Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:25:25 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9896
#KOTW9896
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 4, 2013
ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், அனைத்து சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்! காயல்பட்டினத்தில் உரையாற்றிய முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3268 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், ஊரிலுள்ள அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும் என காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 25.12.2012 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசியதாவது:-



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி இப்பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விசாரணையின்றி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்தான இத்தீர்மானங்கள் மீது அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உள்ள விபரம் பற்றி துணை ஜனாதிபதி, பிரதமர், கூட்டணித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கடிதங்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலையாய லட்சியங்களில் ஒன்று சமுதாய ஒற்றுமை. முஹல்லா ஜமாஅத்தை வலிமைப்படுத்துவது. அந்த அடிப்படையில்தான் சமுதாய நலனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை கருதி ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த காயல்பட்டினம் நகரமும் ஒன்றுபட்டு உழைத்தால் மட்டும்தான் நாம் நினைப்பதை சாதிக்க முடியும். ஊரை பாதுகாக்க முடியும்.

இந்த காயல் மாநகரில் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர், எல்.கே. லெப்பைத் தம்பி ஆதரவாளர்கள் என இரு பிரிவாக இந்த நகர் பிரிந்து பிரச்சினைகளை சந்தித்தது. இப்படி பிளவுபட்டு கிடப்பது சமுதாய நலனுக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல என்பதால் இந்த பிளவை முடிவுக்கு கொண்டு வந்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சி மேற்கொண்டது. அன்றைய நகரச் செயலாளர் வாஹித் ரேடியோ, எஸ்.ஐ.எம். ஹனீபா போன்றவர்கள் கடுமையாக மேற்கொண்ட முயற்சியின் விளைவால் ஒற்றுமை ஏற்பட்டது.

இன்றும் அதே உள்ளாட்சித் தேர்தல் காரணத்தால் ஊர் பிரிந்து கிடக்கிறது. தேர்தல் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் நகராட்சியிலும், ஊரிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பணிகள் தடைபட்டுக் கிடக்கின்றன.

காயல்பட்டினத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புக்களை பிரதிநிதித்துப்படுத்தும் ஒருங்கிணைந்த ஸ்தாபனம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை. இது ஒரு சக்தி. நகரின் நல்ல பணிகளுக்கு வாரி வழங்கி வருபவர் தனவந்தர் ஹாஜி எல்.கே.எஸ். அக்பர் ஷா அவர்கள். இந்த ஊரில் சுமார் 1500 குடும்பங்கள் அவரால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு சக்தி நகரில் பணிகளை செயல்படுத்த வேண்டியவர்கள் காயல்பட்டினம் நகராட்சியினர். ஆக்கப்பூர்வமான காரியங்களை முன்னின்று உழைக்க வேண்டியவர்கள் இளைஞர்கள். இவர்கள் ஒரு சக்தி. இந்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நாம் எதையும் சாதிக்க முடியும்.

இந்த நகரில் நலப்பணிகளை ஏராளமாகச் செய்து வரும் உலகளாகவிய காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியது காயல்பட்டணம்.காம் இணையதளம். அதே நேரத்தில் இணையதளங்களில் வெளியிடப்படும் செய்திகளுக்கு கருத்து எழுதும் பலர் மனம் வேதனைப்படும்படியாக விமர்சிக்கும்போது உள்ளபடியே வருத்தம் ஏற்படுவது உண்மைதான்.

இதோ இந்தக் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து இணையதளத்தில் செய்தி வெளிவரும்போது, அதைப் பாராட்டி பலரும், விமர்சித்து பலரும் கருத்துக்களை எழுதுகின்றனர். விமர்சித்து எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது, சமுதாய நோக்குடன் இவ்வளவு சிரமப்பட்டு கூட்டத்தை நடத்தும் நமக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நமதூருக்கு நன்மை செய்வதற்காகவே முஸ்லிம் ஐக்கியப் பேரவை உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றாலும், கழிவுகளை கொட்ட நிலம் வேண்டும் என்றாலும் பெருந்தகைகளை அணுகி நிலமும் பணமும் பெற்றுத் தருகிறது. இவர்களையும், பொதுநலவாதிகளையும் மரியாதை குறைவாக விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்?

ஐக்கியப் பேரவையில் இருப்பவர்களும், நடந்தவற்றையே மனதில் தேக்கி வைத்துக்கொண்டிருக்காமல், இனி நடக்க வேண்டியதைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்தித்து, கவுரவம் பார்க்காமல் செயலாற்ற முன்வர வேண்டும்.

காயல்பட்டினம் நகராட்சியில் நல்லது நடக்க வேண்டும்; லஞ்சம் அறவே கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் நகர்மன்றத் தலைவர் அவர்கள். அதேசமயம் உறுப்பினர்களையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே பணி செய்ய முடியும். எனவே, தலைவரும், உறுப்பினர்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காக நகராட்சி உறுப்பினர்களையும், முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் எம்.எம்.உவைஸ் ஹாஜி அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இன்னும் பல அமர்வுகள் நடைபெறவுள்ளது.

டி.சி.டபிள்யு. இரசாயன ஆலையால் இந்தப்பகுதியில் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை தடுக்க காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசனை சந்திப்பதற்கும், மேற்கொண்டு முயற்சி மேற்கொள்வதற்கும் நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சேவையாற்றி வருகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்புக்களை அளிக்க வேண்டும்.

மத்ரஸா கல்வி மேம்பாட்டிற்கு அடுத்த ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ. 900 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருந்தும் - கடந்த முறை தமிழ்நாட்டிலிருந்து ஒரு மத்ரஸாவும் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பது வேதனைக்குரியது.

இம்முறை எல்லா மத்ரஸாக்களும் இந்நிதியை பெற்று பயணடைய வேண்டும் அதை பெற்றுக் கொடுக்க தாங்கள் தயாராக உள்ளோம்.


இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..நாம் இனியாவது சிந்திக்க வேண்டும்!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 January 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24911

அஸ்ஸலாமு அழைக்கும்!

நமது அருமைச் சகோதரரின் பேச்சில் இருந்து நாம் நிறைய்ய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது! மாஷா அல்லாஹ். மிகத் தெளிவாக ஒரு பாமரனுக்குக் கூட புரியும் படி இன்றைய நிலையினையும், நாளை நாம் இதற்க்கு என்ன பரிகாரம் செய்திட வேண்டும் என்று தனக்கே உரித்தான அக்கறையோடு உரையாற்றிய தம்பி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களின் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சி மிகு பேச்சுக்கு மிக்க நன்றி!

அன்றைக்கு தலைவர் பதவிக்குத்தான் போட்டி நடைபெற்றது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் அன்றைய பெரியவர்கள் நமதூர் நன்மைக்காகவே பஞ்சாயத்து நேரத்தில் மட்டும் இன்றி, மாலை நேரங்களில் வட்ட சதுக்கைகளில் தூணுக்கு தூண் அமர்ந்து நமதூர் நன்மைக்காகவே வேண்டி ஒவ்வொருவர்களும், நமதூரைக்காக்கும் பெரிய தூணாகவும், கோட்டை சுவராகவும் இருந்தார்கள். அவர்களின் நல்ல சிந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பெரியோர்களை கண்ணியமாக மதித்து வந்தார்கள் அவர்களின் வழி வந்தவர்கள்.

இன்றைய தலை முறை அது போன்ற கண்ணியவாலர்களுக்கே வழி காட்ட தலைப்பட்டு விட்டது!
இன்றைய பஞ்சாயத்தின் நிலைமைக்கு நாமும் ஒரு காரணமே!

நாம் இனியாவது இந்த சமுதாய கொள்கையுடைய தம்பி சொன்னது போல் ஒரு கூட்டு சக்தியாக நின்று நாளை செயல் பட வேண்டும். அதற்கு கண்ணியமிகு பெரியோர்களின் நல்ல அறிவுரைகளும், அதை சிரமேல் கொண்டு கூட்டாக நின்று செயல் வடிவம் கொடுக்க வந்த இன்றைய KEPA போன்ற நல்ல இயக்கங்களுடன் மனதார நாம் நம்மை இணைத்துக் கொள்ளல் வேண்டும்! அல்லது வெளியில் இருந்தாவது அவர்களை பாராட்ட வேண்டும்.

இனியாவது நாம் சிந்திக்க வேண்டும்!

மாற்றம் நமதூருக்கு நாளை வரும் என்று துஆவுடன்,
உமர் அனஸ்!
தோஹா கத்தார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வேகமும் விவேகமும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24915

20 வயதில் 60 வயது விவேகம் 60 வயதில் 20 வயது வேகம் எனபது பொது செயலாளர் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கும் பொருந்தும்போல் தெரிகிறது. பேச்சாளரின் பேச்சின் போக்கை பார்த்தே அவருக்கு முத்திரை குத்தும் பேராற்றல் படைத்தவர்கள் நமதூர் மக்கள்.

அபூபக்கர் அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பில் பேசுவதற்கு ஒரு அசாதாரண துணிச்சல் வேண்டும். பச்சிளம் பிறைக்கொடியின் கீழ் நின்று, முனீருல் மில்லத் அவர்களின் தலைமையின் வழி நின்று பிறைமேடை நாயகன் தமிழ் தென்றல் அப்துர் ரஹ்மான் அவர்கள் அருகில் நின்று, கவ்மின் காவலர் காயிதே மில்லத் பாரம்பரியத்தின் கட்டுகோப்புக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டு மக்களின் முன் நின்று இந்த மண்ணின் மைந்தன் பேச ஆரம்பித்த போது கூட்டத்தை கட்டிப்போட்டு தன் உள்ளக் கிடக்கைகளை கொட்டி தீர்த்த போது மக்கள் அவர் பேச்சை உன்னிப்பாக கவனித்தார்கள்.

எல் கே எம் கே டி காலம் அல்ல, அதற்கு முன்னதாகவே ஷியா சன்னி, தரீக்காக்கள் அரசியல் கட்சிகள் என்று ஆரம்பித்து இப்போது அகீதாவரை நாம் பிரிந்தே நின்று பழக்கப்பட்டவர்கள். வேற்றுமைதான் நமது பலமும் பலவீனமும். UNITY IN DIVERSITY அது இந்த நாட்டின் பழக்க தோஷம்.

நமதூரில் இணைய தளங்கள் தங்கள் தலைவாசல்களை திறந்து வெளியே வந்து நகரமன்றத்தின் ஜன்னல்களை திறந்து விட்டபோது அங்கிருந்து வெளியே வீசிய துர்நாற்றம் நம்மை திகைக்க வைத்தது. சட்டமன்றமும் பாராளுமன்றமும் சாக்கடைகளாக மீன் சந்தைகளாக மாறி விட்டதை ரசித்தவர்கள் நமது நகர் மன்றமும் அந்த நிலைக்கு தரம் தாழ்ந்து விட்டதை அவர்கள் வெளிச்சம்போட்டு காட்டியபோது நடு நிலையாளர்கள் அரண்டு விட்டார்கள்.

தேர்தல் தோல்வியால் துவண்டு விட்ட ஐக்கிய பேரவை தன் பொது நல சேவைக்கு சலாம் கூறி விடைபெற்று விட்டதா வெற்றி பெற்றவர்கள் வெறி கொண்டு தங்களை கேள்வி கேட்க ஆள் இல்லை என்று ஆட்டம்போடுகிரார்களா அல்லது ஆபிதா அணி அக்பர்ஷா அணி என்று தங்களை வேறுபடுத்திக் கொண்டு இந்த ஊரின் பெயருக்கு ஊறு விளைவிக்கிறார்களா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழ ஆரம்பித்தது.

" பெரியாரை விழித்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று சங்க தமிழ் கூறுகிறது. ஆஹா என்று பெரியவர்களை புகழ்வதும் ஓஹோ இவன்தானா என்று சிறியவர்களை இளைஞர்களை இகழ்வதும் இந்த இழி நிலைக்கு ஒரு காரணம் என்ற உண்மை உறைத்தபோது அவற்றை சமன் செய்து, சீர் செய்ய யாராவது முயற்சி எடுக்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்த நல்ல உள்ளங்களுக்கு அபூபக்கர் ஒரு அருமருந்தாக களம் இறங்கி இருக்கிறார். அல்ஹம்து லில்லாஹ். காய்தல் உவத்தல் இன்றி நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்கள் எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் துணை நிற்பான்.

நான் முஸ்லிம் லீக் என்ற கட்சிக்கு அப்பால்பட்டு முஸ்லிம் என்ற உணர்வில் இதை பதிவு செய்கிறேன். ஐந்து விரல்களும் ஒரே அளவாக இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு நியதியும் இல்லை. அடிக்கும்போதும் அணைக்கும்போதும் அவை ஒன்று பட்டே செயல்படுகின்றன உணவருந்தும்போதும் அவை தங்களை அறியாமலே இணைந்து கொள்கின்றன.

எனவே இங்கு கட்சி மாச்சரியங்கள் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லா தரப்பினரையும் அழைத்து பேசுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனக்குறை. அதில் நியாயங்கள் அத்து மீறல்கள் அதீத எதிர்பார்ப்புக்கள் எண்ணில்லா ஏமாற்றங்கள் எல்லாம் வெளியாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, தட்டிக்கொடுக்கும் பெருந்தன்மை ஜீரணிக்கும் உளப்பாங்கு எல்லாம் இருந்தால் ஒற்றுமையின் தூரம் வெற்றியின் வெளிச்சம் தொட்டு விடும் தூரம்தான்.

அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் குறைவற்ற செல்வத்தையும் செல்வாக்கையும் ஊருக்காக உழைக்கும் நல்ல எண்ணங்களையும் நிறைவாக தந்தருள்வானாக. பிறைக் கொடியின் கீழ் ஒன்று படுங்கள் என்று நீங்கள் சொல்லும் வேளை அதை விட ஒற்றுமையின் கொடியின் கீழ் ஒன்றுபட எல்லோரையும் அழையுங்கள். ஊர் வாழ்ந்தால் நாம் வாழ்வோம் நாம் வாழ்ந்தால் குடிகள் வாழும் நீங்கள் சார்ந்துள்ள கொடியும் வாழும் ஏற்றம் பெரும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved