Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:30:13 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9699
#KOTW9699
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 28, 2012
DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து தெருத்தெருவாக KEPA குழு பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2913 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நாளை), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளக் கோரி, 25.11.2012 முதல் 27.11.2012 தேதி வரை KEPA குழுவினர் தெருத்தெருவாக பரப்புரை செய்தனர். DCW தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் ஒலிபெருக்கி மூலம் ஆங்காங்கே மக்கள் திரளும் இடங்களில் சிறப்புத் தகவல்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

KEPA பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி உள்ளிட்டோருடன் KEPA குழுமத்தினர் இந்நிகழ்வில் களப்பணியாற்றினர். காட்சிகள் வருமாறு:

























படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Kader K.M (Dubai) [28 November 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24162

மாஷா அல்லாஹ்! ஃபீ அமாநில்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [28 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24166

தமிழன் இஸ்மாயில் அவர்கள், ஊர் நலன் கருதி பொறுப்பாக தனது கடை வேலையை விட்டு விட்டு ஆர்வத்துடன் போராட்ட அழைப்பு கொடுத்து வருகிறார். வெற்றி கிடைத்து வர வல்லவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...உயிரை காவு வாங்கும் DCW
posted by NIZAR (kayalpatnam) [28 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24171

DCW வை எதிர்த்து KEPA வின் கடைஅடைப்பு, ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் ஒட்டு மொத்த ஊரு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்ததை காணமுடிகிறது. இதற்காக சொந்த வேலைகளை ஒதுக்கி களப்பணியாற்றும் கண்ணியமிகு சகோதரர்களுக்கு நன்றிகள்.

ஊரின் அனைவரும் இந்த விசயத்தில் ஓரணியில் ஒற்றுமையாக நிற்பதும், களப்பணி ஆற்றுவதும், ஒத்துழைப்பு அளிப்பதும், ஊரு மக்களிடையே வெற்றி காற்று வீசுவதனால் கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

குஜராத்தில் இருந்து வந்து கோடி கோடியா, பணம் அடித்தாலும் பரவாஇல்லை, ஆனால் விலை மதிக்க முடியாத நம் மக்களின் உயிரை அல்லவா காவு வாங்குகிறார்கள்.
எத்தனை இளைய சகோதர-சகோதரிகளை இழந்துள்ளோம்? நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.

தன் ஆலையின் மாசு மற்றும் கழிவுகளை மொத்தமாக நம் பக்கமே திருப்பிகிற இந்த கொடியவர்களை மத்திய, மாநில அரசுகளின் மாசு கட்டுபாட்டு வாரியம் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்றால் ஆலையின் கரன்சிகளால் அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது தெளிவாகின்றது.

எப்படியோ ஊரு மக்களின் இந்த முதல் முயற்சி நாம் எதிர்பார்க்கும் வெற்றிக்கு வித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.இறைவன் நம் முயற்சிகளை வெற்றி ஆக்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்று...சும்மா அதிரட்டும்....காயல் மக்களின் தார்மீக முழக்கம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24174

மாஷா அல்லாஹ்! நாம் எதிர்பார்த்தது அனைத்தும் இறைவனின் கருணையினால் நடந்தேறி வருகின்றது. ஊர் முழுக்க ஒன்று பட்டு நடத்தும் இந்த போராட்டம் இன்ஷா அல்லாஹ் DCW எனும் அரக்கனின் சங்கை நெரித்து திணறடிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த காலங்களில் நம் வாசகர்கள் பதித்த கருத்துக்கள் அச்சு பிசகாமல் நடந்து வருகின்றது உண்மையே! அதற்கான சில உதாரணங்கள் கீழே தொகுத்துள்ளேன். வாசித்துப் பார்த்தால் நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மை விளங்கும்.

1) மகாராஷ்ட்ரா பணம் காய்ச்சி மரம் இன்று வேர் பிடித்து விஷ விருட்சமாக வளர்ந்து நம்மைக் கொல்கின்றது. சத்தமின்றி ஓர் கூடங்குளம் சாகுபுரத்தில் உருவாகி வருவதை யாராலும் மறுக்க இயலாது. இனி காயல்பட்டினமும் ஓர் இடிந்தகரையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை...!

2) இந்த நாசக்கார ஆலைக்கு எதிராக காயல் மக்கள் அணி திரண்டிருப்பது மகிழ்ச்சியே! ஆர்ப்பாட்டமும், போராட்டமும் ஆலைக்கெதிராக நடத்தும்போதுதான் ஆட்டம் காணும் அந்த ஆலை!

3) KEPA அமைப்பின் மூலம் விளக்கம் கேட்டு DCW வுக்கு இரண்டு நாள் அவகாசத்தில் ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அது திருப்தி அளிக்காத பட்சத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் தெரு முனைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

4) புற்று நோய்க் காரணிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் எவ்வாறெல்லாம் நம்மை பாதிக்கின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை மக்கள் மனதில் பதியும் படி எடுத்துரைக்க வேண்டும். கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து துண்டுபிரசுரங்களை அச்சிட்டு காலம் தாழ்த்தாமல் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

5) நம் காயல் ஐக்கியப் பேரவை, மெகா வழிகாட்டுதல் அமைப்பு, காக்கும் கரங்கள், நற்பணி மன்றங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் சுற்றுப்புற சூழலில் அக்கறை உள்ளவர்கள் மூலம் இதன் கேடுகள் குறித்து நோட்டீஸாக அச்சிட்டு நம் மக்களுக்கு விநியோகிக்கலாம். இது நம் பலருக்கும் பயனுள்ளதா அமையும்.

6) கடல் நீரின் காட்சியை சிந்துபாத் கதை மாதிரி தினந்தோறும் மெனெக்கெட்டு படம் பிடிச்சு போட்டுத் தள்ளியதன் பலன் இப்ப கை கூடி வருகின்றது. கழிவுநீர் பரிசோதனைக்குப் பிறகு அதுலெ வில்லங்கமான ரிஸல்ட்டு வந்தா விடக்கூடாது! மக்கள் மத்தியில் எந்தெந்த வழிகளில் எடுத்துச் சொல்ல முடியுமோ அத்தனை வழிகளையும் கையாள வேண்டும்.

(கருத்துக்கள் கூடுதலாக இருப்பதால் முழுமையான வரிகளை சர்வர் ஏற்க மறுக்கின்றது இதன் தொடர்ச்சியை அடுத்த கருத்துப்பதிவில் காண்க)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்று...சும்மா அதிரட்டும்....காயல் மக்களின் தார்மீக முழக்கம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24175

(முந்தைய கருத்துக்களின் தொடர்ச்சி..

8) போர்க்கால அடிப்படையில் இந்த ஆலைக்கு எதிராக நாம் நம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட முனைய வேண்டும். பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவதுதான் புத்தி!

9) கேன்சர் வந்து மடிந்து கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமில்லை! பலவிதமான நோய்க் காரணிகளுக்கு இந்த பாழாப்போன கழிவு கடலில் கலப்பதும், ஆலையின் புகை காற்றில் மிதப்பதும் தான் காராணமே அன்றி வேறேதுமில்லை!

10) குடும்பத்துக்கு ஒன்னுங்கிற கணக்கு போயி இப்ப குடும்பமே இப்படித்தான் எனும் நிலைக்கு ஆளாக்கிய அரக்கனை வேறோடு வீழ்த்த காயல் மக்களே! அணி திரளுங்கள்... நமக்காக நாம் நம்மைக் காப்பதற்காக.

11) காயலர் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது இணைய தளம் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயமும், கடமையும் உள்ளது. இனியும் நம் மக்களை இந்த ஆலை அரக்கனுக்கு காவுகொடுக்கக் கூடாது.

12) நம் மக்களின் தார்மீக உரிமைகளைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்படும் DCW வின் அட்டூழியத்தை ஒழிக்க, அதன் அதிகார வர்க்க சகவாசத்தை முறியடிக்க காயல்மாநகரத்தின் மண்ணின் மைந்தர்களே... அணி திரளுங்கள்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்!

13) நாம் நம் மக்கள் நம் சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என சூளுரைத்து நவம்பர் 29-ல் நடக்கவிருக்கும் முழு கடையடைப்பு மற்றும் ஆலைக்கெதிரான முற்றுகைப் போராட்டங்களில் சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பங்கு பெற்று காயலின் ஆயுளை திடப்படுத்த முன் வாருங்கள்!

14) காலம் கடந்து கண் விழித்திருக்கும் காயலர்களே! இனியும் காலம் தாழ்த்தாமல் கடமை உணர்வோடு களத்தில் இறங்குங்கள்! அல்லாஹ் இதற்கோர் அழகிய வெற்றியையும், நிரந்தர தீர்வையும் தந்தருள்வான். இன்ஷா அல்லாஹ்...!

அன்புக்குரிய காயல் மண்ணின் மைந்தர்களே! மதம், இனம், மொழி வித்தியாசமின்றி நம்மைப் பழி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்க்கொல்லி அரக்கன் DCW வுக்கு எதிராக உரிமை யுத்தம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகிவிட்டோம்.

இன்று நவம்பர் 29ஆம் நாள் நம் அனைத்து சமுதாய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அந்த முழக்கத்தை பேரொலியில் DCW ஆலையின் அஸ்த்திவாரமே ஆடிப்போக வேண்டும். அயல்நாட்டில் வசிக்கும் எங்கள் சார்பாகவும் உங்கள் முழக்கங்கள் முழங்கட்டும்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 November 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 24220

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த தெரு பிரச்சாரம் ரொம்பவும் தேவையானது... நம் ஊர் பொது மக்கள் அனைவர்களும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நல்குவது சால சிறந்தது. நாம் இந்த தெரு பிரசாரத்தை முன்பே செயல் படுத்தி.நம் மக்கள் முன் கொண்டு சென்று இருக்க வேணும் .

நம்முடைய அடுத்த குறிக்கோள் நம் மக்கள் எல்லாம் ஒன்றாகவே ஊர்வலமாக >> D.C.W. << தொழிற்சாலையை முட்டுகை இடும் வண்ணமாக செயல் படுத்தினால் தான்....நம் போராட்டதின் முழு கவனமும் ...மத்திய / மாநில அரசுகளின் செவிகளுக்கு போய் சேரும்.அப்போது தான் நம்முடைய எண்ணமும் / குறிக்கோளும் ....நிறைவேறும். இதற்க்கு நம் ஊரின் அனைத்து அமைப்புகளும் / ஜமாத்துக்களும் / நம் ஊரின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூட ஓன்று சேரனும் .இது கண்டிப்பாகவே அவசியமானது .இந்த >> D.C.W.<< தொழிற்சாலையை முட்டுகை இடும் போராட்டத்துக்கு ...போலீஸ் அதிகரிகளிடம் நாம் முறைப்படி மேலே சென்று உரிய அனுமதியை பெற வேண்டும். இப்போது நாம் கோட்டை விட்டது. போன்று விடவே கூடாது.நம் ஊர் மக்களின் போராட்டம் அகிம்சையான ஒரு போராட்டம் தான் .

இந்த தெரு பிரசாரத்தில் அருமை தம்பி.S.K.S.அவர்களும் & அன்பு சகோதரர் .முத்து இஸ்மாயில் காக்கா அவர்களும் மும்முரமாக இடுபட்டு வருவது நமக்கு மன மகிழ்சியை தருகிறது .இவர்களை போன்று நம் ஊர் பொது மக்கள் அனைவர்களும் முழுமையான ஒற்றுமையான முறையில் ஓன்று கூடி >> D.C.W. << தொழிற்சாலையை இழுத்து மூடும் வரை நாம் ஓய கூடாது............

இந்த போராட்டம் வெற்றி அடைய வேணும்.என்பது.நம் யாவர்களின் துவாவும்...தான் ... + வாழ்த்துகள் .......

இந்த போராட்டத்தை ஒரு நாள் முன்னோ ....ஒரு நாள் கழித்தோ வைத்து இருக்கலாம். காரணம் இன்று கோமான் தெரு .எங்கள் பாசி பட்டணம் நெய்னா சாஹிப் அப்பா அவர்களின் கந்துரி வைபவம் இருப்பதால். அங்கு போக... வர .... ஆட்டோ ஓடாததால் பெண்கள் கஷ்டப்படலாம்.

OK....நம் ஊருக்கு நல்லது நடந்தால் அதுவே நமக்கு போதும்.....

>>>>>>>>>>>>>>வீழ்வது >>D.C.W. << வெல்வது நாம் தான்.................. வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved