Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:09:45 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14215
#KOTW14215
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 29, 2014
நோன்புப் பெருநாள் 1435: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3560 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் இன்று காலை 09.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.





கலந்துகொண்டோர்:

இத்தொழுகையில், பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், செயலர் எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் உறுப்பினர் கானாப்பா செய்யித் அஹ்மத், கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர், கவிஞர் நெய்னா, நகர பிரமுகர்களான என்.எஸ்.நூஹ் ஹமீத், என்.டி.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, எஸ்.எச்.முஹம்மத் நூஹ் உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.













மக்கள் திரள்:

இவ்வாண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்காக, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஊர் வந்திருந்தமையால், பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளி வராண்டா, கீழ்ப்பள்ளி என அனைத்துப் பகுதிகளும் நிரம்பியதால், சிலருக்கு தொழுகையில் பங்கேற்க வாய்ப்பின்றி போனது.













பின்னர் அவர்களுக்காக தனியாக தொழுகை நடத்தப்பட்டது. ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் அத்தொழுகையை வழிநடத்தினார்.

வாழ்த்துக்கள் பரிமாற்றம்:

தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.





நிறைவில் நண்பர்கள் கூடி குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]







































பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. மொத்தம் 21 ஆயிரத்து 600 ரூபாய் சேகரமானது.





ஜியாரத் நிகழ்ச்சி:

பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.

குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [29 July 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36146

عيد مبارك

மாசா அல்லாஹ் ! அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஈதுல் பித்ரு ' நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

நமது முஹல்லா பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகை காட்சிகள் (போட்டாக்களின் ) தொகுப்புகள் அனைத்தும் மிக அருமை !

ஏதோ நேரிலேயே நம் பள்ளியில் கலந்து கொண்டதை போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த புனித பெருநாள் தினத்தில் நாம் அனைவரும் சந்தோசமாக இருப்பது போன்று இன்சா அல்லாஹ் நாளை மறுமையில் அண்ணல் நபிகளின் அருகாமையில் ஜன்னத்தில் ஒன்றாக கூடி இருக்க பேரருள் புரிவானாக !

புனித நோன்பில் அவனின் ரஹ்மத்தை , மக்பிரத்தை , நரக விடுதலை பெற்ற நல்லோர்கள் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக !

நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் , நோயற்ற வாழ்வையும் , குறைவற்ற செல்வதையும் , நமது ஹலாலான சகல நாட்டங்களையும் நிறைவேற்றி வைப்பானாக !

இம்மையிலும் , மறுமையிலும் ஈறேற்றம் பெற்ற நல்லோர்கள் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக! ஆமீன் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உச்ச கட்ட சந்தோசம்,,
posted by NIZAR (kayalpatnam) [29 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36147

என் இனிய சகோதரர்களுக்கு இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

பெருநாள் தொழுகை முடிந்ததும் உறவுகளை கட்டி தழுவி வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு நிகர் வேறு என்ன இருக்கமுடியும்?

உயிர் தோழர்களை நெஞ்சத்தில் அணைத்து வாழ்த்துக்களை பகிரும்பொழுது இதயம் சிலிர்க்கும் அந்த மகிழ்ச்சிக்கு எதையும் ஒப்பிடமுடியுமா?

இதெல்லாம் முடித்து சென்ற வருடம் நம்மோடு இருந்து நம்மை விட்டு பிரிந்த இதயம் தொட்ட நண்பர்கள், உறவினர்கள் கப்ருகளில் ஜியாரத் செய்யும்பொழுது நம்மையே உலுக்கி கண்களில் ஓடிவரும் கவலை சொட்டுக்கள். அந்த அன்பர்கள் நம்மோடு இருந்த காலத்தில் நடந்தைவகள் நம் கண் முன்னே நிழலாடும் நிகழ்வுகள்.

இப்படி எல்லை இல்லா சிறப்புகள் கூடிய இந்த பெருநாள் எல்லோருக்கும் வருகிற வருடமும் கிட்டவேண்டும் என இறைவனை இறைஞ்சுவோம்.

இறைவன் அருளை அள்ளி கொட்டும் இந்த திருநாளில் ஒன்றை உரக்க கேட்போம். இறைவா எங்களை கொடிய நோய்களில் இருந்து பாதுகாப்பாயாக,எங்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை தருவாயாக,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கண்கள் பணிக்கின்றன...
posted by S.K.Salih (Kayalpatnam) [29 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36148

நிஸார் காக்காவின் கருத்தைப் படித்துவிட்டு, எதேச்சையாக கடந்த ஆண்டில் எங்கள் குருவித்துறைப் பள்ளியில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்ற செய்திக்குள் சென்றேன்.

சென்ற வேகத்தில் திரும்பிவிட்டேன். அதிலுள்ள படங்களில் மலர்ந்த முகத்தோடு காட்சியளித்த அன்புச் சகோதரர் ஒருவர் இன்று நம்முடன் இல்லை. இதே ரமழானில்தான் நம்மை விட்டும் பிரிந்துள்ளார்.

கண்கள் என்னையுமறியாமல் கண்ணீரை உதிர்க்க, துக்கம் தொண்டையை அடைக்க, பார்த்த வேகத்தில் அச்செய்தியை மூடிவிட்டேன்.

யாஅல்லாஹ்! நீ மகா கருணையாளன். உனக்குப் பிடித்தமானவர்களையெல்லாம் வேக வேகமாக எடுத்துக்கொள்கிறாய்... அவர்களையும், எங்களையும் மறுமையிலேனும் - நல்லோர் நிறைந்த நற்கூட்டத்தில் சேர்த்து அருள்வாயாக...

மகிழ்ச்சியான இந்த நாளில், இக்கருத்தால் யாருடைய மனதும் வாடியிருக்குமெனில், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [29 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36149

كل عام انتم بخير

வல்ல நாயன் கிருபையால் இன்று பெருநாள் கொண்டாடிய அனைவருக்கும் எமது இதயம் கனிந்த عيد مبارك -

புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை - அங்கேயே இருந்ததாக உணர்வு இதை பார்த்த பொழுது - மனதுக்குள் மழை துளி விழுந்ததாக -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved