Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:51:46 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11181
#KOTW11181
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 6, 2013
நகர்மன்றத் துணைத்தலைவர் அளித்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் கைதாகி, பிணையில் விடுதலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், நகர அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விபரம் வருமாறு:-

அ.தி.மு.க.வின் நகர வார்டு முன்னாள் செயலாளரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான எஸ்.ஏ.முகைதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆறுமுகநேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அன்றே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கொடுத்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எஸ்.ஏ.முகைதீன் தன்னை வழிமறித்து மிரட்டியதாக மும்பை முகைதீன் தனது புகாரில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் காயல்பட்டினம் பேரூந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த எஸ்.ஏ.முகைதீன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இத்தகவலறிந்ததும், அவரது ஆதராவாளர்களும் காவல் நிலையத்திற்குத் திரண்டு சென்று, இது பொய் வழக்கு என காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.முகைதீனை, கையில் விலங்கு மாட்டி, சாத்தான்குளம் மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் செய்து, மூன்று நாட்கள் சிறையில் வைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். கை விலங்கு மாட்டுவதற்கு கூடியிருந்தவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே, கை விலங்கு மாட்டாமல், அவரை காவல்துறையினர் சாத்தான்குளம் அழைத்து சென்றனர்.

அங்கு நீதிபதி முன் ஆஜரான எஸ்.ஏ.முகைதீனை, தனது சொந்த ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமையன்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.ஏ.முகைதீனுக்கு நீதிமன்றம் 15 நாட்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்கியது.

கடந்த மார்ச் மாத இறுதியில், அ.தி.மு.க.வில் இணைந்த நகர்மன்றத் துணைத்தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் உண்மையாக கட்சியில் இணையவில்லை என்றும், இது சென்னையிலிருக்கும் தொழிலதிபர் ஒருவரின் நாடகம் என்றும், இதற்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உடந்தை என்றும் எஸ்.ஏ.முகைதீன், அண்மையில் நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[செய்தி திருத்தப்பட்டது @ 5:30 pm / 6-7-2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [06 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28424

அரசியல், பொது வாழ்க்கை என்று மக்கள் நலன் காக்க வந்துவிட்டால் போலீஸ் ஸ்டேஷன், கீழ் கோர்ட், மேல் கோர்ட்க்கு வழக்கு, வாயிதா, ஜாமீன் எல்லாம் வந்து போகவேண்டி இருக்கும். எல்லாம் சந்தித்தால்தான் இன்றைய அரசியல் பதவி, நாளை மந்திரி பதவியும் வரும்.

மூத்த அரசியல்வாதி, இவருக்கு இது புதியது அல்ல. இவர் அனுபவத்தில் எத்தனை சிறைசாலை கண்டு இருப்பார். எப்படி எல்லாம் போராடி கரை கண்டு இருப்பார். இவர் கைதானது, அரசியல் வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கைது படலத்திற்கு முன் விரோதமே காரணம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [07 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28430

அசைபட பதிவுகள் அசத்தலான உண்மைகளை உணர்த்துகின்றது. மீசையார் உள்ளே இருந்து ஓசைபடாமல் உளவு பார்த்து ஒட்டு மொத்தத்தையும் உரிய இடத்தில் சேர்ப்பது மும்பை நாயகருக்கு பெரும் தலைவலி!

பார்வையாளர் பகுதியில் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டதை பார்த்த மும்பையார் அடேயப்பா...எவ்ளோ பெரிய விரல்...? மிரட்டல் உருட்டல் ஆவேசத்தோடு மீசையார் மீது பாய மீசையார் ம்ஹும்...கப்சிப்! மனுஷன் அசையவே இல்லையே?

உள்ளே வந்த போலீஸ் நீங்க கூட்டத்தை நடத்துங்க அவங்க உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கல்லியேன்னு சொல்ல அவரை வெளியே போகச் சொல்லுய்யா...ன்னு மும்பை ஆகாயத்துக்கும் பூமிக்கும் எகிற...அமைதியுடன் புன்னகை மன்னனாக மீசையார் அமர்ந்திருக்கக் கண்டேன்.

மீசையார் சாமர்த்தியக்காரர்! பழுத்த அரசியல்வாதி! சந்தர்ப்ப வாத கட்சி தாவல் செய்யாமல் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டவராயிற்றே? அவரது அரசியல் அனுபவத்துக்கு முன்னால் மும்பை மஹாரஷ்ட்டரா எல்லாம் முட்டி போடணும். போடுவாங்க...! நமக்கெதுக்கு வம்பு?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Yanbu) [07 July 2013]
IP: 204.*.*.* | Comment Reference Number: 28448

வழக்கு போட்ட வீரத்திருமகனே!

நேர்மையாளராக நீர் இருந்தால், மேடையில் சில குற்றச்சாட்டுகளை வைத்தாரே மீசை மாமா? அவற்றுக்கு வரிக்கு வரி பதில் சொல்ல உம்மால் முடியுமா?

ஹும்... முடிந்தால்தான் அதைச் செய்திருப்பீரே? அது முடியாம போனதால்தானே இத்தனை வீரதீர செயல்களை செய்துகொண்டிருக்கிறீர்.

பாவம் நீங்கள்! அரசனை (அதிமுக பதவி) நம்பி புருஷனை (திமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர்) இழந்துவிட்டீர்களே.....? யாரை நம்பி அதிமுகவில் இணைந்தீர்களோ அவரே இப்போ ordinary எம்எல்ஏதானாமே..... ஆமா???

சரி, அதிமுக தலைமையிலிருந்து உங்களுக்கு உறுப்பினர் கார்டு வந்திடுச்சா? ச்சே... நமக்கு எதுக்கு இந்த வம்பு???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இறைவேதத்தின் (குரான்) மீது சத்தியம் செய்யட்டும்.... செய்ய தயாரா...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28450

நகராட்சி கூட்டத்தில் என்ன விவாதிக்க படுகிறது...? மக்கள் பணம் எதற்காக செலவிட படுகிறது...? என்ன.. என்ன.. தீர்மானம் நிறைவேற்ற படுகிறது இவைகளை பார்த்து ஒட்டு மொத்தத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நகராட்சியில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு நகராட்சி ஊழியர்களில் பல நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து பல சிக்கல் - சிரமம் வருவதனாலும்... மேலும் அதனால் சில பேருக்கு தான் நினைத்தது மாதிரி வருவாய் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்...! இப்படி அனைத்துக்கும் தடையாக இருப்பவருக்கு எதாவது ஒருவகையில் ஒரு கடினத்தை காவல்துறை மூலம் கொடுக்கபட்டுள்ளது.. இது போன்ற சம்பவம் நாளை அது பிறருக்கோ அல்லது எனக்கே கூட நடக்கலாம் சில உண்மைகளை கருத்தின் மூலம் வெளிபடுதுவதனால்...

தன்னை வழிமறித்து மிரட்டியதாக கூறும் இந்த நபரும் அதை நான் நேரில் பார்த்தேன் என்று காவல்துறை முன் + நீதி மன்றம் முன் சாட்சி கூறும் நபரும் இறைவேதத்தின் (குரான்) மீது சத்தியம் செய்யட்டும்.... செய்ய தயாரா...?

ஒருவரின் ஏற்பாட்டில் இது மிக துரிதமாக நடந்துள்ளது என்பது நகரில் உள்ள அணைத்து மக்களுக்கும் இச்சம்பவம் குறித்த உண்மை நிலை அறிவார்கள்...

நகராட்சியில் நமது உரிமைக்குரல் நெரிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் பிறருக்கும் பாடம் என்று உணர்த்தப்பட்டுள்ளது..!

இச்சம்பவத்தால் நகராட்சியில் வேறு ஒரு கூட்டம் நமது வரிபனத்தில் ஆதாயம் அடைவது உறுதி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. யார் அந்த ஒருவர்...????
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [07 July 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 28451

"ஒருவரின் ஏற்பாட்டில் இது மிக துரிதமாக நடந்துள்ளது என்பது நகரில் உள்ள அணைத்து மக்களுக்கும் இச்சம்பவம் குறித்த உண்மை நிலை அறிவார்கள்... " Copy and paste

யார் அந்த ஒருவர்...???? சொல்லுங்க சார்.. .....

கமெண்ட்ஸ் எழுத பயமாக உள்ளது.....நமக்கு வம்பு.. ......வேண்டமே ......

Administrator: Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கடைந்தெடுத்த கயமைத்தனம்!
posted by kavimagan m.s.abdul kader (qatar) [07 July 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 28461

அசைபடத்தை நோக்கும் போது வருத்தமும், சிரிப்பும் ஒரு சேர ஏற்படுகிறது. யாரை யார் மிரட்டுவது? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற பாடல்தான் ஞாபகத்திற்கு வந்தது.

துணைத்தலைவர் மொபைலைக் கையில் வைத்துக் கொண்டு டி.எஸ்.பிக்கு ஃபோன் செய்வதாக பூச்சாண்டி வேறு!

பணமும், பதவியும் வரும்.. போகும்... பண்பாடு? துணைத் தலைவர் அவர்களே திருந்துங்கள்.... அல்லது மக்கள் திருத்துவார்கள்.

கலைஞரின் கோட்டை காயல்பட்டணம் என்று இருந்த காலத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான நண்பர்களின் துணையுடன் அடக்குமுறைகளை எதிர்கொண்டு அ.தி.மு.க.வை நகரத்தில் வளர்த்தவர்.....
இதைவிட பூச்சாண்டிகளை ஏராளம் சந்தித்தவர்....
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றத்தில் குறைவதில்லை....

முஹைதீன் மாமா! உங்களுடன் நேர்மை உண்டு.. நாங்களுண்டு... நீதிக்குத் துணையாய் வல்ல நாயன் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இந்த மாதிரி இல்லாமல் இதை விட மேலாக மிக பெரிய மன உளைச்சல் வல்ல இறைவன் மூலம் விரைவில் வரும்...! அநியாய காரர்களுக்கு...
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [08 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28475

ஒரு நல்ல மனிதரை இப்படி அநியாயமா காவல்துறை மூலம் கோர்ட்டு கேஸ்னு அலையவிடுவது பெரும் பாவம்...

இதல்லாம் மிக பெரிய அநியாயம், வரம்பு மீறிய செயல்.. வருகின்ற புனித ரமலான் தொழுகையில் பாதிக்கப்பட்டவன் இறைவனிடம் இருகரம் ஏந்தி மனம் உருகி துவா கேட்டால் என்னவாகும்...

பணம், பதவி இவையல்லாம் வல்ல இறைவனிடம் செல்லுபடியாகாது...

இதற்க்கு காரணமானவர்கள் கண்டிப்பாக இறைவனின் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது... நபர்களை நகர் மக்கள் தனிமைப்படுத்த வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved