Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:23:31 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12772
#KOTW12772
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 15, 2014
சமூகத்தை வழிநடத்த திருக்குர்ஆன் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டும்! மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2353 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில், தமிழ்நாடு மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டி, கடந்த டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்) காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்றது.

நிறைவு நாளான டிசம்பர் 30ஆம் நாள் இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது பல்வேறு மார்க்க அறிஞர்களும், சமுதாயப் பிரமுகர்களும் உரையாற்றினர்.

அந்த வரிசையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-

தமிழகத்தின் இஸ்லாத்தின் நுழைவு வாயில் என கூறப்படும் நமதூர் காயல்பட்டினத்தின் பூர்வீகப் பகுதியான இப்பள்ளிவாசல் வளாகத்தில் தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் ஹிப்ளு போட்டி நடத்துவதற்கு முதலில் என் பாராட்டை தெரிவித்துக் கொள் கிறேன். காயல் பகுதியின் வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல் என கூறலாம்.



ஹாபிழ்களை உருவாக்குவோம்

திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்கள் நமதூரில் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதோடு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஹாபிழ், ஒரு ஹாபிழாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நண்பர் கிதர் முஹம்மது ஹல்லாஜி இந்நிகழ்ச்சியை மிகவும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து வெற்றி கண்டுள்ளார். தாயின் பெயரில் மத்ரஸா நிறுவி அளப்பரிய சேவையாற்றி இருக்கின்றார்.

இயற்கை வேதம்

உலகிலும், நம் நாட்டிலும் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு திருக்குர்ஆனே அருமருந்தாக இருந்து வருகின்றது. திருக்குர்ஆனின் உண்மைகளை, வாழ்வியல் தத்துவங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். திருக்குர்ஆன் இயற்கையோடு ஒன்றிணைந்து அருளப்பட்ட அற்புத வேதமாகும். அதில் `சப்அ சமாவாத்தி’ என்று ஏழு வானங்களை பற்றி அல்குர்ஆனில் ஏழுமுறை கூறப்பட்டுள்ளது. அதேபோல் `ஷஹ்ர்’ என்ற மாதத்தை பற்றி 12 முறையும், `யவ்மு’என்ற நாட்களை பற்றி 365 முறையும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.ஏழு வானங்கள், 12 மாதங்கள், 365 நாட்கள் என்பதுதானே நியதி.

உலகின் கணிதவியல் வல் லுநர்கள் ஆய்வில் குர்ஆனில் எண் 19-தை சிறப்பாக கணக்கிடுகின்றனர். முதல் வசனம் `இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதி ஹலக்’ என்பதையும், இறுதி வசனம் `இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹ்’ என்ற வசனத்தையும் தனித்தனி எழுத்தாக கூட்டினால் 19 என்ற எண் வரும்.

அரபி மொழியின் சிறப்பு

திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபி மொழியும் சிறப்பிற்குரியதாகும். தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் யூனானி மொழியிலும், ஈஸா நபிக்கு பைபிழ் என்ற இஞ்சீல் வேதம், சுர்யானீ என்ற ஹிப்ரூ மொழியிலும், மூஸா நபி வேத மொழியும் இன்ன பல வேதங்கள் அருளப்பட்ட மொழிகள் இன்று நடைமுறையிலும் இல்லை - மக்கள் பயன்பாட்டிலும் இல்லை.

ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபி மொழியை இன்று உலகில் 160 மில்லியன் மக்கள் பேசுகின்றார்கள் என்பதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 23 நாடுகளில் தாய்மொழியாக அரபி மொழி விளங்குகின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளில் ஒரு மொழியாக அரபி மொழி விளங்குகின்றது.

குர்ஆன் பல்கலைக்கழகம்

இப்படியாக திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையே. இதை வாழ்க்கை நெறியாக பின்பற்றுவது நம் கடமையாகும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து விசயங்களையும் தெளிவாக ஆய்வு செய்து நன்னெறியைப் பரப்பிடும் பணிகளை நாம் செய்ய வேண்டும். இதற்கு திருக்குர்ஆன் பல்கலைக் கழகத்தை தமிழகத்தில் - அதுவும் காயல் பகுதியில் உருவாக்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவிக்கின்றேன்.

இந்த முயற்சிக்கு அனைத்து ஜமாஅத்தினரும், உலமா பெருமக்களும், சமுதாயப் பெரியவர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கிடுங்கள். எங்களின் ஒத்துழைப்பு என்றும் இருக்கும். வெற்றி பெற்ற இளம் ஹாபிழ்களுக்கு வாழ்த்துக்கள்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...திருக்குர் ஆன் பல்கலை கழகம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32524

சகோதரர் அபூபக்கர் வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு 70 வயது விவேகம் இருக்கிறது என்ற உண்மை அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் வெளியிடும் பளிச்சிடும் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவரை ஒரு கட்சியின் செயலாளர் என்று வேறுபடுத்திப் பார்ப்பதை விடுத்து இந்த ஊரின் மக்கள் செயலாளர் என்றே நான் பார்க்கிறேன். அவர் வெளியிட்டுள்ள ஆசை போற்றுதற்கு உரியது.

நமதூரில் KMT மருத்துவ மனை அமைவதற்கு கடற்கரையில் இருந்து சிலர் பேசிக் கொண்டிருந்தது செயல் வடிவம்பெற்று இன்று வெள்ளிவிழாவின் விளிம்பில் அது வெற்றி நடைபோடுகிறது.

யாருமே இந்த பல்கலைக் கழக சிந்தனையை யோசிக்காதபோது அவருக்கு அல்லாஹ் இந்த சிந்தனையை அவனது திருமறை மனன விழாவின்போது வெளிப் படுத்த செய்திருக்கிறான். அவர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டால் இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் திருக் குர் ஆன் பல்கலைக் கழகம் இந்த ஊரில் அமையும்... நிலம் இருப்பவர்கள், நிதி இருப்பவர்கள், உடல் உழைப்புள்ளவர்கள், சமுதாயத்துக்காக பாடுபடுபவர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள்,காரிகள், ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்களிடம் நெருக்கமானவர்கள் நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள்.

குர் ஆன் என்று வரும்போது இதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. பலவீனமானது பலமிக்கது, ராவி சரி இல்லை.சொன்னவர் சரி இல்லை, கேட்டவர் சரி இல்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சொன்னவன் அல்லாஹ். கூட்டிக் குறைத்து அவரரவர் இஷ்டம்போல் அதை சொல்ல முடியாது. இறை அச்சம் உள்ளவர்கள் இந்த குர் ஆன் பல்கலைக் கலக்கம் அமைய முழு ஒத்துழைப்பு தருவார்கள்.

இஸ்லாத்தை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர்கள் நபி தோழர் அபூபக்கர் அவர்கள்தான். இப்போது இந்த செய்தியை முதன்முதலாக முன்மொழிந்து உள்ளவரும் நமது தோழர் அபூபக்கர் தான். அல்லாஹ் உங்கள் உள்ளக் கிடக்கைகளை கபூல் செய்வானாக. ஆமீன். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (15/1/2014) [Views - 2376; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved