Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:52 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14566
#KOTW14566
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 24, 2014
DCW ஆலையின் விதிமீறல் குறித்து நகர்மன்றத் தலைவர், ஐக்கியப் பேரவை, KEPA, கடையக்குடி பங்குத்தந்தை ஆகியோருடன் SDPI குழுவினர் கலந்தாய்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2990 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை, தனது விதிமீறலைத் தொடர்ந்தால், இப்பிரச்சினையை தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பரப்புரையாகக் கொண்டு செல்லப்படும் என, இம்மாதம் 23ஆம் நாளன்று (நேற்று) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது - சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்திருந்தார்.

அதில் தெரிவிக்கப்பட்ட படி, அவர் தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் நேற்று மாலையில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, கடையக்குடி (கொம்புத்துறை) தேவாலயத்தின் பங்குத்தந்தை விக்டர் ஆகியோரைச் சந்தித்து, DCW ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகள் குறித்து கேட்டறிந்ததோடு, அது தொடர்பான தம் கட்சியின் நிலைபாட்டையும் தெரிவித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.







கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஐ.உஸ்மான் கான், தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன், ‘விடியல் வெள்ளி’ இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ்.அப்துல் ஹமீத், நகர தலைவர் ஷேக் அப்துல் காதிர், செயலாளர் அப்துல் ரஹ்மான், மருத்துவர் அணி தலைவர் எஸ்.எம்.முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் அஷ்ரஃப் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.

தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஐக்கியப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Vinotham
posted by Shaik Sadakathullah (Hong Kong) [24 September 2014]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 37479

இது விநோதமாக இருகின்றது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37482

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்...நம் மக்களால் வெகுவாக பாராட்ட பட கூடிய ஒரு நல்ல விசையம் .....

நம் சகோதரர் அவர்களின் இந்த ஒரு சொல் நமக்கு முழுமையான நம்பிக்கையை தருகிறது ....

இப்பிரச்னையை ( DCW ) இந்த அமைப்பினர்கள் '' தேசிய அளவிளான முழு '' விழிப்புணர்வு பிரச்சரமாக '' கொண்டு செல்வோம்...என்கிற ஒரு ஆறுதலான ஒரு சொல்லே நமக்கு தெம்பை ஊட்டுகிறது.....

இவ்வளவு முழுமையான ஒரு சப்போட்டுகள் ( மக்கள் விழிப்புணர்வு போராட்டம் / பத்திரிக்கைகள் செய்தி / T.V. சேனல்கள் / இணைய தளங்களின் செய்திகள் / பலதரப்பு அதிகரிகளிடம் மனுக்கள் ) இருந்தும் நம்மால் ஏன்...இந்த நாசமா போன >> DCW << தொழிற்சாலையை அசைக்க முடிய வில்லை ....என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது ....பணம் '' பத்தும் செய்யும் என்பார்களே அது இதுதானோ ?? இல்லை இந்த >> DCW << நிர்வாகத்தினர்கள் இருபது'' என்ன....நாற்பதும் செய்வார்களோ ....அது தான் இந்த ஆட்டம் போடுகிறார்கள் ....பணத்துக்காக பொது மக்களின் உயிரை'' பறிக்க கூடிய ( அதிகாரிகள் ) இவர்களிடம் இருந்து ...நம் தமிழக அரசு ...எப்போதுதான் விழித்து எழுந்து நம் ஊர் மக்களை காபாட்டுமோ ...........??

இன்ஷா அல்லாஹ் ...தற்போது நமக்கு ஆறுதல் தரகூடிய மரியாதைக்குரிய இந்த SDPI அமைப்பின் முயற்ச்சில் நல்லது அமையலாம் ........

இவர்கள் SDPI ...நம் ஊரின் பலதரப்பு பட்ட முக்கிய அமைப்பு / ஜாமாத்து தலைவர்களை சந்தித்து இருப்பது நமக்கு மகிழ்ச்சியே ...........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒன்றுபட்டு போராடுவோம் உன்னத வெற்றியை ஈட்டுவோம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [25 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37484

SDPI அமைப்பானது இந்திய அளவிலானதொரு பெரிய அமைப்பு.அதன் நல்லபணிகள் பாராட்டுதலைப்பெற்றுதோடு பயனடைந்தோர்களின் எண்ணிக்கையும் எல்லா இடங்களிலும் பறந்து விரிவடைந்திருப்பதை அறிந்து வியப்புடன் மகிழ்வுற்றிருக்கிறேன்!

அதன் புண்ணிய பணிகளின் தொடர்ச்சியாக இந்த DCW.நச்சி ஆலையின் அபரிமிதமான ஆபத்தை அறியும் முகமாக அதன் எல்லா நடவடிக்கைகள் குறித்தும் நமதூரின் எல்லா ஜமாத்தார்களையும் சந்தித்து கேட்டறியும் செயல் அறிந்து சந்தோஷமடைந்தேன்!

இத் தருணத்தில் இந்த எளியோனின் ஒரு தாழ்மையான யோசனையை எழுச்சியுடன் செயலாற்றும் SDPI இயக்கத்தார்களுக்கு தெரிவிப்பது,

நமதூரைப் பொறுத்தவரை இந்த DCW ஆலையின் ஆதிமுதல் அந்தம் வரையுள்ள அனைத்து விபரங்களையும் அடங்கப் பெற்ற ஒரு அமைப்பு "KEPA". ஆகவே தங்கள் அமைப்பு அவர்கள் மூலமாக அனைத்து விபரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்! அந்த"KEPA " விலுள்ளவர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி என்கின்ற அனைத்து விதமான தியாகங்களையும் இன்றுவரை செய்து கொண்டு எப்படியும் ஒரு நாளில் நம்முடைய முயற்சியும் ,இலட்சியமும் வென்று நமதூர் மக்களுக்கு முற்றிலும் நலம்பெறும் சுகாதாரத்தென்றல் வீசிவிடும் என்ற முழு நம்பிக்கையில் செயல்படுகிறார்கள்! அவர்களுக்கு நமதூரின் அனைத்து ஜமாத்தார்களும்,அரசியல் கட்சிகளும்,பொது நல அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்!

அந்த அடிப்படையில் மிகப்பெரும் பலம் பொருந்திய அமைப்பாகிய தங்கள் SDPI அமைப்பும் அவர்களுக்கு முதன்மையாகவும்,முதுகெலும்பாகவும் முன்னின்று அவர்களுடன் செயல்பட்டு எல்லோரும் ஒரே குடையின் கீழ் ஒத்த கருத்தோடு ஒற்றுமையாய் ஓரணியில் நின்று அந்த உயிர்கொல்லி அரக்கணை எதிர்கொள்வோமேயானால் எப்படிப்பட்ட இமயமலை அளவு இரும்பு கோட்டைக்கு நிகரான எதிரியாக இருந்தாலும்,இலவம் பஞ்சாய் ஊதி ஒழித்து விடலாம்.இது நம்முடைய இறுக்கமான இமியளவு பிரிவினையற்ற ஒற்றுமை ஒன்றால் மட்டுமே முடியும்! ஒன்றுபட்டு போராடுவோம் உன்னத வெற்றியை ஈட்டுவோம். .அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [25 September 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 37485

அஸ்ஸலாமு அழைக்கும்

DCW இன்று காயல்பட்டினத்தில் கொதித்து எழுந்து பேசுகிறோம். அன்று ஒருநாள் கடல் நீரில் பச்சை நிரகமாக தேரிந்தது , அது DCW ஆளை இல் இருந்து திறத்து விட்ட கழிவு நீரில் Mercury கலந்து வந்து கடல் நீரில் சேர்த்தது அன்று காயல் வாசிகள் கூறினார்கள் கராமத்து என்றும் மற்றும் பல விதமாக கூறினார்கள் , யாரும் அந்த நீரை எடுத்து பரிசோதிக்க வில்லை , இல்லை தேரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்களா அதனுடியா விளைவுகள் இன்று நம் காலுக்கு ஏறலாம் வந்து இருகின்றது இருப்பினும் இன்றாவது மக்கள் முழித்து கொண்டார்களே என்ற சந்தோசம்.

இன்று KEPA AND SDPI கூட்டாக காயல் மக்களை காபாற்ற வந்து இருகிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை கொடுப்பானாக

DCW வினால் இருக்க கூடும் என்ற ஒரு சந்தேகம் :
விளைவுகள் நம்ம ஊருக்கு ஏராளம்
1.பிஞ்சி குழந்தைகள் ஒரு வயதில் கண்ணாடி போடுகிறார்கள்

2.பிஞ்சி குழந்தைகள் ஒரு வயதில் மூசி திணறல் வந்து கஷ்ட படுகிறார்கள்

3.பிஞ்சி குழந்தைகள் ஒரு வயதில் நீர்பிரியாமல் கஷ்ட படுகிறார்கள்

4.பிஞ்சி குழந்தைகள் கண்ணு எரிச்சல் வந்து கஷ்ட படுகிறார்கள்

5.பிஞ்சி குழந்தைகள் ஆஸ்துமா மற்றும் பலவகை நோய் வந்து அவதி படுகிறார்கள்

இதுல இருந்து யா அல்லாஹ் எங்களை நீ காப்பாத்து

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mahmood hassan(Mammaash) (QATAR) [25 September 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 37490

my son using inhaler for breathing,I asked the reason to doctor who advice him for that.he told me your living environment near this DCW.So my son should need to use this up to he growup..may be 3 or 4 years ,now he is 2years old.must close this DCW .And better option to do that push this issue to national level with more power.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1435)?  (24/9/2014) [Views - 3019; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved