Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:34:06 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12934
#KOTW12934
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 2, 2014
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத் தலைவர் ஜெயகுமார் பேட்டி குறித்து KEPA அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ நிகழ்ச்சி குறித்து, டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத் தலைவர் (வேலைகள்) ஜெயகுமார் தந்தி டிவிக்கு பேட்டி வழங்கியுள்ளார். அப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக பதில் வழங்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி ஜனவரி 31 அன்று ஒளிபரப்பட்டது. அந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் தங்கள் கருத்துகளை வழங்கினர். நேரடி ஒளிபரப்பின்போது பங்கேற்க மறுத்த டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, நிகழ்ச்சி முடிந்தபின், அதன் துணைத் தலைவர்களுள் ஒருவரான திரு. ஜெயகுமார் மூலம் ‘தந்தி டிவி’க்கு விளக்கம் அளித்துள்ளது.

அவர் அளித்துள்ள அவ்விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. ‘தந்தி டிவி’க்கு தான் வழங்கிய பேட்டியில் திரு. ஜெயகுமார், “அரசு மூலமான தகவல்களைப் பார்த்ததில் (காயல்பட்டினத்தில்) புற்று நோய் பரவுவதாக இல்லை...” என்று கூறியுள்ளார். அப்படிக் கூறிய அவர், அரசின் எந்த அறிக்கை அவ்வாறு கூறுகிறது என தெரிவிக்கவில்லை.

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சென்னை போராட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ராமச்சந்திரா தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடுவதாகக் கூறியது. அது இன்று வரை நடைபெறவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை அடையார் புற்று நோய் மையத்தைத் தொடர்புக்கொண்டு, காயல்பட்டினத்தில் புற்று நோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. அடையார் புற்று நோய் மையமும், 3 மாதங்களில் அந்த ஆய்வை முடித்துத் தருவதாக - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தெரிவித்தது. ஆனால் - மாசு கட்டுபாட்டு வாரியம், அந்த ஆய்வைத் தொடங்கிட இன்று வரை உத்தரவு பிறப்பிக்கவில்லை.

தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு. ஆசிஷ் குமார் IAS, ஆகஸ்ட் 07, 2013 அன்று இணை இயக்குனர் (சுகாதாரம்) - தூத்துக்குடி மாவட்டத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் - காயல்பட்டினத்தில் புற்று நோய் பரவல் குறித்த புள்ளிவிபரங்களை சேகரிக்குமாறு கூறியிருந்தார். ஆனால் இன்று வரை எந்த அறிக்கையையும் அது சம்பந்தமாக அரசு அதிகாரிகளால் தயாரிக்கப்படவில்லை. இதுதான் தற்போதைய நிலவரம்.



ஆனால் DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர் திரு. ஜெயகுமார் தனது பேட்டியில் அரசு ஆவணங்கள் காயல்பட்டினத்தில் புற்று நோய் பரவுவதாக இல்லை என தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். அது எந்த அரசு அறிக்கை? ஜெயகுமார் அவர்கள் - அவ்வப்போது நகரில் மாவட்ட சுகாதார அலுவலர்களால் நடத்தப்படும் முகாம்களில் தெரிவிக்கப்படும் புள்ளிவிபரங்களைக் கூறுகிறாரா? ஆம் எனில் - அது போன்ற அறிக்கைகள் நம்பத் தகுந்தவை அல்ல என்பதே எங்களுக்கு காலம் சொல்லித் தந்துள்ள பாடம். காரணம், அந்த முகாம்களில் நடக்கும் குளறுபடிகளுக்கு நாங்களே நேரடி சாட்சிகள்.

அண்மையில், காயல்பட்டினத்தில் ஒரே நேரத்தில் - எந்த முன்னறிவிப்பும் இன்றி, பல இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களுள் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு தாய், தன் மகனுக்கு ஏற்படும் மூச்சுக் குழாய் பிரச்சனையைத் தெரிவிக்கிறார். அதனை பதிவு செய்யவேண்டிய மருத்துவர், பதிவு செய்ய மறுக்கிறார். இதுகுறித்து KEPA நிர்வாகிகளுக்கு தகவல் வரவே, உடனடியாக அந்த முகாமிற்குப் பொறுப்பான தலைமை மருத்துவரிடம் KEPA முறையிட்டது. பின்னர், தன் மகன் குறித்த அந்தத் தாயின் குறைபாடு பதிவு செய்யப்பட்டது. இதுதான் அரசு முகாம்களின் நிலை. இதுபோன்ற முகாம்களின் மூலம் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களை KEPA ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

காயல்பட்டினத்தில் - தன்னார்வலர்களைக் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிலரால், ஜனவரி 2011இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, நகரில் புற்றுநோய்களின் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. நகரில் புற்றுநோய் பரவியுள்ளதா, இல்லையா என்பதற்கு - தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் வேளையில் - நூற்றுக்கணக்கான சாட்சிகள் வருவார்கள்.

‘தந்தி டிவி’ பேட்டியில் திரு. ஜெயகுமார், “சில பிரீதிங் டிரபல் (Breathing Trouble), காஃபு (Cough), கீஃபு (???) எல்லாம் வரலாமே தவிர புற்றுநோயெல்லாம் காற்று சுவாசிச்சு வரவே வராது” என்று கூறியுள்ளார். இதன் மூலம், DCW தொழிற்சாலை - காற்றை மாசு படுத்துகிறது என பகிரங்கமாக தொலைகாட்சியில் ஒத்துக்கொண்டுள்ளதாக KEPA எடுத்துக்கொள்கிறது. இது பெரிய முன்னேற்றமே.

மேலும் ஜெயகுமார் அவர்கள் - காற்று சுவாசிச்சு எல்லாம் புற்று நோய் வராது எனக்கூறியுள்ளார். அவருக்கு - அக்டோபர் 17, 2013 அன்று வெளியான உலக சுகாதார அமைப்பின் (WHO), புற்றுநோய்க்கான சிறப்புப் பிரிவின் (INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER) Outdoor air pollution a leading environmental cause of cancer deaths என்ற தலைப்பிலான அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம். அந்த அறிக்கை, காற்று மாசு - புற்றுநோய் மரணங்களுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கிறது.





திரு. ஜெயகுமார் அவர்கள், “மீனை சாப்பிட்டால் எல்லாம் புற்றுநோய்...” என தன் பேச்சைத் துவக்கி முடிக்கவில்லை. அதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என அறியமுடியவில்லை.

காயல்பட்டினம் கடலோர மீன்கள் - மாசுவால் பாதிக்கப்படவில்லை என சொல்கிறாரா? ஆம் எனில், காயல்பட்டினம் கடலோர மீன்கள் - DCW தொழிற்சாலை கடலில் கலக்கும் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன என 1980களில் துவங்கி, CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE (CMFRI) என்ற மத்திய அரசின் அமைப்பு வெளியிட்டுள்ள பல அறிக்கைகளை தங்கள் பார்வைக்கு அனுப்பித் தருகிறோம்.

அவ்வாறு மீன்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கு - நோய்கள் வராது என அவர் கூற வருகிறாரா? ஆம் எனில், மினமாட்டா முதல் துவங்கி இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும் தங்களுக்கு அனுப்பித் தருகிறோம்.

தனது பேட்டியில் திரு. ஜெயகுமார் அவர்கள் மிகவும் பெருமிதமாக - “DCW தொழிற்சாலை, 2002-2003ஆம் ஆண்டின் சிறந்த காஸ்டிக் சோடா உற்பத்தி நிறுவனம் என்றும், அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைந்த (???) அளவிலேயே மெர்குரி இருந்ததாகவும் கூறியுள்ளார். இதன்மூலம், மெர்குரி கடலில் கலக்கப்பட்டது (குறைந்த அளவு?) என DCW தொழிற்சாலை சார்பாக பகிரங்கமாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நாம் இதனை எடுத்துக் கொள்வோம்.

2002ஆம் ஆண்டின் அச்சாதனை என்ன என திரு. ஜெயகுமார் அவர்கள் தெரிவிக்கவில்லை. DCW நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்தோம். CENTRE FOR SCIENCE AND ENVIRONMENT (CSE) என்ற அமைப்பின் மூலம் Green Rating Two Leaves Award வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதில் பெருமிதம் கொள்ள ஏதாவது உள்ளதா?



5 leaves என்ற உச்ச நிலை விருது பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2 leaves என்ற நிலையிலான விருது வழங்கப்பட்டுள்ளது. 99.3 மதிப்பெண்கள் கூடுதலான வாய்ப்புள்ள மதிப்பெண் என்ற இடத்தில், 28 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 28.2 சதவீத மதிப்பெண். தர வரிசையிலோ 14ஆவது இடம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு விருது விஷயத்தில், DCW நிறுவனத்தின் மிகவும் தாழ்ந்த இந்நிலை குறித்து, வருத்தப்பட்டிருக்க வேண்டிய அதன் துணைத் தலைவர், அதற்காக பெருமிதப்பட்டுக் கொள்வது சுற்றுச்சூழல் குறித்த அவர்களின் எண்ண அலைகளைத்தான் வெளிபடுத்துகிறது.



அது மட்டுமல்ல! DCW தொழிற்சாலைக்கு விருது கொடுக்கப்பட்டதாக துணைத் தலைவர் கூறும் 2003ஆம் ஆண்டில் கூட, தொழிற்சாலையை ஒட்டியுள்ள கடலோரத்தில் CMFRI - மேற்கொண்ட ஆய்வுகள் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:

The mean concentration of Cd in the water (1.01 μg.l-1) and sediment (1.65 μg.g-1); Cu in the water (7.45 μg.l- 1) and clam tissue (17.97 μg.gl-1) and Zn in the water (27.83 μg.l-1) samples were the highest at station 2, indicating heavy metal pollution caused by DCW.

[Source: Heavy metal concentration in sea water, sediment and bivalves off Tuticorin
* P. S. Asha, P. K. Krishnakumar, P. Kaladharan, D. Prema, K. Diwakar, K. K. Valsala and G. S. Bhat]



DCW நிறுவன துணைத் தலைவர் திரு. ஜெயகுமார் அவர்கள் 2007ஆம் ஆண்டு முதல் மெர்குரி பயன்பாட்டில் இருந்து விடுபட்டு, காஸ்டிக் சோடா உற்பத்தி செய்ய, மெம்ப்ரேன் (Membrane) முறைக்கு DCW நிறுவனம் மாறியதாகக் கூறுகிறார். உண்மைதான்! ஆனால், கடந்த 49 ஆண்டுகளாக மெர்குரி எனும் பாதரசத்தைக் கொண்டு காயல்பட்டினம் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீர் ஆதாரங்களை, காற்றை, DCW தொழிற்சாலை மாசுபடுத்தியுள்ளதே...? அதற்கு என்ன நிவாரணம்? அழிய ஆயிரமாயிரம் ஆண்டுகள் எடுக்கும் மெர்குரி, பரிசோதனைகளில் இன்று வரை தென்படுகிறதே, இதற்கு என்ன நிவாரணம்?

நீங்கள் மெம்ப்ரேன் முறைக்கு மாறியது - மக்கள் நலனைக் கருத்தில் கொண்டா? மெர்குரி முறையால் சுற்றுசூழலுக்கு ஆபத்து என்று 1986ஆம் ஆண்டு முதல், மெர்குரி அடிப்படையிலான எந்த புது காஸ்டிக் சோடா தொழிற்சாலைக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. அப்போதே நீங்கள் - மெம்ப்ரேன் முறைக்கு மாறியிருந்தால் - சுற்றுச்சூழல் இவ்வளவு சீரழிந்திருக்குமா?

2003ஆம் ஆண்டு அரசுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்த (Charter on Corporate Responsibility & Environmental Protection) அடிப்படையில்தானே DCW நிறுவனம் 2007இல் மெர்குரி முறையை விட்டு வெளியில் வந்தது. இந்த ஒப்பந்த வேளையில் கூட, 2003ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் மெர்குரியை விட்டும் மாறி இதர வழிகளில் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்து வந்தன (2003இல் 71 சதவீதம் உற்பத்தி மெர்குரி அடிப்படை இல்லாமல்). முடிந்தளவு - சுற்றுச்சூழலை மாசுபடுத்தி எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதித்த பின்பு DCW தொழிற்சாலை - அரசின் 2012ஆம் ஆண்டு என்ற கெடு நெருங்கியதால் - தொழில்நுட்பத்தை மாற்றியது என்பதே உண்மை.

தனது பேட்டியில் - அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதாகவும், எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். DCW நிறுவனத்தின் மற்றும் இதுகாலம் வரையிலான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிசோதனைகளின் நம்பகத்தன்மை, 2012 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் - கேள்விக்குறியானதை, DCW நிறுவனத்தின் துணைத் தலைவர், இவ்வளவு சீக்கிரம் மறந்தது நியாயம் இல்லை.

மேலும் திரு. ஜெயகுமார் அவர்கள் தனது பேட்டியில், சோழமண்டலம் MS அசோசியேட்ஸ் நிறுவன அறிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டு, தனக்குத் தானே, பொய்யாக DCW நிறுவனம் நற்சான்றிதழ் வழங்கிக்கொண்டதை, சமகால - CMFRI அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன என்பதனை DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர் திரு. ஜெயகுமார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.கே.சாலிஹ்,
செய்தி தொடர்பாளர், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA).


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [02 February 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32966

Salam

We may publish our response for Mr.Jeyakumar speech through daily news papers instead of publishing through our own internet.Pls discuss and decide.

One more suggestion we have to do the continuous protest in regular basis instead of doing once in a year near their factory to disturb their mind and daily activities and attract the attention of the govt towards our home town problems


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [02 February 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32970

நெத்தியடி...முன்னால் ஒரு சீனிவாசன் இப்ப ஜெயக்குமார் ஒப்பந்தக்கார ஆலைக்கு பணிக்கு வரும் ஆட்களின் அர்த்தமற்ற உளறல்கள் பல கேட்டாகி விட்டது. இந்த செய்திகளுக்கு DCW என்ன பதில் சொல்லப்போகிறது...? பார்ப்போம். விளாவாரியாக ஆதரங்களை பிட்டு பிட்டு வைத்த KEPA வுக்கும் அதை வெளியிட்ட இந்த தளத்திற்கும் மிக்க நன்றி...!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. good one!!!!
posted by salih.sma (sakaka, al jouf, ksa) [02 February 2014]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32974

salam...

Thanks to publish this whole records.

Better to publish these records in public issues or popular newspaper with as it is.. what he delivered and how thats all fake...

Discuss and decide to stop all DCW activities before we suffer more...

need fast to save our NEXTGEN!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. DCW நிர்வாகமே..! மக்கள் ஓன்று திரண்டால் என்னவாகும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32977

கடந்த 31 தேதி மதியம் 1-30 மணிக்கு தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பின்போது பங்கேற்க மறுத்து ஓடி ஒழிந்து கொண்டு குண்டர்களை அனுப்பி பேட்டி எடுக்க வந்த தொலைகாட்சி குழமத்தை துரத்திய கதைகள் எல்லாம் உள்ளது உள்ளபடி தந்தி TV நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது..! இனியும் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யாதீர்..!

DCW நிர்வாகமே..! மக்கள் ஓன்று திரண்டால் என்னவாகும் என்பதை இனி அடுத்து உணருவீர்கள் - விரைவில் உணர்த்தபடுவீர்கள்..!

அன்பார்ந்த KEPA அமைப்பின் நிர்வாகிகளே - களப்பணி சகோதர்களே..! செலவு மற்றும் சிரமம் பார்க்காமல் இந்த அறிக்கையை நகரில் அனைவர்களும் படித்து உண்மை விபரம் தெரிந்து கொள்ளும் விதமாக பரவலாக நகரின் அணைத்து பகுதி மற்றும் இந்த தொழிற்சாலையால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட அணைத்து சுற்று வட்டார மாற்று சமுதாய மக்களின் ஊரிலும் நோட்டீசாக விநியோகிக்க பட வேண்டும்..! மேலும் நம் நகரில் இருந்து பேருந்து - தொடர்வண்டி வாயிலாக பயணிக்கும் அணைத்து பயணிகளின் மூலமாகவும் பரவலாக இந்த KEPA வின் அறிக்கையை பல ஊருகளுக்கு பரப்ப வேண்டும் எனது எனது கருத்து.

பல வெளிநாடுகளுக்கு இந்தியா ஒரு குப்பை தொட்டியகவும்..! பல வெளிமாநில (குறிப்பாக வட மாநிலம் - கேரளா) முதலாளிகளுக்கு தமிழகம் (குறிப்பாக தென் மாவட்டம் தூத்துக்குடி பகுதி ஊர்கள்) குப்பை தொட்டியகவும் பயன் படுத்துகிறார்கள்..! இதுவே உண்மை.. இன்றே நாம் இம்மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தாவிட்டால்... நாளை நமது மாவட்ட மக்கள் பஞ்சம் பசி வாழ பிழைக்க வேறு இடம் நகரும் சூழல் ஏற்படும் அதில் சந்தேகமில்லை.. DCW ஆலைக்குள் 15 முதல் 20 ஆழ்துணை போர்வல் அமைத்து ராட்சத இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு பல லட்ச லிட்டர் தண்ணீர் உரிஞ்சபடிகிரதாக அதிர்ச்சி தகவல். நீர் மாசுபடவும் நிலத்தடி நீர் கீழ்மட்டம் சென்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி ஏற்படவும் இந்த DCW ஆலையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாத்திப்பிடிதால் தாக்குப்பிடிக்க மாட்டார்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [02 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32978

DCW துணைத்தலைவரின் பேட்டியை "KEPA" மாத்திப்பிடித்து அவர் தாக்குபிடிக்கமுடியாமல் திணறி திரு திருவென்று விழிபிதுங்கி நிற்கக்கூடிய நிலைக்கு கொண்டு சென்ற "KEPA"வின் கடமையுணர்வு சேவைக்கு ஒரு சல்யூட்.

அன்பு காயல் சகோதரர்களே DCW யின் கழிவு வெளியேற்றும் விஷியதைப்பற்றி மேலும் பல புதிய தகவல்கள் தாங்களுக்கு தெரியவருமேயானால் அதை "KEPA" அமைப்பிடம் தெரிவித்து கொள்ளுங்கள், நாம் அனைவரும் "KEPA" என்ற ஒரே படகில் பயணம் செய்வோம்.படகோட்டியாகிய "KEPA" புண்ணியமிகு கரைக்கு நம்மை நிச்சியம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் படைத்தோனின் உதவியை உறுதிமிக்க தங்கள் உள்ளத்தில் சுமந்தவர்களாக!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by செய்து அகமது (chennai ) [02 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32980

மாசு கட்டுபாட்டு வாரியம் அந்த ஆய்வைத் தொடங்கிட இன்று வரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. CP

மாசு கட்டுபாட்டு வாரியம் உத்தரவு பிறப்பிக்க நாம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நகரில் ஏற்பாடு செய்து அரசின் கவனத்திற்க்கு எடுத்து வைக்கலாமே... அல்லது நமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலோ அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலோ நகர் முழுதும் வால்போஸ்டர் ஒட்டலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Who benefits from DCW?
posted by Riyath (Hong Kong) [02 February 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 32982

We all may know the profits of DCW goes only to private limited by using(polluting) our native environment in low tax.

Appreciate Kayal website team to record daily picture of beach and KEPA for making people awareness - photo evidence was posted many times on this website year ago for the pollution and turns better on last year after KEPA took action in place.

People protesting against pollution which is continuously opposing by highly paid officers in DCW and government representatives. Those officers should read this website, visit the ground, consult with social leaders to understand the real fact to address the issues.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 February 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32985

முதன் முதலாக, நகரின் சுகாதாரக் கேட்டின் காரணிகள் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு போன்ற மிக முக்கியமான விஷயங்களை மிகவும் திறமையான முறையில் கையாளும் KEPA விற்கு பாராட்டுக்கள்.

எனக்குள்ள ஆதங்கம் எல்லாம் இவ்வளவு ஆதாரங்கள் நம்மிடம் இருந்தும், நமது சமூகத்தையே சீரழிக்கும் இந்த தொழிற் சாலையை இழுத்து மூட எவை தடையாக இருக்கிறது என்பதுதான்!!!!

இதை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.

நமது கடமை KEPA வை பாராட்டுவதோடு முடிந்து விடக்கூடாது, அதன் செயலாக்கங்களுக்கு KEPA வின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் - உடல் உழைப்பாலும் - உள்ளத்தின் உந்துதலாலும் - மின்னல் ஹாபீபாலும்.

நமதூரில் சராசரியாக மாதத்திற்கு இரண்டு கேன்சர் நோயாளிகள் கண்டறியப்படுகிறது என்று அறிவதில் நம் எல்லோருக்கும் பெரிய வேதனையை தருகிறது. இந்த நிலைமை இப்படியே போனால் இந்த உயிர் கொல்லி நோய் இல்லாத குடும்பமே இல்லை என்னும் அளவிற்கு ஆகிவிடுமோ என்ற ஒரு திகில் தான் மனதில் தோன்றுகிறது.

எனவே நம்முள் எத்துனை வேறுபாடுகள் இருந்தாலும், ஊர் நலனை மட்டுமே கருத்தில் நிறுத்தி KEPA என்ற குடையின் கீழ் ஓன்று பட்டு, நமது போராட்டங்கள் எதிர்ப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்டு, நமதூரையும் நமது சுற்று வட்டாரங்களையும் சுகாதார பகுதியாக வைத்துக்கொள்வோமாக!!!

உண்மையை அப்படியே எடுத்துரைத்த தந்தி தொலைகாட்சிக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

காயல் கனவான்களே, உலகளாவிய காயல் நல மன்றங்களே, நீங்கள் நமதூருக்கு ஆற்றிவரும் தொண்டு போற்றலுக்குரியது என்றாலும், கேன்சர் நோயாளிக்கு உதவுவதை காட்டிலும் கேன்சர் நமதூரில் வராமல் இருக்க வழிவகைகளை செய்வதற்கு KEPA விற்கு உறுதுணையாக இருங்கள். நமது சமூகம் வாழையடி வாழையாய் தலைத்தோங்கும். இன்ஷா அல்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எந்தவித கொடிய நோய் நொடிகளிலிருந்து காப்பற்றியருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இதற்கு மறுப்பு பதில் தேவை தந்தி டிவி மூலம்,
posted by hasbullah mackie (DUBAI) [03 February 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32990

நீங்கள் குறிப்பிடும் இந்த விளக்கங்களை மீண்டும் தந்தி டிவி யில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ஜெயக்குமாரின் விளக்கத்திற்கு மறுப்பு விளக்கம் கொடுக்க வேண்டும்.. அவர்கள் அன்று தந்தி டிவி யை மறுத்ததற்கு காரணம் என்ன? பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்...என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [05 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33032

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நாசமாபோன D.C.W....தொழிற்சாலை துணை தலைவர்.ஜெயகுமார் அவர்களின் '' அபாண்டமான '' பொய்யை ...வெட்ட வெளிச்சமாக ( மிக தெளிவாக ) உலகுக்கும் எடுத்துரைத்த நமது >> KEPA << அமைப்பினர்களை ...பாராட்டுகிறோம் .

நாம் இனியும் மெத்தனமாக இருக்காமல் ..நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டது செல்வது தான் நம் ஊர் மக்களுக்கு நல்லதும் ...நம் மக்களின் உயிர் பாதுகாட்க படும் ....

நாம் ஒற்றுமையாக முன் நின்று விடாது போராட்டம் ..+.. அனைத்து அரசியல் கட்சி மூலம் தான் ..கோட்டையை ..நெருங்க முடியும்.....

தமிழக அரசின் முழு கவனத்தை நம் ஊர் மக்கள் பக்கம் திருப்ப வேணும்.....அதுவும் எப்படி தான் செயலாற்ற கூடிய முயற்ச்சில் நமது மரியாதைக்குரிய >> KEPA << அமைப்பினர்கள் முழுமையான கவனம் செலுத்த வேணும் .....அல்லாஹ் நமக்கு நன்மையே அருள்வானாகாவும் ஆமீன்......

இந்த மாசு கட்டு வாரியமும் ஏன்?? இப்படி நம் மக்களின் உயிர் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் ...தரகற்ற முறையில் நடந்து வருகிறார்கள் ....நமது மாசு கட்டு வாரியம் செயல் படகூடிய விதமாக நாம் எப்படி தான் திரும்பவும் முறையாக அணுகலாம் ...என்பதைத்தான் நமது >> KEPA << அமைப்பினர்கள் செயலாற்ற வேணும் .....

நாம் மேலும் தமிழகத்து முக்கியமான '' TV சேனல்களை '' நமது ஊரின் இந்த அவல நிலைமைகளை எடுத்து சொல்லும் விதமாக நமது ஊருக்கு அழைக்க வேணும் ......அப்போது தான் இந்த நாசமா போன >>DCW << தொழிற்சாலையை நாம் இழுத்து மூட வேணும் ...

நமது அனைத்து மக்களின் இந்த மன குமுறலுக்கு வல்ல இறைவன் வெற்றியை தந்தருள்வானாகவும் ஆமீன்..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved