Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:38:21 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9625
#KOTW9625
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 14, 2012
நவ. 19 முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! தவறினால் குற்றவியல் நடவடிக்கை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3946 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இம்மாதம் 19ஆம் தேதி முதல் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயமாக அணிந்திருக்க வேண்டுமென்றும், தவறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இன்படி, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் அமலில் இருந்து வருகிறது.

இருப்பினும், ஒருசிலர் மட்டுமே ஹெல்மெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் - இரு சக்கர வாகன விபத்துகளில் பலர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் 19.11.2012 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால், காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, 19.11.2012 முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் ஹெல்மெட் அணிந்து தங்கள் விலைமதிக்கவியலாத உயிரைப் பாதுகாத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [14 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23852

நல்ல செய்தி . ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் . அதே சமயம் மிகவும் கனமான , வெளி சப்தம் காதுக்கு கேட்காத அளவுள்ள இறுக்கமான ஹெல்மெட் அணிவதும் ஆபத்துதான் . எந்த மாதிரியான ஹெல்மெட் அணியலாம் என்பதை வரைமுறை படுத்த வேண்டும் .

இங்கு , வியட்நாமில் ஹெல்மெட் அணிவது , வண்டி ஓட்டுபவர் , பின்னால் இருப்பவர் இருவருக்குமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது . ஹெல்மெட் அணியாமல் அதிகாரிகளிடம் மாட்டினால் , " தண்டத்தொகை " நிச்சயம் . அதுபோல " under age driving " இதற்கும் கடுமையான சட்டங்கள் . மாட்டினால் அபராதம் . நமதூரில் பள்ளி சிறுவர்கள்கூட பைக் ஓட்டுவதை காண முடிகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வரும் முன் காப்பது அறிவு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [15 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23856

நம்ம நல்லதுக்குத் தானே சொல்லுறாங்க கண்டிப்பா நாமும் ஒத்துழைக்கணும்! மனித உயிர் விலை மதிப்பற்றது. அது படைத்தவனின் மாபெரும் அருட்கொடை அதைநாம் அசிரத்தையாலும், அலட்சியத்தாலும் இழக்கக்கூடாது.

இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது அநேகமாக தலையில்தான் அடிபடக்கூடும்.

அன்பு பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு ஓர் ஆர்வத்தில் நீங்கள் பைக் வாங்கித் தருகின்றீர்கள் தவறில்லை! அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள்தானா உங்கள் பிள்ளைகள்? என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

எத்தனையோ சிறுவர்கள் பைக்கில் சீறிப்பாய்வதை நான் கண் கூடாகக் கண்டிருக்கின்றேன். காவல்துறையினர் இவ்விஷயத்தில் தயவு தாட்ச்சண்யம் காட்டக்கூடாது.

எல்லாம் வல்ல இறைவன் நம்மையும் நம் மக்களையும் கோர விபத்துக்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக....ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நடைபயணம் செல்வோரும் இனி தலை கவசம் அணியவேண்டும் என்று சட்டம் விரைவில் வரலாம்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [15 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23859

இன்றைய சிறுவர்கள் மத்தியில் பைக்கும் - கைபேசியும் இணையாத பொழுதுபோக்கு எதுவும் அல்ல என்றாகிவிட்டது.. நகரில் பைக்கு விபத்து சகஜமாகி விட்டது... கைபேசியை தோலில் ஒருபுறம் வைத்து கழுத்தை சாய்த்து எதிரே நடைபயணம் செய்யும் அப்பாவிகளும் இவர்களின் கவனகுறைவால் பாதிக்கப்படுவது வேதனை...

நகரில் பைக்கு விபத்தால் தலை, கை, கால் முறிந்த நபர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்... பைக்கு ஓட்டும் பொறுப்பற்ற நபர்களால் நடைபயணம் செல்வோரும் இனி தலை கவசம் அணியவேண்டும் என்று சட்டம் விரைவில் வரலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. LICENSE இல்லாம ஓட்டுறாங்களே?
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 November 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23861

சகோ. விளக்கு அவர்களே, நீங்க "Under Aged Driving" பற்றி சொல்றீங்க, ஆனா நிறைய "AGED PEOPLE" கூட LICENSE இல்லாம ஓட்டுறாங்களே?

LICENSE இல்லாதவங்க கிட்ட வண்டிய புடுங்குனாலே ஊருல பாதி வண்டி கொறஞ்சிடும்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 November 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23863

வழமையாக இது மாதிரியான அறிவிப்புகள் காவல்துறை மூலம் தான் வரும். இந்த முறை நம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இருந்து வந்துள்ளது. ஆகவே சட்டம் கடுமையாக இருக்கும் என்று நம்பலாம்.

சட்டம் கடுமையாக, தன் கடமையை செய்தால் பலன் கிடைப்பது உறுதி.

மக்கள் நலனில் அதிக அக்கறைகொண்டு பணி ஆற்றிவரும் நம் மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆகனும்.

* தலைகவசத்துடன், சகோதரர்கள் கூறுவது போல லைசென்ஸ் உள்ளாதா என்பதையும் பாருங்க, கூடவே ஆட்டோ ஓட்டுபவர்களையும் கவனியுங்க. (இவனுங்க பண்ணுகின்ற அட்டூழியங்களை எழுத ஒரு கட்டுரை தேவை)

** ஒருவர் ஸ்கூட்டரில் தலைகவசம் இல்லாமல் சென்றுள்ளார்,

காவல்துறை மறித்து விசாரித்து, பைன் எழுத்த முயன்றதும்..

அவரோ.. இரண்டு சக்கர வாகனங்களுக்கு தான் ஹெல்மெட் அவசியம், என் ஸ்கூட்டரில் ஸ்டெப்னி-யையும் சேர்த்து மூன்று சக்கரம் உள்ளது.. ரூல்ஸை சரியாக பாலோ பண்ணுங்க சார். ( செவிட்டில் அரை விழுந்திருக்கும்லே..!!)

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [15 November 2012]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 23864

Aged People , வண்டி ஓட்டத்தெரிந்து , ஒருவேளை அந்த வண்டியால் விபத்து ஏற்பட்டால் , ஓட்டியவர் மீது 100 % தவறு இல்லை என்றபோதும் , சட்டம் licence இல்லாத அந்த ஒட்டுனரைத்தான் தண்டிக்கும் . அது அவன் தலைஎழுத்து .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஹெல்மெட் வேண்டும் ! மாமூல் வேண்டாம் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [15 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23865

ஜனாதிபதியே வட்டா இல்லாமல் வேலை செய்ய மாட்டான் என எனது மச்சான் மர்ஹூம் எஸ்.கே.சாகுல் ஹமீத் அவர்கள் சொல்லிய ஜோக் இன்று நினைவுக்கு வருகிறது.

நமது நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதனை அமுல் செய்வதில்தான் சங்கடங்கள் உள்ளது. இருசக்கர வாகனங்கள் ஓட்டுனர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம். நமது நலனுக்கு நல்லது.

மாவட்ட கலக்டரின் அறிவிப்பை அனைவரும் பேண வேண்டும். அதே நேரத்தில் டிராபிக் ,மற்றும் காவல்துறை அதிகாரிகள் சட்டங்களை சரியாக கையாளவேண்டும். வட்டாவை வாங்கி விட்டு வண்டியை விட்டுவிடக்கூடாது !

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பைக் வாங்கி கொடுக்கும் விசயத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்தவேண்டும்.

ஆக ! சட்டம் தன் கடமையை செய்தால் எல்லா மக்களும் ஒத்துழைத்தால் நாடும் ,நாடும் முன்னேறிவிடுவதை கண்கூடாக காணலாம் ! (வஸ்ஸலாம் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...SPOT FINE
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23877

ஆட்சி தலைவர் அவர்களின் உத்தரவு பாராட்டுக்குரியது. கடந்த கலைஞர் ஆட்சியில் உச்ச நீதிமன்றமே இந்த உத்தரவை பிறபித்திருந்தது. ஆனால் ஓரிருநாட்கள் காவல் துறையினர் சிலரை கண்டித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். அதன் பீறகு முதல் அமைச்சர் அவர்களே அந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் சில சினிமா வசனங்கள் பேசி அதை தளர்த்தி விட்டார்கள். அதே போல் இந்த ஆட்சியிலும் நடந்து விடக்கூடாது. நல்லது செய்யும் ஆட்சியாளர்களை திடீர் திடீரென்று இட மாற்றம் செய்துவிடுகிறார்கள். எல்லா இடத்திலும் அரசியல் சித்து விளையாட்டு நடப்பதால் ஒரு நல்ல காரியமும் நிரந்தரமாக நடப்பதில்லை.

ஹெல்மெட் போடாதவர்களை அந்தந்த இடத்திலேயே SPOT FINE தெண்டம் கட்ட சொல்லி உடனே பணத்தையும் வசூலித்து விடவேண்டும். மூன்று முறை தொடர்ந்து இது மாதிரி அத்து மீறினால் LICENCE CANCEL பண்ண வேண்டும். இப்படிதான் வெளி நாடுகளில் நடக்கிறது. மற்றப்படி வழக்கு போடுவதும் கோர்ட்டுக்கு போவதும் என்று வந்தால் இந்த திட்டம் படு தோல்வி அடைந்து விடும் என்பதை மரியாதைக்குரிய ஆட்சி தலைவர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். நன்றி வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [16 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23888

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல அருமையான சட்டம் ...இந்த சட்டம் நமக்கு தானே. என்று வாகனம் ஓட்ட கூடியவர்கள் ( நாம் ) முதலின் என்ன வேணும் ...நம் உயிர் மீது நமக்கு பயம் வரணும் அது தான் முதல் படி ......

இந்த சட்டத்தை முதலில் அறிவித்து விட்டு ..அப்படியே அம்போ என்று விட்டு விடுவார்கள் .....அது போல் இந்த தடவையும் நடக்காமல் நம் மாவட்ட அதிகாரி அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேணும் ... + நம் காவல் துறையும் பாரபட்சம் இன்றி செயல் பட்டு ...ஹெல்மெட் அணிந்து வராதவர்கள் மேல் தக்க நடவடிக்கை கட்டாயம் எடுக்கவேணும் ......

மேலும் நம் மாவட்ட அதிகாரி அவர்கள் ...பைக்கு / ஆட்டோ & ஹெவி வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாகவே வாகனம் ஓட்டும் போது ...... செல் போனை யுஸ் பண்ணவே கூடாது ...என்று ஒரு கடினமான சட்டம் கொண்டது வர வேணும் ..... அப்பத்தான் இவர்களிடம் இருந்து பொது மக்களை காப்பாட்ட முடியும் ......

>>> இந்த மாதிரி ஒரு கடினமான சட்டத்தை நாம் எதிர் பார்த்து உள்ளோம் / வந்தால் வர வேற்க்கவேனும் .....

நம் ஊரில் நாம் கண் கூடாகவே இந்த பைக்கு / ஆட்டோ ஓட்டுபவர்களின் அட்டகாசத்தை பார்க்கிறோம் .....சின்ன ..சிறுவர்கள் ...லைசன்சு இல்லாமல் ....காதில் செல் போனை வைத்து கொண்டு எவ்வளவு வேகமாகவே போகிறார்கள் .....நமக்கே பயமாக இருக்கிறது ...அப்படி இருக்க சிறு பிள்ளைகள் / வயதானவர்கள் / பெண்மணிகள் நிலைமை எப்படி இருக்கும் ???

வல்ல நாயன் தான் நம்மையும் ...நம்மை சேர்ந்தோரையும் காபாட்ட வேணும் .........

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [16 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23894

ஓட்டுனர் உரிமம் பெற தேர்வுக்கு கூட அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் தற்சமையம் நடைமுறையில் இருக்கிறது. ஹெல்மட் இல்லாமல் தேர்வுக்கு போகிறவர்களுக்கு உரிமம் கொடுக்க தேர்வு ஒட்டிகாட்ட அனுமதி மறுக்கிறார் RDO


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...cellphone
posted by masood (calicut) [18 November 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 23918

நமது ஊரில் அதிகம் பேரும் செல்போனில் பேசிகொண்டே வண்டி ஓட்டும் நிலைமை அதிகமாக உள்ளது. நான் ஊரில் இருந்த நேரம் பலரையும் நிறுத்தி, வண்டியை நிறுத்தி பேசிவிட்டு செல்லுமாறு வேண்டினேன். இதில் அதிக பேர் என்னை முறைத்து கொண்டுதான் போனார்கள்.

போலிசார் அடிக்கடி சோதனை நடத்தினால் மட்டுமே இது போலுள்ள செயல்களை குறைக்க முடியும். காக்கும் கரங்கள் அமைப்பை போன்றவர்கள் போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்து அடிக்கடி சோதனை நடத்த ஏற்பாடு செய்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தலைக்கு மேலே தாய்நாடு! (?!)  (12/11/2012) [Views - 4210; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved