Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:58:30 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14222
#KOTW14222
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 29, 2014
அமாவாசை தினம் எனக்கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்பட்ட காட்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4667 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிறைக் குறித்த விவாதங்களில், ஒரு சிலரால், அமாவாசை எனக்கூறப்படும் நாளில், உலகில் எங்கும் தேயும் பிறையையோ, வளரும் பிறையையோ காண முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

அமாவாசை தினம் எனக்கூறப்படும் தேதியில் - அமாவாசை நிகழும் நேரத்தை பொறுத்து, உலகின் சில பகுதிகளில் தேயும் பிறையையோ அல்லது உலகின் சில பகுதிகளில் வளரும் பிறையையோ காணலாம் என்பது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.

இதனை உணர்த்தவே காயல்பட்டணம்.காம், ஜனவரி 29, 2014 அன்று செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் ஜனவரி 30 (இங்கிலாந்து நேரப்படி அமாவாசை தினம்) அன்று தேயும் பிறையை காணலாம் என்ற செய்தியையும், ஜனவரி 31 அன்று அவ்வாறு ஈரான் நாட்டில் காணப்பட்ட செய்தியையும் வெளியிட்டிருந்தது.

அமாவாசை தினம் எனக்கூறப்படும் நாளில் பிறையை காண ஜூலை 26 மற்றொரு வாய்ப்பினை தருகிறது. இது குறித்த செய்தியினை காயல்பட்டணம்.காம், ஜூலை 24 அன்று வெளியிட்டிருந்தது.

ஜூலை 26 அன்று காலை 6:40 மணியளவில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் தேயும் பிறை வெறுங்கண்ணால் பார்க்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



இந்த புகைப்படத்தினை Moonsighting.com இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்படும் போது, சூரியன் - சந்திரன் இடையிலான இடைவெளி (ELONGATION) சுமார் 12.90 டிகிரி ஆகும்.

மேலும் அதே தினத்தில், இந்தோனேசியா நாட்டிலும் தேயும் பிறை - குபங் என்ற பகுதியில் காணப்பட்டதாக, Icoproject.org இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..
posted by மவ்லவி S.முஹம்மது கடாஃபி MISC (இராமேஸ்வரம்) [30 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36158

அட்மின் அவர்களே! சந்திர மாதத்தில் இரண்டு தினங்கள் அமாவாசை நடைபெறும் என்று துணிந்து எழுதுகிறீர்கள். அதாவது அமாவாசை எனும் (Geocentric Conjunction Day) சங்கமதினம் 48 மணிநேரங்கள் கொண்ட இரண்டு நாட்கள் என்று சிவகாசி காலண்டரின் பஞ்சாங்க கணக்கைப் போல தெரிவிக்கிறீர்கள். Geocentric Conjunction என்பதே ஒரேயொரு இடத்தில் (புள்ளியில்) நிகழ்வதுதான். இருவேறு இடங்களில் நிகழ்வது அல்ல என்பதை உணர மறுப்பதேன்?

சங்கம நிகழ்வை மட்டும் ஏன் லோக்கல் நேரத்திற்கு மாற்றி நீங்களும் குழம்பி பிறரையும் குழப்புகிறீர்கள். புரிவதற்காக கேட்கிறேன் அமெரிக்காவிற்கு மேற்கு பகுதியிலோ, அலாஸ்காவிலோ முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழும்போது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமைக்குள் சென்றிருக்கும். எனவே அமெரிக்க அலாஸ்கா மக்கள் சனிக்கிழமைதான் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று கூறுவீர்களா? இன்னும் வெள்ளிக்கிழமை என்பதை இரண்டு நாட்களாக நீட்டி மேற்கத்திய நாட்டு மக்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை முடிக்கும் வரை சனிக் கிழமைக்குள் சென்றுவிட்ட அனைத்து கிழக்கத்திய நாடுகளும் அந்த நாளை வெள்ளிக் கிழமையாகத்தான் கருதவேண்டும் என்று கூறவருகிறீர்களா?

மீண்டும் மீண்டும் அமாவாசை போட்டோ பிறையை பதிக்கிறிர்கள். இது சம்பந்தமாக மிக விரிவாக விளக்கப்பட்டும், உங்கள் இணையதளத்திலேயே பல கேள்விகள் பதியப்பட்டும், அவற்றிற்கு முறையாக விளக்கம் அளிக்காமல் உங்கள் சொந்த கருத்தை இணையதள அட்மின் போர்வையில் மக்களிடம் திணிப்பது ஏன்? பிறை மற்றும் நாட்காட்டி சம்பந்தமாக இந்த இணையதளத்தின் நிலைபாடை தெளிவாக மக்களுக்கு விளக்குங்கள். அப்போதுதான் உங்கள் நிலைபாட்டில் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டரை தகர்த்தெரியும் யூத> ஜியோனிஸ முயற்சியாகத்தான் இப்போட்டோ பிறை பித்தலாட்டங்களை நான் கருதுகிறேன். நீங்கள் வெளியிட்டுள்ள அமாவாசை போட்டோ பிறைக்கும்> இனி வெளியிட இருக்கும் இதுபோன்ற செய்திகளுக்கு கீழ்க்காணும் மறுப்புரையே போதுமானதாகும்.

http://mooncalendar.in/articals/310-research-irani-conjunctionn-waning-crescent

வஸ்ஸலாம்
மவ்லவி S.முஹம்மது கடாஃபி MISC
இராமேஸ்வரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Salih (Kayalpattinam) [30 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36161

/* சந்திர மாதத்தில் இரண்டு தினங்கள் அமாவாசை நடைபெறும் என்று துணிந்து எழுதுகிறீர்கள்.*/ C & P

மவ்லவி கடாபி அவர்களுக்கு, இந்த செய்தியில், அமாவாசை இரு தினங்களில் நடப்பதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே - எழுதப்படாத ஒன்றை எழுதப்பட்டுள்ளதாக கூறுவது முறையல்ல.

அமாவாசை ஜூலை 26 அன்று இங்கிலாந்து நேரப்படி (UTC) இரவு 10:42 மணிக்கு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்திய நேரம் ஜூலை 27 அதிகாலை 4:12 என்று கூறுவதால் இரு தினங்களில் நடந்ததாக கூறுவது ஆகாது என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால் - பிரேசில் நாட்டில் உலக கோப்பை இறுதி போட்டி பிரேசில் நேரப்படி ஞாயிறு மாலை 16:00 க்கு துவங்கும் என்று கூறி, அப்போது இந்திய நேரம் திங்கள் அதிகாலை 1:30 என்று கூறுவதால், இரு தினங்களில் இறுதி போட்டி நடந்தது எனக் கூறுவது போல் ஆகுமா?

/* மீண்டும் மீண்டும் அமாவாசை போட்டோ பிறையை பதிக்கிறிர்கள். */ C & P

ஹிஜ்ரா குழுவின் வெளியீடுகளில் - ஒரு குறிப்பிட்ட தேதி அமாவாசை தினம் என்றும், அதற்கு ஒரு நாள் முன்னர் உர்ஜனல் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் தெரியும் தினம் என்றும், (அமாவாசை தினத்திற்கு) அடுத்த நாள் புது மாதம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி - ஜூலை 25, 2014 - உர்ஜனல் கதீம் தினம். ஜூலை 26, 2014 என்பது அமாவாசை தினம். ஜூலை 27, 2014 புது மாதம் துவக்கம். இது தானே உங்கள் கருத்து?

இதன் தொடர்ச்சியாக, தங்கள் நம்பிக்கைப்படி, அமாவாசை தினமான ஜூலை 26 அன்று உர்ஜனல் கதீம் பிறை (அதிகாலையில் காணும் தேயும் பிறை) தென்பட்டிருக்க கூடாது? இதுவும் சரிதானே?

ஆனால் - தங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக, ஜூலை 26 அன்று நியூ சிலாந்து நாட்டில் உர்ஜனல் கதீம் எனக்கூறப்படும் தேயும் பிறை காணப்பட்ட செய்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு வேண்டுமென்றால் இது புது செய்தியாக இருக்கலாம். அதனால் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் தான் - யூத சதி போன்ற வார்த்தைகள் வெளிவருகிறது.

ஆனால் - உலகின் அனைவராலும், ஏற்றுக்கொள்ளப்படும் விஞ்ஞான அடிப்படையில் உள்ளது தான் இந்த காட்சி என தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஜனவரி 2014இல் இது போன்ற செய்தி வெளிவந்தபோது - தங்கள் அமைப்பினரால், அச்செய்தி வெளியிட்ட ICOPROJECT.ORG இணையதளம், பொய்யான தகவலை வழங்குகிறது எனக் கூறப்பட்டது.

தற்போது - MOONSIGHTING.COM இணையதளமும் இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நியூ சிலாந்து நாட்டில் தென்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளமும் பொய் செய்தியை வெளியிட்டுள்ளது எனக் கூறுகிறீர்களா? இவர்களும் யூத சதி வலையில் உள்ளார்களா?

இந்த விசயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் அமைப்பினரால் எடுக்கப்பட்ட நிலையை தங்களுக்கு இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் - அமாவாசை தினத்தில் தேயும் பிறை காணப்பட்ட செய்தி தங்கள் அமைப்பின் மூத்த உறுப்பினர் அலி மானிக்பன் அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்ட போது, அவர் புகைப்பட ஆதாரம் கேட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் - தஹிதீ நாட்டில் வளரும் பிறை, அமாவாசை தினத்தில் காணப்பட்டப்போது, தங்கள் அமைப்பினரால் - அது கிருஸ்துவர் ஒருவர் எடுத்த புகைப்படம் என கூறப்பட்டது.

ஜனவரி மாதம் - ஈரான் நாட்டில் தேயும் பிறை தென்பட்டு, புகைப்படம் வெளியான போது - அது ஷியாக்களால் பார்க்கப்பட்ட பிறை என்றும் கூறப்பட்டது.

தற்போது ஜூலை 26 அன்று நியூ சிலாந்து நாட்டில் தேயும் பிறை தென்பட்டு, புகைப்படம் வெளியாகி உள்ளது. இது யூதர்கள் சதியின் தொடர்ச்சி என்பது தான் தங்கள் பதிலா?

சகோதரரே, தங்களிடம் இரண்டு கேள்விகள் மட்டும் நான் கேட்கிறேன். இதற்கு பதில் கூறுங்கள்.

1. ஜூலை 26, 2014 அன்று காலை தேயும் பிறையை காண முடிந்திருக்குமா?

2. இல்லை என்றால், பிறையை கண்ணால் பார்க்க, விஞ்ஞானப்பூர்வமான, விதிமுறைகள் என்ன? உதாரணமாக - சூரியன் - சந்திரன் இடையிலான இடைவெளி (ELONGATION) எவ்வளவு இருந்தால் பிறையை பார்க்க முடியும். அல்லது தங்கள் நம்பிக்கைப்படி, வேறு எந்த அளவுகோல்படி, பிறையை காண முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. (Ooty) [31 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36163

அமாவாசை என்னும் புவிமைய சங்கம நாளில் பிறை புறக்கண்களுக்குத் தெரிவாதாக பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி நாம் கேட்டுவரும் அடிப்படையான சில கேள்விகள்.

1. புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலக நாடுகளிலும் ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

2. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ உங்களின் அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

3. மேற்படி புவிமைய சங்கம நாளில், அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்புள்ளது என்று நீங்கள் கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா?

4. அப்படி அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா?

5. Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத் தயாரா?

6. தொலைநோக்கி (Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும் ஒன்றுதான் என்று உங்கள் நிலைப்பாடாக அறிவிக்கத் தயாரா?

7. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றதா? இதற்கு ஆதாரம் என்ன?

8. 'ஃபஇன் கும்ம அலைக்கும் - ஃபக்திரூலஹூ' - அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?

தொடரும் .........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. (Ooty) [31 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36164

9. அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?

10. சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார் 0.5%, 1% அல்லது 1.5% அளவு ஒளி மட்டும் பூமிக்குத் தெரிய வாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடு சொல்லும் அந்தப் பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாக பார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா?

11. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில் வெரும் ஒரு சதவிகிதம்கூட இல்லாத அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில் அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்?

12. மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல் வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன் சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடு சரிபார்த்து (!) அதன் பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், படம்பிடித்தவர் யார் என்று அறியாத நிலையிலும் அவர் எடுத்ததாக வெளியாகும் செய்திகளைக்கூட நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்புகின்றீர்கள்?

13. அமாவாசையில் பிறை தெரிந்ததாக வெளியிடப்படும் தகவல்களில் பிறை பார்த்து போட்டோ எடுத்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படி காஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறை சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்று முஸ்லிம்கள் அமல் செய்யலாமா?

14. அமாவாசை நிகழ்வை அறிவியில் ஆய்வாளர்கள் உலக நேரத்தில் குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல் நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஏன்?

15. ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி வருகிறோம். இவை அனைத்திற்கும் இதுவரை மௌனமே பதிலாக வந்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியை பொய்படுத்திட சங்கம தினத்தில் பிறை தெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களை வெளியிட்டு இவர்கள் நம்மைப் பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பொய்யாக்கிட முனைந்துள்ளனர் என்பதே உண்மையிலும் உண்மை.

வஸ்ஸலாம்

மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. உட்டி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வேண்டாம் காழ்புணர்ச்சி க் & அதிமேதாவித்தனத்தனம்
posted by மவ்லவி S.முஹம்மது கடாஃபி MISC (இராமேஸ்வரம்) [31 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36166

அட்மின் / ஸாலிஹ் அவர்களே

//...தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் தான் - யூத சதி போன்ற வார்த்தைகள் வெளிவருகிறது...// இதுபோன்ற எழுத்துக்கள் உங்கள் காழ்புணர்ச்சியையும், அதிமேதாவித்தனத்தையுமே காட்டுகிறது.

//மவ்லவி கடாபி அவர்களுக்கு இந்த செய்தியில் அமாவாசை இரு தினங்களில் நடப்பதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே - எழுதப்படாத ஒன்றை எழுதப்பட்டுள்ளதாக கூறுவது முறையல்ல. //

அமாவாசை இரு தினங்களில் வரும் என்று நீங்கள் குறிப்பிட்டதே இல்லையா? இதே செய்திப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கீழ்க்காணும் சுட்டியில் நீங்கள் (அட்மின்) பதிந்த கருத்தைத்தான் நான் எடுத்து எழுதினேன். ஒருவேளை நீங்கள் மறந்து இருக்கலாம். அதனால்தான் இப்படி துணிந்து மறுத்துள்ளீர்கள்.

(http://www.kayalpatnam.com/shownews.asp?id=14172 அமாவாசை தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை கூற முடியாது.... உலகின் ஒரு சில பகுதிகளில் ஜூலை 26 அமாவாசை தினமாகும். வேறு பகுதிகளில் ஜூலை 27 அமாவாசை தினமாகும்......)

மேற்கண்டவாறு எழுதியது நீங்கள் இல்லையா? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இல்லை, இல்லை அதை நான் பதியவில்லை இந்த இணையதளத்தின் அட்மின்தான் அவ்வாறு பதிந்தார் என்று கூறி ஒருவேளை நீங்கள் தப்பித்துக் கொண்டாலும் எனக்கு ஆச்சரியமில்லை.

//அமாவாசை தினமான ஜூலை 26 அன்று உர்ஜனல் கதீம் பிறை (அதிகாலையில் காணும் தேயும் பிறை) தென்பட்டிருக்க கூடாது? இதுவும் சரிதானே? //

எதோ நாம் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு வந்துள்ளதே என்று எண்ணி வேகப்பட்டு எழுதியுள்ளீர்கள். மேற்கண்டவாறு நீங்கள் எழுதியிருப்பதே எங்கள் நிலைபாடு என்ன என்பதை இன்னும் நீங்கள் உள்ளவாங்கிட வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேற்படி அமாவாசை பிறை சம்பந்தமாக ஹஜ்ரி கமிட்டியின் சார்பாக சுமார் 15 கேள்விகள் முன்வைக்கப் பட்டது. முதலில் அவற்றிற்கு முறையான பதில் அளித்துவிட்டு கேள்வி எழுப்புங்கள். தஹிட்டி பிறை, ஈரான் பிறை சம்பந்தமான உண்மை விளக்கம் என்ன என்பதை கீழுள்ள பதிவில் படித்துப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். (மக்களும் படிக்கும் வண்ணம் லிங்க்கை கொடுங்கள் - enable the links)

http://mooncalendar.in/articals/310-research-irani-conjunctionn-waning-crescent

http://mooncalendar.in/articals/183-tahithi-pirai

முன்பு ஒருமுறை அமாவாசை அன்று காயல்பட்டினத்தில் பிறை தெரியும் அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள் என்றீர்கள். இந்த முறை தென் இந்தியாவில் பிறை தெரியும் என்று குறிப்பிட்டீர்கள். தெரியாத பிறையை தேடி அலைந்து தொலை நோக்கி கருவிகளுடன் காயல்பட்டினம் மக்களை நீங்கள் கடற்கரைக்கு அனுப்பியதுதான் மிச்சம்..

ஹிஜ்ரி கமிட்டியின் சத்தியப் பிரச்சாரத்தால் உங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதலாம். அதற்காக பொதுத் தளத்தில் அவதூறுகளை அள்ளி வீசவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது இந்தக் கருத்திற்கும் மறுப்பு என்று எதையாவது எழுதி மீண்டும் அசிங்கப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

வஸ்ஸலாம்
மவ்லவி S.முஹம்மது கடாஃபி MISC
இராமேஸ்வரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salih (Kayalpattinam) [31 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36167

மவ்லவி பிர்தௌஸி அவர்களுக்கு,

தங்களின் இரு கருத்து பதிவுகளும் செய்திக்கு தொடர்பற்ற, தாங்கள் உண்மையென நம்பும் சில விசயங்களை, அடிப்படையாக கொண்டவை. இந்த செய்திக்கு தொடர்பானவை அல்ல. எனவே - அதற்கு தற்போது பதில்கள் கூறுவது, திசை திருப்பும் செயலாகவே அமையும்.

தங்கள் கருத்து பதிவில் - புகைப்படங்கள் எடுத்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல எனக்கூறுகிறீர்கள். ஏன், நியூசிலாந்து நாட்டில் தற்போது படம் எடுத்த சகோதரர் ஆரிப் முஸ்லிம் அல்ல என்கிறீர்களா? தவறான நம்பிக்கைகள் என ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றால் குறைகளை கூறிக்கொண்டே போகலாம். புகைப்படம் ஆதாரம் வேண்டும் என்றீர்கள். அது வந்தவுடன் எடுத்தவன் கிருஸ்துவன் என்றீர்கள். ஒரு இஸ்லாமியன் தந்தவுடன் சியா என்றீர்கள். சியா அல்லாத பிற இஸ்லாமியன் என்றால் - பெயர் தாங்கி முஸ்லிம் என்றோ, யூத/சி.ஐ.ஏ. உளவாளி என்று கூறுவீர்கள் போலும்?

விசயத்திற்கு வருவோம். தங்கள் கருத்து பதிவில் - 1 சதவீதம் கூட ஒளி பெறாத (ILLUMINATION) பிறையை எவ்வாறு கண்டார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். அப்படி என்றால் - ஹிஜ்ரா குழுவின் நம்பிக்கைப்படி, பிறை கண்ணில் தெரிய, குறைந்தது 1 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஒளி (ILLUMINATION) பெற்றிருக்க வேண்டும் என எடுத்துக்கொள்ளலாமா? அல்லது அது 1.1 சதவீதமா, 1.5 சதவீதமா, 2.0 சதவீதமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salih (Kayalpattinam) [31 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36169

மவ்லவி கடாபி அவர்களுக்கு,

/* இதுபோன்ற எழுத்துக்கள் உங்கள் காழ்புணர்ச்சியையும், அதிமேதாவித்தனத்தையுமே காட்டுகிறது.*/ C & P

/* எனது இந்தக் கருத்திற்கும் மறுப்பு என்று எதையாவது எழுதி மீண்டும் அசிங்கப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.*/ C & P

வாதங்களுக்கு பதில் இல்லாத போது, தடித்த வார்த்தைகள் மூலம் பிறரை சாடுவது - தமிழகத்தில் பல இயக்கங்கள் கையாழும் ஒரு யுக்தி. அதனை தாங்களும் கையாளுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

/* அமாவாசை இரு தினங்களில் வரும் என்று நீங்கள் குறிப்பிட்டதே இல்லையா? */ C & P

தாங்கள் குறிப்பிட்டுள்ள இணையதள செய்தியில் இருந்து வசதியாக முதல் பத்தியை நீக்கிவிட்டு இந்த கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். செய்தியை மீண்டும் பார்க்கவும்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=14172

[செய்தி எண் 14172இல் இருந்து: ஜூலை 26 அன்று இங்கிலாந்து நேரப்படி இரவு 10:41 மணிக்கு அமாவாசை ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:11. மேலும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை காலை 8:41. எனவே அமாவாசை தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை கூற முடியாது என்பதனை இதில் இருந்து காணலாம்.

அமாவாசை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் நிகழ்வு என்பதால் உலகின் ஒரு சில பகுதிகளில் ஜூலை 26 அமாவாசை தினமாகும். வேறு பகுதிகளில் ஜூலை 27 அமாவாசை தினமாகும்.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved