Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:49:01 PM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11192
#KOTW11192
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 7, 2013
தடையை மீறி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான தமுமுகவினர் கைது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2705 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஸ்லிம் சமுதாயத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி - தடையை மீறி பேரணி செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, தமுமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜூலை 06 அன்று முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு காவல்துறை திடீர் தடை போட்டது.

>> முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்

>> 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்

>> திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு வேண்டும்

என முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் விளம்பரம் செய்யப்பட்டது. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டுவரத் தயாரான நிலையில், காவல்துறை தடையால் முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

இந்நிலையில் உரிமைப் போராட்டத்தில் சமரசம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு, தடையை மீறி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

காவல்துறை, தமிழகமெங்கும் புறப்பட்ட மக்களை மிரட்டி அச்சுறுத்தியது. வாகன உரிமையாளர்களை எச்சரித்து, பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை கிடைக்கவிடாமல் செய்தனர்.

ரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் இன்று காலை வந்திறங்கியவர்களையும் காவல்துறை கைது செய்தது. நெடுஞ்சாலைகளில் நெருக்கடிகளை மீறி தனியார் வாகனங்களில் வந்தவர்களை நள்ளிரவு முதல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.

காவல்துறையின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் இன்று மதியம் 3 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் கைதாகினர்.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆங்காங்கே ஆயரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்திற்கு முன்பு தொடுக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலைகளை மீறி தமுமுகவினர் தங்கள் பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். எமது எழுச்சிமிகு பயணத்தில் இது மற்றொரு வரலாற்று வெற்றியாகும். எமது கோரிக்கைகள் வெல்லும் வரை எமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும்.

இப்போராட்டம் காவல்துறையின் தடையை மீறி நடைபெற்ற போதினும், பொது அமைதிக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சிறிதும் பாதகம் ஏற்படாமல் மிக அமைதியாகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது இரு ஆம்புலன்ஸ்களுக்கு தொண்டர்கள் வழிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தடையை மீறி பேரணிக்கு வந்தவர்களைக் கைது செய்ய வாகனங்கள் இல்லாமல் காவல்துறையினர் திணறினர். இறுதியில் கைது செய்யாமல் அனைவரையும் கலைந்து போகச் சொன்னார்கள்.

இப்பேரணியின் போது தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது உள்பட தமுமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இவ்வாறு, தமுமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பதிவுகள் வருமாறு:-

















நன்றி:
www.tmmk.in


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [07 July 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28441

காவல்துறையின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் மீறி பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளும், பெண்களும் இன்று மதியம் 3 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் கைதாகினர். " ஆண்டுக்கு பதிலாக ஆண்கள் என்று திருத்தம் செய்யவும்."

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Zainul abdeen (Dubai) [07 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28444

அபு ஹுரைராஹ் உங்கள் சேவைக்கு மிக நன்றி.

இதே போல் மற்றும் ஒரு நாளில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணன் PJ மற்றும் அவரது விழுதுகள் பேரணி நடத்தும். இன்னொருநாள் இதே கோரிக்கைகாக தாய்சபை நடத்தும். இப்படியே தனி தனியாக நடத்தினால் அந்தந்த கட்சிக்கும், இயக்கதுகும்தான் விளம்பரமே தவிர தமிழக முஸ்லிம்களுக்கு பயன் இருக்காது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [07 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28445

மாஷா அல்லாஹ்..!

வல்ல ரஹ்மான அவனுடைய கருணையைக்கொண்டு, நம் சமுதாயத்திற்கு வெற்றியையும், கண்ணியத்தையும் தந்து, மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலைமையில் இருந்து காப்பானாக.

வீரிய மிக்க த.மு.மு.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவர்களும் சமமாக நம் சமூகத்திற்கு போராடி வருகின்றார்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இவர்கள் மட்டும் நடத்தும் போராட்டங்களுக்கு இவ்வளவு மக்கள், தடையையும் மீறி கூடி உள்ளார்கள் என்றால், நம் அனைத்து இயக்கங்களும் ஒன்று கூடி போராடினால் எப்படி இருக்கும். அந்த ஒற்றுமையை வல்ல அல்லாஹ் தருவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தார்மீக அடிப்படையில் நடத்தும் போராட்டத்திற்கு தடை
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [07 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28453

தார்மீக அடிப்படையில் நடத்தும் போராட்டத்திற்கு தடை அளிப்பதில் அம்மா சளைத்தவர் அல்ல!

அவரோடு பிரிந்து சென்றவர்களை அலைக்கழித்து ஏன் ஆண்டுவரை கூட சிறை வாசம் செல்ல சித்துவேலை முடுச்சு போடுவதில் முன்னணி பெற்ற கட்சி தான் அதிமுக. என்றால் அது மிகையல்ல!

அம்மாவோடு இருந்து பிரிந்தவர்கள் குற்றகூண்டு, வீடு என்று அலைவேதே அதற்க்கு சாட்சி!

எந்த அடக்குமுறைக்கும் எத்தனை அராஜகத்திற்கும் அஞ்சக்கூடியவர்களா உண்மை முஸ்லிம் மாந்தர்கள்?

உள்ளத்தில் உரம் ஏற்றியவர்கள் உண்மை விசுவாசத்தை உள்ளத்தில் விதைத்துள்ளவர்கள் அவர்களின் உண்மை விசுவாச உணர்ச்சியை உரசி பார்க்கநினைத்தால்,

பார்க்கும் திசையெங்கும் எங்கள் இனஒற்றுமை பெருவெள்ள பேரலை பீறிப் பாய்ந்து அதில் பொலைத்தால் போதும் என்ற அளவிற்கு அதிமுக அரசு திக்குமுக்காடி விடும் கவனம். . அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...எல்லா புகழும் இறைவனுக்கே
posted by seyed Ibrahim (yanbu,ksa) [07 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28463

அஸ்ஸலாமு அலைக்கும் . த.மு.மு.க வின். இந்த போராட்டம் மறுபடியும் சென்னையை சிறிது நேரம் திக்குமுக்காட வைத்தது என்பது இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையையும் ,10 வருடங்களுக்கு மேலாக எந்தவித விசாரணையின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்காக போராட்டும் இஸ்லாமிய மக்களின் துணிச்சலையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை .அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்து லில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved