Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:58:47 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13664
#KOTW13664
Increase Font Size Decrease Font Size
புதன், மே 7, 2014
கோடை மழை: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேற்கு வராண்டா மேற்கூரை இடிந்து விழுந்தது! பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5615 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு தொடர்மழை காரணமாக, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேற்கு வராண்டா மேற்கூரை இன்று காலையில் இடிந்து விழுந்தது. அந்நேரத்தில் யாரும் அவ்விடத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப். இங்கு, 87 ஆண்டுகளாக, நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பான அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தம் ஆண்டுதோறும் ரஜப் மாதம் முழுக்க ஓதப்பட்டு - அன்றன்று ஓதப்பட்ட பாடங்களுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பெறுவதற்காக, 1971ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் பல்லாண்டுகளாக இக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இளம் மாணவர்கள் திருமறை குர்ஆனை மனனம் செய்வதற்காக ஹிஃப்ழு மத்ரஸாவும் ஹாமிதிய்யா நிர்வாகத்தால் 1985ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்குப் பகுதி கட்டிடம், மேற்கு வராண்டா, ஹல்கா, பெண்கள் பகுதி, கிழக்கு வராண்டா ஆகிய முக்கியப் பகுதிகளையும், அலுவலகப் பகுதிகளையும் கொண்ட இக்கட்டிடத்தில், அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், 1942ஆம் ஆண்டு - மர்ஹூம் அ.க.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்ட மேற்குப் பகுதி கட்டிடம் மற்றும் மேற்கு வராண்டா ஆகிய இரண்டு பகுதிகள் மட்டும் பழைய நிலையிலேயே இருந்து வந்தது.









அக்கட்டிடப் பகுதி நாளுக்கு நாள் பழுதடைந்து, மழைக்காலங்களில் அதிக ஒழுக்குடன் காணப்பட்டதால், அதை இடித்தகற்றி, புதிதாகக் கட்டுவதற்காக புகாரி ஷரீஃப் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சிகளும் துவக்க நிலையிலுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக - ஏற்கனவே சேதமுற்றிருந்த மேற்கு வராண்டாவின் தென்பகுதியில், இன்று காலை 11.45 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டு, திடீரென இடிந்து விழுந்தது.









எப்போதும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது ஒருபுறமிருக்க, நடப்பாண்டின் (ஹிஜ்ரீ 1435) புகாரி ஷரீஃப் 07ஆம் நாள் மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சி நிறைவுற்று, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் யாவரும் கலைந்து சென்ற அடுத்த சில நிமிடங்களில் இது நிகழ்ந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் யாரும் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.













இதுகுறித்து, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நம் புனிதமிகு மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளும், பொதுமக்களின் தாராள நன்கொடைகளைக் கொண்டு - எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் வரிசையாக புதுப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மஜ்லிஸின் ஹல்காவைக் கொண்ட மேற்குப் பகுதி கட்டிடம், அதனையொட்டி அமைந்துள்ள மேற்கு வராண்டா ஆகிய இரு பகுதிகளை மட்டும் விரைவில் புதுப்பித்துக் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, இன்று மஜ்லிஸ் நிறைவடைந்து அனைவரும் கலைந்து சென்ற பின்னர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேற்கு வராண்டாவின் தென்பகுதி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கருணையுள்ள அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அந்நேரத்தில் அவ்விடத்தில் யாரும் நடமாடாத நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகள் விரைவில் அகற்றப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

மஜ்லிஸின் நடப்பாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்ஷாஅல்லாஹ் திட்டமிட்ட படி நடைபெறும் என இதன் மூலம் அன்புடன் அறியத் தருகிறோம்.

மேற்குப் பகுதி கட்டிடம் மற்றும் மேற்கு வராண்டா கட்டிடம் ஆகியவற்றைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடப்பாண்டு மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின் துவக்கப்படவுள்ளது என்பதையும் அனைவரின் மேலான கவனத்துக்கும் அறியத் தருகிறோம். அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.


இவ்வாறு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வைபவக் கமிட்டி சார்பில்
குளம் M.I.மூஸா நெய்னா


மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [07 May 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34810

எந்த வித உயிர் சேதமின்றி இறைவன் காப்பாற்றினான்.." அவனுக்கே எல்லா புகழும்.." அல்ஹம்து லில்லாஹ்.."

எனினும் பழைய கட்டிடத்தின் மற்ற பகுதியையும் நன்கு பரிசோதிக்க வேண்டும்.." இப்பொழுது மழை நேரமாக இருப்பதால் கண்டிப்பாக கீழே விழும் அபாயம் உள்ளதா என்று நிர்வாகத்தினர் பரிசோதிக்க கடமை பட்டுள்ளனர்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கவனம் தேவை.
posted by s.s.md meerasahib (TVM) [07 May 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34812

அஸ்ஸலாமு அலைக்கும். யாருக்கும் எந்த ஒரு அபாயமும் இல்லாமல் எல்லாம் வல்ல கிருபையாளன் நம்மை காப்பாற்றி இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.

எஞ்சியுள்ள பழைய கட்டிடம்களை கவனத்தில் கொண்டு சொர்ப்போலிவுகள், குர்ஆன் பாடம்களை புதிய கட்டிட கூரையின் கீழே.... அமைத்துக்கொள்ளவும் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [07 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34813

"அஸ்ஸலாமு அலைக்கும்."

எந்த வித உயிர் சேதமின்றி இறைவன் காப்பாற்றினான்.." அவனுக்கே எல்லா புகழும்.." அல்ஹம்து லில்லாஹ்.."

இன்ஷா அல்லாஹ், எந்தவித தாமதம் இல்லாமல் புதிய கட்டம் நல்ல முறையில் உருவஹா வல்ல நாயன் அருள் புரிவனஹவும் ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!!

அன்புடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அல்லாஹ் பாதுகாத்தான் ...!
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR ) [07 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34814

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த புனித சபையில் பழைய கட்டிடம்தான் விழுந்து இருக்கிறதே தவிர எந்த ஒரு இரத்த சேதத்துக்கும் இடமில்லாமல் மக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது அல்லாஹ் சுப்ஹானத்தாஆலா இந்த சபையை தன்னளவில் எந்தளவு புனித படுத்தியுள்ளான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.காயல்வாசிகள் கொடுத்து வைத்தவர்களே மாஷாஅல்லாஹ் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அஸ்ஸலாமு அழைக்கும்,
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [07 May 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34815

வல்ல நாயன் அருளாலும் , நமது கண்ணிய மிகு பெரியோர்களின் துவா பாரக்கதாலும் , இந்த புனித மிகு மஜ்லிஸில் நடந்த இந்த சம்பவம் , எந்த ஆபத்தும் இண்றி , அதுவும் ஹதீது முடிந்து , எல்லோர்களும் களைந்து சென்ற பின்னரே இந்த நிகழ்வு நடந்து உள்ளது . அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல நாயன் நம் அனைவர்களுக்கும் , அவனுடைய பாதுகாப்பை என்றும் தருவானாக . ஆமீன் .

பழைய கட்டிடம்களை கவனத்தில் கொண்டு, குர்ஆன் பாடம்களையும் , மார்க்க பயாங்களையும் புதிய கட்டிட கூரையின் கீழே.... அமைத்து கொள்ளவும் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Shahul Hameed (Abudhabi) [07 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34817

எல்லாம் வல்ல இறைவனின் பெரும் உதவியாலும் பெருமானார் முஹம்மது நபிகளாரின் கருணையாலும் புனிதர் புஹாரி இமாமின் துஆ பரகத்தால் பெரும் ஆபத்தை விட்டு நாம் காப்பாற்ற பட்டு இருக்கிறோம் ,இந்த சபையின் மகத்துவம் அறிந்து நடக்கும் காலமெல்லாம் இந்த உதவி நம்மை சுற்றி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அருளாளன் அன்புடையோன்.அல்லாஹ்..
posted by omer anas (DOHA QATAR.) [08 May 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34821

அஸ்ஸலாமு அலைக்கும் ....!

அருளாளன் அன்புடையோனாகிய அல்லாஹ்வின் பெரும் கருனையினாலும்,நமது கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் நல்ஆசியாலும்,ஒலிமார்கள்,சுகதாக்கள், சாலிஹீன்களின்,துஆ பொருட்டாலும்,நடக்கவிருந்த பெரும் பேரழிவை வல்லோன் இறைவன்,கருணையாளன்,நம்மை காத்தருலச்செய்தான். ஆமீன்.!எல்லாப்புகழும் ரப்புல் ஆலமீனுக்கே!

வெகு சீக்கிரத்தில் இந்த இடம் புதுப்பிக்க பட வேணும். மாற்று கருத்தில்லை !அதே நேரம்,குத்பா பெரிய பள்ளி காட்டு மொகுதூம் பள்ளி போன்று இன்னும் பல பழங்கால பள்ளிகள் அதன் தன்மை அறிந்து புதுப்பிக்க படவேண்டும். வரும் கால ஆபத்தை சற்றேனும் சிந்தித்து நாம் மார்க்க தர்க்கம் புரியாமல்,எல்லா பள்ளிகளும்,நம்மை படைத்த வல்லோன் அல்லாஹ்வின் மார்க்க பள்ளிகள்தான் என்று தாராள மனம் கொண்டோர்,புரிந்தணர்வு கொண்டோர்,ஒன்று கூடி,மார்க்க பேதமின்றி,பாடு பட வேண்டும்.பொருளுதவி செய்திட வேணும். நடக்குமா....?

ஆவலுடன் ,
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... அல்ஹம்து லில்லாஹ்.
posted by Muhamed Ukasha (Kayalpatnam) [08 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34824

அல்லாஹ்வின் அருளால் மஜ்லிஸ் ஹல்காவும், ஹிப்ழ் மத்ரஸா பாடங்களும் இடம் மாற்றப் பட்டுள்ளது. எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்து லில்லாஹ்.

விரைவில் மீதமுள்ள பகுதிகளையும் இடித்து வேலை பார்க்க உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள். அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கட்டிடப் பணிக்கு தாராளமாக உதவுங்கள் !!!
posted by Moulav M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [08 May 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34839

அஸ்ஸலாமு அழைக்கும் .

நமது மஜ்ளிசின் ஆண்கள் பகுதி மேற்கு வராண்டா மேற்கூரை இடிந்து விழுந்த செய்தி அறிந்து கவலையும் , ஆச்சரியமும் அடைந்தேன் .

காலைப்பொழுதில் , அதுவும் மஜ்லிஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் ரஜப் மாதம் , மதரசா பிள்ளைகள் ஓதிவரும் நேரம் என யாருக்கும் , எந்த ஆபத்தும் நிகழாத வண்ணம் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது என்றால் உண்மையிலேயே அல்லாஹ்வின் பேரருளும் , பெருமானார் நபி (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) மற்றும் இமாம் புகாரி நாயகம் ,மற்றும் அணைத்து நாதாக்கள் , நல்லோர்களின் துஆ பரக்கதும்தான் காரணம் . அல்ஹம்துலில்லாஹ் !

இன்சா அல்லாஹ் எதிர்வரும் வருடத்திற்குள் இந்த கட்டிடமும் , ஹல்கா கட்டிடமும் புதிதாக புனர்நிர்மாணம் செய்வது காலத்தின் கட்டாயம் .

மஜ்ளிசின் நிர்வாகத்திற்கு இந்த பொறுப்பு அவசியம் இருக்கும் அதே நேரத்தில் இம்மன்ரின் பொருளாதார பின்னணி மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பதும் நாம் அறிந்த ஒன்றே !

ஆகவே ! பொதுமக்கள் யாவரும் சன்மார்க்க பணியாற்றி வரும் பூமான் நபியின் மாமன்றமாம் புனித மஜ்ளிசுள் புகாரிஸ் சரீபின் இந்த புனர்நிர்மான பணிகளுக்கு தாராளமாக , ஏராளமாக அள்ளி , அள்ளி அளித்து இந்த கட்டிடப் பணிகள் யாவும் இனிதே நடைபெற நாம் அனைவரும் உதவிட வேண்டுமென உங்கள் அனைவரையும் மிக்க அன்புடன் வேண்டுகிறேன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த புனித பணிக்கு உதவிட நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக !

அதன் பொருட்டால் நம் அனைவருக்கும் இம்மை , மறுமை ஆகிய சகல நன்மைகளையும் வழங்கிடுவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரின் மழைக் காட்சிகள்!  (6/5/2014) [Views - 3924; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved