Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:37:58 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14291
#KOTW14291
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 11, 2014
இரத்தினபுரி அருகே அம்மன் பீடம் உடைப்பு! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4406 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இரத்தினபுரி அருகே அம்மன் பீடத்தை உடைத்து சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காயல்பட்டினம் இரத்தினபுரி மங்கள விநாயகர் கோயில் தெருவில் இசக்கி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) மதியம் நீல நிற காரில் வந்த மர்ம நபர்கள் கோயிலில் உள்ள இசக்கி அம்மன் பீடத்தை கடப்பாரை, மண்வெட்டியால் சேதப்படுத்தியதுடன், அதனையொட்டியுள்ள வேப்பமரத்தில் பக்தர்கள் குழந்தை நேர்த்திக் கடனாக கட்டியிருந்த தொட்டில்கள், பட்டுச் சேலைகளையும் எடுத்துச் சேதப்படுத்தி அருகில் உள்ள முட்புதரில் பீடத்துடன் தூக்கி வீசியுள்ளனர்.



கோயில் பீடம் சேதப்படுத்தும் தகவல் அறிந்ததும் பொதுமக்கள் திரண்டு சென்றதாகவும், மக்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் திரளவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பி.பி.சக்திவேல், ஒன்றிய தலைவர்கள் கே.ஜெயசிங், ஜி.ராமசாமி, நகர துணைத் தலைவர் மணிகண்டன், ஆறுமுகனேரி நகர செயலாளர் கசமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

அதுபோல, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் சவீதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவம் ஆகியோர் தகவலறிந்து நிகழ்விடம் வந்து, அம்மன் சிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்ததுடன், சேதப்படுத்தப்பட்ட சிலையை மீண்டும் சீரமைத்தும் கொடுத்தனர்.



இந்நிகழ்வு தொடர்பாக கோயில் பூசாரி பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (HONG KONG) [12 August 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36358

மதியம் யார் அங்கு சென்று சேதப்படுத்தி இருக்க முடியம்? நீல நிற காரை பார்த்தவர்கள் அதை மடக்கி பிடிக்க முடியவில்லையா!! புரிகிறதா?

இது அப்பகுதி மக்களிடையே உள்ள மத நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவித்து கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.அமீத்ஷா பாணி அரசியல். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறை கவனமாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Need Unity
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [12 August 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 36359

என்னப்பா அந்த காருக்கு நம்பர் இல்லையா .. என்னம்மா It seem some culprit want to disturb our unity,..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...Don't Post your comments
posted by Aboobucker (Chennai) [12 August 2014]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 36362

Assalamu Alaikum,

Please don't post your comments on your own views.It will lead to unnecessay confusion and tension.

Salam
Aboobucker.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மத துவேசத்தை ஏற்படுத்தி சுய ஆதாயம் இந்த ஊரில் தேடமுடியாது.
posted by syed ahamed (kayalpatnam) [12 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36363

மாற்று மத சகோதரர்களிடம் அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இவ்வூரில் மத துவேசத்தை ஏற்படுத்தி ஒரு விரும்பத்தகாத பிரச்சனையை உண்டுபண்ணும் நோக்கமாக தெரிகிறது, அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழும் இவ்வூரில் பிரிவினையை கொண்டுவரும் முயற்சியாகவே இதை உணர முடிகின்றது.

இந்த மாதிரி விரும்பத்தகாத சம்பவங்களை தமிழக காவல்துறை உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அயோக்கியர்களை பொதுமக்கள் முன் அடையாளம் காட்டப்படவேண்டும்.

இது போன்று சம்பவங்களை ஆளும் தமிழக அம்மா அரசு ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. முனையளவுகூட மதநல்லிணக்கம் மாசுபடாது!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [12 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36364

நமூதூர் அருகாமையிலுள்ள மாற்றுமத சகோதத்துவர்களில் பெண்கள் பெரும்பாலும் நம் பெண்டினரை "அம்மா" என்று அழைப்பதோடு ஒரு சில பெண்கள் "உம்மா" என்று கூட அழைக்க கேட்டிருக்கிறேன்.

அந்த அளவிற்கு அண்ணியோன்யமாக உரிமையுடன் உறவு சொல்லி அழைக்கும் இந்த நெருக்கமானது மதத்தால் நாம் மாறுபட்டிருந்தாலும் மனத்தால் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை காட்டிக்கொண்டிருக்கும் இவ் வேலையில் நம் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக ஒரு சில விஷமிகளின் இந்த விபரீத செயல் வேதனையை அளிக்கிறது!

மத நல்லிணக்கத்திற்கு மாசுகற்பிக்கும் இதுபோன்ற செயல் இதுவரை நடந்தது இல்லை. என் சிற்றறிவு சிந்தனைப்படி அம்மக்கள் கடவுளை களங்கபடுத்தவேண்டும் என்ற நோக்கமில்லை இந்த நாச வேலை செய்தவர்களுக்கு.நம்இரு சமுதாயத்தவர்களின் நல்லிணக்கத்தை ஒற்றுமையை,ஒருமித்த உணர்வை உடைத்து,பிரித்து பகையை உண்டுபண்ண வேண்டுமென்கின்ற தலையாய நோக்கத்துடன் தான் இந்த தறுதலைகள் தங்கள் கைவரிசயை காட்டியுள்ளனர்!

உள்ளத்தில் வக்க்ர எண்ணத்தோடு வலம்வரும் இந்த வீணர்களை விரைவில் அடையாளம் காணத்தான் போகிறார்கள் நம் அருகாமையிலுள்ள மாற்றுமத சகோதர குடும்பத்தார்கள்!

உங்கள் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல் துறை மட்டுமல்ல நம் இரு சமூக ஒற்றுமைவிரும்பிகளும் முயற்சித்து கண்டுபிடிக்கத்தான் போகிறார்கள்,எந்த ஈணர்களின் முயற்சியாலும் நம்மிரு வகுப்பாரின் ஒற்றுமையின் ஒரு சிறு துரும்பைக்கூட அசைத்திடமுடியாது,அதுக்கு எல்லாம் வல்ல அல்லஹ் எங்களுக்கும் உதவி செய்வான். அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன் ஒற்றுமை விரும்பும்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (Qatar) [12 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36368

அவசரப்பட்டு எந்த தவறான கருத்தையும் பதிவு செய்யவேண்டாம் தற்போதைய நடவடிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்கள் உண்மையை நிலைநாட்டுவார்கள் என நம்புவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [13 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36378

உணர்வுகளை மதிக்க தெரியாதவர்கள் மனிதர்கள் அல்லர் - நிதானம் மிக மிக அவசியம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved