்கள் நல்ல எண்ணங்களை கபூல் செய்வானாக.

அந்த முதியோர்கள் கை ஏந்தி கேட்கும் துஆக்கள் உங்கள் எல்லோரது வாழ்வையும் செழிப்பாக்கி வைக்கும்.உங்கள் கால் பட்ட இடமெல்லாம் பொன்னாக கை பட்ட பொருளெல்லாம் மலராகனும். ஏழைகள் கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்த கண்ணீர் என்றாகணும்.. வாழ்த்துக்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [14 October 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 22809

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் ஊர் மக்களால் மிகவும் சிறப்புடன் நடத்தி வரும் ..... சிங்கை கா.ந.மன்றதின் இந்த '''' முதியோர் சமூக நலத்திட்டம் ''''அற்புதமானதும் + தற்போர்தைய நம் ஊருக்கு தேவையான ஒரு பாராட்டுக்குரிய அருமையான திட்டம். நிச்சயமாகவே இந்த அற்புதமான இத் திட்டதின் மூலம் நிறையாகவே நம் ஊர் முதியோர்கள் நன்கு பயன் பெறுவார்கள்.

எப்படி தான். சிங்கை கா.ந.மன்ற.ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் காக்கா அவர்களுக்கு நல்ல திட்டங்கள் எல்லாம் மனதில் தோன்றி..... மாஷா அல்லாஹ் நல்ல முறையில் செயல் ஆற்ற முடிகிறதோ ....நம் கண்ணே பற்று விடும் போல் தெரிகிறது .வல்ல நாயன் ஹாஜி பாளையம். ஹசன் காக்கா அவர்களின் ஆயுளை நீடித்து வாழ சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன்.

உரையாற்றிய சிறப்பழைப்பாளர் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் ஸதக் அவர்களின் கருத்து அருமையானது. """ மன்றத்தின் பணிகளுக்கு நிரந்தரமான பயனுள்ள சொத்து ஒன்றை வாங்க முயற்சிக்கலாம் என்கிற யோசனை நியாயமானதுதான். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22810

சிங்கை மக்கள் ஒரு மார்க்கமா-தான்யா இருக்காங்க..!

உண்மையில் புதுமையை புகுத்துபவர்கள் இந்த சிங்கை கா.ந.மன்ற சகோதரர்கள் தான்.( சாளை சலீம் காக்கா மன்னிக்கனும்).

* ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம்

* ஏழைகளுக்கு நல்ல பயன்படுத்திய துணிகளை வழங்கும் பணி,

* ஹாபிழ் மாணவர்களுக்கு உதவி திட்டம்.

* தற்போது முதியோர் சமூக நலத்திட்டம்..

ஆக, பல திட்டங்களுக்கு இவர்கள் முன்னோடியாக திகழ்கின்றார்கள். மனம் நிறைந்த நட்சத்திர பாராட்டுக்கள்.

* சகோதரர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் அவர்களின் தகவல் மிகவும் பயன் உள்ளது. மக்கா பள்ளியில் இதுமாதிரியான உதவி செய்யும் செய்தி பலருக்கு புதியது.

* சகோ. ஜக்கரிய்யா அவர்கள் தன்னுடைய திருமணத்தை அறிவிக்கும்போது அவருடைய முகத்தில் எவ்வளவு பூரிப்பு, அதற்கும் அதிகமாக மற்றவர்களின் முகத்தில்.. அம்புட்டு பிரகாசம்..!! இந்த பிரகாசம் சந்தோசமா அல்லது வசமா மாட்டிக்கிட்டாயா என்ற கிண்டலா..!! வாழ்த்துக்கள் சகோ. ஜக்கரிய்யா.

" விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா " - இது என்ன புது வகை தமிழாக இருக்கின்றது.

ஆக, மன நிறைவான கூட்டம். வல்ல ரஹ்மான் உங்களுக்கு அனைத்து விசயத்திலும் அபிவிருத்தியை தந்து, அட்டகாசமான வாழ்வை தருவானாக.

சரி, இடியாப்ப பிரியாணி மஞ்சளா அல்லது ஒய்ட்டா..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by muhammad khalji (bombay) [14 October 2012]
IP: 120.*.*.* India | Comment Reference Number: 22811

நல்ல முயற்சி இதுபோன்ற நற்செயல்களை செய்பவர்களுக்கும் தூண்டுபவர்களுக்கும் அல்லாஹுடைய உதவி கிடைதுகொண்டேயிருக்கும் என்று நபிகள் சள்ளள்ளஹு அளஹி வசல்லம் கூறியுள்ளார்கள்

முஹம்மது கல்ஜி
மும்பை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மாசா அல்லாஹ்.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [14 October 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22814

அஸ்ஸலாமு அலைக்கும். சமீபத்தில் துவங்கப்பட்ட "ஹாபிழ்கள் மனப்பாட மீட்டுதல் " வகுப்புக்களை தொடர்ந்து "முதியோர் சமூக நலத்திட்டம் " புதிய அறிமுகம் இக்காலத்தில் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.

தனது சொந்தப்பிள்ளைகளாலேயே கைவிடப்படும் பெற்றோர்களின் நிலைமைகள் பரிதாபமானவை.

பெற்றோர்களை பிள்ளைகள் மதிக்க மாற்றார்கள்,நண்பர்களை முன்னிலைப்படுத்தி ,பெற்றோர்களை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் என்பதேல்லாம் இறுதிநாளின் அடையாளங்கள் என்பது ஹதீஸின் கருத்துக்களாகும்.

தனக்கு அடுத்து நன்றி செய்ய கடமைப் பட்டவர்கள் தனது பெற்றோர்களே என்பது அல்லாஹ்வின் அறிவுரையாகும். எனவே ! பெறோர்களை பேணும் பிள்ளைகளாக நமது சமுதாய மக்கள் சீர்திருத்தம் பெற வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1433)?  (14/10/2012) [Views - 2960; Comments - 1]
இன்று காலையில் இதமழை!  (14/10/2012) [Views - 2261; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved