Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:26:23 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11322
#KOTW11322
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 18, 2013
தமிழக அரசின் தூய்மை கிராமம் விருது பெற்ற நட்டாத்தி கிராமத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் நேரடியாக சென்று வாழ்த்து!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4151 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசு 2003 ம் ஆண்டு தூய்மை கிராம இயக்க விருதினை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் பிரதான நோக்கம் - கிராம சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் பாதுக்காக்கப்படவேண்டும் என்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் - மாவட்டம் ஒன்றிற்கு - ஒரு கிராம ஊராட்சி (VILLAGE PANCHAYAT) தேர்வு செய்யப்பட்டு, அக்கிராம ஊராட்சிக்கு ரொக்க பரிசும். விருதும் வழங்கப்படும். 2006-2007 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

2011-2012 ஆம் ஆண்டுக்கான விருதினை - தமிழக முதல்வர் ஜூன் 25 அன்று - 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு கிராமமும் தலா ரூபாய் 5 லட்சம் ரொக்கமும் பெற்றது.



தமிழக அரசின் இந்த விருதினை பெற இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் சார்ந்த நட்டாத்தி கிராமம் தேர்வு செய்யப்பட்டது. அக்கிராம ஊராட்சி சார்பாக அதன் தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் இந்த விருதினை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றார். இக்கிராமம் - காயல்பட்டினத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில், ஏரலுக்கு அருகே உள்ளது.

குமாரபுரம், முள்ளன்விளை, பட்டாண்டிவிளை, கொம்புக்காரன்பொட்டல், நட்டாத்தி, வைகுந்தபுரம், கண்ணாண்டிவிளை, சின்ன நட்டாத்தி ஆகிய எட்டு குக்கிராமங்கள் ஒருங்கிணைந்தது நட்டாத்தி ஊராட்சி கிராமமாகும் (VILLAGE PANCHAYAT).









விருது பெற்ற இக்கிராமத்தை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் அண்மையில் நேரில் சென்று, பார்வையிட்டு, கிராம தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.









அவ்வேளையில் நட்டாத்தி கிராம ஊராட்சி தலைவர் இவ்விருதினை பெற தான் எடுத்த முயற்சிகளை விளக்கி கூறினார்.

இதே விருதினை முந்தைய ஆண்டு ஒன்றில் பெற்ற ஒரு ஊராட்சி தலைவரின் பெருமிதம் தமக்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறிய அவர், விருதுகள் பெற்ற / பெற விண்ணப்பம் செய்திருந்த கிராமங்களை தான் நேரடியாக சென்று பார்வையிட்டதாகவும், அந்த கிராமங்கள் செய்த முயற்சியினை முழுமையாக தான் முதலில் கண்டறிந்ததாகவும் கூறினார்.

பின்னர் - ஊரில் கொண்டு வந்த மாற்றங்களை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு - நட்டாத்தி கிராம ஊராட்சி தலைவர் காண்பித்தார். இதில் மகளிர் சுகாதார வளாகம், கழிவு நீர்களை பயன்படுத்தும் முறைகள், அவசியமான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க அறிவிப்பு பலகைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மக்களுக்கான அறிவிப்புகள் ...





















மகளிர் சுகாதார வளாகம் ...













மக்களுக்கு எளிதாக இருக்கும் என்பதற்காக - இக்கிராமத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.









மேலும் - தெரு பெயர்களே இல்லாமல் இருந்து இவ்வூருக்கு, எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தலைவர்கள் பெயரும் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திருமதி பெல்லாவின் ஆலோசனைகளை நினைவுக்கூர்ந்த நாட்டாட்சி கிராம ஊராட்சி தலைவர் - இந்த விருது பெற முக்கிய காரணம், சுய உதவிக்குழுக்களின் செயல்பாடு, ஊராட்சி உறுப்பினர்களின் ஆர்வம், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு ஆகியவை ஆகும் என்றார்.







எஸ்.வி.பி.எஸ். செல்லத்துரை நாடாரின் மகன்களான எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் மற்றும் எஸ்.வி.பி.எஸ். செந்தில் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக நட்டாத்தி ஊராட்சிக்கு தலைவர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்களின் குடும்பத்தினர் - இப்பகுதி விவசாய சங்கத்தின் தலைவர்களாகவும் பல சமூக பணிகளை செய்து வருகின்றனர்.











புகைப்படங்கள் உதவி:
எம்.எம். முஜாஹித் அலி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [18 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28754

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த விசிட்டு நமது ஊரின் முன்னேற்றத்துக்கு ஊரு நல்ல முன்னோடியாகவே இருக்கலாம் .....இருப்பினும் நம் தலைவி அவர்களுடன் ஓன்று சேர்ந்து நமது உறுப்பினர்களும் போய்.நம் ஊரின் நலன் கருதி பல நல்ல தகவல்களை பெற்று இருக்கலாம்.

எல்லாம் சரி தான் ... தமிழக அரசின் தூய்மை விருதுக்கான முயற்ச்சியில் நமது ஊரின் பெயரும் வர கூடிய வாய்ப்பு அமையலாம் என்றால் எங்கே நம்மிடம் ( தலைவி & உறுப்பினர்களின் ) ஒற்றுமை என்கிற முதல் படியே சுத்தமாகவே இல்லையே .....அதான் நம்மில் இல்லாமை ...மனகசப்பு / ஒற்றுமை / வெறுப்பு / நிதானம் என்கிற பொறுமை இவையாவும் தான் ......நம்மிடம் அரவே இல்லையே ....

நமது ஊரின் அனைத்து பொது மக்களால் ஒட்டு மொத்தமாகவே நம்பிக்கையுடன் தேர்வு செய்ய பட்ட ஒரு நகர் மன்ற தலைவி அவர்களுக்கா இந்த நிலைமை ....

இவையாவுமே நீங்கி ....நம் நகர் மன்றத்துக்கும் சரி ....நமது மக்களுக்கும் சரி நற்பலன்கள் எப்போது ( தரும்) வரும் என்று காத்து இருக்கிறோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28756

தமிழக அரசின் தூய்மை கிராமம் விருது பெற்ற நட்டாத்தி கிராமத்திற்கு பாராட்டுக்கள்.

நம் தலைவி அவர்களை நேரில் சென்று பாராட்டியது ஒரு நல்ல செயல். அவர்களுக்கும் நம் நகராட்சியை ஒரு முன்மாதிரியான நகராட்சியாக உருவாகிக் காட்டனும் என்ற ஒரு வெறி உள்ளது.

நமக்கும் ஆசையாகத்தான் இருக்கின்றது, நம் காயல் நகராட்சியும் இது மாதிரியான ஒரு விருதை அரசிடம் இருந்து வாங்கனும் என்று..!! என்ன செய்ய.. ! நம்ம ஆட்கள் நற்றாட்டில் தவிக்கவிட்டு சென்று விடுகின்றார்களே, அப்புறம் எப்படி நட்டாத்தி கிராமம் மாதிரி விருது வாங்குறது.

கூட்டம் ஒழுங்காக நடப்பது இல்லை, அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்கள் எழுத்து வடிவிலே நிற்கின்றது, யார் பெரியவன் என்ற கேள்விக்கு விடை இன்னும் தெரிந்த பாடு இல்லை, எதுவும் நடைபெறாமல் நற்றாட்டில் இருக்கும் போது, விருதை நினைத்து கனவு காண்பது முட்டாள்தனம்.

கனவு என்று நனவாகுமோ தெரியவில்லை! முட்டாள்தனம் என்று புத்திசாலித்தனமாகும் என்றும் புரியவில்லை. இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S ABDUL KADER (KAYALPATNAM) [19 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28762

வாழ்த்தும் நல்ல எண்ணம் கொண்ட தலைவிக்கு, விரைவில் தமிழக அரசு மூலம் நல்வாழ்த்து கிடைக்கபெற, நகரமன்றம் ஒற்றுமையுட்ன் செயல்பட இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நமக்கு எப்ப விருது கொடுப்பாங்க?
posted by Mohamed Noohu (Chennai) [19 July 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 28763

ஹூம்... இந்த விருதெல்லாம் நியூஸ்லதான் படிக்க முடியும் போல இருக்கிறது. நமது நகராட்சிக்கு எந்த விருது குடுக்கலாம்?

1. நகர் மன்றத்தில் நன்றாக சண்டை பிடிப்போர்க்கு...

2. நகர் மன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதற்கு...

3. கூட்டத்தொடரை புறக்கணித்தாலும் மறக்காம கவர் (பணம்) வாங்குவதற்கு.

4. கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் வெளியில் வந்து ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குறை கூறி பேட்டி கொடுப்பதற்கு.

5. எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அதில் தனக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்பதற்கு.

6. நகர் மன்ற கூட்டத்தொடரை வீடியோ எடுக்க விடாமல் (கேட்டா பெண் உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லையாம்.) மற்ற அரசு மற்றும் தனியார் நிகழ்சிகளில் நன்றாக போஸ் (அதே பெண் உறுப்பினர்கள்) கொடுப்பதற்கு.

7. இறுதியாக 5 வருடங்கள் நகர்மன்றத்தை நகரவிடாமல் இருப்பதற்கு.

வேறு ஏதாவது விடுபட்டால் தெரிவிக்கவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Aarif O.L.M (Colombo Sri Lanka) [21 July 2013]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28820

முழு கவுன்சலர் குலாமும் தலைவியுடன் பிக்னிக் மாதிரி அந்த கிராமத்துக்கு விசிட் பண்ணியிருக்கலாமே ?

சுத்தத்தை போதிக்க வேண்டிய நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வாங்கிங்! (?!)  (18/7/2013) [Views - 3561; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved