Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:20:00 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14035
#KOTW14035
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 6, 2014
காயல்பட்டினத்தில் அம்மா உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா! சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4424 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள அம்மா உணவகத்திற்கான பூமி பூஜை, அம்மா உணவகம் அமையவுள்ள - காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் தென்கிழக்குப் பகுதியில் நடைபெற்றது.



இவ்விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அம்மா உணவக கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.







தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்றுப் பேசினார்.



பின்னர், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-



தமிழகத்தில் எந்த மனிதனும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஒப்பற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு, திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி என பல திட்டங்களைத் தீட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதயமானதுதான் அம்மா உணவகம். 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என மாநகராட்சிகளில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இப்பொழுது நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக அங்குள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலவர் அம்மா அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெறுவதுடன், இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது.

காயல்பட்டினத்திற்கு இரண்டாவது பைப்லைன் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் தந்து, அதற்கான பணியும் நடைபெற்று வருகின்றது. அப்பணியை விரைவாக முடித்திட நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தியுள்ளளேன். அரசு அறிவிக்கின்ற திட்டங்களை நிறைவேற்றிட நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அப்படி யாராவது முட்டுக்கட்டை போடுபவார்களேயானால் இந்த ஊர் பெரியவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும்.


இவ்வாறு, அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.



காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.





இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்மணத்தி ரவிக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா லிங்ககுமார், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி தக்கா கோட்டை மணிகண்டன், வட்டாட்சியர் நல்லசிவம், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, பொறியாளர் சிவகுமார், திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி, அதிமுக நகர கிளை துணைச் செயலாளர் ஷேக் அப்துல் காதிர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



படங்களுள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மருந்தே உணவாக மாறி வரும் இந்நகருக்கு அம்மா மருந்தகம் விரைவில் வரவேண்டும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [07 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35837

அம்மா உணவகம் இந்நகருக்கு மிக விரைவாக வந்ததை போல் அதே விரைவாக அம்மா மருந்தகமும் இந்நகருக்கு வரவேண்டும்.. என்பது இந்நகர் மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தமிழ்ப் புலமை!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [07 July 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 35839

புனித ரமழான் மாதத்தில் அரசு செலவில் “பூமி பூஜை” என்று பேனர் கட்டி சந்தனம் பட்டையிடப்பட்ட செங்கற்களை மிகுந்த பயபக்தியோடு நம் சகோதர-சகோதரிகள் எடுத்துக் கொடுக்கும் அந்த பரவசத்தை “அடிக்கல் நாட்டினார்கள்” என்று அழகுத் தமிழில் தலைப்பிட்டீர்களே உங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு வியக்கிறேன் அட்மின்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பக்தி முத்திபோச்சு
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [07 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35842

இத்திட்டம் நமதூர் ஏழை மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு பயன்தரும். வரவேற்க வேண்டிய ஒன்று. மற்ற மாநகராட்சி & நகராட்சிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அரசு அடிக்கல் நாட்டு விழாவில், இந்துமத வழக்கப்படி பூஜை செய்யப்படுகிறது. இதுவும் அரசு விழா என்பதனால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், இந்த விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்களை சற்று நோக்குங்கள். அனைத்தும் பூஜிக்கப்பட்டவை. அந்த செங்கல்களை நம் நகர்மன்ற இந்நாள் & முன்னாள் தலைவி மற்றும் நம் சமூகத்தை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் எடுத்து கொடுத்தது சற்று இடிக்கிறது.

ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் நாம், அல்லாஹ் அல்லாதவைகளை கொண்டு பூஜிக்கப்பட்ட செங்கலை எடுத்து கொடுக்க வேண்டுமா? பூஜிக்கப்படாத செங்கல்களும் இருந்திருக்குமே? பூஜிக்கபட்டதை தவிர்த்து, மற்ற செங்கல்களை எடுத்து கொடுத்திருக்கலாமே?

வரும் காலங்களில் இது போன்ற, நமது ஓரிறை கொள்கைக்கு விரோதமான செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்வோமாக.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35844

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களின் இந்த உணவகம் அனைத்து தரப்பு பொது மக்களாலும் ஒருமனதாகவே ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நல்ல விசையம் ......

நடுத்தர & ஏழை மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட நமது மாண்புமிகு அம்மா அவர்களை எந்த வழியிலும் நாம் பாராட்டலாம் .........

தொடரட்டும் அம்மா அவர்களின் சாதனை ...........

அம்மா அவர்களின் அனைத்து நல்ல திட்டங்களும் நமது ஊருக்கு மிக விரைவில் வருவதை நாம் வரவேற்கிறோம் .....

நமது மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களின் சொல்படி நமது ஊர் நகர் மன்ற உறுப்பினர்கள் நமது மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களுடன் ஒன்றாக இணைந்து செல்யல் பட்டாலே போதும் ....நம் நகர் மன்றம் + நம் ஊர் நலம் சிறப்படையும் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SULTHAN (Deira, Dubai) [09 July 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35861

இந்த விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்களை சற்று நோக்குங்கள். அனைத்தும் பூஜிக்கப்பட்டவை. அந்த செங்கல்களை நம் நகர்மன்ற இந்நாள் & முன்னாள் தலைவி மற்றும் நம் சமூகத்தை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் எடுத்து கொடுத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது

ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் நாம், அல்லாஹ் அல்லாதவைகளை கொண்டு பூஜிக்கப்பட்ட செங்கலை எடுத்து கொடுக்க வேண்டுமா? பூஜிக்கப்படாத செங்கல்களும் இருந்திருக்குமே? பூஜிக்கபட்டதை தவிர்த்து, மற்ற செங்கல்களை எடுத்து கொடுத்திருக்கலாமே?

படித்த நீங்களே சிந்திக்கவில்லையே சொல்லவே வெட்கப்படுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved