Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:11:35 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10349
#KOTW10349
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 4, 2013
காயல்பட்டினம் பள்ளிக்கூடங்கள் மூலம் 455 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2664 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1 அன்று மாநிலம் முழுவதும் துவங்கியது. இத்தேர்வுகள் மார்ச் 27 வரை நடைபெறும்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வுகளை 19,054 மாணவர்கள் எழுதுகின்றனர்.

காயல்பட்டினத்தில் உள்ள 7 பள்ளிக்கூடங்கள் மூலம் 455 மாணவர்கள் இவ்வாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இவ்வாண்டு - முதல் முறையாக - எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 அரசு தேர்வுகளை சந்திக்கின்றது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- 113 மாணவிகள் [கடந்த ஆண்டு - 133]

சுபைதா மேல்நிலைப்பள்ளி
- 96 மாணவிகள் [கடந்த ஆண்டு - 98]

எல்.கே. மேல்நிலைப்பள்ளி
- 88 மாணவர்கள் [கடந்த ஆண்டு - 92]

சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி
- 80 மாணவர்கள் [கடந்த ஆண்டு - 75]

முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- 32 (26 மாணவர்கள்; 6 மாணவிகள்) [கடந்த ஆண்டு - 40]

சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- 24 மாணவிகள் [கடந்த ஆண்டு - 23]

எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- 22 மாணவிகள் [கடந்த ஆண்டு - ---]

கடந்தாண்டு 461 மாணவர்கள், காயல்பட்டினத்தில் உள்ள 6 பள்ளிக்கூடங்கள் மூலம் அரசு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே. மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிஆகிய பள்ளிகளின் மாணவர்கள் எல்.கே. மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.

அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவியர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர்.

தகவல் உதவி:
கே.எம்.டி. சுலைமான்,
நெய்னார் தெரு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [04 March 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25976

அணைத்து மாணவ,மாணவியர் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்வு பெற இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [04 March 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25977

தேர்வு எழுதும் மாணவ/மாணவியர் அணைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தாங்கள் நினைத்த துறைகளில் நினைத்த கல்லூரிகளில் இடம் பெற்று வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,தேர்வு எழுதும் போது தாங்கள் படித்தவைகள் மடை திறந்த வெள்ளம் போல் ஞாபகத்திற்கு வருவதற்காக, உங்கள் ஞாபக சக்திக்காக வல்ல அல்லாஹ்விடம் இரு கை ஏந்தி இறைசுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மன உறுதியோடு தேர்வு எழுதுங்கள்... வெற்றி நிச்சயம்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [04 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25986

நமது நகரில் தேர்வு எழுதும் மாணவ - மாணவியர்கள் அனைவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று (வெற்றி) தேர்வு பெற இறைவனை வேண்டுகிறேன்.

மன உறுதியோடு தேர்வு எழுதுங்கள்... வெற்றி நிச்சயம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மக்கி ஆலிம் நினைவு பரிசு 2013
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25988

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை ஹாஜி முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள் பெயரால் +2 பரீட்சையில் ஊரிலேயே அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெறும் முதலாம் இரண்டாம் இடத்தை பெறும் மாணவ மாணவிகளுக்கு மக்கி ஆலிம் நினைவு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அந்த பரிசினை பெறுவதற்கு மாணவ மாணவிகள் தயாராகி உற்சாகமாக பரீட்சை எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஏன் எண்ணிக்கை குறைந்துள்ளது, புரியவில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...+2 என்று இருப்பதை வேறு பெயரால் அழைக்கலாமே?
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25991

உலகத்தில் நமது நாட்டை தவிர வேறு எங்கும் இப்படி +2 என்று ஒரு பரீட்சை அழைக்க படுவதாக நான் அறிந்த வரை இல்லை. INTERMEDIATE, GENERAL CERTIFICATE OF EDUCATION, SECONDARY SCHOOL EDUCATION என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. நாங்கள் படிக்கும் காலத்தில் PRE UNIVERSITY COURSE என்று அழைக்கப்பட்டது.

தயவு செய்து ஊடகங்கள் இந்த கருத்தை மக்கள் மத்தியில் கருத்து கணிப்புக்கு விட்டு, கல்வி துறைக்கு அல்லது நமது முதல்வர் அவர்களுக்கு இந்த பெயரை மாற்ற பரிந்துரை செய்யலாமே. தந்தையின் பெயர்தான் INITIAL ஆக இருக்கவேண்டும் என்ற ஆங்கில மரபை மாற்றி அமைத்த முதல்வர் இதை செய்ய தயங்கமாட்டார் என நினைக்கிறேன். கொஞ்சம் மாற்றி யோசிக்க பழகுவோமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எதிலும் உறுதியாக இருந்து ...
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [04 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25994

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு மாணவமணிகளே!

நம்ம ஊரில் 455 மாணவமணிகள் தேர்வு எழுதுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது – அனைவர்களும் நன்றாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற வேண்டும் என்பதே! அடியேனின் ஆசை மற்றும் பிரார்த்தனையும்கூட.

------------------------------------------

ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படும் துறைக்கு செல்வதே சிறந்த செயலாகும் – அதுதான் அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

அவரவர் விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவர் சொல்படி வேறொரு துறையை தேர்ந்தெடுத்தால் அது நினைத்த பலனை எட்ட உதவாது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

அதனால் ஒருவர், ஒருத்துறையை எடுக்க முடிவு செய்துவிட்டால் அதில் உறுதியாக இருந்து, முயற்சித்து அதை பெறவேண்டும் – நிச்சயமாக அது அவருக்கு கிடைக்கும்.

---------------------------------------------

ஒருவேளை அவர் எடுக்க நினைத்த துறைக்கு தேவையான மார்க்குகளை அவர் பெற்றிருக்கவில்லை என்றால் அவர் மாற்று வழியைத்தான் தேடவேண்டும் அதில் தப்பேதுமில்லை.

தேவையான மார்க்குகளைவிட அதிக மார்க்குகள் கிடைத்துவிட்டது என்பதற்காக முதலில் தீர்மானித்த துறையை மாற்றுவதும் – இயல்பாக பொருந்திவரக்கூடிய செயலாகாது.

எனவே, முதலில் எடுத்த முடிவில் / தீர்மானத்தில் உறுதியாக இருந்து படித்தால் இறைவனருளால் வெற்றி நிச்சயம்.

---------------------------------------------

சென்ற ஆண்டு சில மாணவிகள் மதரஸாவிற்கு செல்வதற்காக முடிவு செய்து , அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கியபின் - மார்க்குகள் கூடுதலாக கிடைத்திருக்கிறதே அதனால் கல்லூரியில் சேர்ந்து படி என்று பிறர் சொன்னார்கள் என்பதற்காக மதரஸாவில் சேராமல் கல்லூரிக்கு சென்றார்கள்.

இது அவர்களின் உறுதியற்ற தன்மையை காட்டுகிறது - அதுமட்டும் அல்ல – மார்க்க கல்வியை கற்பதில் அக்கறையின்மையையும் தெளிவுப்படுத்துகிறது.

------------------------------------------------

மாணவிகளே! மாணவிகளின் பெற்றோர்களே!!

எதிலும் உறுதியாக இருந்து செயல்படுவதுடன் – மார்க்கக் கல்வியை புறக்கணிக்காதீர்கள் என்பதையும் – இன்றைய கல்லூரி வாழ்வு உங்கள் பெண் மக்களுக்கு எந்த வகையிலும் அதிக நன்மையை தரப்போவதில்லை என்பதையும் உணர்த்த விரும்புகிறேன்.

சுட்டால் சுடும் நெருப்பு என்பதை சொல்லால் உணர வேண்டும் – தொட்டுப்பார்த்துதான் உணர்வோம் என்றால் அது உங்கள் விருப்பம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்கள் அனைவருக்கும் நேர்வழியை பின்பற்ற தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

அன்புடன், “ மஹ்மூது மாமா “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை நோக்கி,,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM ) [05 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 26009

அரசு பொதுதேர்வு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.நம் ஊரு மாணவர்கள் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருந்தும் மாநிலத்தில் முதல் மூன்று இடத்தை பெறுவது எட்டா கனியாகவே இருக்கிறது.

இந்த வருடமாவது அந்த சாதனையை நம் ஊரு மாணவர்கள் பெற்று நம் ஊருக்கும்,படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்து தருவார்கள் என நம்புவோம். மாணவர்களின் வெற்றிக்காக உழைத்திடும் ஆசிரியர்கள்,நிர்வாகிகளுக்கு நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.

YOURS,
NIZAR .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. 455 நல்முத்துக்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [05 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26016

நமதூரின் 455 பேர்களும் மாநிலத்தில் முதல்வர்களாக மின்னவேண்டுமாய் மறையளித்த இறையோனை இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்!

விரிவான இதயமுடன் எதிபார்க்கும்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மல நீர்...? (?!)  (5/3/2013) [Views - 2835; Comments - 7]
இன்றைய மழை காட்சிகள்!  (5/3/2013) [Views - 3245; Comments - 6]
நள்ளிரவு முதல் இதமழை!  (5/3/2013) [Views - 2006; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved