Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:42 AM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11487
#KOTW11487
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 5, 2013
தமிழ்நாடு ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தினை 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக முதல்வர் உயர்த்தினார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2091 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தினை 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயர்த்தியுள்ளார். இது குறித்தும் - முஸ்லிம் சமுதாயத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும் தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் உலமா ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது; மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது; வக்ஃப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது; நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக ஒட்டு மொத்தமாக 3 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது; ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, விலையில்லா தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, முதலியன வழங்க ஏதுவாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த இணை மானியத் தொகையை, 1.4.2012 முதல் 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்படும் மானியத் தொகையின் உச்ச வரம்பை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே உத்தரவிட்டார்கள்.

இதன் அடிப்படையில், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தேனி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், நிலகிரி, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களுக்கு 1.4.2012க்கு முன்னர் அந்த சங்கங்கள் வசூலித்த நன்கொடைக்கு 1:1 என்ற விகிதாச்சார அடிப்படையிலும், 1.4.2012க்கு பின்னர் வசூலிக்கப்பட்ட தொகைக்கு 1:2 என்ற விகிதாச்சாரத்திலும் இணை மானியம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கென 49 லட்சத்து 68 ஆயிரத்து 347 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்கள்.

தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை தேர்வு செய்வது, மற்றும், தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்புவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட குழுதான் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு. இக்குழு தனது பணிகளை செவ்வனே ஆற்றுவதற்காக அரசால் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாம் முறையாக தமிடிநநாட்டின் முதலமைச்சராக பதவியேற்றவுடன், சிறுபான்மையின மக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை சிறப்புற அமைய இக் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தினை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டார்கள். சிறுபான்மையின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியத்தினை 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (shiqiao ,Guangzhou) [06 August 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 29220

நன்றி மேடம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இது தேவையற்ற ஓன்று என்று தான் நான் சொல்வேன்…
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [06 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29226

இந்த மானியம் வறுமையில் வாடும இஸ்லாமியர்களுக்கும், அவர்களின் வேலை வாய்ப்புக்கும் பயன்படுத்தலாம். பொருளாதாரம் இருந்தால் மட்டுமே ஹஜ் பயணம் கடமையாகிறது...!

இது தேவையற்ற ஓன்று என்று தான் நான் சொல்வேன்…!

அரசு இப்பணத்தை ஹஜ் யாத்திரைக்கு கொடுப்பதை விட இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது அதிகம் செய்யலாம்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எங்கோ ஒரு இடத்தில இபாதத்து நெருடல்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [06 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29239

பல சமுதாய மக்கள் வாழும், குறிப்பிட்ட மதத்தை சாராத ஒரு கதம்ப அரசாங்கத்திலுள்ள மக்களின் வரிப்பணத்தில் ஒரு பகுதியை இலவசமாகப் பெற்று அதன் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது என்பது, எங்கோ ஒரு இடத்தில இபாதத்து நெருடல் நிகழ்வது போலுள்ள உணர்வை உணர்கிறேன்! என் கணிப்பு முற்றிலும் சரி என்று சொல்லும் அளவிற்கு நான் ஆன்மீக மார்க்கறிவு ஜீவியும் அல்ல.

பொதுவான விதியின் அடிப்படை, புனித ஹஜ் செல்ல தக்க பொருளும் (பண வசதி) சரீர சுகமும், மனதில் உறுதிமிக்கத் துணிவும் இருக்கவேண்டும் என்பதுதான் நாம் பாரம்பரியமாக சொல்லி, செய்துகொண்டிருக்கின்ற வழிமுறையாகும்!

ஆகவே, அதிமுக அரசு அறிவித்திருக்கும் இத சலுகையை ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கோ, ஏழை முஸ்லிம் குடிமகனுக்கு ஒரு தொழில் உதவிக்கோ கொடுத்துதவலாமே!

அதிமுக அரசு அறிவித்ததனால் இதை சொல்கிறேன் என்று இல்லை. திமுக அரசு அறிவித்தாலும் என் நிலைப்பாடு இதுவேதான்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved