Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:40 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9897
#KOTW9897
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 4, 2013
முஸ்லிம் லீக் வலிமையாக இருக்கும் இடங்களில் சமுதாய ஒற்றுமையும் - மதநல்லிணக்கமும் வலிமையுடன் இருக்கிறது! காயல்பட்டினத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2730 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலிமையாக இருக்கும் இடங்களில் எல்லாம் சமுதாய ஒற்றுமையும் - மதநல்லிணக்கமும் வலிமையுடன் இருக்கிறது என்று, காயல்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் பேசியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேசியதாவது:-



காயல் மாநகருக்கு வருகை தருவது என்றாலே எனக்கு தனி மகிழ்ச்சிதான். இந்நகர நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நகரில் இறைமறையை ஏந்தி நிற்கும் எண்ணற்ற ஹாஃபிழ்கள் உள்ளது தனிச்சிறப்பு.

இந்நகரில் அவ்வப்போது ஏற்படுகிற சிறுசிறு சிராய்ப்புக்களை சமாளித்து ஒற்றுமைப்படுத்தி, முன்மாதிரியான ஊர் காயல்பட்டினம் என்பதை பறைசாற்ற வேண்டும். இந்நகரில் பிளவையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்த எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது. இந்நகரின் ஐக்கியத்தை சமுதாய ஒற்றுமையை பலப்படுத்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒருமுகமாக ஆதரவு தர வேண்டும்.

DCW இரசாயன ஆலையால் காயல்பட்டினத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளதும் இங்கு ஏராளமானோர் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளில் அவதிப்படுவதும் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு, இந்நகரின் இளைஞர்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்தப் பணி வெற்றி பெறும் வரை முஸ்லிம் லீகின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓய மாட்டான் என்பதை இங்கே உறுதியுடன் அறியத் தருகிறேன்.

இந்த மேடையில் இருக்கும் என்னிடம் பார்வையாளர் பகுதியில் இருந்து துண்டுச் சீட்டுகள் எழுதி தரப்பட்டன. அதிலே கூட பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரால் அலைக்கழிக்கிறார்கள். அதிகம் பணம் கேட்கிறார்கள், பெண்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அதிக நேரம் இருக்கச் செய்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தனர். காவல்துறையினரின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல. இது நிறுத்தப்படவில்லை எனில் உரிய இடத்தில் உரிய நடவடிக்கைக்கு முயற்சிப்பேன் என எச்சரிக்க கவலைப்பட்டுள்ளேன்.

செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றீர்கள். அதற்காக பலமுறை முயற்சி மேற்கொண்டு செய்து கொடுத்ததும், அதன் நேரத்தை மாற்ற வேண்டும் என்பதை மாற்றித் தந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம். திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்து செல்லும் நேரத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.

எந்தப் பிரச்சினை என்றாலும் எந்த இடத்தில் எப்போது எப்படி தட்ட வேண்டுமோ அந்த வகையில் முயற்சித்து காரியமாற்றுபவர்கள் முஸ்லிம் லீகர்கள். சிலரை நடு ரோட்டிற்கு அழைத்து வந்து கோஷம் போட வைத்து காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்படும் நாடகங்களை முஸ்லிம் லீக் ஒருபோதும் அரங்கேற்றுவதில்லை. உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய வைக்கும் கலையை முஸ்லிம் லீக் தலைவர்கள் எங்களுக்கு கற்றுத் தரவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக்கிறதோ அங்கே சமுதாய ஒற்றுமை - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக்கிறதோ அங்கே மதநல்லிணக்கம் தடைபடாமல் இருக்கும். முஸ்லிம் லீக் எங்கே வலிமையுடன் இருக்கிறதோ அங்கே நமது உரிமைகள் நிலை நாட்டப்படும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கோழிக்கோட்டில் கூடியபோது சிறப்பு வாய்ந்த பல முடிவுகளை அறிவித்தோம். இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள `ஏணி’ சின்னமே இனி முஸ்லிம் லீக் சின்னமாக இருக்கும்.

தேசிய கவுன்சில் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் களைப் பற்றியது. தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விஷயங்களை அரசின் கவனத் திற்கு உரிய முறையில் முஸ்லிம் லீக் கொண்டு செல்கிறது. யாருடைய தூண்டுதல்களால் தாங்கள் இளமை வாழ்வை இழந்தார்களோ அவர்கள் எல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் அந்த இளைஞர் களின் விடுதலைக்காக பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வருகிறது.

சிறுவனாக சிறைக்கு சென்று இளமையையே தொலைத்து விட்ட அபுதாகிர் கொடிய நோயால் தாக்கப்பட்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு இப்போது கண்களும் பார்வையிழந்து விட்டன. நடைப்பிணமாகிவிட்ட அந்த சகோதரன் சிகிச்சை பெறுவதற்காக 9 முறை பரோல் விடுப்பு பெற்றுக் கொடுத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். நம் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.

இப்போது நடைப்பிணமாகிவிட்ட அந்த சகோதரரை மீண்டும் பரோலில் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் அரசு அதைத் தர மறுக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே விண்ணப்பித்து நீதிமன்றமும் ஒரு முறையல்ல, இரண்டு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்த அரசு மறுக்கிறது.

கோவை மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் அபுதாகிரை பார்க்கச் சென்றிருந்தேன். எலும்புக் கூட்டில் துணியை போட்டு போர்த்தியது போன்று படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார். நாங்கள் சென்றபோது வெளியில் இருந்த அவரது உறவினர்கள் மண்ணை தூக்கி வாரி இறைத்து யார் யார் பேச்சையோ நம்பி தன் வாழ்வையே தொலைத்து விட்டானே என பதுவா செய்தனர். பின்னர் அபூதாகிர் விடுதலைக்காக பாடுபடும் எங்களுக்காக மடியேந்தி துஆ கேட்டனர். அந்த அளவிற்கு மன ரீதியாக கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா செல்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளால் விசா மறுக்கப்படும் அளவிற்கு சர்வதேச சமூகத்தால் வெறுக்கப்படும் வகையில் அவமானகரமான கலவரத்துக்கு காரணமாக இருந்தவர் நரேந்திரமோடி. அப்படிப்பட்ட மோடியிடம் நட்பு பாராட்டுகிறார்.

குஜராத்தில் முஸ்லிம்களை அழிக்க மோடி துணை போனார் என்றால் ஆந்திராவில் இஸ்லாமிய கலாச்சார சின்னத்தை அழிக்க அம்மாநில அரசு துணை போகிறது. 420 ஆண்டு பாரம்பரியமிக்க ஹைதராபாத் சார்மினாரில் 1642 முதல் 1960 வரை எந்த சிலையுமில்லை. 1960இல் சிலை வைக்கப்பட்டு அதைக் காரணங்காட்டி இன்று பெரிய கோவிலாக எழுப்புகிறார்கள். இதை `தி ஹிந்து’ நாளிதழ் படம் பிடித்துக் காட்டி அம்பலப்படுத்தியுள்ளது. அப்படியானால் 1951இல் உருவாக்கப்பட்ட சட்டம் என்னவாயிற்று? இதை நாடாளுமன்றத்தில் கேட்டு முழங்கினோம்.

ஆகவே, இன்று நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும்.


இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmedyounus (muscat) [04 January 2013]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 24893

இங்கே நாடாளு மன்ற உறுப்பினர் தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிட்டுள்ளார். ஒற்றுமையே சிறப்பு என்று கூறிவிட்டு, காலையில் கைதாகி மாலையில் வெளியில் வரும் இயக்கங்கள் என்று..... சில இஸ்லாமிய இயக்கங்களை சாடை மாடையாக குறுப்பிட்டு உள்ளார். அவர்கள் நடத்தும் போராட்டத்தை இது கொச்சை படுத்துவாதாக உள்ளது. ஏன் காலையில் கைதாகி ஒரு வருடம் கழித்து ஒரு நாள் மாலையில் வெளிய வர வேண்டும் என்று எதிர்பார்கின்றாரோ என்னமோ தெரியவில்லை.

இன்று சாலை மறியல்,ஆர்ப்பாட்டம் கூட ஜனநாயக போராட்டமாக மாறிவிட்டபின், அத்தகைய போராட்டத்தைக் கூட கொச்சைபடுத்தும் பேசும் உங்களின் நிலையை பார்த்து பரிதாபமாக உள்ளது. ஏன் காலையில் கைதாகி மாலையில் வெளியில் வரும் போராட்டம் மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்ததா? எத்தனை குருதி தானம் முகாம்கள், மது எதிர்ப்பு போராட்டங்கள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு மாநாடுகள்..... தன் இயக்கத்தின் அடிமட்ட தொண்டன் கூட கைதான உடனே அங்கே ஆர்பரிக்கும் தொண்டர் கூட்டம், தலைவர்களின் அர்பணிப்பு... வேகம்,, விவேகம்.... இதனால் தான் அவர்கள் இன்றும் வீரியமிக்க இயக்கமாகக் காட்சி தருகின்றனர்... காயல் மகபூபின் ஒருவருட சிறை வாழ்க்கை ஒன்று போதாதா! அவர் காலத்தின் சூழ்ச்சியால் இன்று எதோ பேசலாம். உண்மை வரலாறு எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வீரியமிக்க தொண்டர் கூட்டம் நம்மிடம் இல்லையே என்பதன் வெளிப்படுதான் உங்களின் இந்த உரை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved