Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:11:51 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11321
#KOTW11321
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 18, 2013
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2013: 10ஆம், 12ஆம் வகுப்புகளில், நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு! விரிவான விபரங்கள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3112 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் 8 ஆண்டுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013:

நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சியின் ஓரம்சமான - மாநில சாதனை மாணவர்களுடன் காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியரைக் கலந்துரையாடச் செய்யுடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி – INTERACTIVE SESSION, கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று மதியமும், நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, அதே நாள் மாலையிலும் காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.

கலந்துரையாடல் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்த விரிவான செய்தி அண்மையில் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியானது.

பரிசளிப்பு விழாவின்போது, 12ஆம் வகுப்பில் தனிப்பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கும் 10ஆம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுள், 10ஆம் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பில் 1100 அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கும், சிறந்த கட்-ஆஃப் (சிறப்புத் தேர்ச்சி) மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட விபரம் வருமாறு:-

மாநிலத்தில் மூன்றாமிடம்:

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு மேலாண்மை பாடத்தில், காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் - மேரி தம்பதியின் மகள் எஸ்.ரத்னசூர்யா, 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.

அவருக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில், ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழை, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினம் வழங்கினார்.



ப்ளஸ் 2 நகரளவில் முதல் மூன்றிடங்கள்:

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்,

காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த பி.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகள் பி.எம்.சாமு ஸமீரா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1149 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் முதலிடமும்,

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த சேகரன் என்பவரது மகன் சுப்பையா என்ற கண்ணன் (எல்.கே.மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1148 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் இரண்டாமிடமும்,

காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த முஹ்ஸின் என்பவரது மகள் எம்.ஸாரா மஹ்ஃபூஸா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1147 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

இவர்களுக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில், முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் வழங்கினார்.



ப்ளஸ் 2 - ஹாஃபிழ்களுள் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த - ஹாஃபிழ் மாணவர்களுள்,

காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் கே.பஷீர் ஜஃப்ரான் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1200க்கு 1094 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் முதலிடமும், ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஸிபகத்துல்லாஹ் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1063 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1037 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

இவர்களுக்கு, துபை காயல் நல மன்றத்தின் அனுசரணையில், முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் வழங்கினார்.



எஸ்.எஸ்.எல்.சி. நகரளவில் முதல் மூன்றிடங்கள்:

10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்,

எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா (எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி) 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் முதலிடமும், எஸ்.லக்ஷ்மி நாராயணன் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் (சென்ட்ரல் மேனிலைப்பள்ளி) - கதீஜா ஃபாத்திமா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) ஆகியோர் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

500க்கு 491 என்பது நகர சாதனை மதிப்பெண் (Record Break) என்பதால், அதற்காக - காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மர்ஹூம் எம்.கே.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் நினைவாக, அன்னாரின் குடும்பத்தினர் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசுக்கு அனுசரணை வழங்கப்பட்டது, பரிசு மற்றும் சான்றிதழை அவரது மகன் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.

இரண்டாம் - மூன்றாமிடங்களுக்கு, கத்தர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில் முறையே ரூபாய் 2 ஆயிரம், 1 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவற்றை, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் காஜா முகைதீன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் வழங்கினர்.



எஸ்.எஸ்.எல்.சி. - ஹாஃபிழ் மாணவர்களுள் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:

அடுத்து, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுள், 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்,

ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் (சென்ட்ரல் மேனிலைப்பள்ளி) 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று நகளரவில் முதலிடமும், ஹாஃபிழ் கத்தீபு கே.எஸ்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 481 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் இரண்டாமிடமும், ஹாஃபிழ் பி.முஹம்மத் அபுல் காஸிம் 471 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

அவர்களுக்கு, துபை காயல் நல மன்ற அனுசரணையில், முறையே ரூபாய் 3 ஆயிரம், 2 ஆயிரம், 1 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை, துபை காயல் நல மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் ஆகியோர் வழங்கினர்.



தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றோர்:

அடுத்து, தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (Subject Centum) பெற்ற 78 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 500 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-

இவ்வகைக்கு, ஹாஜி எம்.ஏ.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மம்னாகார், ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சீனா மொகுதூம் முஹம்மத் (ஜித்தா), ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (பாங்காக்), ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எம்.ஏ.கே.காதிர் சுலைமான் ஆகிய கல்வி ஆர்வலர்களும், கத்தர் காயல் நல மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகளும் அனுசரணையளித்திருந்தன.

இம்மாணவர்களுக்கு நகரப் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.





ப்ளஸ் 2 தேர்வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றோர்:

அடுத்து, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1200க்கு 1100 அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற 18 மாணவ-மாணவியருக்கு, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அனுசரணையில் தலா ரூபாய் 300 பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1200க்கு 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 53 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 200 பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வகைக்காக, ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், கே.எம்.டி.சுலைமான், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் (ஹாங்காங்), ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் (ஹாங்காங்), ஹாஜி டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் (தம்மாம்) ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.

1200க்கு 1100 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் வருமாறு:-



1200க்கு 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் வருமாறு:-




இப்பரிசுகளை, நகரப் பிரமுகர்களும், கல்வி ஆர்வலர்களும் வழங்கினர்.









கட் ஆஃப் - சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றோருக்கு ரியாத் கா.ந.மன்றத்தின் பரிசுகள்:

12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு பெற்றாலும், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களை (கட் ஆஃப்) அதிகளவில் பெற்றிருந்தால்தான், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், அதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஊட்டுவதற்காக, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில், நடப்பாண்டிலும், கீழ்க்காணும் மதிப்பெண் வரையறை படி பணப்பரிசுகள் வழங்கப்பட்டன:-



இந்த வரையறையின் படி கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் பணப்பரிசைப் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-





இப்பரிசுகளை, நகரப் பிரமுகர்களும், கல்வி ஆர்வலர்களும் வழங்கினர்.





வழங்கப்பட்ட பரிசுகள் அனைத்தையும், பரிசுக்குரிய மாணவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ


[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. விடுபட்ட சில விவரங்களும் இணைக்கப்பட்டன @ 14:34 / 21.07.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28752

மிக்க மகிழ்ச்சி.

பரிசுகள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.

பரிசுகளுக்கு அனுசரனை அளித்த அனைத்து நல்ல உள்ளத்துக்கும், இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நல்லவர்களுக்கும் நன்றிகள்.

ஹாஃபிழ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய காயல் நல மன்றங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohideen fathima (tirupattur) [18 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28753

பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமான மாணவர்கள் இதை விட அதிகமான மதிப்பெண் பெற்று நம் ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இறைவனின் அருள் பெருகட்டுமாக...! ஆமின்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28764

கல்விக்காகவும் மாணவ மாணவிகளின் படிப்பு முன்னேற்றதிற்க்காகவும் அனுசரணை செய்த நல் உள்ளங்களுக்கும் - பல நன்மையான காரியங்களுக்கு தனது நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவு செய்து வரும் The Kayal First Trust மேலும் இவர்களுடன் இணைந்து செயல்படும் இக்ரா கல்வி சங்கம் மற்றும் பெரும் வலுவாக உதவிகள் செய்து வரும் அணைத்து காயல் நல மன்றங்களுக்கும் அதை நல் வழி படுத்தி நடத்தி வரும் அதன் தலைவர்களுக்கும் இறைவனின் அருள் பெருகட்டுமாக...! ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பார்க்கவும் படிக்கவும் பரவசமூட்டுகிறது
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28766

கொட்டிக்கிடக்குது சவுதியிலே என்று சொல்வார்கள். இன்று நமதூரில் பணமழை பெய்வதும் அப்படிக் கொட்டிக் கிடக்கும் பணக்குவியலை வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அள்ளி செல்வத்தையும் பார்க்க படிக்க பரவசமாக இருக்கிறது. இணையதள ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

இந்த நிகழ்சிகளை பார்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ள படங்களும் செய்திகளும் ஒரு முக்கிய விஷயத்தை நமக்கு உணர்த்துகிறது. கல்வியாளர்களை உற்சாகப்படுத்த அனுசரனையாளர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். நானும் மாணவனாக இருந்திருக்க வேண்டாமா என்ற ஆசை எழுகிறது.

ஒரு காலத்திலே படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் வசதி இல்லாமல் படிப்பை பாதியிலே நிறுத்திய என் போன்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயம் எல்லா காயல்நல மன்றங்களுக்கும் உண்டு. இப்போது இதுபோன்ற மன்றங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசும் கூட களத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். ஆனால்,சாமானியர்கள் அவர்களை எப்படி அணுகுவது என்ற guidance வழிகாட்டு முறைகள் கிடைக்காமல் திணறுகிறார்கள்.

அவர்களுக்கான கேள்விகள் மிக கஷ்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் குறைவாக இருப்பவர்கள் பின் தள்ளப்படுகிறார்கள். செல்வாக்கு உள்ளவர்களை அணுக வேண்டியுள்ளது. சிவப்பு நாடா முறை, இன்னும் நம்மை அறியாமலே நம்மிடம் குடிகொண்டுள்ளது. இவற்றையும் இலகு படுத்தி எல்லோருக்கும் கல்வி எல்லா தரப்பினருக்கும் கல்வி.என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் போல் இவை எல்லா அரங்குகளிலும் ஊரின் எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

இக்ரா கல்வி சங்கம் ஒரு புதிய கோணத்தில் தனது செயல்பாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டிய தார்மிக பொறுப்பு அதற்கு உள்ளது.வீடு வீடாக, தெரு தெருவாக செல்லவேண்டும், தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டுப் போவது போல் இந்த பணியையும் செய்ய வேண்டியுள்ளது.அது ஒரு கடினமான வேலைதான். இலவச ஆலோசனை சொல்வது எளிது அதை செய்துபார்தால்தான் அதன் கஷ்டம் விளங்கும். ஆனால் அப்படி ஒரு முயற்சியை எல்லா பொது நல அமைப்புக்களுடனும் கைகோர்த்து செய்யும்போது அது இலகுவாகும். ஊர் தழுவிய ஒரு பொது அரங்கில் இது பேசப்பட வேண்டும்.

வருடத்துக்கு ஒரு முறை சந்தியுங்கள் முதன்மை வீரர்களை என்று அறிவித்து கூட்டம் கூடி வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினால் மட்டும் போதாது. வெற்றிக்கு முயற்சித்து தோல்வி கண்டவர்களையும் வீட்டிலே விரக்தியுடன் முடங்கி கிடப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை கை தூக்கி விடும் பணியிலும் நாம் மும்முரமாக இறங்க வேண்டும். இது காயல்நல மன்றங்களுக்கு ஒரு பெரிய சவால், இக்ராவுக்கு ஒரு பெரிய நெருப்பாற்றில் நீந்தி வரும் சோதனை. ஆனால் இந்த சோதனையை நாம் சாதித்து வெற்றி கண்டே ஆக வேண்டும். அப்போதுதான் கல்வியில் பின் தங்கியவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. கல்வி பற்றி என்ன தேவை சந்தேகங்கள் வந்தாலும் இருக்கவே இருக்கிறது இக்ரா.வாருங்கள் போய் கேட்போம் என்று சாதாரண மனிதனும் சந்தைக்கு செல்வது போல் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு இக்ராவை நோக்கி வரவேண்டும். ஏனெனில் இக்ரா ஒரு பெரும் கல்வி சக்தியாக இந்த ஊரில் விசுவரூபம் எடுத்துள்ளது.

இது எனது ஆசை. கனவு. சில கனவுகள் நிஜமாவதில்லை. சில நிஜங்கள் கனவாகவும் கானல் நீராகவும் காட்சி தரும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட காவியங்கள் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்பட்டன.ஆயிரம் மைல் தூரங்களை ஒவ்வொரு எட்டாக வைத்துதான் கடக்க வேண்டும்.ROME IS NOT BUILT IN A DAY.

இதை படிப்பவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த யோசனையை முன் வையுங்கள். விதர்ப்பமான விவாதங்கள் வேண்டாம்.

புல்லாங்குழலில் பல ஓட்டைகள் இருக்கின்றன. அதில் காற்று புகும் போதுதான் புது புது இசை உருவாகிறது. அதே போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக கொடுத்துள்ளான். வாருங்கள் நாம் ஆரோக்கியமாக விவாதிப்போம், இந்த சமுதாயம் ஏற்றம் பெற...கல்லாமை இல்லாமை இந்த ஊரில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

அல்லாஹ் இந்த புனித ரமலானில் நமது சிந்தனை ஓட்டங்களை நெறிப்படுத்தி, நமக்கு எல்லா விதமான நன்மைகளையும் தந்தருள்வானாக. ரமலான் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Hong Kong) [19 July 2013]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 28768

கல்விக்காக நமது ஊர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஓர் நல்ல முயற்சி இது . தொடரட்டும் இந்த சேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாங்கிங்! (?!)  (18/7/2013) [Views - 3562; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved