Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:20 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11933
#KOTW11933
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 28, 2013
விவாதக் களமானது காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம்! 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்!! திங்கட்கிழமை கூட்டம் தொடரும் என அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியிருந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், காரசார விவாதங்களுக்கிடையே 11 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானமியற்றுவதற்காக இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர்மன்றத்தன் மாதாந்திர சாதாரண கூட்டம், இம்மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.



கடைசியாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் - மே மாதம் 31ஆம் தேதியன்று நடைபெற்றது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டங்களை பெருவாரியான உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆகஸ்ட் 27 அன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது.

பங்கேற்ற உறுப்பினர்கள்:

இக்கூட்டத்தில், ஏற்கனவே தனது பொறுப்பை விட்டும் விலகுவதாகக் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தவிர அனைவரும் கலந்துகொண்டனர்.

கூட்டப் பொருட்கள்:

பெருவாரி உறுப்பினர்களின் புறக்கணிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டங்களின் கூட்டப் பொருட்கள் உட்பட - இக்கூட்டத்தில் பின்வருமாறு 103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவிருந்தது:-











































கூட்டப் பொருட்களை, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் வாசிக்கத் துவங்கினார்.

பொருள் எண் 001:



ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தும், நகராட்சியின் முன்னனுமதி பெறாமல் பழைய வாசகசாலை கட்டிடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருள் எண் 002:



பிறப்பு - இறப்பு பதிவுகளை அங்கீகரித்து தீர்மானமியற்றப்பட்டது.

பொருள் எண் 003:



இப்பொருளுக்கான செலவினங்களுக்கு முறையான பில்களை சமர்ப்பிக்கும் வரை இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.

பொருள் எண் 004:



இப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சிக்கு வருகை தந்த தணிக்கைத் துறை அதிகாரிகள், ரூபாய் 2.5 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதென தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை செய்யும் வரை எம்.எஸ்.நசீர் கான், முஹம்மது அலி ஆகியோரைத் தவிர மற்ற பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று குறிப்பெழுதியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

இது தொடர்பாக நகராட்சி அலுவலர் முருகேசன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மீண்டும் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் நிரந்தர அலுவலர்களை, அவர்களது மேலதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மட்டுமே வைக்க இயலும் என்றும், அந்த அடிப்படையில் - இந்த முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதார ஆவணங்களைக் காண்பித்தார்.

நகராட்சியின் தற்காலிகப் பணியாளர்களைப் பொருத்த வரை, நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடிப்படையிலேயே அவர்கள் பணியமர்த்தப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் நகர்மன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பணி செய்த இருவருக்கு அவர்களின் இரண்டு மாத சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தபோது, மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதைக் கருத்திற்கொண்டு அது தொடர்பானவர்களை விசாரிப்பது அதை விட முக்கியமானது என்றும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விபரத்தை ஆணையரிடம் கேட்குமாறும், இது தொடர்பான அவ்விரு தற்காலிகப் பணியாளர்களையும் நேரடியாக அழைத்துக் கேட்க வேண்டுமெனவும் தலைவர் கூறினார்.

பின்னர், அவ்விரு ஊழியர்களும் கூட்டரங்கிற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, ஜூலை மாத (ஒரு மாத) ஊதியத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஜூலை மாத சம்பளம், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் கூறியதால் வழங்கப்பட்டதாக ஆணையர் கூறினார்.

தான் ஆட்சேபித்து குறிப்பெழுதியுள்ள நிலையில் அவருக்கு ஊதியம் வழங்கியதற்கான காரணம் குறித்து தொலைபேசி மூலம் ஆணையரிடம் வினவியபோது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) சொன்னதால் ஊதியத்தை வழங்கியதாகக் கூற, உடனடியாக ஆர்.டி.எம்.ஏ.வுக்குத் தொடர்புகொண்டபோது, “இதுவா எனக்கு வேலை?” என்று கேட்டு, தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

தான் குறிப்பெழுதிய பிறகும் விசாரிக்கப்பட வேண்டிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய ஆணையர், தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் அடுத்த (ஆகஸ்ட்) மாதத்திற்கான ஊதியத்தை வழங்க கையொப்பம் கேட்டபோது, “முந்தைய மாதத்தில் எப்படி முடிவெடுத்தீர்களோ அப்படியே இதற்கும் செய்துகொள்ளலாமே...? எனது கையெழுத்து எதற்கு?” என்று கூறி தான் மறுத்துவிட்டதாகவும் நகர்மன்றத் தலைவர் மேலும் கூறினார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டனர்.

நிறைவில், இப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பை நிராகரித்தும், பணி ஒப்பந்தக் காலம் நிறைவுற்ற அனைத்து தற்காலிக உறுப்பினர்களுக்கும் 89 நாட்களுக்கு பணிக் காலத்தை நீட்டித்து தீர்மானமியற்றப்பட்டது.

பொருள் எண் 005:



தற்காலிகப் பணியாளரான தொழில் நுட்ப உதவியாளர் கே.செந்தில் குமாருக்கு 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கி தீர்மானிக்கப்பட்டது.

பொருள் எண் 006:



செலவுச் சீட்டுகளுக்கான ரசீதுகள், ஆதார ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படாததால் இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.

இவ்வாறாக, 6 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்மானமியற்றப்பட்ட நிலையில், மாலை 06.00 மணியாகிவிட்டதால், பொருள் எண் 017, 088, 094, 102, 103 ஆகிய ஐந்து கூட்டப் பொருட்களை மட்டும் அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொருள் எண் 017:



பொருள் எண் 088:



பொருள் எண் 094:



பொருள் எண் 102, 103:



இந்த ஐந்து பொருட்களையும் அங்கீகரித்து கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் தற்காலிகமாக நிறைவுற்றது.

எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 03.00 மணிக்கு மீண்டும் நகர்மன்றக் கூட்டம் தொடரும் என நகர்மன்றத் தலைவர் அறிவித்தார்.

கூட்டத் துளிகள்...

நகர்மன்றத் தலைவர் குறிப்பு தொடர்பாக...

பெரும்பான்மை உறுப்பினர்கள் இணைந்து தீர்மானமியற்றும் ஒரு பொருளில், நகர்மன்றத் தலைவர் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் குறிப்பெழுதி வைப்பதால், அத்தீர்மானம் குறித்து பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லாமல் போய் விடுவதாகவும், இதனால் பாதிக்கப்படுவது ஊர் மக்களே என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், உளத்தூய்மையுடன் மக்களுக்குப் பணியாற்றுவதற்காகவே அவர்கள் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட விஷயங்களில், பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானமியற்றினால் அது நிறைவேறும் என்று கூறும் சட்ட விதிகள், அத்தீர்மானங்கள் மீது நகர்மன்றத் தலைவரின் குறிப்பை எழுதவும் அதிகாரமளித்துள்ளது என்று கூறினார்.

குப்பை கொட்ட இடம்...

முந்தைய நகர்மன்றத் தலைவர் தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து குப்பை கொட்ட இடமளிக்க முன்வந்ததாகவும், அவர் தருவது பிடிக்காததாலும், ஐக்கியப் பேரவை இவ்விஷயத்தில் தலையிட்டதாலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது அந்த இடத்தை - சுற்றுச்சூழலைக் காரணங்காட்டி தலைவி வேண்டுமென்றே காண்பிக்காமல், ஓடக்கரையிலுள்ள மற்றோர் இடத்தைக் காண்பித்ததாகவும், இதை மாவட்ட ஆட்சியருடன் வந்த அலுவலர் கூறியதாகவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், அந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாகவும், அப்படியோர் இடத்தை தானே நினைத்தாலும் ஒப்புதல் தர இயலாது என்று மாவட்ட ஆட்சியர் தன்னிடம் கூறியதாகவும், அதனடிப்படையிலேயே வேறிடங்களைக் காண்பித்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நகர்நலன் விஷயத்தில் தனக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், குப்பை கொட்டுவதற்கான இடம் தேடும் பணி கடந்த நகர்மன்ற பருவத்தின்போதே துவங்கியிருக்க, அப்போதே (CRZ சிக்கல் உள்ள) இந்நிலத்தை அளித்து பணியை முடித்திருப்பதை விட்டுவிட்டு, இப்போது இவ்வளவு காலம் தாமதித்து, சிரமப்பட வேண்டிய அவசியமில்லையே...? என்றும் கூறினார்.

கடற்கரை நுழைவாயில் அருகில் புதிய கட்டிடம்...

காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயில் அருகில் புதிதாகக் கட்டிடம் கட்டப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், CRZ எல்லைக்குள் வருவதாகக் காரணம் கூறியே கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு பணிகளை நிறுத்தியுள்ளதாகவும், அதை விட கடலுக்கு மிக அருகிலிருக்கும் இவ்விடத்தில் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது யார் என்றும் கேள்வியெழுப்பினார். அதை 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீனும் வலியுறுத்தினார். இக்கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நகராட்சி ஆணையர் கூறினார். இக்கருத்தை உறுப்பினர் அஜ்வாத் முன்வைத்தபோது, சில உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். எனினும், அவர் தன் கருத்தை முழுமையாகக் கூறி முடித்தார்.

தெரு விளக்கு பராமரிப்பு தனியார் மயப்படுத்தல்...

தெரு விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென பதவியேற்ற துவகத்திலிருந்தே தான் கூறி வருவதாகவும், அப்போது ஏற்காத தலைவி, தற்போது தனியார் மயமாக்கலை ஆதரிப்பது குறித்தும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினத்திலுள்ள தெரு விளக்குகளின் எண்ணிக்கையை ஒத்த சில நகராட்சிகளில் மிகக் குறைந்த செலவு மதிப்பீட்டுத் தொகையே இவ்வகைக்காக காண்பிக்கப்பட்டிருக்க, காயல்பட்டினம் நகராட்சியில் அதை விட பல லட்சங்கள் கூடுதலாக (ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய்) மதிப்பீட்டுக் கணக்கு காட்டப்பட்டதாலேயே அப்போது தான் அதை எதிர்த்ததாகவும், பின்னர், அது தொடர்பான - இதர நகராட்சிகளின் ஆவணங்களைக் கருத்திற்கொண்டு மதிப்பீடு (ஆண்டுக்கு 16 லட்ச ரூபாய்) தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே தற்போது தான் அதை ஆதரிப்பதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், இதனால் நகர மக்களின் பணம் சுமார் 4 லட்சம் ரூபாய் (ஆண்டொன்றுக்கு) பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

குர்ஆன் மீது சத்தியம்...

ஒரு கட்டத்தில், அலுவலர் முருகேசனைக் காப்பாற்றுவதற்காக ஆர்.டி.எம்.ஏ.விடம் தலைவி பரிந்துரை செய்ததாக 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு கூறினார். அதை பல உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.

அக்குற்றச்சாட்டை நகர்மன்றத் தலைவர் உடனடியாக மறுத்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அதைக் கூறவே, “குர்ஆனை முன்வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்க நான் தயார்! என் மீது குற்றச்சாட்டு வைக்கும் உறுப்பினர் சுகு பகவத் கீதையை வைத்து சத்தியம் செய்ய தயாரா?” என்று நகர்மன்றத் தலைவர் கேட்டார். அப்போது எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், இதற்கு சத்தியம் செய்ய முன்வந்ததைப் போல, “நான் எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக மாற்றி எழுதவில்லை என குர்ஆனை வைத்து சத்தியம் செய்வீர்களா?” என்று கேட்டார். எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக தான் எழுதவில்லை என்றும், அதற்கும் சத்தியம் செய்ய தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

சிறிது நேரத்தில், வெளியே சென்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், குர்ஆன் பிரதியை கூட்டரங்கிற்குள் கொண்டு வந்தார். அதைப் பார்த்த நகர்மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கூட்டரங்கை விட்டும் உடனடியாக வெளியேறினர். சத்தியம் எதுவும் செய்யப்படாத நிலையில், சத்திய சோதனை குறித்த பேச்சுக்கள் நிறைவுற்ற பின்னர், வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் உள்ளே வந்தனர்.

பார்வையாளர்கள்...

இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



படங்கள் & களத்தொகுப்பில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [29 September 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30446

[ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது அந்த இடத்தை - சுற்றுச்சூழலைக் காரணங்காட்டி தலைவி வேண்டுமென்றே காண்பிக்காமல், ஓடக்கரையிலுள்ள மற்றோர் இடத்தைக் காண்பித்ததாகவும், இதை மாவட்ட ஆட்சியருடன் வந்த அலுவலர் கூறியதாகவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார். ] C & P

[ நகர்மன்றத் தலைவர், அந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாகவும், அப்படியோர் இடத்தை தானே நினைத்தாலும் ஒப்புதல் தர இயலாது என்று மாவட்ட ஆட்சியர் தன்னிடம் கூறியதாகவும், அதனடிப்படையிலேயே வேறிடங்களைக் காண்பித்ததாகவும் கூறினார். ] C & P

அப்படியானால் யார் சொன்னது உண்மை? ஒருவேளை இந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாக எண்ணினால், அதற்கு பின்னாலுள்ள இடத்தை தருவதாக நில உரிமையாளர் சொல்லியும் அடம்பிடிப்பது எதனால்?

எந்தவொரு அரசு வேலையாக இருந்தாலும் நிதானமாக நடக்கும் . ஆனால் நிரந்தரமாக இருக்கும் . ஒரு ஆட்சியில் வேலையை துவக்கி வைப்பார்கள் . அடுத்த ஆட்சியில்தான் அது முடியும் . எல்லா நாட்டிலும் இதே நடைமுறைதான் . இந்த வேலை சென்ற ஆட்சியில் துவக்கப்பட்டதுதான் . விதிமுறைகளின்படி ஒவ்வொரு கட்டமாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, உங்கள் ஆட்சியில் நிலம் தருவதாக ஒருவர் தானே முன் வருகிறார் . நிலத்தை பெற்று அந்த வேலையை முடித்து வைக்கலாமே? எதற்காக தடம் புரண்டு பேசுகிறீர்கள் ? எடுத்ததற்கெல்லாம், "அல்லாஹ்வின் மீது ஆணையாக" என்று சத்திய வாக்கு சொல்லும் இந்த மேடம், இந்த வேலை இழுத்தடிப்பிற்கு எதை வைத்து, சத்தியம் செய்வார்?

தற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது நகரமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளது என்று கூறும் தலைவி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை, அந்த ஊழியர்களையே நேரில் வரவழைத்து கேட்கும் அவல நிலை இந்த நகர்மன்றத்தில்தான் உள்ளது. நகரமன்றத்தின் சம்பள பட்டுவாடா தஸ்தாவேஜுகளை பார்த்தே தெரிந்துகொண்டிருக்கலாமே !

தெருவிளக்கு பராமரிப்பில் ஒட்டுமொத்த காயல்பட்டினத்திற்கும் சேர்த்து வருடத்திற்கு 4 லட்ச ரூபாய் மிச்ச்சப்படுத்தியதாக கூறும் தலைவி, அதற்கான திட்ட வரைமுறைகளை தயார் செய்து வைத்திருப்பதாக கூறுகிறார். இவருடைய திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்குள், கையிலிருக்கும் 4 லட்சம் "மிச்சம்" காணாமல் போய், 8 லட்சம் 10 லட்சம் என்று சொச்சத்திற்கு போய் விடும் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Positive Sign
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [29 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30450

நகர் மன்ற கூட்டங்களில் அதை இதை சொல்லி வெளிநடப்பு செய்யாமல் கூட்டபொருளில் விவாதம் பண்ணுமளவுக்கு வந்திருப்பதில் ஒரு Positive Sign தெரிகின்ற மாதிரி இருக்கு.

அந்த விவாதங்கள் கண்ணியமாகவும் constructive ஆகவும் இருத்தல் நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Smear Campaign by vested interest ....
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [30 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30468

அப்படியானால் யார் சொன்னது உண்மை? ஒருவேளை இந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாக எண்ணினால், அதற்கு பின்னாலுள்ள இடத்தை தருவதாக நில உரிமையாளர் சொல்லியும் அடம்பிடிப்பது எதனால்?

(Copy & Paste from Comment Reference Number: 30446)

இந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இது விசயமாக ஊர்நலனில் அக்கறையுள்ள ஒரு சகோதரர் என்னிடம் கூறும்போது ஐக்கிய பேரவையைக் சார்ந்த ஒரு நபர் தன்னிடம் இந்த குற்றச்சாட்டை வைத்ததாக கூறி, "ஏன் தலைவி இந்த மாதிரி பிடிவாதமாக இருக்கிறார்" என்று வினவினார். நான் அந்த நபரின் அலுவலகத்திலிருந்தே தலைவியுடன் தொலைபேசியில் வினவினேன். அதற்கு தலைவி அளித்த பதில்.

"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்". என்றார்.

என்னிடம் இந்த குற்றச்சாட்டை கொண்டு வந்தவரிடம் கூறினேன். அவரும் ஐக்கிய பேரவையைக் சார்ந்த அந்த பெரியவரிடம் என் முன்பே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவி சொன்ன பதிலை கூறினார்.

No reaction so far from the concerned people shows that it is either a mere publicity stunt or smear campaign against the Chairman by vested interest. to malign and tarnish her image.

----------------------------------------

"தற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது நகரமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளது என்று கூறும் தலைவி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை, அந்த ஊழியர்களையே நேரில் வரவழைத்து கேட்கும் அவல நிலை இந்த நகர்மன்றத்தில்தான் உள்ளது. நகரமன்றத்தின் சம்பள பட்டுவாடா தஸ்தாவேஜுகளை பார்த்தே தெரிந்துகொண்டிருக்கலாமே ! " (Copy & Paste from Comment Reference Number: 30446)

இந்த கேள்வி, சம்பள விசயத்தை அறியாமல் விவகாரமாக்கிய உறுப்பினரைப் பார்த்து கேட்கப் படவேண்டிய கேள்வி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. CRZ நிலம் தொடர்பாக.
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [30 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30472

சகோதரர் அப்துல் வாஹித் அவர்களே,

முன்னாள் தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்கள், தங்களின் 22 ஏக்கர் நிலத்தில் இருந்து 5 ஏக்கர் மட்டும் இந்த திட்டத்திற்காக சந்தை விலையில் (market value) அல்லாமல் அரசு விலையில் (guideline value) தருவதற்கு முன்வந்தார்கள். அந்த 22 ஏக்கரில் CRZ எல்கைக்கு உள்ளேயும், CRZ எல்கைக்கு வெளியேயும் நிலங்கள் உள்ளது. முதலில் அந்த 5 ஏக்கர் CRZ -க்கு உள்ளே இருந்ததால் அதை நம் தலைவி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நினைவூட்டி, அவரும் அந்த இடத்தை நிராகித்தார்.

இப்போது, உங்கள் கூற்றுப்படி, 4 மாதங்களுக்கு முன்பே, (ஐக்கிய பேரவை நிர்வாகி சொன்னதாக, உங்களிடம் சொல்லி) நீங்கள் தலைவி அவர்களுக்கு, தொலைபேசியில் பேசி, அந்த 22 ஏக்கரில் CRZ -க்கு வெளியே உள்ள இடத்தில் 5 ஏக்கர் தர வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்கள் தருவதற்கு வாய்மொழியாக சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்ற செய்தியை சொல்லி உள்ளீர்கள்.

"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்". என்றார். (c&p)

நிலம் கொடுப்பவர் தனிப்பட்ட திருமதி. ஆபிதா ஷேக் அவர்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக ஊர் நலனில் அக்கறை கொண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு விற்கிறார். அவருக்கு தற்போது விற்கவேண்டும் என்ற சூழ்நிலையும் இல்லை.

ஊர்நலனில் அக்கறை உள்ள தலைவராக இருந்திருந்தால், தலைவி அவர்கள் தன் வறட்டு கவ்ரவத்தை விட்டு விட்டு, தானும், ஆணையர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சிலரையும் ஹாஜியார் அவர்களிடம், சென்று பேசி முடிவு எடுத்திருக்கலாம். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை.

தலைவி அவர்கள் இப்போது கேட்டாலும், தனிப்பட்ட ஆபிதா ஷேக் அவர்களுக்காக கேட்க போவதில்லை. மாறாக காயல்பட்டின நகரத்திற்காக தான் கேட்பார்கள். ஆதலால், தலைவியிடம் உங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து, ஊர் நலனுக்காக இந்த காரியத்தை முயற்சி செய்யவும்.

சற்றுமுன் ஹாஜியார் அவர்களின் மகன், வாவு இஸ்ஹாக் அவர்களிடம் அலைபேசியில் இது விஷயமாக கேட்டதற்கு, 22 ஏக்கரில் CRZ -க்கு வெளிய உள்ள 5 ஏக்கர் நிலத்தை, தற்போதைய அரசு விலைக்கு (guideline value) நகராட்சிக்கு கொடுக்க, தனது தந்தை, ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்கள் தயாராக இருப்பதாக சொன்னார்.

Now the ball is in chairman's court.
தற்போது நடுநிலையாளர்கள், ஊர் நலனில் அக்கறை உள்ளவர்கள் முடிவெடுத்து கொள்ளலாம்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நேரடி ஒலிபரப்பு செய்யலாமே?
posted by hasbullah mackie (dubai) [30 September 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30475

நேரடி ஒலிபரப்பு உண்டா? சூடான விவாதம் கேட்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved