Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:40:56 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11140
#KOTW11140
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 1, 2013
காயல்பட்டினம் மாணவர் சேதுக்குவாய்த்தான் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4750 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் சேதுக்குவாய்த்தானிலுள்ள தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த அபுல் பரக்காத் - முஹ்யித்தீன் இப்றாஹிமா ஆகியோரின் மகன் முஹம்மத் முஹ்யித்தீன். வயது 22. சென்னை வேல்ஸ் பொறியியல் கல்லூரியில் நான்காமாண்டு பொறியியல் பயின்று வருகிறார்.

இவருக்கு அப்துல் ஷுக்கூர் என்ற ஒரேயொரு தம்பி உள்ளார். அவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரி படிப்பில் சேரவுள்ளார். இவர்களது தந்தை அபுல் பரக்காத் 40 நாட்களுக்கு முன் சென்னையில் காலமானார்.

விடுமுறையில் ஊர் வந்துள்ள மாணவர் முஹம்மத் முஹ்யித்தீன், தன் நண்பர்கள் 5 பேருடன், 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) மதியம் 02.00 மணியளவில், ஏரல் அருகேயுள்ள சேதுக்குவாய்த்தான் தாமரிவருணி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

குழுவாகச் சென்ற அனைவரும் ஆற்றோரத்தில் குளித்துக்கொண்டிருக்க, முஹம்மத் முஹ்யித்தீனும் இன்னொருவரும் மட்டும் தொலைவு வரை நீந்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுள் ஒருவர் கரை திரும்பிவிட்டார். முஹம்மத் முஹ்யித்தீன் திரும்பும்போது, ஆற்றில் படர்ந்துள்ள அமலைச் செடிக்குள் கால் அகப்படவே, கையை உயர்த்திக் காண்பித்து தன்னைக் காப்பாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கான முயற்சியில் நண்பர்கள் இறங்குவதற்கு முன் அவர் ஆற்றில் மூழ்கிவிட்டார். பின்னர் நண்பர்களும், அங்கிருந்தோரும் நீண்ட நேரம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர், ஏரல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயல்பட்டினத்திலுள்ள அவரது உறவினர்களுக்கு மாலை 04.30 மணியளவில் தகவல் கிடைக்கவே, உடனடியாக உறவினர்களும், நண்பர்களும், அவரது தெருவைச் சேர்ந்தவர்களும் ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு ஏரல் காவல்துறையினரும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினரும், ஆற்றில் மூழ்கிய மாணவரைத் தீவிரமாகத் தேடினர்.

இரவு நேரம் நெருங்கியதையடுத்து, ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு, மின் விளக்குகள் உதவியுடன் தேடும் முயற்சி தொடர்ந்தது. நள்ளிரவு 01.00 மணி வரை தேடியும் மூழ்கிய மாணவரைக் காண முடியவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூலை 01) காலையில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புப் படை அதிகாரிகள், படகு மூலம் மீண்டும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், அவரது உடல் ஏரல் சேர்மன் சுவாமி கோவில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் அமலைச் செடிக்குள் சிக்கி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படகில் இருந்தவாறு, கயிறு கட்டி அவரது உடல் மீட்கப்பட்டது.

ஏரல் காவல்துறை ஆய்வாளர் ராமராஜன், துணை ஆய்வாளர் அருள் சாம்ராஜ் ஆகியோர் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல் ஸ்ரீவைகுண்டத்தில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தகவல்:
S.ஷம்சுத்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [01 July 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 28334

யா அல்லாஹ்!

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..

யா அல்லாஹ்! எங்களுடைய மௌத்தை அழகான மௌத்தாக ஆகி வைப்பாயாக..

உன்னிடமிருந்தே வந்தோம் உன்னிடமே மீள்வோம். எங்களுடைய பாவங்களை மன்னித்து நரகத்திலிருந்து காப்பாற்றுவாயாக.

கபூருடைய வேதனையிலிருந்தும் நரக வெதனையிலுருந்தும் பாதுகாப்பாயாக.

எங்கள் தாய் தந்தையின் பாவங்களையும் மனைவி மக்கள் உடைய பாவங்களையும் மன்னிப்பாயாக.

எங்களுடைய நசீபை அழகான நசீப் ஆகிவைப்பயாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28335

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்.

என்ன கொடுமை இது..?

செய்தியை படிக்க படிக்க துக்கம் தொண்டையை அடைக்கின்றதே. கணவரின் மரணம், சிறுவயது மகனின் மரணம்..! தாயாரின் மன நிலையை நினைத்தால்.. அப்பப்பா. வல்ல ரஹ்மான் அவர்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சமீப காலமாக நடைபெறும் விபத்து மரணங்களை அவதானித்து பார்த்தால், புரிவது ஒன்றுதான். அதாவது "வரம்பு மீறுதல்". இதை தவிர்த்தாலே பல விபத்துக்களை தவிர்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Salih (Bangalore) [01 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28337

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..

யா அல்லாஹ்! எங்களுடைய மௌத்தை அழகான மௌத்தாக ஆகி வைப்பாயாக..

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக... மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நெஞ்சம் விம்முகின்றது!
posted by Mauroof (Dubai) [01 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28339

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இது போன்ற சம்பவங்களினால் ஏற்படும் மரண செய்திகளை படிக்கையிலே நெஞ்சமெல்லாம் விம்முகின்றது. வேறொன்றும் எழுத முடியவில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இளைஞரின் பாவங்களை மன்னித்து, அவரது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக ஆக்கி மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

ஓரிரு மாதங்களுக்கு இடையே தனது கணவரை இழந்து தற்போது தனது அருமை மகனையும் இழந்து சொல்லெனா துயரத்தில் மூழ்கி இருக்கும் சகோதரி. முஹ்யித்தீன் இப்றாஹிமா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சாகசங்கள் புரியக் கூடிய பருவம்தான் இது என்றாலும், ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது இளைய சமுதாயமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வருந்துகிறேன்!
posted by kavimagan m.s.abdul kader (kayalpatnam) [01 July 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28340

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த மரைக்கா என்னும் பால்ய நண்பர் இதனைப் போல் அகால மரணம் அடைந்த வடு, இது வரை மறையவில்லை.

தற்காலிக நீர்க் குட்டைகளின் ஆபத்து தண்ணீரில் இல்லை. அதனடியில் ஒளிந்திருக்கும் சகதி மற்றும் நீர்த் தாவரங்களில் இருக்கிறது. அதனை மாணவர்களும், இளைஞர்களும் புரிந்து கவனமாக செயல்பட வேண்டும்.

அன்பு மகனை இழந்து வாடும் தாயார் மற்றும் உற்றவர்கள் அனைவருக்கும்,அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [01 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28341

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by முத்துவாப்பா (al khobar) [01 July 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28342

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

செய்தியை படிக்கும் போதே கண்கள் குளமாகின்றது ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இதயம் நொறுங்கும் இமயச்சோகமே
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [01 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28343

சிறகுகள் முளைத்து சிட்டாப்பறக்க வேண்டிய பருவம்,
எத்தனையோ இமாலய சாதனைகளை இவ்உலகில் சாதிக்க, சந்திக்க வேண்டிய எதிர்காலம்,

எல்லாவற்றையும் இமிபொழுதில் மறந்துவிட்டு, என்ன செய்கிறோம் என்று தெரிந்தும் தண்ணீரிழுப்போடு சவால் செய்து சலனமற்ற உடலோடு ஒதுங்கியுள்ள சகோதரரே!

உயிரோடு விளையாடிய உம் விளையாட்டின் விளைவு, வற்றாத விழிநீரையும் வருங்கால வெறுமையான வாழ்க்கை இன்னல்களை எண்ணி ஏங்கி தவிக்கும் உம் தாயாரின் தற்போதைய நிலை இதயம் நொறுங்கும் இமயச் சோகமே!

பல தடவைகள், பல அறிவுரைகளை அறியாத, புறியாத வயதிலுள்ளவர்களுக்கு போதித்துக்கொண்டே இருந்தாலும், இது போன்ற துயரச் சம்பவங்களைப் பார்த்தாவது தங்களைப் பக்குவபடித்திக் கொள்ளட்டும் எனதருமை பயமறியா பிஞ்சுகளே!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளைப் பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை வழங்கியருள் வானாக ஆமீன்!

பெற்ற பிள்ளையை பறக்க, துடிக்க பறிகொடுத்த அந்த தாய்க்கும் மற்றும் குடுபத்தார்களாகிய அனைத்து உறவினர்களுக்கும் அல்லாஹ் உடைய அழகிய பொறுமையான "சபூரை" கடைபிடித்துக் கொள்ளுங்கள் என்றுகூறி, என் சலாத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..
posted by Muzammil (Dubai) [01 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28345

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்..

யா அல்லாஹ்! எங்களுடைய மௌத்தை அழகான மௌத்தாக ஆகி வைப்பாயாக..

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக... மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...யா அல்லாஹ எங்களை பாதுகாப்பாயாக.
posted by T.m.rahmathullah (Kayalpatnam) [01 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28347

تفسير الجلالي{ ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون

السلام عليكم ء .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்.

செய்தியை படிக்க படிக்க துக்கம் தொண்டையை அடைக்கின்றதே. கணவரின் மரணம், சிறுவயது மகனின் மரணம்..! தாயாரின் மன நிலையை நினைத்தால்.. அப்பப்பா. வல்ல ரஹ்மான் அவர்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக. சமீப காலமாக நடைபெறும் விபத்து மரணங்களை அவதானித்து பார்த்தால், புரிவது ஒன்றுதான். அதாவது "வரம்பு மீறுதல்". இதை தவிர்த்தாலே பல விபத்துக்களை தவிர்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

எல்லாத்துக்கு மேலாக மார்க்க ஒழுக்கம் ரசூல் சுன்னத்து முறைகளில் பிரயாண ஒழுக்கமும் படித்து அதன்படி நடந்தால் இன்ஷா அல்லாஹ , ! இந்த மாதிரி கவலையான நிகழ்ச்சிகளையும் தவிர்க்கலாம்.

ஊர் சுத்தி திரியும் ஜமாத்து களிடம் கேட்டால் விவரம் விளங்கும் .

Tاللهم اغفر لحينا وميتنا ، وشاهدنا وغائبنا ، وصغيرنا وكبيرنا ، وذكرنا وأُنثانا ، اللهم من أحييته منا فأحييه على الإسلام ، ومن توفيته منا فتوفه على الإيمان ، اللهم لا تحرمنا أجرها ولا تضلنا بعدها إن لله ما أخذ وله ما أعطى ، وكل شئ عنده بأجل مُسمى وحسبنا اللهُ ونِــعـم الوكيل صّبركم الله شيخنا الفاضل خالد وألهم اهلها الصبر واحبابها وجمعكم بها في الفردوس الأعلى وأعظم اجركم واجرهم وغفر لميتكم وأحسن عزائكم امين ============================~~~~~~~~~~~~~~========E


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [01 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28348

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும் .

வல்ல நாயன் , அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் அழகிய சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [01 July 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 28349

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. யா அல்லாஹ் இது என்ன சோதனை...!
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [01 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28350

பல தடவைகள் - பல அறிவுரைகளை அறியாத வயது இது...

யா அல்லாஹ் இது என்ன சோதனை...!

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தார் அனைவர்களுக்கும் சபூரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பானாக...

மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஆழ்ந்த இரங்கல்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [01 July 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 28351

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குறுகிய காலத்தில் தந்தை - மகன் என இருவரை இழந்த குடும்பத்திற்கு அல்லாஹ் சபூர் என்னும் அழகிய பொறுமையையும் மன திடத்தையும் தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [01 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28352

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் ...!

இந்த மாணவனின் தந்தையார் வ ஃபாத் ஆகி 40 நாள் ஆகி விட்ட நிலையில், மற்றுமோர் சோதனை..!

வல்ல ரஹ்மான் பெற்றெடுத்த(தன் வாழ்வில் நிறைய சோதனைகளை தாங்கிய அந்த இரக்கமுள்ள) தாய்க்கு மிகப்பெரிய பொறுமையினைக் கொடுக்கணும்.

நான் பெற்ற மகன் வயதுடையோன்... ஏனோ நெஞ்சம் துடிக்கிறது...! இதை கேட்ட, காணும் இளைஞ்சர்களே இது உங்கள் துணிச்சல் இல்லை.

இதுவே உங்களுக்கு ஒரு பாடம்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது
posted by mackie noohuthambi (colombo) [01 July 2013]
IP: 122.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28355

அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் செய்தி. அவனது பெற்ற தாயின் மனம் எவ்வளவு துடிக்கும், அவன் எப்படி துடித்திருப்பான், ஏற்கெனவே குடும்ப தலைவனை இழந்தவர்கள் இப்போது குலக் கொழுந்தை பறி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஒரு ஷஹீத் உடைய நன்மை கிடைக்கும் என்று தேற்றுவதைவிட வேறு என்ன செய்ய முடியும். கண்கள் கண்ணீரை சிந்துகின்றன.

அந்த குடும்பத்துக்கு ஏதாவது பொருளாதார உதவிகள் செய்வதானால் இந்த இணைய தள ஆசிரியர் என்னையும் ஒருவனாக சேர்த்து கொள்ளுங்கள். பணத்தால் இழந்த உயிரை மீட்டி தர முடியாது. அவர்கள் விழிநீரை துடைக்கவாவது அது பயன்படும் அல்லவா.... வேறொன்றும் சொல்ல தோன்ற விலை.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்லாஹ்வின் இந்த முடிவுக்கு தலை வணங்குவதை தவிர வேறு வழி இல்லை. அவனது நாட்டத்தில் என்ன இருக்கிறது என்று யார்தான் அறிய முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இதயம் கனக்கின்றதே... இன்னுயிர் பிரிந்ததால்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [01 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28357

இப்படியொரு செய்திக்கு கமெண்ட் எழுதும் போது மனம் கனக்கின்றது. அல்லாஹ் இவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் அளித்து மேலான பொறுமையைத் தந்தருள்வானாக! ஆமீன்.

இதில் இன்னொரு வருத்தம் என்னவெனில் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் இளைய தலைமுறையினர் தங்கள் இன்னுயிரை மதிக்காமல் மூன்று பேர்கள் சேர்ந்து பைக்கில் சுற்றுவது. இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்க்குச் சமம்.

சேதுவாய்க்காலில் குளிப்பதற்காக மும்மூன்று பேராக மூன்று பைக்கில் சென்றுள்ள தகவல் அறிந்து மேலும் வருத்தமடைந்தேன். பிள்ளைகளுக்கு தன் உயிரின் மதிப்பு தெரியாது. நாளை அவர்கள் பிள்ளையைப் பெற்று வளர்க்கும் போதுதான் அதன் அருமை புரியும். அல்லாஹ் நம் வாரிசுகளைப் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.

கனத்த இதயத்தோடு கண்ணிர் மல்க,
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. உள்ளூர் காரனுக்கு பேயிக்கு பயம். வெளியூர் காரனுக்கு தண்ணிக்கு பயம். (முதியோர் வாக்கு)
posted by s.s.md meerasahib (kayalpatnam) [01 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28360

அஸ்ஸலாமு அலைக்கும். إنا لله وإنا اليه راجعــون

எல்லாம் வல்ல அல்லாஹ்.... இந்த மாணவனின் பிழைகளை மன்னித்து, அவரின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அன்பு இளஞ்சர்களே.... உள்ளூர் காரனுக்கு பேயிக்கு பயம். வெளியூர் காரனுக்கு தண்ணிக்கு பயம். என்று முதியோர்கள் சொல்வார்கள். அது உண்மை என்பது நிரூபணம். உள்ளூர்காரனுக்கு ஆழம், சகதி, சுழல் மற்றும் எச்சரிக்கை பகுதிகள் அறிந்து குளிப்பார்கள். மேலும் இந்த சகோதரன் குளித்த பகுதியிலும் எச்சரிக்கை போர்டு வைத்து இருந்ததாக ஊரில் சொல்வதை கேள்வியுற்றேன்.

ஆகையால் அன்பு சகோதரர்களே... தண்ணீர், மின்சாரம், நெருப்பு, இயற்கை காற்றுடன் உங்களின் சாகசங்களைக் காட்டவேண்டாம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [02 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28362

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ,,,,,,,,,,,,,,,,

இதை போன்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவங்களுக்கு இந்த இறைவசனத்தை மிஞ்சிய ஆறுதல் வேறு எதிலும் இல்லை எனலாம்.எல்லோரும் அவன் பக்கம் திரும்புவர்கலாக இருக்கிறோம்.எனவே நடந்ததை அப்படி செய்திருக்கலாம்,இப்படி பண்ணி இருக்கலாம்என்பதை கலந்து பேசுவதை தவிர்த்து மர்ஹூம் அவர்களின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை இறைஞ்சுவோமாக,

இளங்கன்று பயமறியாது என்பதட்கேட்ப அலட்சியத்தால் நொடியில் மரணம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.அறிவு கூடிய இந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏட்டுகல்வி ஒருபுறம் இருந்தாலும்,எந்தந்த இடங்களில் எப்படி கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு தானாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இன்றைய இலஞ்சர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை எல்லாம் கேட்கும் பொறுமை இல்லை.இறைவன் நம் அனைவரையும் ஆபத்தான மரணங்களில் இருந்து காப்பானாக,மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தினர் அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. மிகவும் ஒரு துயரமான செய்தி
posted by M.S.Kaja Mahlari (Singapore) [02 July 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28363

இந்த இளைனரின் மரண செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் கூட பயம், பொறுப்பு, தனது வருங்காலம் இவைகளை எல்லாம் கொஞ்சம் கூட பொறுப் படுத்தாமல் பைக்கில் கண்மூடி தனமாக செல்வது, தோட்டம், அருவி, குளம் என வரம்பு மீறி நடப்பது இவைகள் எல்லாம் கடும் கண்டிக்கப் படவேண்டியவை .

குறிப்பாக பெற்றோர்கள், உறவினர்கள் , பொறுப்பாளிகள் என அனைவரும் இவர்களின் விசயத்தில் மிகவும், கண்ணும் ,கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம் . கணவனை இழந்த அந்த தாயுக்கு , தற்போது மகனின் இந்த இழப்பு பேரிழப்பாகும். வல்ல நாயன் அல்லாஹ் அந்த தாயிக்கும் , அவர்களின் குடும்பத்தினர் யாவருக்கும் மிகுந்த பொறுமையை வழங்கி, நிறைந்த நற்கூலியையும் வழங்கி , மறைந்த அருமை தம்பியின் பாவங்களை பொருத்து ஜன்னத் எனும் சுவனத்தை வழங்குவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by mohmedyounus (Muscat) [02 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28366

சிறிய வயதில் ஏற்பட்ட கடும் சோதனைக்கு பகரமாக அல்லாஹ் இந்த குடும்பத்திற்கு எல்லா அருளையும் அருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [02 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28367

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

விதி முகம்மது முஹைதீனை விளையாடி இருக்குது.

அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், எனது சாலத்தினை தெரிவிக்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Abdul Hadhi (Jeddah) [02 July 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28373

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [02 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28374

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<

குறுகிய இந்த இளமையான காலத்தில் இறைவன் அடி சேர்ந்ததை நினைத்து நம் மனது நிலை கொள்ளவே முடிய வில்லை ..... நம்மால் நம் மனதை தேற்ற முடியாத போது.எப்படி தான் நாம் அருமை சகோதரர் அவர்களின் பெற்றோர் / மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களின் மனதை தேற்ற முடியும் .....மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும் வல்ல இறைவன் மேலான பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.........

இப்போது ஏற்பட்டு உள்ள சூழ் நிலமைகளை நம் இளம் வயது மாணவ கண்மணிகள் உணர்ந்து ......... எவ்வளவு கஷ்ட பட்டு பெற்றோர்கள் தங்களை படிக்கவைக்கிறார்கள் ....என்று நமது இளம் வயது மாணவர்கள் கொஞ்சம் எண்ணி எங்கு சென்றாலும் கவனமாகவே செயல் படுவது நல்லதே ............

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved