Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:45:22 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12166
#KOTW12166
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 23, 2013
‘மெகா’ அலுவலக திறப்பு விழா! 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3919 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக துவக்கப்பட்டது, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - Municipal Election Guidance Association (MEGA).

தேர்தல் நிறைவுற்ற பின்னரும் ‘மெகா’ அமைப்பு தொடர்ந்து நகரில் இயங்கி மக்கள் நலப்பணிகள் செய்ய வேண்டும் என பொதுநல ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இவ்வமைப்பு, “மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - Mass Empowerment and Guidance Association (MEGA)” என்ற பெயரில் புதிய பரிணாமம் பெற்றது.

இவ்வமைப்பிற்காக, காயல்பட்டினம் தைக்கா பஜாரில் - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியருகில் புதிதாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத் துவக்க விழா, இன்று (அக்டோபர் 23 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.



பொதுமக்கள் தக்பீர் முழங்க, ‘மெகா’ அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.



அதனைத் தொடர்ந்து துவக்க விழா நிகழ்ச்சி இறைமறை வசனங்களுடன் துவங்கியது. ‘மெகா’ ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சாளை ஸலீம் வரவேற்புரையாற்றினார்.





நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - பொதுநல ஆர்வலர் எஸ்.ஏ.முகைதீன் தலைமையுரையாற்றினார்.



அரசு தொடர்பான அனைத்து வகை தேவைகளுக்கும் ‘மெகா’ வழிகாட்டுப் பணிகளைச் செய்யும் என்றும். நல்ல பணிகளை முன்னின்று செய்வதோடு, தவறுகளைத் தட்டிக்கேட்டு, தவறு செய்வோரை மக்கள் மன்றத்தில் இனங்காட்டும் பணிகளையும் இவ்வமைப்பு செய்யும் என்று அவர் பேசினார்.

அடுத்து, அமைப்பின் உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ், ‘மெகா’ குறித்து அறிமுகவுரையாற்றினார்.



நகர்மன்றத் தேர்தலை முன்னிட்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பு, சென்ற நகர்மன்றத் தேர்தலின்போது, “நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தையும், தேர்தல் நிறைவுற்ற பின்னர், “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளதை நினைவுகூர்ந்து பேசினார்.

பொதுநல ஆர்வலர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்று, ‘மெகா’ என்ற பெயருக்கான விரிவாக்கத்தை மட்டும் மாற்றியமைக்க அதன் அப்போதைய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி பெயர் விரிவாக்கம் மாற்றியமைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருவதாகக் கூறினார்.

அரசு தொடர்பாக நகர மக்கள் நலன் கருதி, நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முனைப்புடன் செயல்பட்ட இவ்வமைப்பு, நகராட்சியின் மக்கள் நல செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியதும், அதற்கு ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்தெறிய வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.

அரசுத்துறையினருக்கும், மக்களுக்கும் இடையில் நல்லவற்றுக்குப் பாலமாக இவ்வமைப்பு செயல்படும் அதே வேளையில், அரசுத்துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கு மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராடவும், அவ்வாறு செய்வோரை பொதுமக்களுக்கு இனங்காட்டவும் இவ்வமைப்பு தயங்காது என்றும் கூறினார்.

பொதுவாழ்வில் இருப்போர் ஒரு தவறு செய்தால், அவரது செயலை வெறுக்கலாமேயொழிய, செய்தவரையே வெறுப்பது அறிவுக்குப் பொருத்தமற்ற செயல் என்று கூறிய அவர், அனைத்து சமுதாய மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சகோதர வாஞ்சையையும் மேம்படுத்த எல்லா வகையிலும் பாடுபடும் என்றும், அடுத்த மூன்றாண்டுகளில் நடைபெறவுள்ள நகர்மன்றத் தேர்தலில் நல்ல தலைவரும், அனைத்து வார்டுகளிலும் நல்ல உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுப் பரப்புரைகளை இப்போதிலிருந்தே செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.

எழுத்தாளர்களான சாளை பஷீர், ஹிஜாஸ் மைந்தன் என்ற எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக், காயல்பட்டினம் புறநகர் பொதுமக்கள் சார்பில் காளிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, ஹாஜி கே.ஏ.நூஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்பாராவுடன் துவக்கி விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





படங்களில் உதவி:
A.K.இம்ரான்


[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 21:20 / 23.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ‘மெகா’ வே உனது காலத்தின் தேவை...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30933

"அநீதிக்கு" எதிராக நியாயத்தின் வழிக்காட்டியாகவும், அதன் குரலாகவும் உங்களை வரவேற்கிறேன்..!

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி நகர பொது மக்களுக்கு அதிகம் பரப்புரை செய்யுங்கள்...

‘மெகா’ வே உனது வருகை நகருக்கும் நகர் மக்களுக்கு நன்மை பெய்க்கட்டும்...

https://www.facebook.com/#!/groups/453406141356664/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பல மரம் கண்ட தச்சன் ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [23 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30934

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்காக ”மெகா“ அலுவலகம் துவக்கி இருப்பதற்கு வாழ்த்துக்கள் – தொடராக தொய்வின்றி செயல்படவும் அதன் மூலம் மக்கள் பயனடையவும் பிரார்த்திக்கிறேன்.

--------------------------------

சகோதரர்களே!

ஒரே நேரத்தில் எல்லா விசயங்களிலும் தலையிடாமல் / ஈடுபடாமல் ஒவ்வொன்றாக எடுத்து செயலாற்றினால் நன்றாகவும், பயனுள்ளதாகவும் அமையும். அதல்லாது எல்லாவற்றிலும் இறங்கினால், பல மரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டாத கதையாகிவிடும்.

நகர்மன்ற நிர்வாகம் மட்டும்தான் மோசமாக இருக்கிறது என்று தப்புக்கணக்கு போட வேண்டாம் நம் ஊரில் செயல்படும் அத்தனை அரசு நிர்வாகமும் அதே இலட்சனம்தான்.

அதிலே என்ன வித்தியாசம் என்றால் நகர்மன்றத்தை மக்கள் பிரதிநிதிகளால் ஒழுங்குப்படுத்த முடியும் – ஆனால் நம் பிரதிநிதிகள் அதை சரியாக ஒழுங்குப்படுத்துவதில்லை அல்லது அவர்களை ஒழுங்குப்படுத்த விடுவதில்லை, அதனால்தான் அதன்நிலை பரிதாபமாக இருக்கிறது.

----------------------------------

வேண்டுகோள்!

நகர்மன்றத்தில்கூட எல்லா விசயங்களிலும் தலையிடாமல் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் போதும் – தண்ணீர் சம்பந்தப்பட்டதை சரிசெய்துவிட்டால் மற்றவைகளை சரி செய்வது சுலபமாகிவிடும்.

உங்களின் சேவைகள் முறையாக, அமைதியாக நிறைவேறி மக்கள் பயனடைய வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [23 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30935

மெகா உதயம், வரவேற்கிறேன். போலி ஊழல் பேராளிகள் அடக்கபடுவர் என்று நம்புகிறேன். நகரில் மெகா வருகை, அரசியல், அரசு அலுவுலக கோரிக்கை மனுக்களை சுலோபமாக கேட்டு அறிய தெரிந்திட பிரசாதம். வளரட்டும் நகரில். ஆதரிப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. MEGA - Road to Success !!
posted by Salai. Mohamed Mohideen (Bangalore) [23 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30939

விண்ணில் மீண்டும் ஓர் ஒளி வட்டம்
நல்லோர் மனதில் குதுகலாட்டம்
ஊழல், தனிநபர் ஆதிக்க நடமாட்டம்
காயலில் இல்லாமல் போவதே நம் நாட்டம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு போர்களமும் சில பூக்களும்!
posted by kavimagan (doha-qatar) [24 October 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30941

மெகாவின் வளர்ச்சி என்பது மக்கள் நலப் போராட்டத்தின் தொடர்ச்சி ஆகும்... சிங்கம் போல மெய்தீன் மாமா அவர்கள் தலைமையேற்க, எங்கள் தங்கம் சாளை சலீம் காக்கா அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.....

இந்த நல்ல நேரத்தில், மெகாவின் அமைப்பாளர்களில் ஒருவரான எங்கள் தலைவர் ஃபஜுல் கரீம் அவர்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.... ஹாமீத் ரிஃபாய், ஜித்தாஹ் நூஹ் காக்கா, எஸ்.கே.சாலிஹ் ஆகிய தோழர்களைக் காணும்போது ஞாபகத்தில் வருவது" ஒரு போர்களமும் சிறு பூக்களும்" என்ற கவிதைத் தொகுப்புதான்.....வாழ்த்துக்கள் தோழர்களே!

இறையருளால் என்றும் உங்களுடன்,
கவிமகன் காதர்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...உங்கள் சேவை ஊருக்கு தேவை
posted by netcom buhari (chennai) [24 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30943

அஸ்ஸலாமு அழைக்கும்

சபாஷ் .. மெகாவின் சேவை இன்றைய சூழ்நிலைக்கு ஊர்க்கு அவசியம் எண்டு நினைகின்றேன். மெகா வின் சீரிய பணிகள் மீண்டும் மக்களை செண்டு அடையா வாழ்த்துகள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [24 October 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 30945

மெகா (மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழி காட்டு அமைப்பு)

இதே மெகா அமைப்பு தொடங்கி 2 வருடங்கள் முடிந்து விட்டது. மீண்டும் வேறு விரிவாக்க பெயரில் புதிய தோற்றம். இதே அமைப்பு ஊரின் நன்மைக்காக செய்த சேவை என்ன?. நகர்மன்ற தேர்தல் சமயத்தில் தேவையில்லாமல் ஊரில் பொய்யான ஃபித்னாவை உண்டாக்கி, ஊரை இரண்டாக்க முயற்சித்ததை தவிர வேறு சேவை எதுவும் உண்டா?.

நமதூரில் இக்ரா என்ற அமைப்பு கல்விக்காக, உலக காயல் நலமன்றங்கள், தொண்டு அமைப்புகள், ஊரின் தன்னலம் கருதாத பெரியவர்கள், மற்றும் பெருமைக்குரிய ஐக்கிய பேரவை ஆகியவை உள்ளடக்கிய அமைப்பு உருவாகி நல்ல முறையில் சேவையாற்றி வருகிறது. அதே பாணியில் ஷிபா என்ற சமூக மருத்துவ அமைப்பு தோன்றியது. அதில் உலக காயல் நலமன்றங்கள் அனைத்தும் உறுப்பினர்களாகி, மாதாமாதம் அதற்கான செலவினை ஈடுகட்டும் முகமாக சந்தாவினை உலக காயல் அமைப்புகள் கொடுத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மைக்ரோ காயல் என்ற பெயரில் அமைப்பு ஏன்?. போட்டியாகவா... அல்லது தங்களால் மட்டுமே ஊருக்கு சேவையாற்ற முடியும் என்ற எண்ணத்திலா... அப்படி ஊருக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் ஒரே குடையின் கீழ் ஏற்கெனவே உள்ள அமைப்பில் சேர்ந்து சேவையாற்றுவது தானே சாலச்சிறந்தது. இப்படி புதிது புதிதாக அமைப்புகள் வாரந்தோரும், மாதந்தோரும் உருவாகி கொண்டிருந்தால் ஊரின் நிலமை என்ன?.

மாதாமாதம் புதிது புதிதாக அமைப்புகள் 10,15 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஊருக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் தோன்றுகிறது. ஆரம்பத்தில் ஆடம்பரமான விளம்பரத்துடன் துவக்கம். பின்னர் முடக்கம். உதாரணத்திற்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தோன்றியதே. அது என்னவாயிற்று?. கிட்டதட்ட அதே இயக்கத்தில் உள்ள சரத்துக்கள் தானே இந்த புதிய மெகாவில் உள்ளது. எதற்க்கு புதிய அமைப்பு. ஏற்கெனவெ உள்ளதற்க்கு உயிர் கொடுக்கலாமே.

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குதல் நடத்துவதாக தயவு செய்து எண்ணவேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளும், பிற சமுதாய அமைப்புகளும் நமதூரின் ஒற்றுமையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக நம்மையும் அறியாமல் இப்படிபட்ட புதிய அமைப்புகள் துணை போகிறோமோ என்ற கவலை தானே தவிர யாரைபும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

இதே மெகா அமைப்பு, தேர்தல் சமயத்தில் உண்டாக்கிய குளறுபடிகள் மக்கள் அறியாததா... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நெடுநாளாகி விட்டது. வரும் தேர்தல்களில் உங்களது பருப்பெல்லாம் இந்த ஊரில் வேகாது என்பது உறுதி.

காயல் மாநகர சகோதர சகோதரிகளே... சிந்திப்பீர்.... விழிப்படைவீர்... செயல்படுவீர்..... வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!
கருத்து பதிவாளர் கேட்டுக்கொண்டப்படி, திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மக்கள் மத்தியில் உண்மையை தயக்கமில்லாமல் எடுத்து வையுங்கள்
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [24 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30946

மெகா அலுவலகம் திறப்பு என்பது நகர் மக்களின் விழிபுணர்வுக்கு ஒரு வழி திறப்பு என்பது எனது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை. இதற்காக பாராட்டுகள்.

அன்பான மெகா அமைப்பின் நிர்வாகிகளே..! இந்த எளியவனின் தாழ்மையான வேண்டுகோள். நமது முன்னால் சேர்மன் மரியாதைக்குரிய மர்ஹூம் M K T அப்பா 1958 இல் நாளையை தலைமுறைகள் பயன் பெரும் வகையில் சர்வே எண் 392 / 7 ஏக்கரில் 4 ஏக்கர் அணைத்து சமுதாய மக்களுக்கும் பயன் பெரும் வகையில் மயானமாக பயன் படுத்திக்கொள்ளவும் மீதம் 3 ஏக்கரில் நகரில் தேங்கும் குப்பைகள் அதில் கொட்டுவதற்கு தொலை நோக்கு சிந்தனையுடன் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்த (சர்வே எண் 392) நிலத்தை சர்வேயர் மூலம் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் அளந்து அதில் எல்கை அடையாளம் போட்டு அந்த இடத்தில் தமிழக முதல்வர் நமது நகருக்கு ஒதுக்கியுள்ள 90 லட்சம் மதிப்புள்ள பயோ காஸ் திட்டதை அமைக்க நீங்கள் போராடலாமே, அது விசியமாக மக்களுக்கு உண்மை நிலவரத்தை (விழிப்புணர்வு) பரப்புரை செய்யலாமே.

உங்களின் நல்ல பரப்புரைகளை மக்கள் வரவேற்பார்கள் அதை ஏற்றுகொள்வார்கள். மக்கள் மன்றத்திலும் நகரின் சங்கங்கள், அணைத்து ஜமாஅத் பள்ளிகளிலும் துண்டு பிரசுரம் மூலம் தகவல் பலைகயில் பார்வைக்கு வையுங்கள்.

இத்திட்டம் (பயோ காஸ் - 90 லட்சம்) காலம் கடந்து விட்டால் இனி திரும்ப பெற முடியாது. மக்கள் மத்தியில் உண்மையை தயக்கமில்லாமல் எடுத்து வையுங்கள். நகர் மக்கள் உங்களுக்கு ஆதரவாக வருவார்கள்... இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்தானே...?
posted by Hameed Rifai (Kayalpatnam) [24 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30950

மெகா அமைப்பு செய்த சேவை என்ன? -இங்கு ஒரு கருத்தாளர் கேட்டுள்ள கேள்வி.

(1) நகர்மன்றத் தேர்தலின்போது வெற்றி வாய்ப்புள்ள இரு வேட்பாளர்களையும் பொதுக்கூட்டத்தில் மக்கள் முன் நிறுத்தி நேர்காணல் நடத்தியது. அழைப்பையேற்று வந்த ஆபிதா என்ற வேட்பாளரை நகர மக்கள் 4200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.

(2) தேர்தலோடு பணி முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல், நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தி, நகராட்சியில் நடைபெறும் குளறுபடிகளை மக்கள் மன்றத்தில் போட்டு உடைத்தது. அதன் மூலம் பொதுமக்கள் பன்மடங்கு விழிப்புணர்வு பெற்றது.

(3) சகோதரர் குளம் மூஸா நெய்னா போன்ற சமூக ஆர்வலர்கள் எல்லாம் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால், களப்பணியில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில், அது தொடரக்கூடாது என்று கருதி, தற்போது அலுவலகம் திறந்திருப்பது... அரசுத் துறை தொடர்பான விஷயங்களில் அனைவருக்கும் வழிகாட்ட களம் அமைத்திருப்பது... நல்லவற்றுக்குத் துணை நிற்கவும், அல்லவற்றை யார் - எவர் என்று பாராமல் அகற்றியொழிக்கவும் சபதமேற்றுள்ளது...

இன்னும் பல! (இன்ஷாஅல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் மெகாவின் பணிகள் மீண்டும் தொடர்வதைக் காணலாம்.)

“ஊரில் பொய்யான ஃபித்னாவை உண்டாக்கி, ஊரை இரண்டாக்க முயற்சித்ததைத் தவிர வேறு சேவை எதுவும் உண்டா?” - இது அதே வாசகரின் கேள்வி.

மெகா செய்த, செய்யவிருக்கிற சேவைகளை சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளேன். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையை, பொதுக்குழு உள்ளிட்ட கலந்தாலோசனைக் கூட்டங்களில் பழுத்த அனுபவம் நிறைந்தவர்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஊரை இரண்டாக்க மெகா முனைந்திருந்தால், அது அடையாளங்காட்டிய வேட்பாளர் டெபாசிட் இழந்திருப்பார். நடந்தது என்ன? பழைய கோபம் இன்னும் தனியவில்லை போலும்!

நகருக்காக செய்ய வேண்டிய நற்பணிகள் நிறையவே தேங்கிக் கிடக்கின்றன. இன்று அவற்றைச் செய்ய குறைந்தளவிலான சகோதரர்களுக்கு அல்லாஹ் எண்ணத்தைப் போட்டுள்ளான். அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். அறியாமல் விமர்சிக்கும் கருத்தாளர்களும் இது விஷயத்தில் களமிறங்க முன்வந்தால், சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது. அவர்களும், நகரில் 5664 பேர் பட்டியலிலிருந்து முன்னேறி, 9937 பட்டியலில் இடம்பெறலாம். ரெடியா...?

(நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குதல் நடத்துவதாக தயவு செய்து எண்ணவேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளும், பிற சமுதாய அமைப்புகளும் நமதூரின் ஒற்றுமையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக நம்மையும் அறியாமல் விவரமற்ற விமர்சனங்களை செய்கிறோமோ என்ற கவலை தானே தவிர யாரைபும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

இதுபோல விமர்சனம் செய்பவர்கள் தேர்தல் சமயத்தில் உண்டாக்கிய குளறுபடிகள் மக்கள் அறியாததா... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நெடுநாளாகி விட்டது. வரும் தேர்தல்களில் உங்களது பருப்பெல்லாம் இந்த ஊரில் வேகாது என்பது உறுதி.

காயல் மாநகர சகோதர சகோதரிகளே... சிந்திப்பீர்.... விழிப்படைவீர்... செயல்படுவீர்..... வஸ்ஸலாம்.)

மேலே அடைப்புக்குறிக்குள் உள்ள வாசகம் கருத்தாளர் ஒருவர் சொன்னதுதான். அதையே நான் கொஞ்சம் எடிட் செய்துள்ளேன். என் கருத்தாகவும் அதைக் கருதிக் கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நிதானம்....
posted by kavimagan (doha-qatar) [25 October 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 30953

சமீப காலமாக எனது அருமை காக்கா மூஸா நெய்னா அவர்கள் எழுதும் கருத்துக்கள் நகைப்பிற்கும், வியப்பிற்கும் உரியதாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக , நடப்பது என்ன என்பதனை அறியாமலே கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தும் அவருக்கு பதில் எழுத வேண்டியது இல்லை என நினைத்து இருந்தேன்....

யார்மீதோ,எதற்காகவோ தெரியவில்லை....அவரது காழ்ப்புணர்ச்சி எல்லை தாண்டிய கருத்து குதர்க்கத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது....

ஷிஃபா என்ற அமைப்பு இருக்கும் போது மைக்ரோ காயல் எதற்கு ஆரம்பிக்க வேண்டும்...இந்தக் கேள்வியை பார்த்ததும் வெளிநாட்டு மன்ற உறுப்பினர்கள் சிரிக்க மாட்டார்களா? அல்லது உங்கள் மன்றத்துடன் உங்களுக்கு ஒட்டுறவே இல்லையா? அப்படி இருந்தால், அவர்களிடம் நடப்பைக் கேளுங்கள்....

இப்படி அடிப்படையே தெரியாமல் நீங்கள் அள்ளி வீசுவதால்தான், உங்களது கருத்துக்கள் காற்றிழந்த பலூனாக வலுவிழந்து போகிறது....

அது மட்டுமல்ல....நீங்கள் எப்போதும் குதறி எடுக்கின்ற அந்தப் பத்து பதினைந்து நபர்களும்,இக்ராவின், ஷிஃபாவின் பின்னணியில் இரும்புத் தூண்களாக இயங்கிக் கொண்டிருப்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

காக்கா அவர்களே! உங்கள் பார்வையில் ஃபித்னா என்பதன் அர்த்தம் என்ன? உண்மையை உரக்கச் சொல்வதா? அப்படி சொல்வதுதான் ஃபித்னா என்றால் அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்....அல்லாஹ்வின் உதவியால் எந்த தீய விமர்சனங்களும் எங்களை பாதிக்கப் போவதில்லை....காரணம் நாங்கள் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்ய வில்லை....நீங்களும் வாருங்கள்....அமர்ந்து உரையாடுவோம்....உங்கள் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை...

உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் எங்களுக்குத் தேவை.... ஒன்றிணைவோம்....உண்மையை இன்னும் இன்னமும் உரக்கச் சொல்வோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by nooh ka (kayalpatnam) [25 October 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30954

நல்லதையே நாடுவோம் ....,நன்மையே செய்வோம் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஆதிக்க நாற்காலியின் கால் சேத படுத்தப்பட்டுள்ளதை உங்களின் கருத்தின் மூலம் உணருகிறேன்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [25 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30961

பெருமைக்குரிய ஐக்கிய பேரவை அமைப்பு உருவாகி நல்ல முறையில் சேவையாற்றி வருகிறது. CP

மூஸா நெய்னா அவர்களே...! உண்மையான ஈமான் இறை நம்பிக்கையோடு பெருமைக்குரிய பேரவை நகரின் நகர்மன்ற தேர்தலின் போது சேவையாற்றி வந்திருக்குமானால் நகர் மக்கள் அந்த பேரவையை ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டுமே...!

மூஸா நெய்னா அவர்களே...! ஏன் கடந்த நகர்மன்ற தேர்தலில் இந்த பெருமைக்குரிய ஐக்கிய பேரவையை சிறுமைக்குரிய பேரவையாக நகர் மக்கள் ஏன் அடையாளம் காட்டினார்கள்...? ஏன் நிரூபித்தார்கள்....?

பெருமைக்குரிய விழிப்புணர்வு வழி காட்டியாக இந்த மெகா வை அல்லவா ஏற்று கொண்டார்கள்...! மூஸா நெய்னா அவர்களே...! இதை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா...?

“ஊரில் பொய்யான ஃபித்னாவை உண்டாக்கி அதை நம்பும்படி ஊரை தனது ஆதிக்க ஐக்கிய கட்டுப்பாட்டில் வைத்து அதன் மூலம் தனி நபர்கள் ஆதாயம் தேடுவதை இந்த மெகா அமைப்பு முறியடித்து மேலும் அணைத்து மத சகோதரர்களும் இந்த மண்ணின் மைதர்கள் என நகருக்கு பரப்புரை மூலம் விழிப்புணர்வு செய்ததால் உங்களின் ஆதிக்க நாற்காலியின் கால் சேத படுத்தப்பட்டுள்ளதை உங்களின் கருத்தின் மூலம் உணருகிறேன்...

இன்றைய இனைய தலைமுறைகள் மிக விழிப்பாகவே உள்ளார்கள் அவர்கள் இந்த மெகா அமைப்பை நன்கு புரிந்துள்ளார்கள்...! பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வருகையால் மெகா மேலும் வலுபெற்று வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...! இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உணர முடிகின்றது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved