Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:03 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12781
#KOTW12781
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 16, 2014
இக்ராஃ கல்வி சங்கம் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர் - ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் மேற்படிப்பு தொடர தமிழக அரசு தேர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3202 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இக்ராஃ கல்வி சங்கம் மூலம் கல்வி உதவி பெறும் காயல் பூர்வீக மாணவர், தனது மேற்படிப்பை ஐக்கிய ராஜ்ஜியம் (UNITED KINGDOM) நாட்டில் தொடர - தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:

காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை பூர்விகமாக கொண்டவர் முஹம்மத் ஹசன் யாசீன். எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை படித்த இவர், தொழில் காரணமாக தந்தை சென்னை செல்ல, தனது 6வது வகுப்பு முதல், தனது படிப்பை சென்னையில் தொடர்ந்து வருகிறார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு (இவரின் தந்தை பாதுகாப்பு பணியில் உள்ளார்), புது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயிலவும், அதனை தொடர்ந்து சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் முது கலை பட்டப்படிப்பு பயிலவும் இக்ராஃ கல்வி சங்கம் உதவி புரிந்துள்ளது.

இவரின் தந்தை முஹம்மத் சரீஃபிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவர் யாசீன். இரட்டையரான பெண் குழந்தைகள் தற்போது ஐந்தாம் வகுப்பு சென்னையில் பயில்கின்றனர்.

சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் பயின்று வரும் இந்த மாணவர் தற்போது இரண்டாம் ஆண்டின் இறுதி செமஸ்டர் படிப்பினை மேற்கொள்ள ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டிற்கு ஜனவரி 11 அன்று புறப்பட்டு சென்றார். அங்குள்ள லண்டன் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் ராயல் ஹாலோவே கல்லூரியில் 6 மாதம் பயின்று இவர் ஜூன் மாதம் நாடு திரும்புவார்.

மாணவர் யாசீன் பயில சென்றுள்ள கல்லூரி ...



இவருடன் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த 11 மாணவர்கள் - தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயில சென்றுள்ளனர்.

டிசம்பர் 13, 2012 அன்று சென்னையில் உள்ள பிரிட்டிஷ் நாட்டு தூதரகமும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி - தமிழகத்தில் உள்ள 59 அரசு கலை கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் ஏழ்மையான குடும்பங்களை சார்ந்த திறமையான மாணவர்கள், தங்களின் இறுதி ஆண்டு படிப்பினை ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.



அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு இத்திட்டம் குறித்த முழு விபரத்தை வழங்கியது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கவும், பேராசிரியர்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்திடவும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் புகழ் பெற்ற அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்யவும் ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கும் தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சிலுக்கும் (South India British Council) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது போன்று அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அரசு செலவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் பயில அனுப்புவது இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டமாகும். உலகத்தரம் வாய்ந்த சிறந்த உயர்கல்வியினை அனைத்து மாணவ, மாணவியரும் குறிப்பாக அரசு கல்லூரிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் விருப்பமாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் திறன் மேம்பாடு உடையவர்களாக திகழ வேண்டும் என்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் ஒரு அம்சமாகும். இதன் அடிப்படையில் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல், பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்யவும், ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மற்றும் மிகச்சிறந்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, 2013-ம் ஆண்டு முதல் 25 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று கல்வி கற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் பிரிட்டீஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் பேராசிரியருக்கும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் அனுமதித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் வருடம் முதுகலை பயிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் வருடத்தின் மூன்றாவது பருவத்தை அயல்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும், அதே பருவத்திலேயே பேராசிரியர்களும் உரிய பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான உயர்கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவு பெரிதும் மேம்பட்டு அவர்களது எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வழிவகை ஏற்படும்.

இதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களையும், பேராசிரியர்களையும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்யவும், ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கும் தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சிலுக்கும் இடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா பாண்டியன் அவர்களும், தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சில் சார்பில் அதன் இயக்குநர் திரு. பால் செல்லர்ஸ் (Director, South India British Council – Thiru Paul Sellers) அவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நிதியமைச்சர், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டின் துணைத் தூதரக அதிகாரி திரு.மைக் நித்தாவ்ரியானகிஸ் (British Deputy High Commissioner, Chennai – Thiru Mike Nithavrianakis), சென்னை பிரிட்டீஷ் கவுன்சில் டிவிஷன் அலுவலர் திரு. எல். தனசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


முதல் பிரிவு மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ராஜ்ஜியம் புறப்படுவதற்கு முன்னர் தமிழக முதல்வருடன் ...





துவக்கமாக 14 மாணவர்கள், 3 பேராசிரியர்கள் - கடந்த ஆகஸ்ட் மாதம், ஐக்கிய ராஜ்ஜியம் சென்றனர். அம்மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்துக்கொண்டு இம்மாதம் இந்தியா திரும்புகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது 11 மாணவர்களும், 2 பேராசிரியர்களும் - ஐக்கிய ராஜ்ஜியம் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாணவர் ஒவ்வொருவருக்கும் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. ஓர் ஆண்டின் நிறைவில் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் வரை இத்திட்டம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி 11 அன்று ஐக்கிய ராஜ்ஜியம் புறப்பட்ட மாணவர்கள் குறித்து புதிய தலைமுறை கல்வி வாரப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி ... (ஜனவரி 20, 2014 பதிப்பு)








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்!!!
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [16 January 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32534

மாஷா அல்லாஹ்!!!

மரம் வளர்ந்து கனிகள் காய்க்க ஆரம்பித்தது விட்டது...

இக்ரா சங்கத்தின் முயற்சியின் வெற்றி இது....

இன்னும் இந்த மாணவர்க்கு என்னுடைய துஆவும் பாராட்டுக்களையும் நான் சமர்பிக்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எங்கு சென்றாலும் என் சொந்த ஊர் காயல் பட்டணம்
posted by Hasan (Kayalpatnam) [16 January 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32536

எங்கு சென்றாலும் என் சொந்த ஊர் காயல் பட்டணம் என்று பெருமித்ததோது சொல்பவன்தான் காயல் வாசி அல்லது காயல் பூர்விக வாசி... சென்னை என் சொந்த ஊர் ... என்பது அல்ல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [16 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32537

அல்ஹம்துலில்லாஹ். வல்ல நாயனுக்கே எல்லாப்புகழும்.

இத்திறமை மிகு மாணவன் தனது கல்வியை பூரணமாக முடித்து தனது திறமையால் மற்றவர்களையும் முன்னேற்ற வல்லோனை வேண்டுவோம்.

நம் காயல் பதியின் மாணவர்கள் கல்வியில் முன்னேறி வாழ்வில் சாதிக்க வேண்டும் என்பதே நமது இக்ரா அமைப்பின் உயரிய நோக்கம்.

I.A.S, I.P.S. I.F.S துறையில் நமது நகரைச்சார்ந்தவர்கள் உருவாக வேண்டும் என்ற நமது நெடுநாளைய கனவு விரைவில் நடந்தேற இக்ரா மூலம் தொடர் முயற்சி மேற்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [17 January 2014]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 32542

மாஷா அல்லாஹ்!!!

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

தம்பி சாலிஹ் சொன்னது மிகவும் சரி ..

மரம் வளர்ந்து கனிகள் காய்க்க ஆரம்பித்தது விட்டது... ( c & p )

இக்ரா சங்கத்தின் முயற்சி வல்ல இறைவனால் வெற்றியை சுவைத்து கொண்டு இருக்கிறது ..

இந்த மாணவர்க்கு என்னுடைய துஆவும் பாராட்டுக்களையும் நான் சமர்பிக்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சென்னை தான் எனக்கு சொந்த ஊர்........
posted by சொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (சென்னை) [17 January 2014]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 32543

இந்த செய்தியை கேட்கும் போது மிகவும் சந்தோசப்பட்டு அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை படித்த போது மாணவரின் பேட்டியில் சென்னை தான் எனக்கு சொந்த ஊர் என்ற வரியை படித்ததுமே மனது சங்கடத்துக்குள்ளானது. காயல்பட்டணத்தில் பிறந்து அங்குள்ள ஒரு அமைப்பின் மூலம் தன் கல்வியை பயின்றுவரும் ஒரு மாணவர் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மறந்து விட்டாரே என்று தோனுகிறது.

காயல்பட்டணம் என்ற பெயர் எவ்வளவு புகழ் பெற்றது ஏன் இவர் அந்த பெயரை உபயோகிக்காமல் போனார் என்று தெரியவில்லை.

வியாபார விசயமாக நாங்கள் பலரிடம் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் எங்களின் சொந்த ஊர் எது என்று கேட்டாலும் கேட்காமல் இருந்தாலும் நாங்கள் பெருமையாக சொல்லுவோம் எங்கள் சொந்த ஊர் காயல்பட்டணம் என்று...

தன் கல்விக்கு உதவிய இஃக்ரா அமைப்பினருடன் இவர் தொடர்பில் இருக்கிறாரா. இது சம்பந்தமாக ஏதேனும் அவர் நன்றி தெரிவித்து இருந்தால், அதனை இணையதளத்தில் வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mahmood Huq (Mumbai) [17 January 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32549

Mashaallah..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved