Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:40:22 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14546
#KOTW14546
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 20, 2014
DCW நலப்பணிகள் 101!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3667 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் இயங்குகிறது DCW தொழிற்சாலை. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 29 அன்று - அதன் விரிவாக்க திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு முன்னர் - அக்டோபர் 15, 2011 வரையிலான என்று குறிப்பிடப்பட்டு - சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று - தொழிற்சாலையின் சுற்று வட்டார பகுதிகளில் அந்நிறுவனம் செய்ததாக கூறும் சமுதாயப் பொறுப்புப் பணிகள் (CORPORATE SOCIAL RESPONSIBILITY - CSR) குறித்த விபரங்கள்.

101 பணிகளை விவரித்துள்ள அந்த ஆவணங்களில் - அத்தொழிற்சாலை - காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், சேர்ந்தமங்கலம், ஆத்தூர் உட்பட பல இடங்களில் செய்த பணிகள் என பலவற்றை பட்டியலிட்டுள்ளது.

பெருவாரியான பணிகள் காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவை என காணமுடிகிறது.

அதில் பொதுப்படையான தகவல்களும் உள்ளன. உதாரணமாக -

*** இலவச மருத்துவ முகாம்கள் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி நடத்தப்படுவது

*** தீ விபத்து, வெள்ளம் போன்ற சமயங்களில் உதவிகள் செய்வது

*** தேசிய கால்பந்து, தேசிய பாட்மிண்டன் போட்டிகள் போன்றவைகளுக்கு ரூபாய் 50,000 வரை ஒவ்வொரு ஆண்டும் உதவிபுரிவது

*** அருகாமை பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவது

*** ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 கல்லூரிகளுக்கு தொழிற்சாலை வருகை (INDUSTRIAL VISIT) ஏற்பாடு செய்வது

*** பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலையில் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதிப்பது

*** தீ விபத்துகளின் போது, தீ அணைப்பு வண்டிகள் அனுப்பி உதவி செய்வது

*** இலவச மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்குவது

*** மனிதவள மேம்பாடு தலைப்புகளில், DCW நிர்வாகிகளை அனுப்பி, அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது

*** அருகாமையில் உள்ள கிராமத்தினருக்கு கவுன்சிலிங் வசதிகள் செய்து கொடுப்பது


அப்பட்டியலில் - காயல்பட்டினம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ள பணிகளின் விபரங்கள் கீழே:

*** காயல்பட்டினம் நகராட்சிக்கு கடற்கரையை அழகுப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவி செய்வது

*** காயல்பட்டினம் பள்ளிக்கூடத்திற்கு (பள்ளிக்கூடம் பெயர் குறிப்பிடப்படவில்லை) குடிநீர் இணைப்பு வழங்கியது. செலவு ரூபாய் 8250. ஆண்டு - 2009

*** மங்களவாடி நூலகத்திற்கு புத்தகங்கள் வைக்க நூல் அடுக்கம் (BOOK SHELF) வழங்கியது. தொகை - ரூபாய் 9,000. ஜனவரி 2010

*** காயல்பட்டினம் தைக்கா நடுப்பள்ளிக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கியது. செலவு - ரூபாய் 15,000. ஜனவரி 2011

*** காயல்பட்டினம் தைக்கா நடுப்பள்ளிக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது. செலவு ரூபாய் 5000. ஆண்டு ஜனவரி 2011

*** சிங்கித்துறை (கற்புடையார்பள்ளி வட்டம்) கிராமத்தில் குழந்தைகள் கலாச்சார நிகழ்சிகளுக்கு உதவி. செலவு ரூபாய் 5,000

*** சிங்கித்துறை (கற்புடையார்பள்ளி வட்டம்) கிராமத்தில் சமுதாயக்கூடம் 5.5 லட்சம் செலவில் அமைத்தது. ஆண்டு - 2003

*** 800 பெண்கள் பங்கேற்ற குடும்பங்கள் / பெண்கள் மேம்பாடு நிகழ்ச்சி - காயல்பட்டினத்தில் நடத்தியது


அக்டோபர் 15, 2011க்கு முன்னர் வரை என DCW தொழிற்சாலை மேற்கொண்டதாக கூறும் 101 பணிகள் அடங்கிய பட்டியல் - முழு விபரம்










































Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புற்று நோயால் மரணம் அடைந்த ஆத்மாவின் சாபத்தால் / பொறுமையுடன் பார்ப்போம்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37365

சுற்று சூழல் விதிமுறைகளுக்கு மாற்றமாக செயல்படும் தன் மீதுள்ள எதிர்ப்புக்கள் கோசங்கள் மேலும் எழாமல் இருக்க இது போன்ற நலப்பணி நாடகம் அரங்கேறுகிறது..

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நாடகங்கள் நமது ஊரிலும் அரங்கேறுகிறது என்பதை புற்று நோயால் பாதிக்கப்பட்ட / அதனால் மரணம் அடைந்த நமது சகோதரர - சகோதரிகளின் ஆத்மாவின் சாபத்தால் / இந்நாடகத்தை பொறுமையுடன் பார்ப்போம்...

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. லாப நோக்கில் வரும் சாபக்கேடு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [20 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37367

ஆஹா எல்லா ஊருக்கும் எல்லாம் கொடுக்கும் இந்த ஆலை நம்ம ஊருக்கு மட்டும் புற்று நோயைப் பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கின்றது. நாமும் விலைமதிப்பற்ற இன்னுயிர்களை பறி கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

நோயை விட மருந்து ஆபத்தானது என்பார்கள். மனிதகுலத்திற்கு நாசம் விளைவிக்கும் நச்சு வேதிப்பொருட்களை நம் மண்ணில் கலந்து நரகமாக்கிய பின்னர் அவன் என்ன மண்ணாங்கட்டி கொடுத்து என்ன ஆகப்போகிறது. அல்லாஹ்வின் சாபம் இந்த ஆலை மீது உண்டாவதாக! ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37368

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆஹா ....என்ன ஒரு நாடகம் சார் .....தொட்டிலையும் நீ ( DCW ) ஆட்டி விடுவா ..... பின்பு நீ '' கிள்ளியும் விடுவா .... என்னதான் நீ ( DCW ) கபட நாடகம் ஆடினாலும் நாங்கள் உன்னை ஓய்க்காமல் விடவே மாட்டோம் ...........

உன்னுடைய இந்த நல பணி திட்டங்கள் கண்டிப்பாகவே எங்கள் ஊருக்கு தேவையே இல்லை ......எங்கள் ஊரை நாங்கள் ( எங்கள் ஊர் பொது நல அமைப்புக்கள் / ஊர் ஜமாத்துக்கள் / எங்கள் வெளி ஊர் & வெளி நாடு '' வாழ் காயல் மக்கள் நற்பணி மன்றங்கள் / எங்கள் ஊர் நல்ல உள்ளம் படைத்த பெருந்தகைகள் .....) பார்த்து கொள்வோம் + இறைவனின் அருளும் எங்களுக்கு உண்டு ....உன்னுடைய கண்பார்வை எங்களுக்கு கண்டிப்பாகவே தேவை இல்லை ....

இவரின் நல பணி திட்டங்களை யார் சார் கேட்டது ....உன் கேடுகெட்ட ,, தொழிற்சாலையால் .... எங்கள் ஊர் மக்களின் உயிர் போவதை உன்னால் தடுக்க முடியுமா ?? முடியாது அல்லவா ..... நீ ( DCW ) இங்கு இருந்து இடத்தை காலி பண்ணி விட்டு போகும் நாளை தான் நாங்கள் மிகுந்த ஆவலோடு எப்போது தான் வரும் என்று ..... எதிர் நோக்கி உள்ளோம் ...........

நாம் இந்த நாசமா போன / கேடு,, கேட்ட >> DCW <<நிர்வாகத்தினர்களிடம் இப்படி பொது நல தொண்டாக வாங்குவதை முதலில் நிறுத்துவது தான் நல்லது ....

நமது ஊர் பெண்கள் கல்லூரில் இருந்து நம் மக்களை இந்த கல்லூரிக்கு அழைத்து போவதையும் நாம் தவிர்க்க வேணும் ...இது ரொம்பவே கவனிக்க பட வேண்டிய விசையமே .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI

[எழுத்துப்பிழை திருத்தப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (China) [20 September 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37372

இச்செய்தி வெளியிடுவதின் நோக்கம்!!

DCW ஆலை ஆக்கப்பணிகள் செய்ததாக சொல்லும் செயலை நீங்கள் வழிமொழிகிறீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37373

அருமையான நல திட்டங்கள். தொடரட்டும் உங்களின் மக்கள் நல பணிகள்.

உங்களின் பட்டியலை படிக்கும் போது, பலி கொடுக்கப்போகும் மாட்டிற்கு பராமரிப்புக்காரர் ஒப்படைக்கும் கணக்கை படிப்பது போல உள்ளது.

அன்று புண்ணாக்கு போட்டேன், இந்த தேதியில் பசும் புல் வாங்கி போட்டேன், இந்த தேதியில் கொம்புக்கு பெயிண்ட் அடித்தேன், இத்தனை லிட்டர் பால் இந்த காளை மாட்டில் கறந்தேன் ...!!

கடைசியில், ஊர் மக்கள் அனைவர்களும் கொடிய நோயினால் இறந்த பிறகு, "மக்கள் வாழ்ந்த ஊர்" என்று ஒரு போர்டு உங்கள் செலவில் வைத்து, அதையும் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள் ( கொல்லுங்கள்).

வல்ல இறைவா சிறிய மற்றும் பெரிய தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Kayalpattinam) [20 September 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 37374

அம்மா செய்தது சரிதானுங்கோ என்று சொல்வதர்காக் இந்த செய்தியா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மொத்தமா கொடுத்து அத்தனை ஊர் வாயையும் அடைக்க வைத்துவிட்டனர்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்.) [20 September 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 37375

காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தன் அமிலக் கழிவுகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலை, (பாதிக்கப்பட்டவர்களது வாய்களை நன்றாக மூடும் நோக்குடன்) தான் செய்துள்ளதாக வெளியிட்டுள்ள “நலப்பணிகள் 101” குறித்த விபரங்கள் இச்செய்தியில் அடங்கியுள்ளன.

சில விஷயங்களை செய்தியாக வெளியிடுவதன் நோக்கம் மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு புலப்படுவதில்லை. எல்லாமே நம் மக்களின் நன்மைக்காகவும், ஊர் நலம் கருதியும்தான் என விளங்கிக் கொள்வோர்க்கு புரியும்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் .....
posted by MAHMOOD RAJVI (DAMMAM,SAUDI ARABIA) [20 September 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37376

என்னதான் நலப்பணிகள் என்று நீ கிள்ளி கொடுத்தாலும்,அல்லது கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் நாங்கள் இழந்த எம் சொந்தங்களும் மன நிம்மதியும் உன்னால் திருப்பித்தர முடியுமா DCW வே? உன் நலப்பணிகள் எங்களுக்கு தேவை இல்லை உன் மூலம் நாங்கள் அல்லலுராமல் இருந்தால் அதுவே நீ எங்களுக்கு செய்யும் அரும்பணி .

மஹ்மூது ரஜ்வி,
தம்மாம் , சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [21 September 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 37377

DCW நலப்பணிகள். இது நலபடிங்கள் இல்லை.

அரக்கன் விட்ட நட்ச்சு களால் எத்தனை உயீர் பிரிந்து இருக்கின்றது என்று சரி பார்க்க நீங்கள் போட்ட கணக்கு , அதுக்கு பெயர் நலபணிகளா?

எது ஐயா உங்க நலப்பணிகள் எல்லோரையும் கொன்று விட்டு , மாயணம் அமைப்பது ,

பிஞ்சி குழந்தைகள் கண்ணுக்கு கண்ணாடி போட்டு கொன்று அலைகிறார்களே அதுக்கு பெயர் நலபநிகளா ,

இவ்வளவு நலப்பணிகள் செய்கின்றோம் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஐயா கழிவு நீர் ஓடும் பகுதியல் ஒரு வீடு கட்டி தங்க கூடாது

குளிர்சதனாம் இல்லாமல் இயற்கை காற்று வருபடி வீடு கட்டி வாழ்நாள் முழுவதும் தங்க கூடாது ,

எவனாவது சாகட்டும் , நாம் சந்தோசமாக இருந்தால் சரி என்று நீங்கள் நினைக்கலாம் ,

இறைவன் ஒருவன் இருகின்றான் , இறைவன் பிடில இருந்து தப்ப எழாது , காசுக்கு மாரடிக்கும் உங்களை எல்லாம் இறைவன் விட்டு வைக்க மாட்டான் ,

வெகு விரைவில் இறைவனின் தண்டனை வரும் நாங்கள் அனுபவித்த அணைத்து கொடுமைகளும் உங்களுக்கு வரும் அபொழுது அலுது போலம்புவீர்கள்,

உங்களின் அழிவு காலம் வெகு விரைவில் வரும் , நாங்கள் நண்பும் இறைவன் வெகு விரைவில் உங்களுக்கு தகுந்த தண்டனையை தருவான்

காசுக்காக மாரடிக்கும் குட்டங்கலே உங்கள் பிள்ளைகளுக்கு அந்த கொடிய நோயே வந்து தீரும் , உங்கள் குழந்தைகள் , உங்கள் மனைவியை அந்த கொடிய நோயே வந்து தாங்கள் அனாதைய இருக்கும் பொது நீங்கள் செய்த குற்றத்தை உணர்வீகள் , அது வரைக்கும் நாங்கள் பொறுமையாக இருப்போம்

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Thai Nadu
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37535

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னுடைய எழுத்து பிழையை திருத்தி அமைத்ததற்கு ..ரொம்ப நன்றி ... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved