Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:18:37 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10951
#KOTW10951
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 4, 2013
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நகர கிளை சார்பில் கொடியேற்று விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2870 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று தனது 90ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, 90 நாட்களுக்கு தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது.

காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகில் நேற்று காலை 09.00 மணியளவில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் நகர கிளை தலைவர் ஜெ.எம்.கிதுரு முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதிகளான பன்னீர் செல்வன், காதர் ஸாஹிப், 07ஆவது வார்டு செயலாளர் எம்.கே.மொகுதூம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 13ஆவது வார்டு செயலாளர் ஆர்.எஸ்.கணபதி வரவேற்புரையாற்றினார்.



பின்னர், நகர திமுகவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் செயலாளருமான எம்.என்.சொளுக்கு, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்.





இவ்விழாவில், பி.கே.டி.உமர், தங்கம், கஸ்ஸாலி, ரபிராஜா, உடந்தை மகாராஜன், சுகு, காதர், மரைக்கார் உள்ளிட்ட - கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.



தகவல்:
மரைக்கார்
08ஆவது வார்டு திமுக செயலாளர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஏர்வாடி மொகிதீன் திரும்ப எந்த கட்சியில் எங்கு ஒளிந்து கொள்வாரோ..?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27753

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இந்த வயதிலும் அயராது ஆற்றல் படைத்து அரசியல் வாழ்க்கையில் இணைந்து பணி புரியும் திமுக தலைவர் க்கு பாராட்டுக்கள்..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [04 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27754

90 வயது இளைஞரை பாராட்டியே ஆகனும். இந்த வயதில் ஒருவரால் இவ்வளவு துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியுமா என்பதே ஆச்சரியம்.

பல்லாண்டு காலம் வாழ்ந்தது அனைத்து மக்களின் மனதிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே அனைவர்களின் ஆசை.

(தாங்கள் செய்த கொடுமைகள், அநியாயங்கள், துரோகங்கள் போன்றவற்றை எழுத இது நல்ல இடம் இல்லை.)

முகநூலில், சகோதரர் சூர்யா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றது..

70,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்

75திரைப்படங்கள்
72ஆண்டு பொதுவாழ்க்கை
70ஆண்டு பத்திரிகையாளர்
65ஆண்டு கலைத்துறைபங்களிப்பு
60ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல்வெற்றி

50ஆண்டு சட்டசபைபணிகள்
18ஆண்டு தமிழக முதல்வர்

இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசுதலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை

என்றும் தமிழின தலைவர் கலைஞர்

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (Michigan) [04 June 2013]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 27758

இவ்வளவு வயதான பின்பும் தன குடும்பத்திற்காக அரசியல் கட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் ஆகா நடத்தும் திருவாரூர் மு கருணாநிதி (தி.மு.க) பாராட்டப்பட வேண்டியவர்தானா? அசிங்கமான அரசியல் நடத்துபவர்கள் தான் தலைவர்கள்.. பாராட்டு விழா எடுத்த திமுக பிரைவேட் லிமிடெட் ஊழியர்களுக்கு ...சாரி.. தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.. ஆமா, கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க அவரது குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தகுதி இல்லையா? உங்களையெல்லாம் வைத்து அவர் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார்.. ஆனா.. நீங்கத்தான் இன்னும் மாறவே மாட்டேன் என்கிறீர்கள்.. அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் வேறு.. இன்று இருக்கும் திருவாரூர் மு கருணாநிதி பிரைவேட் லிமிடெட் வேறு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வயதற்ற உடலானாலும் உவகைமிகு உள்ளதோடு வாழ்த்துகிறேன்!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [04 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27759

அஞ்சுகத்தாயின் அருந்தவப்புதல்வனே!
கொஞ்சுதமிழ் குழந்தையை இக்கலணி பயில ஈன்றவனே!

உனக்கு வயது 90 என்கிறார்கள் அது உன் உடல்கணக்கு ,, உலககணக்கு,உன் உள்ள வலிமை வயதோ என்றும்16

எங்கு திரும்பினும் இஸ்லாமியர்களின் இன்முகம் காணும் இந்த காயலர்களின் கண்ணியத்தையும் புண்ணியத்தையும் போற்றுகிறேன்!

இனி ஒரு பிறவி இத் தரணியில் பிறக்க வாய்ப்பிருந்தால் இக்காயலில் கணக்கின்றிவாழும் கண்ணியத்தாய் ஒருத்திக்கி கனியமுத புதல்வனாய் தழைக்க தவம் தேடுகிறேன்!

என்று எங்கள் மண்ணின்மகிமையை மனதார புகழ்ந்த மாமன்னனே,

உன் ஒவ்வொரு வருட பிறந்த தினதைப்போற்றி மகிழ்ந்திட "மனிதநேய, மதநல்லிணக்க மாண்பு" என்ற மகுடத்தை-நீ மறையும் காலம் வரை வருடம்தோறும் சூட்டிப்பார்க்க தவமிருக்கிறோம்!

எங்களின் தவநிலை எண்ணிலடங்கா வருடங்களாக நீடிக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டுகிறேன்!

வயதற்ற உடலானாலும் உவகைமிகு உள்ளதோடு வாழ்த்தும்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M.I.Moosa Naina (Madhina - K.S.A) [04 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27760

முஹம்மது ஆதம் சுல்தான் அவர்களுக்கு,

இனி ஒரு பிறவி இத் தரணியில் பிறக்க வாய்ப்பிருந்தால் இக்காயலில் கணக்கின்றிவாழும் கண்ணியத்தாய் ஒருத்திக்கி கனியமுத புதல்வனாய் தழைக்க தவம் தேடுகிறேன். – copy&paste.

இந்த வார்த்தை சொல்லகூடிய வார்த்தைதானா என்பதை சிந்திக்கவும்.

உங்கள் தலைவர், முஸ்லிம் சமுதாயத்திற்க்கு செய்த துரோகங்கள் ( தீவிரவாதி என்ற பட்டம், கோயம்புத்தூர் சம்பவம் மற்றும் பல) எல்லாம் மறந்து விட்டு, இப்படி நிதானம் தவறி எழுதி உள்ளீர்களே. இது முறை தானா என்பதை சற்று சிந்திக்கவும். நான் வீணான விவாதத்திற்க்கு வரவில்லை

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நடந்திடு தமிழே!
posted by kavimagan (doha..qatar.) [04 June 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 27762

முத்தமிழறிஞருக்குப் பிறந்தநாள்...
முரண்பாடுகளை மறைத்து
உடன்பாடுகளை விதைத்து
வரைகின்றேன் கவிதை......

தொன்னூறின் வரலாறு
தெவிட்டாத புறநானூறு...
விதைத்தது திருவாரூரில்
வேர்களோ தமிழர் ஊரில்
விளைந்தது நற்றமிழ் பாரில்!

களைப்பினை உழைப்பால் வென்ற
களப் போராளி....
தலைக் கனம்....நிரம்பி நிற்பது
இலக்கணம் இலக்கியம்....

பிதாமகன் ...அரசியலில்....
பிரதமராக்கினாய் சிலரை...
பாவம் மூப்பனார்!

குடும்ப வெறியினில் சிக்கிய போதும்
நெடிய பயணம் தடையுற வில்லை....
நடந்திடு தமிழே....கடந்திடு நூறை...
நன்மைகள் நடக்கும்....நம்புகிறேனே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by kulam Ahmed Mohideen (jeddah KSA) [05 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27788

ஆரியப் பார்ப்பனர்கள் கலைஞர் என்றாலே கரித்துக் கொட்டுவது ஏன்? ஒரு கடும் பகைமையைக் அவர் மீது காட்டுவது ஏன்? செத்துத் தொலைக்க மாட்டாரா?! என்ற வயிற்றெரிச்சலுக்கு வடிகாலாக, அவ்வப்போது வதந்தி பரப்பி அரிப்புத் தீர்க்கும் ஆத்திரம் எதனால்?
வேறொன்றும் இல்லை, இவரை ஒழித்து விட்டால், நம் கூத்தை, தாண்டவத்தை, ஆதிக்கத்தைத் தடையின்றி நடத்தலாமே என்ற ஏக்கம்!

ஒருவர் தன் கொள்கையில், தன் பணியில், தன் செயலில் மிகச்சரியாகவும், புரளாமலும், நழுவாமலும், உறுதியாகச் செயல்படுகிறார் என்பதற்கு அவரால் பலன் பெறுவோர் கொடுக்கும் பாராட்டுகளை விட எதிரிகள் கொடுக்கும் கடுமையான எதிர்ப்பும், தாக்குதலும், ஏச்சும் பேச்சும்தான் உண்மையான தரச்சான்று பெற்ற பாராட்டாகும்.

சூத்திரனையெல்லாம் தூக்கி நிறுத்தும் சூத்திரதாரியாய் செயல்படுகிறாரே! ஆத்திரம் அவாளுக்கு. ஒன்றா, இரண்டா, எத்தனையோ செய்திருக்கிறாரே! செய்து கொண்டேயிருக்கிறாரே! எரிச்சல்!

நீதிமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாதிருந்த ஒரு சாதிக்காரனை, நீதிபதியாகவே உட்கார வைத்துவிட்டாரே! அதுவும் 12ஆவது இடத்தில் இருந்த ஆதி திராவிடர் வரதராஜனை அல்லவா நீதிபதியாய் உட்கார வைத்து, நம்மை குனிந்து கும்பிடு போட வைத்து விட்டாரே!

இஸ்லாமியனை நமது ஊடகங்களெல்லாம் தீவிரவாதி என்று சொல்லும்பொழுது இரண்டு முறை உளவுத்துறைக்கு தலைவராக ஒரு ஜாபர் சேட்டையும், ஜாபர் அலியையும் ஆக்கிவிட்டரே தமிழை நீசபாசை என்று ஒதுக்கி வைத்தோம் அதை கோயிலில் பூசை பாசையாக்கிவிட்டாரே! நம் மொழிக்கு கிடைத்த செம்மொழித் தகுதியை தமிழ் மொழிக்கும் பெற்று விட்டாரே!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய், புராண கதையெல்லாம் எழுதி, பிரபவ... நந்தன, விஜய... விரோதகிருது என்று சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று நாம் ஏமாற்றி வந்ததை, ஒரு உத்தரவைப் போட்டு தூக்கிலிட்டு, தை ஒன்று தான் தமிழாண்டுப் பிறப்பு என்று சட்டம் போட்டுவிட்டாரே!

உலகத்திலே உயர்வான நூலகத்தை தமிழுக்கு உருவாக்கி விட்டாரே! இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்து நம் பிழைப்பைக் கெடுத்து விட்டாரே! பொம்பளைங்களுக்கு சொத்துரிமை கொடுத்து சமமாக்கி விட்டாரே!

மேடைப்பேச்சில் சாதனைப்படைக்கிறார். இலக்கியத்தில் கலக்குகிறார், அரசியலில் ஆட்சி செய்கிறார், கட்சியை கலையாது, நிலைகுலையாது நிலை நிறுத்துகிறார். ஒவ்வொரு நூலும் எழுதுகிறார், நிற்க முடியாது போனாலும், சக்கர நாற்காலியில் நகர்ந்தப்படியே சாதனை புரிகிறார், இந்திய தலைவரெல்லாம் ஓடோடிவந்து பார்க்கிறார்கள். பல முறை கட்சி உடைந் தாலும் பலமாக்கிக் காட்டுகிறார், நம்ம சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் சுக்கல் நூறாக்குகிறார். சாய்த்து கீழே தள்ளி விட்டோம் என்று சற்று மூச்சு வாங்கு வதற்குள் எழுந்து உட்கார்ந்து கொள் கிறார்! என்ன மனுசனய்யா இவர்! இதுதானே உங்கள் வயிற்றெரிச்சல்! எரியட்டும்! நன்றாக எரியட்டும்!!

நீங்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்து எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அவரை ஒன்றும் அசைக்க முடியாது. அரசியலில் வாக்குகள் வேண்டுமானால் அறியாமை யால் மாறலாம். ஆட்சியிலிருந்து அகற்றி விட்டதை சாதனையாக நினைக்காதீர்கள்! தமிழர் கள் தவறுவார்கள், ஆனால் தடம் புரள மாட்டார்கள்! சவுண்டிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்!

வாழ்க கலைஞர்
வளர்க தமிழ்


குளம் அபு மிஸ்பாஹ்
ஜெட்டாஹ்

Moderator: கருத்தாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை மட்டும் பதிவு செய்தல் நலம். தவிர்க்கவியலாத காரணங்களால் பிறரது ஆக்கங்களை கருத்துக்களாகப் பதிவு செய்வதாயின், அதன் Sourceஐயும் காண்பித்தே பதிவு செய்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved