Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:47:36 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10000
#KOTW10000
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 23, 2013
எல்.கே.மேனிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்! திரளான பெற்றோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4807 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், 22.01.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாலையில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.



நடப்பாண்டில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள - இப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் “கலந்துரையாடல்” நிகழ்ச்சியாக இக்கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.



பள்ளி தாளாளரும், பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளருமான டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா முன்னிலை வகித்தார்.



தலைமையுரையைத் தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வையொட்டி மாணவர் - பெற்றோருக்கான ஆலோசனைகளை உள்ளடக்கி பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் சிற்றுரையாற்றினார்.



பின்னர், பெற்றோர் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

*** படிப்பில் ஆர்வமின்றி செயல்படும் மாணவர்களுக்கு பள்ளி வழங்கும் ஆலோசனை...

*** வீட்டில் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகள்...

*** தேர்ச்சியிழக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிடவும், தேர்ச்சி பெறும் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிடவும் தேவைப்படும் ஆலோசனைகள்...

*** அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு - மாணவர்களின் நலனுக்காக பள்ளி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள்...

உள்ளிட்டவை குறித்த கேள்விகளை பெற்றோர் கேட்டனர்.



பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - பெற்றோரின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றினார்.



மாணவர்களின் நலனுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள – மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பள்ளி தலைமையாசிரியராக தான் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள், மாணவர் - பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

நடப்பாண்டுடன் தான் ஓய்வு பெறவுள்ளதாகக் கூறிய தலைமையாசிரியர், தனது பணிக்காலத்தின் இந்த கடைசியாண்டில், பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நூறு சதவிகித தேர்ச்சி பெறச் செய்வதும், சாதனைகள் புரியச் செய்வதுமே தனது இலட்சியம் என்று அவர் கூறுகையில், அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அனைவரும் கரவொலியெழுப்பினர்.

தலைமையாசிரியர் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் தந்தையரை விட அன்னையர் அதிகளவில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Idhu Oru Saadhaarana Koottamalla, naadaalumandra koottathai vida miga mukkiyathuvam vaaindhadhu
posted by Abdul Razak (Chennai) [23 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25197

மிக அருமையான காலத்தின் தேவை உள்ள கூட்டம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Idhu Oru Saadhaarana Koottamalla, naadaalumandra koottathai vida miga mukkiyathuvam vaaindhadhu
posted by Abdul Razak (Chennai) [23 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25198

அஸ்ஸலாமு அழைக்கும்,

வழக்கமாக தினமும் இணைய தளத்தில் நம் காயல் செய்திகளை பார்க்கும் நான் அதிகமாக கமெண்ட்ஸ் அனுப்பும் பழக்கம் இல்லாதாவன் , ஆனால் இந்த செய்தியை பார்த்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு ஒரு அவசியமான எனது தனிப்பட்ட வேலைக்காக கணினியில் அமர்ந்திருக்கும் நான் இந்த செய்திக்கு கமெண்ட்ஸ் அனுப்புவதை மிகவும் அவசியமானதாக உணர்கிறேன் .அல்லாஹ் இதை நமக்கு பயனுள்ளதாக ஆக்குவானாக

அதற்கு காரணம் இந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள். ஏனெனில் இங்கு தான் ஒரு சமுதாயம் உருவாகுகின்றது , உண்மையில் நல்ல ஒரு ஆசிரியரும் நல்ல ஒரு பெற்றோரும் இருந்தால் போதும் இன்ஷா அல்லாஹ் இந்த உலகமும் இந்த சமுதாயமும் மேன்மையை அடைந்து விடும் சீராக ஆகி விடும் [Idhu chumma vaarthai amaivadhatkaaga poatta vaakkiyangal kidayaadhu nanbarkalae]

சில தினங்களுக்கு முன்னர் சென்னை-இல் ஒரு CBSE பள்ளியில் இது போன்ற ஒரு கூட்டத்திற்கு சென்று இருந்தேன், அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செயயப்பட்ட ஒரு கூட்டம். அதில் அந்த பள்ளியின் முதல்வர் சொல்லும் விஷயங்கள் என்னை உண்மையில் ஆச்சரியத்திலும் இது போன்ற கூட்டங்கள் இந்த காலத்தில் எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்த்தியது .

இன்றைய மாணவர்கள் [நம் அருமை புதல்வர்கள்/புதல்விகளை இந்த உலகம் மிக அருமையாக ஏமாற்றி அது(இந்த உலகம்) எதனை எதிர்பார்க்கின்றதோ அதை மிக சாமார்த்தியமாக அடைந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் ஒருவனுக்கு நன்றாக அமைய வில்லை என்றால் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்) அவனு(ளு)டைய இந்த உலகமும் வீண் மறு உலகமும் வீணாகி விடும். இதில் யாரை குற்றம் சொல்வது அந்த குழந்தையையா அல்லது பெற்றோரையா அல்லது ஆசிரியறையா அல்லது சமுதாயத்தையா என்ற பட்டி மன்றம் நமக்கு இப்போது வேண்டாம் ஆனால் இந்த சமுதாயம்(உலகம்) இப்படிதான் மாறி(நாசமாகி) கொண்டே போகும் என்பதும் , அப்படிப்பட்ட நேரத்தில் இந்த குழந்தைகள் வேறு வழி அறியாமல் வழி தவறி விட வாய்ப்பு உள்ளது என்பதும் நாமறிந்ததே, அந்த நான்கு காரணத்தில் மீதம் உள்ளவர்கள் பெற்றோரும் ஆசிரியருமே ,எனவே அவர்களின் பொறுப்பு மிக இன்றியமையாத ஒன்றும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய ஒன்றுமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தொடர்ச்சி 2
posted by Abdul Razak (Chennai) [23 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25199

இங்கு எப்படி இந்த உலகம் ஏமாற்றுகிறது அந்த பள்ளியின் முதல்வர் அப்படி என்னதான் சொன்னார் என்பதை நான் சொல்லாமல் பொதுவாக கூறுவது ஏனெனில் உதாரங்களின் மூலம் உங்களின் சிந்தனைகளை நான் சுருக்க விரும்ப வில்லை , இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய தகுதிக்கும்,அனுபவத்திற்கும் ஏற்றார் போல் உதாரணங்கள் அதிகம் நினைவிற்கு வரும் .

இறுதியாக இந்த comments மூலம் நாம் எதிர்பார்க்க வேண்டியது :

1)இது போன்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்பு /பிரிவிற்கு இடையிலும் நடத்தப்பட வேண்டும் , அதற்கு பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் ,மேலும் ஆசிரியர்களும் இதை உற்சாகமாக தங்களின் கடமையாக , இந்த மாணவனை /மாணவியை எப்படியாவது முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு நல்ல வழி என்பதை கடமை உணர்ச்சியோடு ,பொறுப்புணர்வுடன் இதில் செயல் பட வேண்டும் ,

2)கல்வி சம்மந்தமாக மட்டும் பேசி விட்டு களைந்து விடாமல் ,அத்துடன் சேர்ந்து இந்த சீர் கெட்டு கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்படி பல்முனைதாக்குதல்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றி கொள்வது என்பது சம்மந்தமாகவும் பேசப்பட வேண்டும்

3)இது போன்ற கூட்டங்களுக்கு Parenting[குழந்தை வளர்ப்பு] சம்மந்தமாக "Experts Lecture" எனப்படும் திறமை வாய்ந்த நிபுணர்கள் மூலமாக conselling போன்றவைகளும் சில சமயம் [குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது ] நடத்தப்பட வேண்டும் .

4)குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் , இது சம்மந்தமாக மறுமை நாளில் நாம் விசாரிக்கபடுவோம் என்பதை முதலில் பெற்றோரும் பின்னர் ஆசிரியர்களும் உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும் ,

5)குழந்தைகளை திருத்தும் முறை , கண்டிக்கும் விதம் சம்மந்தமாக முதலில் ஆசிரியர்களுக்கும் பிறகு பெற்றோருக்கும் Training Program [பயிற்ச்சி வகுப்புகள் ] நடத்த பட வேண்டும் .

6) இதில் அந்தந்த துறையினர் [தலைமை ஆசிரயர் , சக ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மீடியாக்கள் , சமூக நல விரும்பிகள் ,மார்க்க அறிஞர்கள்] தங்களால் எந்தெந்த விதங்களில் ஒத்துழைக்க முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் , ஏனில் நாம் ஒரு நல்ல மாணவனை மட்டும் உருவாக்கவில்லை இங்கு , நல்ல ஒரு சமூகத்தை /உலகத்தை உருவாக்குகின்றோம் , இதன் கூலி மிக்க மகத்தானது .

அல்லாஹ் நம் அனைவருக்கும் இதனை பயனுள்ளதாக ஆக்கி தருவானாக என்று ஒவ்வொருவரும் பிரார்த்திப்போமாக .. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாநிலத்தில் முதலிடம் பெரும் நாளை எதிர்பார்க்கும் காயளர்கள்,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [23 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25201

சென்னையை சேர்ந்த சகோதரர் ரஜாக் அவர்கள் எனக்கு பொதுவாக கருத்து பதிவு செய்யும் பழக்கமில்லை என்று சொல்லி ஒரு மெகா கருத்து பதிவை செய்திருக்கிறார், அவருடைய கருத்து பதிவில் இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றுகிறது, நினைத்ததை அடைந்திருக்கிறது என்று குறுப்பிடுகிறார். எதை ஏமாற்றுகிறது? எதை அடைகிறது? என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

எல்கே மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் ஆசிரியர் பெற்றோர் மாணவர்களிடையே உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து நல்ல தீர்வை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அவர்களுடைய விளக்கத்தில் கடந்த வருடம் பொது தேர்வில் கிடைத்த சதவீதம் பற்றியும், வரும் கல்வியாண்டில் நூறு சதவீத வெற்றி கிடைக்கும் என்றும் எனக்கு இந்த வருடத்தோடு பணி முடிவடைவதையும் குறிப்பிட்டுளார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்ன வென்றால் இதுவரை எல்கே பள்ளியும் சரி மற்றும் நம் ஊரில் உள்ள எந்த பள்ளியும் பொது தேர்வுகளில் இதுவரை முதலிடம் என்ன? மூன்றாவது இடம் கூட பெற்றதில்லை? நம் மாணவர்களுக்கு இந்த சாதனை தொடர்ந்து எட்டா கனியாகவே உள்ளது.

இந்த சாதனை என்று நம் ஊரு மாணவர்கள் பெறுவார்கள் என்ற ஆவல் முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், ஊரு பெரியவர்கள் என அனைவரின் உள்ளங்களில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது,

எனவே பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இதை அடைய வேண்டும் என்ற தீவிர முயற்சி செய்யவேண்டும் ,அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் குறிப்பிட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த சாதனையை வரும் கல்வியாண்டில் நிச்சயம் அடைவேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.

இந்த தலைமை ஆசிரியர் இந்த வெற்றியை தந்து விட்டு ஒய்வு பெறுவார் என எதிர்பார்ப்போம். எங்களுக்கு ஆசரியராக இருந்து இன்று வரை சிறந்து பணியாற்றும் ஹனீபா சார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...கருத்து குழப்பம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25202

பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் உறவுமுறைகள் பற்றி கருத்து சொல்லும் பெருந்தகைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது என் போன்ற சாதாரணமானவர்களுக்கு விளங்க முடியவில்லை.. பேசுவதை தெளிவாக, நேர்பட பேசினால் நறுக்கு தெறித்தாற்போல் பேசினால், ஆசிரியர்கள் அதற்கான முயற்சிகளை செய்வார்கள்.

நேற்று ஆண்டு விழாவிலே பேசிய முனைவர் சாகுல் ஹமீது அவர்கள் இரத்தின சுருக்கமாக, மிக ஆழமான கருத்துக்களை மாணவர்கள் முன்வைத்தார்கள். அவர்கள் பேசியது என்னவோ பத்து இருபது நிமிடங்கள்தான். ஆனால் அவர்கள் பேச்சை அறிவுரையை உள்வாங்கி அதன்படி செயல்பட ஆரம்பித்தால் மாணவர்கள் என்ன, முதிய தலைமுறைகளும் தொழில் அதிபர்களும் கூட பயன்பெறலாம். அவர்கள் சொன்னதை இந்த இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

ஜப்பானியர்கள் நினைப்பது. IF ONE CAN DO A THING, I TOO CAN DO IT... IF NONE CAN DO A THING I MUST DO IT.

இந்தியர்கள் நினைப்பது IF ONE CAN DO A THING, LET HIM DO IT. IF NONE CAN DO A THING, THEN HOW CAN I DO IT

எனது 60 ஆண்டு கால வாழ்வில் நான் கேள்விப்படாத பொன்மொழி என்னை உசுப்பி விட்டது நிமிர்ந்து உட்கார வைத்தது, எனக்கு 20 வயது இளமையை திருப்பி தந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

மாணவர்களையும் இந்த பள்ளிக்கூடத்தையும் அவர்கள் புகழ்ந்து பேசும்போது, தங்கமானவர்கள் நடத்தும் பள்ளி.. தங்க வியாபாரிகள் நடத்தும் பள்ளி தங்க மாணவர்கள் நீங்கள். பொன்விழா ஆண்டை கொண்டாடியவர்கள் - இங்கும் பொன் என்பது தங்கம். வைர விழாவை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள்... இங்கேயும் வைரம். எனவே மாணவர்கள் தங்கமானவர்கள் வைரமானவர்கள் என்று அவர் பேசிக்கொண்டே சென்றபோது இன்னும் பேசமாட்டாரா என்று தோன்றியது.

கதைகள் சொல்வதில் நாம் வல்லவர்கள். ஆனால் மருத்துவர் அஷ்ரப் அவர்களும் முனைவர் ஷாகுல் ஹமீது அவர்களும் சொன்ன கதைகள் உற்சாகமூட்டும் கதைகள். காக்கையை நரி ஏமாற்றிய கதையை அவர்கள் சொல்லி இருந்தால் அது இந்த காலத்துக்கு பொருந்தாது, மாணவர்கள் உற்சாகத்துக்கு அது ஊறு விளைவிக்கும் ஏமாற்றுவது முறையல்ல என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அந்த கதையை தவிர்த்து விட்டார்கள்.

ஒய்வு பெறும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு புகழ் சேர்ப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் வல்லவர் அல்ல, பள்ளிக்கு பொருள் சேர்ப்பதிலும் பரிசுகளை மாணவர்களுக்கு புரவலர்களிடமிருந்து பெற்று தருவதிலும் சாணக்கியர்.

மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை. உழைப்பையே ஓய்வாக எண்ணுபவர்களை களைப்பு ஒருபோதும் தாக்காது. இவர்களை பயன்படுத்தி கொள்ள வேறு பள்ளிக்கூடங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ. எங்கிருந்தாலும் வாழ்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கருத்தில் குழப்பம் இல்லை என் எழுதினால் உள்ள குழப்பம்
posted by Abdul Razak (Chennai) [24 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25203

2 சகோதரர்கள் என் கருத்து தெளிவாக இல்லை என்றிருந்தனர் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . என் கருத்து தெளிவாகதான் இருந்தது அதை எழுத்தாக வடிக்கும் போது பழக்கம் இல்லாததால் குழப்பம் இருந்திருக்கலாம்,திருத்திக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

என் கருத்தும் உங்கள் இருவரின் கருத்தும் நம் அனைவரின் கருத்தும் ஒன்றே அல்ஹம்துலில்லாஹ் .

எல் கே பள்ளி எம் பள்ளி , 14 வருடங்கள் அந்த பள்ளி மூலம் நல்ல கல்வியை கற்று இன்று அல்ஹம்துலில்லாஹ் நல்ல நிலையில் உள்ளோம் . எனவே அந்த பெ.ஆ கூட்டத்தில் எதுவும் குழப்பம் இல்லை . அல்ஹம்துலில்லாஹ் இனிதே நடந்தது . இது போன்ற கூட்டங்கள் அதிகமாக நடக்க வேண்டும் . இதன் மூலம் நம் குழந்தைகளை நல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா.

அடுத்ததாக "இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றுகிறது, நினைத்ததை அடைந்திருக்கிறது" , என்று குறிப்பிட்டது, சினிமா,ஆபாசம்,வன்முறை,ஒழுக்கசீரழிவு அவற்றை மாணவர்களும் அனைவர்களும் மிக எழிதில் அணுக முடியும் இப்போது , இதன் மூலம் இந்த உலகம் மாணவர்களை ஏமாற்றி நினைத்ததை அடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுருந்தோம்.

என் தலைமை ஆசிரியர் முஹம்மத் ஹனீபா சார் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள் , என்னை 5 வருடம் பக்குவப்படுதியவர் , கண்டிப்பும் நளினமும் உள்ளவர் . உங்களின் ஓய்வு இந்த பள்ளிக்கு ஒரு உண்மையான இழப்புதான் , அல்லாஹ் அதனை சரி செய்து ஞானையா சார் , ஹனீபா சார் போன்ற வரிசையில் இன்னொருவரை தருவானாக, மேலும் நீங்கள் ஆசைப்பட்டது போல் இந்த வருடத்தில் 10th 12th centum வாங்குவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக ..

சகோதரர்களே , இப்போது அந்த 6 points ஐயும் ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கு இப்போது விளக்கமாக இருக்கும் என நம்புகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved