Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:44:46 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10944
#KOTW10944
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 2, 2013
காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4554 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத்தலைவர் (நிர்வாகம்) ஸ்ரீனீவாசன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையை, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA அண்மையில் பொதுப் பிரசுரமாகவும், இணையதளங்களில் செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவரும், மத்திய சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீடு குழு (சுரங்கம்) உறுப்பினரும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் குழு உறுப்பினருமான டாக்டர் த.முஹம்மது கிஸார் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-

DCW துணை தலைவரின் அவதூறு அறிக்கைக்கு, மறுப்பும் கண்டனமும்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் DCW ஆலை துணைத்தலைவர் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள , தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் தமது ஆலை பற்றி சமர்பித்த அறிக்கையில் மிக அவதூறான , மத துவேஷம் கலந்த கருத்துக்களை பதிவு செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஆலை ஆரம்பித்து இதுநாள் வரை தாங்கள் அத்துமீறி சுற்றுப்புற சூழலை மாசுபடுத்திவந்ததை ஒரு சில கண்டன குரலோடு மட்டும் நிறுத்திகொண்ட இந்த மக்கள் திடீரென்று , உணர்வு பெற்று , மிக ஆக்ரோசமாக எதிர்ப்பதால், எங்கு தங்கள் ஆலைக்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் சேற்றை வாரி தூவயுள்ளார்.

இதுநாள் வரை ஆலை சம்பந்தமாக நடந்த எந்த public hearing , எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் , தாங்கள் setup செய்த ஆள்களை வைத்து நடந்து வந்ததற்கு மாற்றமாக , கடந்த 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த public hearingஇல் காயல்பட்டினம் சார்ந்த பொதுநல ஆர்வலர்கள் , ஆலையின் கேப்ப மாரிதனத்தை போட்டு உடைத்து காட்டியதை கண்டு பொறுக்காமல், தனது விசத்தை இப்படி கக்கி இருக்கிறார் .என்ன மாசுபடுத்தினாலும் இந்த ஊர் மக்கள் கேட்கவே மாட்டார்கள் என்ற நிலை மாறி, இன்று ஆர்பபாட்டம் கடையடைப்பு, மாநிலம் முதல் மத்திய அரசுவரை சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் அமைச்சர்களுக்கு புகார் என்று சென்றதை ஜீரணிக்க முடியாமல் இப்படி புழுதிவாரி உள்ளார்.

இந்த நிகழ்வுகளால், எங்கே தனது அடுத்த தலைமுறை வரை வாழ்வாதாரம் மற்றும் வேலை கேரன்டீ செய்தது வீணாகிவிடுமோ என்ற பயம் மற்றும் ஆதங்கத்தில் இப்படி உளறி கொட்டி உள்ளார்.

இனி அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றசாட்டுக்கு மறுப்பு தருகிறேன்.

----காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கைமுறை மற்ற , மக்களைவிட வித்தியாசம் எனபது, பெரிய அளவில் பொதுநிலையில் இருந்து விலகி (deviation ) இருக்கவில்லை பொதுவாக தம் இடம் ,மதம் தொன்றுதொட்டு வரும் சற்று மாறுபட்ட வாழ்கையே இது.இது எல்லா சமூகம் மற்றும் ஊரிலும் உண்டு .

-----எல்லோருமே தங்கள் மதம் ,சமயம் ஜாதி சம்பநதப்பட்ட மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் பொருட்டே தங்கள் வாழ்வு முறையை அமைதுள்ளனர.இதற்க்கு காயல்பட்டினம் மக்கள் எந்த விதிவிலக்கும் இல்லை

-------பொதுவாக காயல்பட்டினம் மக்கள் தான் தங்கள் வீட்டை விசாலமாக மிக பெரியதாக கற்றோட்டதுடன் கட்டி வருபவர்கள். இதை மற்ற ஊர்களை ஒப்பிடும்போது கண்கூடாக பார்க்கலாம். வீட்டூக்கு முன் இடம், வீட்டில் முற்றம் , வீட்டுக்கு பின்புறம் தோட்டம் , இதுபோன்ற வசதியுடன் , ஒன்றுக்கு இரண்டு மாடி ,இதுபோக ஆரோக்கியமான காற்றுக்கு கடல்கரை , சற்று இளைப்பாற அருகில் உள்ள ஊருகளில் பண்ணை வீடுகள் என்று சராசரியாக மிக ஆரோக்கியமாகவும் , சந்தோசமாகவும் வாழ்ந்து வருபவர்கள் இந்த மக்கள் என்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் ஆனால் அதிகம் படித்த திரு ஸ்ரீனிவாசன் , முழு பூசணிக்காயை , சோற்றில் மறைக்கும் வண்ணம் குற்றம் சாற்றி இருக்கிறார்..

இருந்தாலும் அவரின் குற்ற சற்று ஒரு வாதத்திற்காக உண்மை என்று வைத்தாலும் ,இந்த மிக நெருக்கமான சூழ்நிலையில்வாழ்வதால கேன்சர் வரும் என்று எந்த மருத்துவ நூலும் கூறவில்லை.

--- இன்றைக்கு இந்தியா போன்ற நாடுகளை எடுத்து கொண்ட மிக அதிக சதவிகித்தினர் வைட்டமின் D சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது காயல்பட்டினத்தில் மட்டும் இல்லை.. அண்மையில் சென்னை காஞ்சி காமகோட்டி child Trust மருத்துவமனையில் பணிபுரியும், சுமார் 106 குழந்தை நல மருத்துவர்களுக்கு இரத்தத்தில் vitamin D அளவு பரிசோதித்ததில் 80 சதவிகிதத்தினருக்கு மேல் வைட்டமின் d குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அறிக்கை Indian Academy Paediatrics , chennai chapter மாதந்திர கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் savera hotel , வைட்டமின் D என்ற தலைப்பில் நடந்த பொது, அந்த மருத்துவமனை superindentent Dr Balasubramaniam வெளியிட்ட அறிக்கை.

-----இரத்த சம்பந்தத்துடன் திருமணம் புரிவதால் சில genetic நோய்கள் வருவது உண்மையே என்றாலும், குற்றசாட்டும் அளவுக்கு இரத்த சம்பந்தமாக மணமுடித்தால் கேன்சர் வரும் என்று சொல்ல இயலாது காயல்பட்டினம் , மக்கள் வெறும் 2 ஆம் மற்றும் 3 ஆம் நிலை இரத்த சம்பந்தம் (2nd ,3rd டிகிரி consaginous marriage ) தான் செய்கிறார்கள் .யாரும் முதல் இரத்தம் சம்பந்தம் (1st டிகிரி consaginous marriage ) க்கு சற்று நிகரான அக்காள் மகளை யாரும் மணமுடிப்பது இல்லை.

இரத்தம் சம்பந்தமான மணத்தில் புற்று நோய் போன்ற மற்ற நோய்கள், வரும் என்றால், அதிக இரத்த சம்பந்தம் உடைய மணமான அக்காள் மகளை முடிப்பதில் வரணும்மா அல்லது 2nd , 3rd டிகிரி consaginous ஆனா மாமா மாமி சித்தப்பா பெரியப்பா மகளை முடிப்பதில் வரணுமா?

இந்த ஊரில் எல்லா குடும்பங்களிலும் உடல் ஊனமுற்ற குழந்தை பிறக்கிறது என்பது இவரின் வறட்டு வாதம்.

-----மிக நெருக்கமான திருமணத்தால் மட்டும் எப்படி வைட்டமின் குறைபாடு வரும்.. வைட்டமின் குறைப்பாடு உணவு பற்றாகுறையால் வரும்.. இந்த ஊர் மக்கள் அல்லா உதவியால் எந்த உணவு குறைபாடும் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லபோனால் , சுத்த சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே பிரத்யோகமாக வைட்டமின் B 12 குறைப்படும், அதனை சார்ந்த megaloblastic இரத்த சோகை , SCDP என்னும் முது தண்டுவட பாதிப்பு வரும்.. இந்த ஊர் மக்களில் சுத்த சைவம் என்று ஏரையும் காட்ட முடியுமா ..கண் கண்ணாடி அணிபவர்கள் எல்லா ஊரில் தான் இருக்கிறார்கள்.கண் கண்ணாடி அணிபதர்க்கு பல பல காரணங்களா உள்ளன ...இன்னும் இந்த ஊர் மக்கள் அசைவம் சாப்பிடுவதால் கண்ணுக்கு செல்லும் optic nerve மேலும் பலம் பெற்றும் நல்ல பார்வையே தரும்.

----- இந்த ஊர் மக்கள் வெளிநாடு களுக்கு சென்று பிழைக்க காரணம் இந்த மக்களுக்கு வரவேண்டிய நியாயமான வேலை வாய்ப்பை , இவர்கள் போன்றோர் பறித்ததநிலை..வெளிநாட்டில் சென்று யாரும் ac இல் உட்கார்ந்து வேலை செய்யவில்லை .மிக கடினமாக உழைக்கிறார்கள் ஊரில் வந்தது மனைவியருடன் மிக சந்தோசமாக இருக்கிறார்கள்.. இதைவிட உடற்பயிச்சி எதுவும் பெரிதாக இல்லை.

-----உணவு சமைக்கும் பாத்திரத்தில் அலுமினியம் முலாம் பூசம் வழக்கம் பெரிய சமையல் கலை வல்லுனரிடம் உள்ளது அது இங்கு மட்டும் இல்லை..எல்லா ஊரிலும் தான் பெரிய சமையல் பத்திரங்களில் அலுமினியாம் பூசுகிறார்கள் .இவர் சொல்வது போல் கிலோ கணக்கில் யாரும் அலுமினியும் பூசுவது இல்லை. அதை பூசும் வல்லுனருக்கு எந்த பாத்திரத்திற்கு எவ்வளவு அலுமினியம் பூச வேண்டும் என்பது திரு ஸ்ரீனிவாசன் விட நன்கு தெரியும்.

----இந்த எண்ணை , நெய் பயன்படுத்தும் விசயத்தில் இந்த ஊர் மக்கள் மற்ற வர்களை விட பெரிய வித்தியாசமில்லை .இன்னும் சொல்ல போனால் சில சமுதாய மக்கள் மாமிசம் சாப்பிடாமல் மிக அதிக அளவில் நெய் , மற்று டால்டா பயன்படுத்க்கிரார்கள் ...இந்த ஊர் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது இவர் குறிப்பிடுவதை போல் யாரும் அதிக அளவில் dalda பயன்படுத்துவது இல்லை.இந்த ஊரில் , தாய் மண்ணில் பிறந்த சுமார் 118 மருத்துவர்கள் இருந்து, மக்களுக்கு எந்த மாதிரி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறார்கள்..

----அசைவம் உண்பவர்களுக்கு என்று பிரயோக நோய்கள் இருந்தாலும், அதை வென்று எடுக்க இந்த மக்களுக்கு தெரியாமல் இல்லை.. அசைவதுடன் நல்ல ஆரோகியமான நடைபயிற்சி சந்தோசமான மனநிலை மற்ற பழம் போன்ற உணவுகளுடன் ,அசைவம் அதிகம் சாப்பிட்டால் வரும் பிரச்சினையை வென்று எடுக்க இந்த மக்களுக்கு தெரியாமல் இல்லை.

அசைவம் போன்ற மாட்டு இறைச்சி பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மட்டுமே வரும் cysticercosis என்னும் நோய் சுத்த சைவ உணவை சாப்பிடும் டென்னிஸ் வீரர் leander paes க்கு எப்படி வந்தது.. அசைவம் சாப்பிடாமல் வெறும் சைவம் சாபிடுபவர்களுக்கு என்று வரும் பிரத்யேக நோய்களும் உண்டு ..ஆக எல்லா உணவு முறைகளிலும் அதற்கென பிரத்யோக நோய்கள் உள்ளன. அது அவர்களின் மரபு சுற்றுசூழலை பொறுத்து வெளிப்படும் அல்லது மறையும்.

----சில்வர் கவர் செய்யப்பட்ட இனிப்பு வ்காகைகள் இந்த ஊரைவிட மற்ற ஊர் இனிப்பு கடைகளில் தன அதிகம் பார்க்கலாம்..

---செல்போன் டவர் இல்லாத ஊர் எங்கே இருக்கிறது.. நகர்ப்புறங்களில் தெருவுக்கு 4 செல்போன் டவர் உள்ளது.இதை எல்லாம் ஒரு காரணம் என்று கூறினால் கேட்கிறவன் காதில் கேப்பை வடிகிறது என்று நினைத்து கொண்டாரா

----மாத்திரை பயன்பாடு இந்த ஊரில் அதிகம் உள்ளதற்கு காரணம் உங்கள் ஆலையின் சுற்றுப்புற சூழல் மாசுபாடதே காரணம்.. இவர்கள் விடும் நச்சு புகையால் கேன்சர் போன்ற நோய்கள் வரவில்லையாம்.ஆனால் நோய்க்கு எடுக்கப்படும் மாத்திரையால் கேன்சர் வரும் என்று இவர் கூறுவதை ஏற்ற்றுகொள்ள TNPCB அதிகாரிகள் ஒன்றும் LKG படித்து விட்டு அந்த இடத்திற்கு வரவில்லை..

---'நாங்கள் பலவருடங்களாக இங்கு பணியாற்றி இந்த தொழிற்சாலை குடியிருப்பில் தான் வாழ்கிறோம். பணிஓய்வுக்கு பின்னும் இங்குதான் இருக்கிறோம். அப்படி ஒருசமயம் தொழிற்சாலை மூலம் பாதிப்புஏற்பட்டால், அது முதலில் எங்களை பாதித்துவிட்டுத்தான், காயல்பட்டினம் மக்களை பாதிக்கவேண்டும். நாங்கள் மிக ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். 'இது DCW தொழிற்சாலையில் பணியாற்றி ஒய்வுபெற்ற முன்னாள்பணியாளர்கள் கூறுவதாகும். மேலோட்டமாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், இது நிதர்சனமான உண்மை அல்ல.

ஒரு தொழிற்சாலையில் விபத்தோ அல்லது சுகாதாரப்பாதிப்போ ஏற்பட்டால், அந்த தொழிற்சாலைகக்குள் அல்லது அதனை ஒட்டிவாழும் மக்களை விட, அதனைச்சுற்றி, சற்று தொலைவில் உள்ள ஊர் மக்களைதான் பாதிக்கும்.

இதை போபால் விஷவாயு பாதிப்பில் நம்கண்கூடாக பார்த்தோம். அங்கு union carbide ஆலையில் இருந்த எவரும் methyl isocyanaide வாயுவால் பாதிக்கப்படவில்லை. அதைசுற்றி இருந்த ஏரியாமக்கள்தான் பாதிக்கபட்டர்கள் எனபது உண்மை.. எனவே இந்தவாதமும் அடிபட்டு போகிறது.

---குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எந்த புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளுக்கு ஆட்படாமல், எந்த புற்றுநோய்க்கான அதிக ஆபத்து என்ற Risk Factor இல்லாமல் இருந்தும், அவர்களை புற்றுநோய் அதிக அளவில், வீரியத்துடன் தாக்கி வருகிறதை பார்க்கிறோம்.

இதற்கு என்ன காரணம் இருக்கும் எனபல அமைப்புகளும் ஆராய்ந்ததில், அனைவரின் கைகளும் அருகில் உள்ள DCW தொழிற்சாலையை நோக்கித்தான் நீளுகிறது.

இதை நம் ஏதோ சந்தடி சாக்கில் கூறவில்லை.இந்த தொழிற்சாலையை புற்றுநோய் ஏற்படக்காரணம் என்று, உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், சூழ்நிலை சான்றுகள் (circumstantial evidence) மற்றும் corrobarative evidence எனப்படும் நிலையில், நாம் அந்த தொழிற்சாலையை சந்தேகிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

காயல்பட்டினத்தில் அதிகம் cancer ஏற்படுத்தும் gene என்னும் oncogene இருப்பதாக அதிகம் அறியப்படவில்லை. ஏனென்றால், இந்த oncogene இப்போதைக்கு எந்த பரிசோதனைமூலம் நிரூபிக்க முடியாவிட்டாலும், இந்த oncogene மூலம் ஏற்படும் கேன்சர் அதிகம் ஒரேகுடும்பத்தை சேர்ந்த இரத்த பந்தங்களையும், பரம்பரையையும் பாதிக்கும்.

---நாம் அறிந்த வரை காயல்படினத்தில் உள்ள, அதிகமான கேன்சர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களையோ அல்லது பரம்பரையிலோ வரவில்லை என்றே தெரிகிறது. இதனால் மரபியல் காரணமாக இங்கு அதிகம் கேன்சர் காணபடுகிறது என்றவாதம் அடிபட்டுபோகிறது.

இந்த ஊரிலோ அல்லது சுற்றுபுறத்திலோ, carcinogen என்னும் cancer உண்டு பண்ணும் காரணிகளை முக்கியபொருளாகவோ அல்லது கடைநிலைபொருளாகவோ கையாளும் தொழிற்சாலை DCW தவிர வேறு இல்லை.

இந்த ஊரில் ஏற்பட்டுள்ள cancer களில்அதிகம் , நுண்கிருமிகளால் ஏற்படும் cancer அல்ல. அதனால் கிருமிதாக்கத்தினால் கேன்சர் ஏற்படுகிறது என்றவாதமும் நிற்கவில்லை. கிருமியினால் வரும் கான்செர்அனேகமாக கல்லீரல்புற்று மற்றும் கருப்பை வாய்புற்று மட்டுமே. இரண்டுமே இங்கு மிகமிகக் குறைவு.

இந்த ஊரில் உள்ள அசைவஉணவு உள்ளிட்ட உணவுபழக்கம் தான் அதிககேன்சர் வரகாரணம் என்றும்கூற முடியாது. இதை எந்த மருத்துவ ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. இது ஒரு காரணமாக இருந்தால், அதிக கேன்சர் எண்ணிக்கை அரபு நாடுகளில்தான் இருக்கவேண்டும்.

ஊரை சுற்றியோ, சிலபல கிலோமீட்டர் தூரம் வரை, நாம் அறிந்த வரை புற்றுநோயை உண்டு பண்ணும் கதிரியக்கம் expose ஆனதாக சரித்திரம் இல்லை.

இதை வைத்துபார்க்கும் போது DCW தான் இந்தநோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. காரணம், அதுகையாளும் பொருள்களில் சில carcinogen என்னும் cancer உண்டுபண்ணும் காரணிகள் வகையைசார்ந்தது. இந்ததொழிற்சாலை, பலமுறை அரசுவிதி முறைகளை மீறி காற்றிலும், கடலிலும் தனது இரசாயனகழிவுகளை வெளியேற்றியதை ஆதராத்துடன் நாம் பார்த்திருக்கிறோம்.

இதை வைத்து ஒரு circumstantial evidence மற்றும் corroborative evidence ஆகவைத்து, நாம் இந்தகுற்றச்சாட்டை அந்த தொழிற்சாலை மீது வைக்கிறோம்.

பொதுவாக ஒரு தொழிற்சாலை மீது சுற்றியுள்ள மக்களுக்கு அந்த தொழிற்சாலை மீது சுகாதாரரீதியாக அச்சம் ஏற்பட்டால், அந்த அச்சத்தை போக்கும்வரை, தனது உற்பத்தியை நிறுத்திவைப்பது அல்லது மேலும் விரிவாக்கபணிகளுக்கு செல்லாமல் இருப்பது அல்லது முழுவதுமாக அந்த அச்சத்தை போக்குவது அந்த தொழிற்சாலையின் தார்மீக கடமை.

ஆனால் இதில் எதையும் DCW செய்யவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், மேலும் கடலில் அவ்வப்போது, தனது அமிலக் கழிவைத் திறந்துவிட்டு, நமது அச்சத்தை மேலும் அதிகமாக்கியே வைத்துள்ளது.


இவ்வாறு, அந்த அறிக்கையில், டாக்டர் த.முஹம்மது கிஸார் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.I.Moosa Naina (Madina) [02 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27708

மிக மிக அருமையான பதிலடி. முடியுமானால் எந்த சங்கமாவது இந்த அறிக்கையை பிரசுரமாக வெளியிட்டு மக்களுக்கு தெரியபடுத்தும்படி கேட்டு கொள்கிறேன். ஏனெனில், ஊரில் எல்லோரும் இணையதலத்தை பயன்படுத்துவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DCW ஸ்ரீனிவாசா எங்களை சீண்டி பார்க்காதே!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [02 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27710

அண்மையில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் DCW யிலிருந்து வரும் கழிவு நீரிலும், மண்ணிலும் மாசு இருப்பதை ஊரிஜிதம் செய்து அறிக்கை அனுப்பியது!

அதை மேற்கோள் காட்டி கடந்த வாரம் DCW நிர்வாகத்திற்கு இந்த அறிக்கையை தீவிரமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுங்கள் ,உங்கள் ஆலையை மூடுவது எங்கள் நோக்கமல்ல ,நம்முடைய சுற்ற சூழல் மாசுபடாமல்,நோய் கிருமிகள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு!என்கின்ற மென்மையான வேண்டுகோளை விடுத்திருந்தேன்!

என்னைமட்டுமல்ல நமதூரின் நடுநிலைவாதிகளின் பெருந்தன்மையான அணுகுமுறையைக்கூட அலட்சியம் செய்து,உங்களால் ஆனதை பாருங்கள் என்ற ஆணவத்தோடு அந்த ஆலையின் துணைத்தலைவர் நமதூரையும்,நம் புனித மார்க்கத்தின் அடிப்படையில்வாழும் வாழ்க்கைமுறை கலாசாரத்தையும் கொச்சைபடுத்தும் முகமாக அறிக்கை என்ற பெயரில் அவரின் மனித நிலை தாண்டி கொப்பழித்து இருக்கிறார்!

அவருடைய குற்றசாட்டுக்களை ஏறக்குறைய அவரது பாணி யிலேயே பதில் அளித்தால்தான் உரைக்கும்!

கேள்வி பதில்களை வரிசைபடுதுத்துகிறேன் கீழே:

கேள்வி>1 தனித்த வாழ்க்கைமுறை,2 செனட்டில் எந்த வெளிச்சமும் ,வெளிக்காற்றும் புக முடியாத அளவிற்கு நெருக்கமான வீடுகளின் அமைப்பு!>>>>>இது குற்றசாட்டு.

பதில்>>>> அப்பா! நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர், அருகிலுள்ள சென்னை பட்டணத்தைப் பார்க்கவில்லையா? ஒவ்வொரு வீடும் நல்ல இட வசதியோடும்,.காற்று மற்றும் சூரிய வெளிச்சதோடும் அல்லவா ஜொலிக்கிறது! உம்நெஞ்சை தொட்டு சொல்லும்,. உம்முடைய பாணியில் அந்த நெருக்கடி குடித்தன வாழ்க்கை வாழும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 90%புற்று நோய் பீடித்திருக்க வேண்டுமே ?

தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் நடுவே போதுமான இடைவெளி விட்டு,சந்து அமைத்து வீடு கட்டி சகல சுகாதார காற்று வெளிச்சத்தோடு அமையும் ஒரே ஊர் எங்கள் காயல் பட்டணம் ஒன்றுதான்! இதுபோலுள்ள வேறு ஊரை இந்த அமைப்புக்களோடு காட்ட முடியுமா?

கேள்வி>> ரத்த பந்தங்களுடன் திருமண உறவு>>>>> குற்றசாட்டு

பதில்>>> உடன்பிறந்த சொந்த சகோதிரியின் மகளை மனம் முடிக்கிறீர்களே? அது ரத்த பந்தம் ரத்த உறவு இல்லையா? அந்த ரத்த உறவால் உம்முடைய கணிப்புப்படி ஆயிரகணக்கான ஏன் இலட்சக்கணக்கானவர்களுக்கு கேன்சர் நோய் வரவேண்டுமே ஏன் உமது கணிப்பு தவறுகிறது?

கேள்வி>>3 காயலர்கள் பெரும்பாலோர் வெளி நாட்டில் இருக்கிறார்கள்>>>>குற்றசாட்டு

பதில்>> நான் முதல் ஏராளமானோர் வெளி நாட்டில் தான் வாழ்கிறோம் அதனால் கேன்சர் வருகிறது என்றால், இதோ இங்கே நான் வாழும் வெளிநாட்டில் எனக்கு தெரிந்த மாற்றுமத சகோதரர்கள் சுமார் 40 முதல் 45 சதவீதம் வாழ்கிறார்கள் உம்முடைய கணிப்புபடி அவர்களுக்கும் கேன்சர் வரவேண்டுமே?>

கேள்வி>>4 திருமண விருந்து பாத்திரங்கள் சுத்தமில்லாமலும் ,உண்பதற்கு தகுதியற்ற பாதுகாப்பில்லாமல் இருக்கிறது>>>குற்றசாட்டு

பதில் >>ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இதுபோன்ற கவனக்குறைவு ஏற்படுவது இயல்பே. இதனால்தான் கேன்சர் வருகிறது என்றால், நான் கேட்கிறேன், நீங்கள் நடத்தும் திருமண மண்டபத்திலுள்ள அனைத்து பாதிரங்களைஎல்லாம் ஆய்வு செய்வோம் அப்போது தெரியும் உங்கள் சாயல் வெளுப்பதை!

கேள்வி>> 5 காயலில் அணைத்து வீடுகளிலும் அசைவ உணவை உண்கிறார்கள் அதனால் தான் கேன்சர் வருகிறது>>>> குற்றசாட்டு.

பதில்>>அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்று சொல்லும் நீர் எந்த விஞ்சானியிடம் சான்றிதல் பெற்றீர், உலகத்திலேயே ஒன்று அல்லது ஒன்றரை சதவீத மக்கள் மட்டும்தான் சைவ உணவை உண்கிறார்கள்.

அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்றால் ஒவ்வொரு ஊரிலேயும் எண்ணிலடங்கா கேன்சர் மருத்துவமனை முளைத்திருக்க வேண்டுமே! சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனை திருவனத்தபுரம் கேன்சர் செனட்டர் ,சென்னை தனியார் கேன்சர் செனட்டர் ஆகிய இடங்களில் பல நூற்றுக் கணக்கான சைவம் மட்டுமே உணவாக கொள்ளும் உள்,வெளி கேன்சர் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது உமக்கு தெரியுமா. (இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை கொடுத்தருள வேண்டும்) நீர் விருப்பபட்டால் அங்கு கூட்டிக்கொண்டு காட்ட நான் ஏற்பாடு செய்கிறேன்!

இன்னும் பல பிதற்றல்கள்,

பெறிதாக நீட்ட விரும்பாமல் இறுதியாக ஒரு சம்பவத்தை மட்டும் விளக்கி முடிக்கிறேன்!

கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்னாள்,நமதூர் சென்னை வாழ் தங்க நகை வியார வர்த்தகர் L .K S. செய்தகமது அவர்கள் நமது KEPA அமைப்பின் செயல்பாடுகளையும்,நமதூரின் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ள நாடி அச்சேவை செய்யும் அமைப்புகளை நேரில் வரும்படி அழைத்தார்கள் ,KEPA சார்பாக சகோதரர் ADMIN சாலிஹ் அவர்களும்,சவ்தி ஜித்தா காயல் நகர்மன்றம் சார்பாக சகோதரர் முஜாஹிதும்,KWT அமைப்பின் சார்பாக நானும் சென்று அவர்களை சந்தித்தோம்!

KEPA வின் முழுசெயல்பாட்டையும்,CD கேசட்டையும் பார்த்த செய்தகமது அவர்கள், இப் பிரச்சனையை சென்னை அடையாறு கேன்சர் செனட்டர் தலைவி டாக்டர் சாந்த தேவி அவர்களிடம் சமர்ப்பிபோம் அவர்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் நாளைக்கு அங்கு வந்து விடுங்கள் என்று கூறி சந்திக்கவும் வைத்து விட்டார்கள்!

ஆசியாவிலேயே புகழ்பெற்ற புற்றுநோய் சிகச்சை நிபுணர் பதம ஸ்ரீ சந்தா தேவி அவர்கள் நம்முடைய KEPA வின் செயல்பாட்டு விபர அறிக்கையும் படித்துவிட்டு,அத தருணத்திலேயே அங்குள்ள மற்றய மருத்துவர்களை கூப்பிட்டு உடனே இந்த ஊருக்கு செல்ல ஏற்பாட் செயுங்கள்.ஒரு மருத்துவ குழுவும் வரவேண்டும் என்று உத்தரவு விட்டார்,

அத்தனை பேர்களுக்கும் விமான செலவுகள் முதல் அனைத்து செலவுகளையும் LKS செய்தகமது அவர்களே மேற்கொண்டு டாக்டர் சந்தா தேவி அவர்களை காயலூருக்கு அழைத்தும் வந்து விட்டார்கள்!

சாந்தா தேவி நமதூருக்கு புறப்படும் பொழுது.அவர்கள் சொன்னது நம் ஊர் சுற்றுவட்டார அனைத்து மருத்துவர்களும் காயலுக்கு வரவேண்டும் என்ற கூறினார்கள்,ஆசியாவின் சிறந்த மேதை அழைக்கிராகள் என்ற அகமகிழ்வோடு அனைத்து மருத்துவர்களும் கிழக்கே குமரி மாவட்டம் முதல் மதுரை வரையுலுள்ள ஒரு மருத்துவ பட்டாளமே குமிந்தது!

டாக்டர் சாந்தா தேவி அவர்கள் அனைத்து டாக்ட்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் KMT மருத்துமனை திறந்த மேடை அரங்கில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் மத்தியில் விரிவாக உரையாற்றினார்கள் !

அவர்கள் உரையில் ஒரு சதவீதம் கூட நமதூரின் கலாச்சாரம் பற்றியோ,வாழ்க்கைமுறை பற்றியோ,உணவு பழக்கங்களான அசைவ மற்றும் புலால் உணவு பற்றியோ கொஞ்சம் கூட கோடிட்டு காட்டவில்லை!

மாறாக DCW ஆலையின் செயல்பாடுகளை பற்றி தீவிரமாக கண்காணித்து முடிவெடுப்பதாக கூறினார்கள்! அதோடு மட்டுமல்ல அன்று வந்த அனைத்து மருத்துவர்கள் பட்டாளத்தில் ஒரு மருத்துவர் கூட நம் ஊரின் வாழ்க்கை முறை ,உணவு பழக்கம், கலாசாரம் ஆகிய எதைப்பற்ற்யும் எள்ளளவு கூட எசகு பிசகாக கூறவில்லை!

ஆக இவ்வளவு மருத்துவ மேதை முதல் அனைத்து மருத்துவர்கள் வரை நமதூரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில்,இந்த துணைத்தலைவர் மேதாவித்தனமாக மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கதை அளந்திருப்பதிலிருந்து அவர் கடைந்தெடுத்த காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவமாகத்தான் மிளிர்கிறார், அதற்க்கு மெருகூட்ட ஒருசில எடுபிடி எட்டப்ப வாரிசுகளின் உதவியும் கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by vena fazul (china) [02 June 2013]
IP: 117.*.*.* China | Comment Reference Number: 27711

மிக மிக அருமையான பதிலடி. ப்ளீஸ் இதை சீனிவாசன் & தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுப்பே உம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [02 June 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27712

Dr. Kizar அவர்களுடிய விளக்கம் மிகவும் அருமை. சகோதரர் மூசா அவர்கள் சொல்வது போல் இந்த அறிக்கை DCW VP இடம் காட்டவும். மீண்டும் KEPA மக்கள் சக்தி திரட்டி போராட்டம் நடத்தவூம். தயவு செய்து அவருக்கேதிராக வழக்கு தொடரவூம். இதற்கு எல்லா காயல் நற்பணிமன்றம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

வல்ல நாயன் இந்த அழிவில் இருந்து நம்மை காப்பானாக. ஆமீன். நன்றி. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...சரியான பதிலடி
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [02 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27713

காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் அவர்கள் சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுத்து உள்ளார் . அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .

டி.சி.டபிள்யு நமது ஊரின் மீது கக்கிய இந்த விஷம் கலந்த அறிக்கைக்கு நாம் அனைவரும் ஓன்று இணைந்து பதில் அடி கட்டாயம் கொடுக்க வேண்டும் . இல்லை என்றால் இதை போல இன்னும் பல அறிக்கை தொடரலாம் .

வல்ல நாயன் கேன்செர் போன்ற கொடிய நோய்களை விட்டும் நமது ஊரு மக்கள் அனைவர்களையும் பாதுகாப்பான . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. DCW vs HUL
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [02 June 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 27715

Dalda விசயத்தை ஒரு காப்பி எடுத்து அதை தயாரிக்கும் Hindustan Unilever Limited (HUL) ன் கவனத்திற்கு அனுப்பினால் DCW Vs HUL மேட்சை நீதிமன்றத்தில் பார்க்கலாம். IPL ஐ விட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. திசை திருப்பும் சீனிவாசனின் அறிக்கை,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [02 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27716

அடிப்படை ஆதாரமற்ற DCW துணைத்தலைவர் சீனிவாசனின் அறிக்கைக்கு அழகிய மருத்துவ ஆதாரங்களுடன் நடுநிலை யுடன் டாக்டர் பெருந்தகையின் மறுப்பு அறிக்கை மிகவும் சிறப்பும் சிந்தனைக்குரியது என்றால் அது மிகையில்லை எனலாம்.அமில விஷ கழிவுகளை காற்றிலும்,கடலிலும் கலந்து நூற்றுகணக்கான சகோதரரின் உயிரை காவு வாங்கிவிட்டு காயல்பட்டினத்தின் வாழ்க்கைமுறைதான் கேன்சர் வர காரணம் என்ற சீனிவாசனின் உளறல் நகைப்புக்குரியது அல்லவா?

இவருடைய கருத்துக்கு பதில் சொல்ல சென்னை பட்டணம் வரை எல்லாம் போக தேவையில்லை,எந்த அசதியில் தூங்கினாலும் வாகனத்தில் உள்ளே நுழைந்தவுடன் கபாலத்தையே கிறக்க வைக்கும் சாக்கடை வரவேற்பை கொண்ட திருசெந்தூர் இவருக்கு தெரியாதா?

வீட்டுக்கு வருபவர்களை வரவேற்கும் வீட்டு வாசலில் சாக்கடை நீரோடை,குறுகிய ரோடுகள்,ஒரு குடியிருப்புகளில் எத்தனையோ குடும்பங்களின் நெருக்கமான வாழ்க்கை, சுகாதார கேடான உணவு கடைகள்,அங்கங்கே சாக்கடை தடாகங்கள்,செந்தூர் கூவத்தின் அருகில் பள்ளிகூடங்கள், திருமண மண்டபங்கள்,ஊராட்சி மன்றங்கள் என சாக்கடை வளையத்துக்குள் இருக்கும் இந்த ஊரில் ஏன் இந்த கொடிய நோய் இல்லை?

அசைவம் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்றால் காயல்பட்டினத்தை விட்டால் வேறு எங்கும் அசைவம் சாப்பிடவில்லையா?சிறு பிள்ளைத்தனமான இவரின் அறிக்கை DCW வினால் நம் ஊரு மக்களுக்கு ஏற்படும் கொடிய பாதிப்பை திசை திருப்புவதாக உள்ளது எனலாம். ஆனால் நம் ஊரு மக்கள் இவ்வளவு மூர்க்கமாக இந்த ஆலையை எதிர்த்துவிட்டு இவர்கள் செலவில் நடத்தும் மாவட்ட கால்பந்து லீக் ஆட்டத்தில் அங்கே போய் விளையாடுவதும்,சீனிவாசன்போன்றவரோடு நம் பெரியவர்கள் உறவாடுவதும் முரண்பாடு இல்லையா?

லீக் ஆட்டம் அங்கே தான் விளையாட வேண்டும் என்ன தேவை இருக்கிறது.அதை வேறு மைதானங்களுக்கு மாற்றி கேட்கலாமே?வரும் காலங்களை ஆவது இது போன்ற விசயங்களில் கூட நாம் கவனம் செலுத்துவதுதான் நாம் அந்த ஆளை யின் மீது நாம் கொண்டுள்ள எதிர்ப்பில் அர்த்தம் இருக்கும்.அணைத்து செய்திகளும் உள்ளடக்கி அற்புதமான மறுப்பு அறிக்கை வழங்கிய நம் டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [02 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27719

மருத்துவரின் மறுப்பறிக்கை அருமை.

DCW துணைத்தலைவர், தற்சமையம் பதவியில் இல்லையா? DCW வால் CANCER நோய் என்ற பேச்சுக்கே இடமிIல்லை என்று வாதித்த துணைத்தலைவர் சுற்றுப்புற பகுதியில் CANCER நோய் உள்ளது என்ற உண்மையை எப்படி ஒப்புகொண்டார்.

DCE வில் இருந்து பிரியாவிடை செல்வதால், காயல் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை அவதூர் பரப்பிவிட்டு சென்று இருக்கிறாரே, இவரின் இந்த அவதூர் வடிவத்தை ஆதாரபூர்வம்மாக KEPA குழுவினர்கள் மீண்டும் ஒருமுறை POLUTION CONTROL க்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...நெத்தி அடி....
posted by HAFIL AMEER. A (DUBAI) [02 June 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27722

மருத்துவர் அவர்களின் அறிக்கை திரு. ஸ்ரீநிவாசனுக்கு குடுத்த நெத்தி அடி......

அருமையான பதிலை மருத்துவர் அவர்கள் தந்துள்ளார்கள். உண்மையில் DCW தொழிற்ச்சாலையினால்தான் நமது மண்ணுக்கு கேடே தவிர நமது உணவு முறைகளோ அல்லது பழக்க வழக்கன்களோ அல்ல எனபது தெளிவாகிறது.

இந்த தொழிற்ச்சாலையை முற்றிலுமாக மூடுவதற்கு என்ன வழிகள் உண்டு என்பதை கண்டு நாம் அதை செய்யவேண்டும்.

அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருளும் நல்ல ஆரோக்கியத்தையும் தருவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [03 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27723

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஜனாப் .DR.கிஸார் அவர்களின் ...பதில் தக்க சமயத்தில் சரியான நேரத்தில் வந்து உள்ளது .இப்படி ஒரு நெத்தியடி பதிலை இந்த >>>DCW <<<அதிகாரி நிச்சயமாகவே எதிர் பார்த்து இருக்க மாட்டார் ...என்றே நாம் நினைக்கிறோம் .....

நம் ஊரை பற்றி தவறாகவே .....இப்படி இந்த அதிகாரி எழுத எந்த ஒரு உரிமையும் அவருக்கு கண்டிப்பாகவே கிடையாது .இவர் வேண்டுமானால் பணத்துக்காக வேண்டி >>>DCW <<<தொழிற்சாலையை கட்டிக்கிட்டு வாழட்டும் அல்லது அவர் உயிர் பணத்தை விட பெரியதா என்று யோசிக்கட்டும் ......நமது மக்களின் இந்த >>>DCW <<<தொழிற்சாலையை வைத்து வரகூடிய நோயை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் .....பணத்துக்காக இவர் எப்படி எல்லாம் தம் மனதை அடமானம் வைத்து எழுதுகிறார்கள் என்று பார்த்தால் நமக்கே படு ஆச்சரியமாகவே இருக்கிறது .......பணம் பத்தும் செயும் என்பார்களே .....அது இது தானோ ??என்ன எழவோ .....நம் ஊர் மக்களின் உயிரோடு ஏன் இவர் விளையாடுகிறார் ......அந்த அதிகாரிக்கு என்ன உரிமை இருக்கிறது ................

நம் ஜனாப் DR கிஸார் அவர்களின் இந்த அற்புதமான கட்டுரையை நமது ஊர் ஏனைய எல்லா மக்களுக்கும் நன்கு விளங்கும் விதமாகவே ....துண்டு பிரசுரம் அல்லது ....ஜனாப் DR கிஸார் அவர்களிடம் நம் ஊரை சேர்ந்த '''' கேபிள் '''' டிவி ஆபரேட்டர்கள். அனைவர்களும் ஒன்று சேர்ந்து கண்டிப்பாக பேட்டி எடுத்து ஒலிபரப்ப வேணும் ....இது ரொம்பவும் அவசியமானது தான் ......

நம் DR கிஸார் அவர்களை போன்று யாருமே நிச்சயமாகவே இப்படி அற்புதமாகவே ( ஆணித்தரமாக ) பதில் கொடுத்து இருக்க மாட்டார்கள் .....அல்ஹம்துளில்லாஹு .....

ஓன்று மட்டும் நமக்கு நன்கு தெரிகிறது ....அதாவது நம்முடைய இந்த எதிர்ப்பு பிரசரடின் மூலம் இந்த கேடுகெட்ட நாசமாப்போன >>> DCW <<<தொழிற்சாலை அதிகாரிகள் பயப்பட துவங்கி விட்டார்கள் என்பது நமக்கு முழுமையான நம்பிக்கையோடு ......தைரியமும் வந்து விட்டது.... நாம் இனிதான் இன்னும் வேகத்தையும் ....+ ...நம் பொது மக்களிடம் கடுமையான விழிப்புணர்வையும் கூட்ட வேணும்.

இந்த குள்ளநரி கார கூட்டமான நாசமா போன >>>DCW <<< காரர்களை போராடுவதற்கு ....நமது ஊர் பலதரப்பு அமைப்பினர்களும் ஓன்று சேர்ந்து கூட்டாகவே நமது >>KEPA <<<வுடன் சேர்ந்து போராட வேணும் .......அப்பம்தான் நமக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் ....இது உறுதி..... நமது ஊர் ஒற்றுமையை கண்டு இந்த >>DCW <<<பயப்பட வேணும் ....

காலம் தாழ்த்தாமல் நாம் கேடுகெட்ட >>DCW <<வுக்கு அடுத்த மாபெரும் ஒரு சரியான பெரியதோர் ....நெத்தி அடி கொடுக்கவேணும் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI

JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by ismail (jeddah) [03 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27724

simply superb Dr.Kizhar very nice and so informative and with medical evidances that any one can easily understand your explanations.

Mr.Srinivasan please stop vomitting your idiotic and baseless comments upon our lifestyle,we are all not simply idiots and hope Dr.Kizhar's explanations are more than enough to vanish your unlogical perceptions upon our lifestyle.,closing your factory is not at all our aim, do all the safety and environmental safe measures to ensure fearfree life of your surrounding people, we have all the rights to protect our environment.

May Allah protect all of us from this deadly dragon disease of cancer and strengthen our unity in protecting our people AMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அந்நியன் திரைபடத்தின் முடிவுகள் நடக்கும்,,,
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [03 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27728

பலமுறை அரசுவிதி முறைகளை மீறி காற்றிலும், கடலிலும் தனது இரசாயனகழிவுகளை வெளியேற்றியதை ஆதராத்துடன் நாம் பார்த்திருக்கிறோம். நண்பர் கிஸார் அவர்களே.. இன்னும் இவர்களின் கொடூர செயல்கள் பல உண்டு... நல்ல நீர் சேமிப்பு ஆற்றின் நீரோடையை நாசமாக்கி அதில் அமில கழிவுகளை கலக்க செய்து நீர் வளத்தையும் - மண் வளத்தையும் கேள்விக்குறியாக்கிய கொடுமையால் தற்போது கால்நடைகளும் விதிவிலக்கு அல்ல..!

ஸ்ரீநிவாசன் அவர்கள் தான் படி (கூலி) வாங்கும் நிறுவனத்திற்க்கு ரெம்பவும் விசுவாசமாக அதனால் பல உயிர்கள் மடிந்தாலும் அதை பற்றி அக்கறை சிறிதும் இல்லாமல் தனது விஷத்தை கொட்டி உள்ளார்...

இந்த மாதிரி நபர்களுக்கு அந்நியன் திரைபடத்தின் முடிவுகள் போல இறைவனால் கொடுக்கப்படும் காலம் விரைவில் அமையும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சீண்டாதே சீனிவாசா!
posted by kavimagan m.s.abdul kader (qatar) [03 June 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 27729

டாக்டர் அவர்களுக்கு நன்றி!

கைக்கூலிகளுக்கு பதிலடி கொடுக்க KEPA என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் வலுப் பெற வேண்டும்.டாக்டரைப் போன்ற சமூக ஆர்வலர்கள்,இன்னும் சப்தமாக குரல் கொடுப்பதோடு, சமூகத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய KEPA வின் நடவடிக்கைகளுக்கு அதிகம் அதிகம் ஆதரவு தர வேண்டும்.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வே.....நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நல்லா ஏமாத்திருக்காங்க...சீனிவாச புராணம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [03 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27735

சீனிவாசன் ஒன்றும் நம் காயலர்களோடு ஒட்டி உறவாடவில்லை! ஊரில் சில பெரியவர்களின் பழக்கம் தொழிற்ச்சாலையின் மேலாளர் எனும் அடிப்படியில் இருந்திருக்கலாம். நம் கலாச்சரம் மற்றும் பண்பாடுகளை ஆராயும் திராணியோ அல்லது அதற்குரிய அனுபவமோ இவருக்கில்லை! எச்சிக்காக அலையும் சில எட்டப்பர்களுக்கு எலும்புத்துண்டை(அசைவம்) விட்டெறிந்து சில பொய்யான தகவல்களை சேகரித்து அறிக்கை வாந்தி எடுத்துள்ளார்.

ஊர் முழுக்க கொந்தளிப்பும் குமுறலுமாக இருக்கின்றது. வீடுகளில் பெண்கள் கூட பொறுமிக் கொண்டிருக்கின்றனர். பன்னெடுங்காலமாக பாதுகாத்து வரும் தனித்துவமிக்க நம் கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தினால் யார்தான் பொறுத்துக் கொள்வார்?

சரி விபரம் தந்தவர்கள் கூட உருப்படியான தகவல்களைத் தந்துள்ளார்களா ?என்றால் அதுவுமில்லை! சீனிவாசனை நன்றாக ஏமாற்றியுள்ளார்கள்.

ஆக மொத்தம் அவரது அறிக்கை நம் மக்களிடத்தில் விழிப்புணர்வுக்கு ஒரு பிரதான காரணியக அமைந்து விட்டது. இது தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்பதோ?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [03 June 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27737

டாக்டர் கிசாரின் மறுப்பறிக்கை சரியாக கொடுத்திருகிறார். அறிக்கையை வாழ்த்தினால் மட்டும் போதாது அவரின் கருத்துகள் திரு ஸ்ரீநிவாசன் மீது வழக்கு தொடர ஒரு guideline .இந்த சந்தர்பத்தில் நமதூர் பொது நல அமைப்புகள் ஒன்று பட்டு ஈகோ பார்க்காமல் யார் குத்தியாவது அரிசியாகட்டும் என்று சொல்வார்களே அது போன்று தாமதிக்காமல் உடனே ஐக்கிய பேரவை,சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA ) போன்றவை டாக்டர் கிஸார், வக்கீல் ஜோயல் போன்றவர்களை கலந்து அவதூறு வழக்கு போட்டு அவாளை கோர்ட் நிறுத்தினால் தான் இவர் போன்ற நேர்மை இல்லாதவர்களின் கொட்டம் அடங்கும்.ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் .அல்லாஹ் மிக பெரியவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [03 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27741

மருத்துவர் அவர்களின் அறிக்கை மிகவும் அருமை .... விஷ பாம்புகளின் விஷத்தை இந்த மறுப்பறிக்கை என்னும் மருந்து முறிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கேப்பாவுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [03 June 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 27748

கேப்பாவின் பதில் அறிக்கைகள் & கமெண்ட்கள் வாயிலாக நம்முடைய ஆதங்கம் மற்றும் அறிவாந்த நம் தரப்பு வாதங்கள் அநேகமாக போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேர்ந்திருக்கும் என்று எண்ணுகின்றேன் !

DCW ஆலை ஆய்வுக்குழுவால் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து KEPA வின் கடந்த செயற்குழுவில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆங்கிலத்தில் அச்சிடபட்டிருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட அவ்வறிக்கையை பார்க்கும் போதே எனக்கு தலை சுற்றியது. அதனையும் சகோதரர் MS ஸாலிஹ் அவர்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கு விவரித்து கொண்டிருந்தார். தன்னுடைய சொந்த அலுவல்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ஊர் நன்மைக்காக வேண்டி பாடுபடும் KEPA மற்றும் அனைத்து நல்லுங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக !!

KEPA சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 1 லட்சம் கையெழுத்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றிட நம்மால் இயன்ற பொருள் மற்றும் உடல் உழைப்பினை கேப்பாவுக்கு வழங்க முன் வர வேண்டும். நம்முடைய ஆர்வமும் ஆதரவும் தான் அவர்களை உற்சாகத்துடன் எவ்வித தொய்வில்லாமல் சமூக பணி புரிய செய்ய உதவும். குறைந்த பட்சம் அதையாவது அவர்களுக்கு நாம் தருவோம்.

மத்திய "சுற்றுச்சூழல்" மற்றும் வன அமைச்சகத்தின் வல்லுநர் குழு உறுப்பினராக உள்ள நமது டாக்டர் அவர்கள் இது போன்ற தரமான அறிவாந்த விளக்கங்களை நமதூர் ஊடகங்களோடு நின்று விடாமல், "கேப்பாவுடன்" இணைந்து அதனை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எடுத்து சென்று ஆவன செய்ய வேண்டும் என்பது நம் வேண்டுகோள் !!

வெறும் கருத்தாளராக சமூக ஆர்வலராக ஆதங்கத்தோடும் & உணர்ச்சி கொந்தளிப்போடு நின்று விடாமல், நாம் ஒவ்வொரு வரும் கேப்பாவுடன் தோளோடு தோளாக ஒன்றிணைந்து போராட வேண்டும்... கேப்பாவின் கரத்தினை வலுப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நமது மனக்குமுறல்களுக்கும் சாட்டையடி அறிக்கைகளுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. நன்றி டாக்டர்... :...
posted by Musthak Ahamed (goa) [04 June 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 27749

அது ஒரு விஷம் தூவும் அறிக்கை.... ஒரு ஊரையே எந்தவித ஆதாரமும் இன்றி அதன் இறையான்மையை அதன் புனித கட்டமைப்பை உடைக்கும் சதி. இது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நீண்ட சரித்திரத்தின் கருப்புப் பக்கங்கள் இவர்கள்..... எந்த வித புரிதலும் இல்லாமல் மேலோட்டமாய் பார்த்தால் இப்படியும் இருக்கலாமோ என்ற தோற்றத்தை மனதின் அடி ஆழத்தில் விதைத்துவிடும் நச்சுக் காற்று அந்த அறிக்கை... அவர்களின் குறிக்கோளும் அதுதான். எண்ணத்திலும் எழுத்திலும் விஷம் நிரப்பி நம் ஊரின் மீது தெளிக்கப்பட்டு இருக்கிறது.

படித்தவுடன் உடம்பு முழுதும் கோபம் பரவி அது அடங்க நீண்ட நேரம் ஆனது..

இதை சரியான புரிதலோடு, ஆழ்ந்த அறிவோடு மறுக்கப்படவேண்டுமே என்ற கவலை இருந்தது...... நண்பர்களின் கருத்துப் பகிர்வில் சந்தோஷம் இருந்தாலும் இன்னும் இன்னும் என்று மனது தேடிக்கொண்டே இருந்தது.

அந்த தேடலின் முடிவாய் டாக்டர் அவர்களின் மறுப்பு அறிக்கை அமைந்தது மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. இத்தனை தெளிவாய் நிறம்பிய அறிவுடன் கூடிய இந்த அறிக்கையை படிக்கும் போது திரு சிருனிவாசன் அவர்களின் மனசாட்சியாவது அவரை இனி உறங்கவிடாமல் செய்யும்...... அப்படி ஒன்று இருந்தால்.

நன்றி டாக்டர்...

முஸ்தாக் அஹமது. கோவா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by shajahan m.m (chennai) [04 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27752

அஸ்ஸலாமுஅலைக்கும் . .டாக்டர் கிஸார் அவர்கள் ,மத்திய அரசின், சுற்று சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு வல்லுநர் குழுவின் உறுப்பினாராக இருந்தும் தைரியமாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார் . அந்த குழுவின் உறுப்பினர் எந்த சமூகத்துக்கு சாதகமாகவும் அல்லது குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு பாதகமாக எந்த நடவடிக்கையிலும் வெளியில் ஈடுபடகூடாது என்பது , அவர் சார்ந்த அமைச்சகத்தின் நெறிமுறை. இந்த அறிக்கை, வெளியே தெரிந்தால் அவரின் பதவிக்கு கூட ஆபத்து வரவாய்ப்பு உள்ளது. பொதுவாக காயல்பட்டினம் மக்களை தான் மற்ற ஊர் மக்களைவிட நோய்கள் குறைவாக தாக்க வேண்டும் ஏனெலில் அநேகர் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒழு செய்யும்போது உடலின் அநேக பாகங்கள் சுத்த மாகிறது . இது தை தொடரின் இருந்து காக்கிறது. நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகையில் , சுமார் பதினேழு முறை நின்று குனிந்து எழும்பி பிறகு இருமுறை குனிந்து செய்வதால் உடலுக்கு நல்ல உடல்பயிற்சியும் ,இரத்த ஓட்டம் நல்ல படியும் உடல் பூராவும் செல்வதால், இதய அடைப்பு முதல் stroke வரை நோயிலிருந்து காக்கபடுகிரார்கள். மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 20 நிமிடம் மிதமான உடல் பயிற்சி செய்தாலே போதும் இதய நோய் வராது என்கிறார்கள் அனால் இந்த ஊர் மக்களோ, குறைந்த பட்சாம் 25 நிமிடம் தினம குனிந்து எழும் உடல்பயிற்சி போன்று செய்வதுடன் தொழுகையில் ஓர்மை படுவதால் யோகா மூலம் என்னென்ன நன்மை கிடைக்குமோ அதுவும் கிடைக்கிறது.. வருடம் ஒரு முறை நோன்பு நோற்பதன் மூலம், இன்னும் ஆயில்கலம் நீலவே வாய்ப்பு இருக்கிறது கத்ன என்னும் சுன்னத் மூலம் அன்குரியின் முன்தொழ்ளை நீக்கி விடுவதால், ஆண்குறி புற்று நோய் , PROSTATE புற்று நோய் அறவே வரக்கூடாது. அதுபோல் கத்னா செய்த நிலையில் இல்லறத்தில் ஈடுபடுவதால், பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வரவே வராது. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் ....

ஆனால் இதையெல்லாம் சீனிவாசன் அழகாக மறைத்து விட்டு, ஆதாரமே இல்லாத குற்றசாட்டுகளை வைத்துள்ளார் ஆனால் மற்றவர்களை விட இத்தனை சுகாதார நன்மைகள் இருந்தாலும், இவ்வூர் மக்களை நோய்கள் வாட்டி எடுபதர்க்கு வேற என்ன காரணம்.. சீனிவாசன் சார் போன்றவர்களுக்கு சம்பளம் பஞ்ச பயண படி அளக்கும் இந்த DCW தான்.

சீனிவாசன் இவ்வளவு மோசமாக நம் சமுதாயத்தை தாக்கி குறிப்பிட்டும் டாக்டர் தனது மறுப்பில் எங்கேயும் எல்லை மீறாமல் ,மிக கண்ணியத்துடன் , அதே நேரத்தில் கடுன்சொர்களால் தன எதிர்ப்பை ஆதங்கத்தை காட்டி உள்ளார்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. அனைத்து காயல் நல மன்றங்களுக்கு கனிவான வேண்டுகோள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27757

கண்ணியமிகு அனைத்து அயல்நாட்டிலுள்ள காயல்நல மன்ற சகோதரர்களே அஸ்ஸலாமு அழைக்கும்!

கடந்த ஒரு வாரகாலமாக நமதூரைப்பற்றியும்,நம் உயரினும் மேலான புனித மார்க்கத்தின் அடிப்படையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முறை பற்றியும்,மிகவும் இழிவாகவும்,ஏளனமாகவும்,எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பொருள்பொதிந்த வார்த்தைகளை அறிக்கையாக அமைத்து யாருக்கும் தெரியாமல் மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு வஞ்சகத்தனமாக DCW யின் துணைத்தலைவர் ஸ்ரீநிவாசன் அவர்கள் அனுப்பியுள்ளதை நம் KEPA அமைப்பு கண்டுபிடித்து நம் அனைவர்களும் தெரிந்து கொள்ள செய்தியாக வெளியிட்டு இருந்ததை நாம்அனைவரும் அறிவோம்!

அந்த துனைதளைவரின் அறிக்கையை பார்க்கும் எந்த ஒரு உண்மையான காயலரும், உண்மையான முஸ்லிமும் கொதிப்படையாமல் இருக்க முடியாது!

அந்த ஆலையினால் எண்ணிலடங்கா இன்னல்களுக்கும் நோய் நொடிகளுக்கும்,உயிர் இழப்புகளுக்கும் ஆளாகி,மென்மேலும் வேதனையில் வீறிடும் நம்மை நோக்கி அதே வெந்தபுண்ணில் மறுபடியும் வேளை பாய்ச்சுகின்றது இந்த நிர்வாகம்!

இதற்க்கு பதிலடி கொடுக்காமல் பெருந்தன்மை போர்வையில் நாம் செல்வோமேயானால், நாளைக்கி அந்த அயோக்கிய ஆலையின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை நம்மை எள்ளி நகையாடி என்ன சொன்னாலும் இந்த காயலனவோ கண்டுகொள்ளாத கேணய கூட்டம்தான். அவர்களுக்கு அவரவர்களின் சொந்த வாழ்க்கைவசதிதான் முக்கியம், நம்மை எதிர்க்கின்ற அளவிற்கு தைரியமும் திராணியும் இல்லை என்ற ஏளன வார்தைகள் முளைப்பதற்கு நிச்சியம் வழி உண்டாகிவிடும்! ஆகவே முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்!

அன்பு அனைத்து காயல்நல மன்ற நிவாகிகளே,, உடனேயே உங்கள் அமைப்பை கூட்டி இந்த DCW துணைத்தலைவர் ஸ்ரீநிவாசன் அறிக்கைக்கு எதிர்ப்பும் கண்டனமும் அடங்கிய அறிக்கையை தயாரித்து அதை தீர்மான வடிவமாக்கி வெளியிடுமாறு அன்புடனும்,

நமதூர் மானமும், மரியாதையும், இறையாண்மையும் என்றும் காக்கப்படவேண்டும் என்ற உறுதியில் காயலர்கள் கிஞ்சித்தும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தில் வாழ்பவர்களில் நானும் ஒருவன் என்ற உரிமையோடு இந்த வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன், முஹம்மது ஆதம் சுல்தான்!

பின் குறிப்பு:(இங்கிருந்து என்னுடைய எதிர்ப்பு பங்கை தெரிவிக்க முன்வருவேனேயானால், நமதூரில் இந்த ஆலைக்கெதிராக அனைத்து மக்களும், அனைத்து குடும்பங்கங்களும் போராட்டத்தில் குதிக்க முன்வந்தால், குடும்பங்களின் முதல் வரிசையில் என் மனைவியும், மக்களும் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியினை இங்கு தருகிறேன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved