Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:56:54 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10705
#KOTW10705
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 2, 2013
நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! காரசாரமான விவாதங்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3649 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், காரசாரமான விவாதங்களைத் தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்பு செய்தார்.

மேலும், பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றக் கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கும், இதர நலத்திட்டப் பணிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றுவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று சிறப்புக் கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அழைப்பு விடுத்திருந்தார். நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இக்கூட்டத்தில் ஒரேயொரு உறுப்பினரைத் தவிர வேறெவரும் கலந்துகொள்ளாததால் அக்கூட்டம் நடைபெறாமல் போனது.

இந்நிலையில், மீண்டும் அதே தீர்மானத்தை முன்வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி காலை 11.10 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:

கூட்டத்தில், பின்வருமாறு கூட்டப் பொருளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாசித்தார்.





துணைத்தலைவர் உரை:



கூட்டப்பொருள் வாசிக்கப்பட்டவுடன், எழுந்த துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், தான் மற்றும் தன்னுடன் அதிமுகவில் இணைந்த 10 நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பாக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களடங்கிய கடிதத்தை வாசித்தார். கடிதம் வருமாறு:-



அடுத்து எழுந்து பேசிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், இரண்டாவது குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியிலேயே வந்துவிட்டதாகக் கூறினார். அதற்கு பதிலளித்த துணைத்தலைவர், திமுக ஆட்சியில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதாகவும், அதிமுக ஆட்சியில்தான் நிதியொதுக்கப்பட்டது என்றும் கூறினார். இதை ஆட்சேபித்து கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஏ.கே.முஹம்மத் முகைதீன் கூறினார். ஆனால் புறக்கணிக்கவில்லை.

அடுத்து பேசிய 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 2006-2011 நகர்மன்றப் பருவத்தின்போது இத்திட்டத்திற்கு நிதியொதுக்கீடு செய்யவில்லை என்று கூறினார்.

அப்படியானால், முந்தைய நகர்மன்றத் தலைவர் 50 லட்சம் ரூபாய் இத்திட்டத்திற்காகத் தருவதாக சொன்னதன் பொருளென்ன என்று ஏ.கே.முஹம்மத் முகைதீன் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், அவர் நிதி தருவதாக வாய்மொழியாகவே கூறியதாகவும், எழுத்துப்பூர்வமாக எதுவும் தரவில்லை என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.

13ஆவது வார்டு உறுப்பினர் உரை:

பின்னர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் எழுந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை வாசித்தார். கடிதம் வருமாறு:-





இக்கடிதத்தில், தான் சார்ந்துள்ள கட்சியில் அண்மையில் தங்களை இணைத்துக்கொண்ட 10 நகர்மன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு, அவர்களுக்கும் நன்றி கூறினார்.

“அதிமுகவில் நான் சேரவில்லை” -03ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:

பின்னர் எழுந்து பேசிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் பெயரைக் கூறியது தவறு என்று வாதிட்டார். தான் மரியாதை நிமிர்த்தமாகவே அமைச்சரை சந்தித்ததாகவும், அதிமுகவில் தான் சேரவில்லை; அதன் உறுப்பினர் படிவத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்றும் சாரா உம்மாள் கூறினார்.



அதனை மறுத்த துணைத்தலைவர், அவர் எழுதித் தந்த கடிதம் தன்னிடம் உள்ளதாகக் கூறினார்.

03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் அதிமுகவில் இணைந்ததாக, ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வந்த செய்தியை, 13ஆவது வார்டு உறுப்பினர் கூட்டத்தில் அனைவருக்கும் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது.



18ஆவது வார்டு உறுப்பினர் உரை:

பின்னர், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி எழுந்து பேசினார்.



தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி வாக்களித்ததும் காரணம் என்றும், இரண்டாவது பைப் லைன் திட்டத்தைப் பொருத்த வரை, உறுப்பினர்கள் யார் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு, மீண்டும் ஒருமுறை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நன்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தின் தீர்மானத்தை, எந்த தனிநபரும் ஆதாயம் அடையாதிருப்பதற்காக, தமிழக முதல்வருக்கு, நகராட்சி ஆணையர் நேரடியாக அனுப்பி வைத்து, அதன் நகலை தங்களின் பார்வைக்குத் தருமாறு கூறினார்.

நகராட்சிக்கு புதுக் கட்டிடம் கட்ட அனுமதியளித்தமைக்கு நன்றி கூறிய அவர், அதற்காக அடிக்கல் நாட்டும்போது, இந்த வார்டு உறுப்பினர் என்பதற்காக தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதிவு செய்யாமல், அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

05ஆவது வார்டு உறுப்பினர் உரை:



அடுத்து 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் எழுந்து பேசினார். இத்தீர்மானம் கொண்டு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சிதான் எனினும், காயல்பட்டினம் நகராட்சியில் நடப்பு நகர்மன்றம் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் திட்டமல்ல இது என்றும், இதற்கு முன் பல திட்டங்கள் வந்துள்ளதாகவும், அப்போதெல்லாம் சிறப்புக் கூட்டம் நடத்தி நன்றி தெரிவிக்காத நகர்மன்றத் தலைவர் தற்போது மட்டும் சிறப்புக் கூட்டம் நடத்தி நன்றி தெரிவிக்க முனைவது தங்களை யோசிக்க வைப்பதாகவும், நெருடல் உள்ளதாகவும் கூறினார்.

சிறப்பு அறிவிப்பு என்பதால் சிறப்புக் கூட்டம்! –நகர்மன்றத் தலைவர்

அதற்கு பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், மற்ற திட்டங்களெல்லாம் நகராட்சி நிர்வாகத் துறை மூலம் வழமை போல பெறப்பட்டது என்றும், பயோ கேஸ் திட்டம் மற்றும் நகர்மன்றக் கட்டிடம் கட்டும் திட்டம் ஆகியவற்றை, தமிழக சட்டசபையில் முதலமைச்சரே நேரடியாக, காயல்பட்டினத்தின் பெயரைச் சொல்லி அறிவித்த சரித்திரப் புகழ்வாய்ந்த திட்டம் என்றும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை புத்தகத்திலும் இவ்விரு திட்டங்களும் “காயல்பட்டினம்” பெயருடன் இடம்பெற்றுள்ளதால், காயல்பட்டினத்திற்கு சரித்திரப் புகழ் கிடைத்துள்ளதாகவும், அதற்காகத்தான் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதேயன்றி வேறெந்த லாப நோக்கும் கிடையாது என்றும் கூறினார்.

நகராட்சி ஆணையருக்கு இக்கூட்டம் நடத்துவதற்கான கடிதத்தை தான் அளிக்கையில், “நகர்மன்றத்தின் சார்பில் இத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றே தான் கேட்டுக்கொண்டதாகவும், “தலைவராகிய நீங்கள் கடிதம் அளித்துள்ளதால், உங்கள் பெயரில்தான் கூட்டப்பொருள் வைக்க முடியும்” என்று, நகராட்சி தலைமை எழுத்தர் முருகேசன் கூறியதாகவும் கூறினார்.

தன் பெயரை மட்டும் குறிப்பிட்டு கூட்டப் பொருள் கொண்டு வந்தால் அதில் பிரச்சினை ஏற்படும் என்றும், இது காயல்பட்டினம் நகராட்சிக்குரிய திட்டம் என்பதால், நகர்மன்றத்தின் சார்பாக இத்தீர்மானத்தைக் கொண்டு வருவதே எல்லா வகையிலும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் தான் கூறிய பிறகும், தான் அக்கடிதத்தை அளித்ததால் தன் பெயரிலேயே கூட்டப் பொருளை அவர்கள் தயாரித்ததாகவும், அக்கூட்டத்தை தனது சுய லாபத்திற்காக நடத்துவதாக உறுப்பினர்கள் கற்பனையாக எண்ணிக்கொண்டு முந்தைய கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும் கூறினார்.

கூட்டத்தைப் புறக்கணித்ததாக தலைவர் கூறியது தவறு என்று உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். தான் சொன்னதை உறுதிப்படுத்த சில சான்றுகளை நகர்மன்றத் தலைவர் கூறினார். பின்னர் இது தொடர்பாக காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

பின்னர் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகராட்சியால் பெறப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முதல்வரின் அனுமதியுடனேயே பெறப்படுவதாகவும், ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் பல உறுப்பினர்கள் ஊரிலில்லாததால்தான் வரவில்லை என்றும், தெரு விளக்கு உட்பட முக்கியமான ஊர் தேவைகள் பல இருக்க அதற்காக சிறப்புக் கூட்டத்தை தலைவர் கூட்டியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தெரு விளக்கு உட்பட ஊர் தேவை பலவற்றை கூட்டப்பொருட்களாக வைத்தே பிப்ரவரி மாதம் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் இந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், அதன்பிறகு தெருவிளக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கு முன் அனுமதி வேண்டி தன்னிடம் கையெழுத்து கேட்கப்பட்டதாகவும், முன் அனுமதி பெற்ற அம்சங்களை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமியற்ற வேண்டும் என்ற நிலையிருக்க, நகர்மன்றக் கூட்டம் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் எதை நம்பி தான் முன்னனுமதிக்கு கையெழுத்திடுவது என்று கேள்வியெழுப்பினார்.

இவ்வாறாக, விவாதங்கள் நடைபெற்றன. நிறைவில், கூட்டப் பொருளில் உள்ளவாறு, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் சுமார் 15 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



இக்கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அசைபடக் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!

படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காக்காய் பனம்பழம் கதை தான்..!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [02 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27174

இந்த கூட்ட நிகழ்வுகளை கால தாமதமாக தந்தாலும், தரமாகவும் விபரமாகவும் தந்த இந்த வலைதளத்திற்கு பல நன்றிகள்.

2013ஆம் ஆண்டு ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவே, இந்த ஆண்டுக்கான ஜோக் இன்னும் வரவில்லையே என்று காத்துக்கொண்டு இருந்தேன், இதோ கிடைத்து விட்டது. அதுவும் நகராட்சி துணைத்தலைவரின் உரையை படித்து..

அதாவது " இவிங்க எல்லாம் அமைச்சர் முன்னிலையில் இணைந்தார்களாம், கோரிக்கைகள் வைத்தார்களாம், உடனே அமைச்சர் அம்மாவிடம் சொன்னாராம், அம்மா உடனே நிறைவேற்றினார்களாம்", ஆக இவர்களால்தான் இந்த திட்டங்கள் நமக்கு கிடைத்தனவாம். சிரித்து வயிற்று வலிதான் மிஞ்சியது. காக்காய் பனம்பழம் கதைதான்.

எப்படியோ, ஊருக்கு யார் மூலமாவது நன்மைகள் நடந்தால் சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [02 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27178

நலதிட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்புக்கூட்டத்தில், நகரமன்ற துணைத்தலைவரின் வாழ்த்து மடல் அணைத்து உறுபினர்களையும், மன்றத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதோடு நாளை வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 40ம் அம்மாதான் என்று கூக்குரல் இட்டு அமர்ந்தது - என்னை சிந்திக்க வைத்தது. நமது துணைத்தலைவர் வரும் பாராளுமன்ற தேர்தல் வரையாவது, நான் சார்ந்து இருக்கும் அ.தி.மு.க.வில் நீடிப்பாரா?

எதிர்கட்சியில் இருந்தாலும் உண்மையான விசுவாசமுள்ள தொண்டன் என்றால் 6வது மட்டும் 17வது வார்டு உறுபினர்தான். மக்கள்ளுகாக உண்மையில் தொண்டாட்டகூடியாவர்கள். சூழ்நிலயில் தவிர்க்கிறார்கள்.

5வது வார்டு உறுபினாரின் வினா சரியானதுதான். ஆனால் இந்த கூட்டதிக்கு பொருந்தாது. உறுப்பினர் அவர்களே எல்லா நலத்திட்டங்கள் நமது நகருக்கு வரும்போது, உறுப்பினர்கள் அனைவரும் சுயட்சையாக இருந்தார்கள். இன்று 75% உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்ததை ஒரு காரணமாக காட்டி தமிழக முதல்வரிடம் மேலும் நல்லவைகளை நகருக்கு கொண்டுவர ஆயுத்தம்.

13வது வார்டு உறுப்பினர், கட்சியில் இணைத்தவர்கள் அனைவரின் ஆதாரத்தை மன்ற அவையிலே நிரூபித்துவிட்டு, வாழ்த்தினார்.

18வது உறுப்பினர் நன்றி தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் வாதத்திற்கு முடிவின்றி ஒத்திவைக்க கட்டளையிட்டார். நகரமன்ற தலைவியோ கலக்கத்தில் தெளிவின்றி திகைத்தார். ஆணையார் ..................... என்ன சொல்ல, இவர் மாறினால்தான் இந்த நகரம் உறுப்படும். மண் குதிரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re: 2013இன் மகா காமெடி..
posted by S S Abdullah (Dubai) [03 May 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27179

அரசியல் நன்றாக விளையாடுகிறது. நேற்று தூற்றியவர்களை இன்று புகழ்கிறார்கள். நேற்று புகழ்ந்தவர்களை இன்று தூற்றுகிறார்கள். என்ன தங்கமான மனசு. இவர்கள் கட்சியில் சேருவதற்கு முன்பே திட்டம் pass ஆனதை மறந்து, கட்சியில் சேர்ந்த பிறகு அமைச்சரை கேட்டார்களாம்... முதல்வரை கெஞ்சினார்களாம்... திட்டம் வந்ததாம். முதல்வரும் இத்திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தார்களாம்..மக்களாகிய நாமும் நம்பனுமாம். புழுகுமூட்டைகள். துணை தலைவர் ரீல் விடுகிறார்.

இவர்கள் சுயேட்சையாக நிற்பார்களாம், ஜெயிப்பார்களாம். தங்கள் ஜமாஅத் மக்களின் முதுகில் குத்திவிட்டு ஒரு கட்சியில் சுய லாபத்துக்கு சேர்வார்களாம், பின்பு அந்த நகராட்சியே அந்த கட்சியின் கோட்டை ஆகிவிட்டதாம். தைரியம் இருந்தால் கட்சி சார்பில் நின்று ஜெயித்து கோட்டையா or கோட்டை விட்டார்களா என்பதை தன் கட்சி தலைமைக்கு உணர்த்தணும்.

ஆ..மா... நம்பிக்கை இல்லாதீர்மானத்தை வாபஸ் வாங்கினதாக செய்தி வந்ததே அப்படியானால் இந்த கூட்டத்துக்கு கூட தலைவி மீது நம்பிக்கை இல்லாமல்தான் கலந்துகொண்டதாக ஒரு உறுப்பினர் கூறுகிறார். எப்படி...தலை சுற்றுதே... ஒருவேளை இப்படி சொன்ன பின்பு (கட்சியிலிந்து ஆப்பு வந்து உடனே) தலைவி மீது மனதார நம்பிக்கை வந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கி இருப்பார்களோ. எல்லாமே இடிக்குதே.. மீதமுள்ள பதவிகாலத்தில் உறுப்பினர்கள் செழிப்பாக இருந்தால் சரி ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்பதால்.... வாழ்க ஜனநாயகம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...செம காமடி போங்க
posted by Husain Noorudeen (Abu Dhabi) [03 May 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27180

ஹெஹ்ஹெஹ்ஹெஹ!!!!! செம காமெடி போங்க.....

மச்சான் ஜியாவுத்தீன், இந்த செய்திய வாசிக்கும்போது என்ன கருத்த நான் எழுதனும்னு நெனச்சேனோ, அதையே உன்னுடைய பாணியில சூப்பரா நீ எழுதிட்டே.

அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகராட்சி சட்டவிதிகளின்படி...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [03 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27181

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தலைவர் அவர்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர்கள் 18 நபர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!

நகர்மன்றத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அதை முறையாக அரசுக்கும், அரசுத் துறைக்கும் நகராட்சி சட்டவிதிகளின்படி அனுப்பிடச் செய்யுங்கள் அதுதான் சிறந்தது. நகராட்சி விதிகளை மதிக்காமல் சூழ்நிலைகளுக்கேற்ப , உங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தகுந்த மாதிரி செயல்படுத்தினால் அது நகராட்சியின் செயல்பாட்டை இழக்கச்செய்திடும் , நம்பகத்தன்மையை மாற்றிவிடும் என்பதை மறந்திட வேண்டாம்.

-----------------------------------------

இக்கூட்டத்தின் தீர்மானத்தை , எந்த தனிநபரும் ஆதாயம் அடையாதிருப்பதற்காக , தமிழக முதல்வர் அவர்களுக்கு நகராட்சி ஆணையர் அவர்கள் நேரிடையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆணையர் அவர்கள் நேரிடையாக அனுப்புவதற்கு நகராட்சி விதிகள் இடம் கொடுக்காது – நகர்மன்ற தலைவர் மூலம்தான் அனுப்ப முடியும். இந்த விதியை சில காலமாக நகராட்சி மன்றம் பின் பற்றாமல் நடந்து வந்திருக்கிறது – இப்போதைய ஆணையர் அவர்கள் இதை அறியாமல் அல்லது அறிந்தும் சிலரால் தடுக்கப்பட்டு, தவறான வழிகாட்டலில் செயல்பட்டிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.

எனவே, நமது ஆணையர் அவர்கள் நகர்மன்ற தலைவர் மூலமே அரசுடனான பரிவர்த்தனைகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

-----------------------------

என்னுடையக் கருத்து ஏதோ தலைவருக்கு சாதகமாக இருப்பதாக நினைக்க வேண்டாம் – நகராட்சி விதிப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை பதிகிறேன். தலைவராக இருப்பது சகோதரி ஆபிதா என்பதற்காக அல்ல அந்த இடத்தில் யார் இருந்தாலும் அது ஆமினாவாகவோ, அப்துல் காதராகவோ , அப்துல்லாஹ்வாகவோ யாராக இருந்தாலும் என்னுடைய கருத்து இதுவாகத்தான் இருக்கும்.

இந்த தீர்மானத்தை தலைவர் அல்லது உறுப்பினர்கள் என்று யாராவது கையிலெடுத்துக்கொண்டு நேரிடையாக போய் கொடுப்பதை தவிர்த்து, நகராட்சியிலிருந்து தபால் மூலம் அனுப்புவது என்பது வரவேற்கத்தக்க வேண்டியதே!. ஆனால் அதில் விதியைத்தான் முறைப்படி பின்பற்ற சொல்கிறேன்.

எனவே நகர்மன்றம் சிறப்புடன் செயல்பட அதன் விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தலைவர் , உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் அனைவர்மீதும் கடமையாகும். அதை அனைவரும் பின்பற்றி நடக்க வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...AMMA THE GREAT
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27183

AMMA THE GREAT என்ற விளம்பரங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நமது நகர் மன்றத்தில் அதை எல்லோரும் வழி மொழிந்திருக்கிறார்கள், தலைவி உள்பட.

ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள். இந்த தீர்மானங்கள், இங்கே நடை பெற்ற சர்ச்சைகள் வாக்கு வாதங்கள் எல்லாம் அம்மாவை சென்றடையும். அவர்கள் கலைஞர் கருணாநிதியையும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும் ஏன் பீஜேபீ தலைவர்களை கூட துச்சமாக மதித்து தான் எடுத்து வைக்கும் கருத்துக்களை சரி என்று வாதாடி வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன கட்சியிலே ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களைக் கூட அவர்கள் செய்யும் தவறுக்காக தூக்கி எறிந்து விடக் கூடிய இரும்பு மனுஷி என்று பெயர் வாங்கி கொண்டிருக்கிறார். அவர் நம்மை பற்றி நமதூர் மக்களை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். யாரும் அந்த பெண்மணியை சாமானியமாக நினைத்துக் கொண்டு ஓஹோ என்று புகழ் பாடாதீர்கள்.

சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று..

.நான் யாரென்று புரிகிறதா....தீ என்று தெரிகிறதா .என்று விசுவரூபம் எடுத்தவர்களையே ஒரு கை பார்த்தவர்.அம்மா அவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இப்போதாவது நிலைமை மாறுமா?
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [03 May 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27189

எல்லோரும் ஆளும்கட்ச்யில் சேர்ந்துவிட்டோம். இனிமேல் இலஞ்சம் வாங்கவோ, ஈகோ பார்க்கவோ, பிரச்னை, குழப்பம் , உண்டாக்கவோ மாட்டோம் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதி கொடுக்க கடமை பட்டுள்ளார்கள் 17 உறுப்பினர்களும்.

தேர்ந்தெடுத்த மக்களுக்கு இவர்களின்பால் இருந்த அவநம்பிக்கை நீங்க மேற்கண்ட உறுதிமொழியுடன் மக்கள் நலப்பணிகளை செம்மையாக நிறைவேற்ற பெரும்கடமை பெற்றுள்ளார்கள்.

இதையே மக்களாகிய நாங்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன். இன்ஷா அல்லா.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னும் ஏற்றமிகு காலத்திற்காக ஏங்கும்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [03 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27192

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் என்ற பெருந்தன்மை கலந்த பெருத்த எதிர்பார்ப்போடு என்னுடைய கருத்தை முந்திய செய்தியாக இந்த இணயதளத்தில்தான் பதிவு செய்தேன். ஆனால்........

நகராட்சியின் நிகழ்வு அசைவு (வீடியோ) வை பார்த்த நான் பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்!
பெரும்பாலான உறுபினர்களின் உணர்வுகள் ஒரு சதவீதம் கூட மாறாமல் இன்னும் அவர்களின் இயல்பான நிலையிலேயே நிலைத்திருக்கிறார்கள்! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் நம் ஊரை!

2 வது குடிநீர் திட்டமானது கலைஞர் ஆட்சியிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டு, அதற்குறிய தீர்க்கமான வேலைகளெல்லாம் முழு மூச்சாக நடைப்பெற்றது என்பது நடுநிலை காயலர்களுக்கு தெரிந்த உண்மையாகும்!

இத்திட்டம் நம்ஊருக்கு வரவேண்டும் என்று அரும்பாடுபட்ட சகோதரர்கள் S.I.காதர் அவர்கள், ஜைனுதீன் அவர்கள் காயல் மகபூபு அவர்கள் காயல் அமானுல்லா அவர்களோடு மற்றும் பல சகோதர்கள் இன்றுவரை நிலையான சாட்சிக்குறியவர்கள் ஆவார்கள்!

ஆகவே, இத் திட்டத்திற்கு நன்றி கூறும் தீர்மானத்தை தி.மு.க.வைத் தவிர்த்து நிறைவேற்ற நகராட்சி முன் வருமேயானால், இந்த நன்றி கெட்ட உணர்வை நாடறிய நகராட்சி தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களையும் எதிர்த்து முச்சந்தியில் மேடைபோட்டு முழு கண்டனத்தையும் மக்களுக்கு தெரிவிக்க தயங்க மாட்டோம்!

நகராட்சி மன்ற கூட்டத்தில் தலைவியைப் பார்த்து, பேசியது: “போதும்,போதும் உட்காருங்கள், அவங்களை உட்க்காரச் சொல்லுங்கள், உட்டா ரொம்ப பேசிக்கொண்டே போகிறார்கள்” என்ற உரத்த குரலோடு கட்டளையிடும், "பாரட்டலா" பட்டம் சற்று பிசகிய 10ஆம் வார்டு உறுப்பினரின் கிண்டல் கலந்த கூத்தடிப்பை காண நேரத்து!

நகராட்சி தொடங்கிய 2 வது மாதத்திலேயே இவர் தலைவியைப் பார்த்து, எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால், நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள நாங்கள் துணைத் தலைவரை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றிகொள்வோம் என்று உயரிய யோசனை சொன்ன வெற்றிவேந்தன்,

"ஆக்ஸ்போர்டில்" இருக்கவேண்டியவர் அலியார்தெருவில் இருக்கிறார்!

அதனால்தான் என்னமோ
தேர்தலில் ஒரு அரசியல்வாதி தன் குடும்பத்தார்களோடு களம் இறங்கி, தன் ஆசானுடைய ஆட்காட்டி விரல் ஆணைக்கு அடியேன் சரணம் என்று "அரும்" பாடுபட்டு அந்த வார்டை வெற்றிபெற செய்திருக்கிறாரோ?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

இன்னும் ஏற்றமிகு காலத்திற்காக ஏங்கும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள்.
posted by Hameed Rifai (Yanbu - KSA) [04 May 2013]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 27197

கருத்து எழுதவே மனம் வரவில்லை. அந்தளவுக்கு சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் நகர்மன்ற உறுப்பினர்கள். இருந்தாலும், மனதில் குடைந்துகொண்டே இருப்பதால், சில கேள்விகளைக் கேட்டு விடுகிறேன்.....

03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் அவர்களே!

(1) தாங்கள் உட்பட 10 உறுப்பினர்கள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்ததாக தினகரன் உள்ளிட்ட நாளிதழ் செய்திகள் தெரிவித்துக்கொண்டிருக்க, “இல்லை” என மறுக்கிறீர்களே? அப்படித்தான் என்றால், தங்களைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு முறையாக மறுப்பு அளித்துவிட்டீர்களா?

(2) தாங்கள் அதிமுகவில் இணைந்ததற்கு கடித ஆதாரம் இருப்பதாக துணைத்தலைவர் மும்பை முகைதீன் சொல்கிறாரே, இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

(3) “மரியாதை நிமிர்த்தமாகவே அமைச்சரை சந்தித்தேன்” என்று கூறும் தாங்கள், கட்சியில் சேரச் சென்ற உறுப்பினர்களுடன்தான் சென்றிருக்க வேண்டுமா? வேறு நேரமே தங்களுக்குக் கிடைக்கவில்லையா?

05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்களே!

இப்போதும் தலைவி மீது நம்பிக்கையில்லாமல்தான் இருந்துகொண்டிருக்கிறோம். ஊர் நலனுக்காகவே மீட்டிங்கில் கலந்துகொண்டுள்ளோம் என்று சொல்லும் தாங்கள்,

(1) ஊர் நலனுக்காக தெரு விளக்கு உதிரிபாகங்கள் வாங்கவும் கூட்டப்பொருள் வைக்கப்பட்ட பிப்ரவரி மாதக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன் என்ற தலைவியின் கேள்விக்கு தங்கள் பதில் என்ன?

(2) இதுவரை தாங்கள் எந்தெந்தக் கூட்டங்களில் எது எதற்காக வெளிநடப்பு செய்தீர்கள் என்று பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா? அப்படி சொன்னால், உங்கள் மக்கள் நல உணர்ச்சி மேலீட்டை நாங்களும் அறிந்துகொள்வோம் அல்லவா?

(3) நகர்மன்றத் தலைவி அவர்கள் தன் சொந்தச் செலவில் (கருப்புப் பணமல்ல!) நடத்திய பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் மீது - குறிப்பாக உங்கள் மீது குற்றஞ்சாட்டி பல விஷயங்களைச் சொன்னார்களே? அவற்றுக்கெல்லாம் அறிக்கை மூலம் பதில் அளிக்க தயாரா?

06ஆவது வார்டு உறுப்பினர் மம்மி ஹாஜியார் அவர்களே!

(1) இரண்டாவது பைப்லைனுக்கு, பழைய சேர்மன் வாவு செய்யிது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள் பணம் தருவதாகக் கூறியதாக தாங்கள் கூற, “அவர் பணம் தருவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை” என்று துணைத்தலைவர் கூறுகிறாரே? இதன் உண்மை நிலை என்ன?

(2) வாவு செய்யது அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்கள் பணம் கொடுத்தார்களா அல்லது வாக்குறுதி மட்டும்தானா?

கேள்விகள் (தேவைப்பட்டால்) தொடரும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...மனம் பொறுக்குதில்லையே....
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [05 May 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27217

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிகக்கும் கூட்ட அசைப்பட நிகழ்வை கண்டேன். அதில் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டிய உறுப்பினர்கள் கண்ணியமில்லாமல் நடந்துக்கொண்டார்கள். (குறிப்பாக 10 ம்வார்டு உறுப்பினர்) மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விவஸ்தையே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

இவர்கள் இன்னும் 3 ஆண்டுகளுக்கும் இப்பிடித்தான் இருப்பர்களோ எனும் சந்தேகம் வருகிறது. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட இவர்களை திரும்பப்பெற சட்டத்தில் இடமிருக்கா என்று மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டர்க்கை என்றால் அதுமிகைஅல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved