Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:31:32 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12926
#KOTW12926
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 31, 2014
எதிர்ப்பையும் தாண்டி ‘தந்தி டிவி’யில் டி.சி.டபிள்யு. ஆலை குறித்து நேரலை நிகழ்ச்சி! இன்றிரவு மறு ஒளிபரப்பு!! இணையதளத்திலும் காணலாம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4649 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தொழிற்சாலை ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் தாண்டி, ‘தந்தி டிவி’யில், டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த நேரலை நிகழ்ச்சி இன்று 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்பானது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி இன்று 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஒளிபரப்புக் குழுவினர், இன்று, 13.30 மணியளவில், காயல்பட்டினம் புறவழிச் சாலையில், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்பகுதியில் முகாமிட்டபோது, திடீரென அங்கு திரண்டு வந்த சிலர் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

உடனடியாக அங்கிருந்து காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையருகில் ஒளிபரப்புக் குழு வந்தபோது, பின்தொடர்ந்து வந்த ஆலை ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜும்ஆ தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பள்ளிவாசல்களிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இதனைக் கண்ணுற்று, ஒளிபரப்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசி, ஆலை ஆதரவாளர்களைக் கண்டித்து திருப்பியனுப்பினர். அதனைத் தொடர்ந்து, 14.00 மணிக்கு நேரலை நிகழ்ச்சி துவங்கியது.











இதில், ஆறுமுகநேரியில் உப்பு உற்பத்தி செய்வோரும், விவசாயிகளும், ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர் ஒருவரும் ஆலையின் மாசு காரணமாக தங்கள் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வித பாதிப்புமின்றி தொழிலைச் செய்திட அரசு ஆவன செய்திட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.







அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், ஆலையின் மாசு குறித்தும், அதனால் காயல்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விரிவாக கருத்து தெரிவித்தனர். KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உடனிருந்தார்.









அவர்களைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் ஆலையின் பாதிப்புகள் குறித்து கருத்துக்களைக் கூறினர். 15.00 மணிக்கு நேரலை நிகழ்ச்சி நிறைவுற்றது.











இந்நிகழ்ச்சி இன்றிரவு 00.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனை www.thanthiTv.com என்ற இணைப்பில் சொடுக்கி காணலாம்.

இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிகழ்ச்சியின் ஒளிப்பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!



கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
M.T.ஹபீப் (நானா தானா)


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 23:11 / 31.01.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புறகணிப்போம்
posted by kajanawas (bangkok) [31 January 2014]
IP: 101.*.*.* Thailand | Comment Reference Number: 32901

அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க தயாரா ??????

சிந்தியுங்கள்!!!!!! செயல் படுங்கல்!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கண்ங்கள் குளமாகியது
posted by Abdullah (Tripoli,Libya) [31 January 2014]
IP: 41.*.*.* Libyan Arab Jamahiriya | Comment Reference Number: 32902

தற்போது முகநூளில் பார்தேன் சுபுஹனல்லஹ் கண்கள் குளமாகியது, இறைவா இதற்கு ஒரு வழியை தா, மக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, மதம் ஜாதி இனம் கொள்கை ஊர் என்று பார்க்காமல் தொண்டு உள்ளதோடு ஒன்றுபடுவோம். தினத்தந்தி டிவி புதியதலை முறை டிவி ஐக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [01 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32904

தந்தி டிவி நிறுவனத்திற்கு முதலில் நன்றியை தெரிவிக்க வேண்டும். கிட்டதட்ட 1 மணி நேரம் நேரடி ஒளிபரப்பாக மிக விரிவாக ஒளிபரப்பினார்கள்.

உண்மையிலேயே KEPA நிர்வாகிகளுக்கு மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான அயராத உழைப்புக்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையோ என்று தோன்றுகிறது.

ஏனெனில், அங்கு கூடி இருந்த கூட்டம் மிக குறைவாக இருந்தது. இது போன்ற ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பின் மூலம் நமது மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நல்லதொரு தருணம். அதை நாம் தவற விட்டு விட்டோம் என்று என்ன தோன்றுகிறது.

KEPA நிர்வாகிகள் மிக தெளிவாக நமது ஊரின் பாதிப்புகளை ஆதாரத்துடன் தெரியபடுத்தினார்கள். பாராட்டுக்கள்.

KEPA நிர்வாகிகளே!!! தொடர்ந்து உங்கள் சேவையினை உங்கள் பாதையிலேயே பயணியுங்கள். வருங்கால சந்ததியினர் நிச்சயம் உங்களை நினவு கூறுவர்.

வஸ்ஸலாம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உணர்ச்சிமிக்க எழுச்சிமிக்க பேட்டி
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32905

வீட்டில் வந்து கதவை திறந்து உட்கார்ந்தபோது அலைபேசி மணி ஒலித்தது. மறுபுறத்தில் யாரென்று தெரியவில்லை. தந்தி டீவீ உடன் பாருங்கள். திடுக்கிட்டு தொலைக்காட்சியை பார்த்தபோது, DCW சம்பந்தமான பேட்டி, கலந்துரையாடல், கேள்விக் கணைகள், பதில்கள் விளக்கங்கள்...அபூபக்கர் காக்கா பேச்சு, சாலிஹ் அவர்கள் பேச்சு, பாதிக்கப் பட்டவர்களின் அவலக் குரல்கள் எல்லாம் சாகுபுரம் சாகும்புரமாக, சாகடிக்கும்புரமாக மாறி வருவதை எடுத்துக் காட்டியது.

முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஊர் மக்களுக்கு தண்டோரா போட்டோ ஆட்டோ மூலமோ அறிவித்திருக்கலாம். எழுச்சிமிக்க ஒரு கூட்டத்தை கடை அடைப்பை, ஊர்வலத்தை நடத்திக் காட்டி மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்திய KEPA நிர்வாகிகளுக்கு முன்னறிவிப்பு செய்யாமல் தந்தி டீவீ குழுவினர் எப்படி இந்த ஜும்மா நேரத்தில் இக்கட்டான சூழ் நிலையில் ஊருக்குள் வந்தார்கள் என்பது புதிராக உள்ளது. இதுவும் DCW யின் சதி வேலையாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

கணினிகள் எல்லோரிடமும் இல்லை. மறு ஒலிபரப்பு நள்ளிரவில் நடக்கிறது பாருங்கள் என்ற அறிவிப்பாவது செய்திருக்கலாம். பாதி தூக்கதிலாவது பெண்கள் ஆண்கள் வீடுகளில் டீவீயில் பார்த்திருப்பார்கள். தொடர்ந்து KEPA நிர்வாகம் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். புதிய தலைமுறை டீவீயும் சமீப காலமாக மக்கள் பிரச்சினைகளை பேசி வருகிறது. அவர்களையும் தொடர்பு கொண்டு இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நல்லதொரு தீர்வு வெகு விரைவில் ஏற்பட அல்லாஹ் உதவி செய்வான்.

தேர்தல் புறக்கணிப்பு யோசனைகளையும் மக்கள் மத்தியில் முன்வைக்கலாம். சீட்டுக்காக ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிரார்கள். முஸ்லிம்கள், உள்ளூர்வாசிகள், கட்சி பேதமின்றி இதுபற்றி யோசித்தால் விடிவு நிச்சயம் வரும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32910

DCW இரசாயன கழிவால் நல்ல நீரோடை விஷமாக மாறி நிலத்தடி நீர் மாசுப்பட்டு அதில் விஷம் ஏறி கால்நடைகள் நோயினால் கொடூரமாக துடிதுடித்து செத்து மடிந்து வருகிறது இந்த செய்தி பலருக்கு வெளியில் தெரிவதில்லை அப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..! அது புறமிருக்க சுற்று வட்டார மக்களின் உயிர் இந்த அமில சுவாசத்தால் (புற்று நோயினால்) மடியவும் செய்கின்றன..!

இனி வரும் சொற்ப காலத்தில் தமிழகத்தில் வறுமை வறட்சி ஏற்பட்டு தமிழ் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாகும்..! அதில் சந்தேகமில்லை..! இனி வறுமையை நோக்கி இந்தியா.

சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீர் விஷமாய் மாறி போனது.. DCW வின் அமில கழிவால் இந்திய பொருளாதாரம் அழிந்து இந்திய மக்கள் வறுமையில் செத்து மடியும் ஆபத்து.. மத்திய - மாநில மாசுக்கட்டுப்பட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.. எல்லாம் பன்னாட்டு வியாபார முதலாளிகளிடம் மண்டியிட்டு கிடக்கின்றன,

அன்பார்ந்த நகரின் அணைத்து இணையதள வாசகர்களே..! முகநூல் நண்பர்களே..! முடிந்த வரை இந்த DCW வின் நாசக்கார செய்திகளையும் - அதன் புகைப்படங்களை SHARE செய்யுங்கள்...! நாளை நமது தலைமுறைகள் நோயின்றி வாழ நம்மால் இயன்ற பல முயற்சிகளை செய்வோம். இன்ஷா அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [01 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32945

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த >>தந்தி TV << ஒளிபரப்பை உலகம் பூராவும் கொண்டு கழித்து பொது மக்கள் அனைவர்களும் கொதிப்பு அடைந்து இருப்பார்கள் .....

இந்த ஒலிபரப்பு மூலம் நம் ஊர் மக்கள் அனைவர்களின் உயிர் பாதுகாக்க படும் ஆனால் அல்ஹம்துலில்லாஹ் ......

இந்த >>தந்தி TV << ஒலிபரப்பு மூலம் நம் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கருணை பார்வை நிச்சயம் நம் ஊர் மக்கள் உயர் பாதுகாட்க படுமானால் எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ......

நம் மரியாதைக்குரிய முதல்வர் அம்மா அவர்கள் நிச்சயம் இந்த தந்தி TV ஒலிபரப்பு கண்ணுற்று மிகவும் துரிதமாகவே முழுமையான ஒரு நடவடிக்கை எடுத்து ...நம் மாவட்ட அதிகாரிக்கும் & மாசு கட்டுப்பட்டு துறைக்கும் அதிரடியாக ஆடர் போட்டு ...நம் ஊர் அனைத்து மக்களின் நலன் காத்தால் ரொம்பவும் நன்றாகவே இருக்கும் ......

நாம் நம் தமிழக அம்மா அவர்களை முளுமைகாக நம்புகிறோம் ....நடக்கும் என்று நினைத்து காத்து இருக்கிறோம் ....

இந்த தந்தி TV....ஒளிபரப்பில் சமூக ஆர்வலர் .... பாத்திமா அவர்களின் பேட்டி முற்றிலும் சரியானதே .....நம் ஊர் KEPA அமைப்பினரின் மன குமுறலும் & எம் நண்பர் SKS .சாலிஹு அவர்களின் பேட்டின் உள்ளார்ந்த மன குமுறல் நம்மை மட்டும் இல்லை ....இல்லை ...ஒளிபரப்பை காண்கின்ற உலக மக்கள் யாவர்களையும் கண்கலங்க வைக்கும் ......நம் ஊர் மக்களின் இதய துடிப்பை மன வேதைனையோடு சொன்னதை நாம் நினைக்கும் போது நம் மனது சிறப்படைந்தது ........இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும் .....

நமது ஊரை சுற்றி சேர்ந்த பகுதி ஆர்வலர்களின் மன குமுறலும் நம்மை நெருட செய்தது ....நம் பெண்மணி ஒருவரின் ஆதங்கம் நம்மை கண்கலங்க வைத்தது ....வல்ல இறைவன் இந்த பெண்மணிக்கு எந்த ஒரு நோய் நொடிகளும் வராமல் காத்து அருள்வானாகவும் ஆமீன்.....

இந்த நாசமா போன >> DCW << தொழிற்சாலை பற்றி இணைய தளங்களிலும் செய்தி வந்து & பத்ரிக்கைகளிலும் + இப்போது TV சேனல்களிலும் செய்தி வந்து உள்ளது ....நாம் பொறுத்தோம் ....பார்ப்போம் நல்லதே நடக்கும் ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Azath Jawahar (kayalpatnam) [01 February 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32947

இப்படி ஒரு பக்கம் இருக்க அந்த நிறுவனத்தின் உதவியால் ஒன்றாவது வார்ட் பகுதியில்(கடையகுடியில் தேவ ஆலயம் அருகே) சுத்தம் செய்து விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க இருக்கிறது. அந்த இடம் இப்போது இயந்திரம் மூலம் சுத்தம் செய்து தயார் நிலையில் உள்ளது. அந்த பகுதி மக்களை ஏமாற்ற பார்க்கிறது. அவர்களுக்கு தெரிய வில்லை பாதிப்பு அவர்களுக்கு தான் என்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by செய்து அகமது (சென்னை.) [02 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32963

DCW தொழிற்சாலையின் இரசாயன கழிவால் மாசுபடும் நமது கடலின் காட்சிகளை நாம் ஏன்.. சர்வேதச மாசு கட்டுப்பாடு துறையின் பார்வைக்கு எடுத்து செல்ல கூடாது.?

கடல் வளம் என்பது அணைத்து நாடுகளின் பொது உடமை அந்த பொதுவான வளத்திற்கு ஒரு நாட்டில் எந்த பகுதியிலாவது கடல் மாசுபட்டு கடல் தாவரங்கள் உயிரினங்கள் மீது சேதம் ஏற்பட்டால் அது சர்வேதச அமைப்புக்கு அறிய படுத்தலாம்.

நாம் நமது அணைத்து LAB REPORT நகல் தொழிற்சாலையின் இருந்து வரும் இரசாயன கழிவு கடலில் கலக்கும் Google Satellite Map மற்றும் இரசாயன கழிவால் செத்து கரை உதுங்கிய மீன்கள், தாவர செடிகள் இவை அனைத்தயும் ஆதார சாட்சியாக எடுத்து வைக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved