Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:45:28 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14561
#KOTW14561
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 22, 2014
யாராலும் உரிமை கோரப்படாத மூதாட்டியின் உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5203 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



படத்திலுள்ள - சுமார் 65 வயது மதிக்கத்தக்க இப்பெண், 5 நாட்களுக்கு முன் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிவித்து அவரிடம் விசாரித்தபோது, தான் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் மரணித்துவிட்டார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

அவர் யாரென அறிவதற்காக காவல்துறையின் சார்பிலும், ஊடகங்கள் வாயிலாகவும், பொதுநல அமைப்புகள் மூலமாகவும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்று வரை அதற்கு உரிமை கோர யாரும் வரவில்லை. இதனையடுத்து, உறவினர் யாரும் இல்லாதவர் என திருச்செந்தூர் காவல்துறை தீர்மானித்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.



முஸ்லிம் பெண் என அறியப்பட்டதால், அவரது உடலை அடக்கம் செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்ட விருப்பம் ஏற்கப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக காயல்பட்டினம் சுலைமான் நகருக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியினர் - உடலைக் குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்டு நல்லடக்கத்திற்கு ஆயத்தம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.













நல்லடக்கத்தின் நிறைவில் ஆற்றப்பட்ட உரையில், இந்த உடலைப் இத்தனை நாட்கள் பாதுகாத்து வைத்திருந்த திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை, நல்லடக்கம் வரை முழு ஒத்துழைப்புகளைச் செய்த திருச்செந்தூர் - ஆறுமுகநேரி காவல்துறையினர், நல்லடக்க ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை, குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்ட ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, அடக்கம் செய்ய இட அனுமதி வழங்கிய ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.



தகவல்:
முஹ்ஸின் முர்ஷித்
(மாவட்ட துணைச் செயலாளர் - தமுமுக)


தமுமுக குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்மையில் முந்திக்கொண்டனர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [22 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37426

இப்பெண்மணியின் உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லையெனில், நாம் பொறுப்பேற்று நல்லடக்கம் செய்யலாமே என, நான் சார்ந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் நண்பர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கலந்தாலோசித்து களமிறங்கிய நேரத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நன்மையில் முந்திக்கொண்டதையறிந்ததும், அவர்களுக்கு வழிவிட்டு, தமது முயற்சியைக் கைவிட்டனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [22 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37427

இந்த அநாதை ஜனசாவை அடக்க பொறுப்பேற்று நல்ல முறையில் அடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளையின் உறுபினர்களுக்கும் , மற்றும் இந்த உடலைப் பொறுப்பேற்று ஆவன செய்ய முயற்சிகளை மேற்கொண்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை உறுபினர்களுக்கும் வல்ல நாயனின் நற்கூலிகள் நிச்சயம் இந்த உலகிலும் மறு மறுஉலகிலும் கிடைக்கும் . ஆமீன்

நாமும் இந்த அநாதை ஜனசாவிற்க்காக வல்ல நாயனிடம் துஆ செய்வோம் . வல்ல நாயன் இந்த மர்ஹூமாவின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருல்வானக . ஆமீன் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fareed (Dubai) [22 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37430

Salam

Good works.Allah may rewards your amal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அல்லாஹ் அருள் புரிவானாக
posted by mackie noohuthambi (chennai) [22 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37432

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

முர்ஷித் முஹ்சின் அவர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களில் எப்போதுமே முன்னணியில் நிற்பவர்கள். எங்கள் பாசத்துக்குரிய புகாரி மச்சான் அவர்கள் வெளிநாடு செல்லும் ஒரு நண்பரை பயணம் அனுப்ப சென்ற வழியில் வெளியூர் பேருந்து நிலையத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். அப்போதும் இவர்கள் முன்னுக்கு நின்று வேறு யாரும் நெருங்கி விடாமல் ஜனாஸாவை பாதுகாத்து மின்னல் வேகத்தில் ஊருக்கு கொண்டு வந்து உற்றாரிடம் ஒப்படைத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அப்படி ஒரு நற்குணத்தை கொடுத்திருக்கிறான்.

இப்போதும் இந்த அநாதை தாயை நமதூருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பொருள் செலவுகள் செய்திருப்பார்கள். அவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். உங்கள் பெருந்தன்மைக்கு அல்லாஹ் நற் கூலியை தருவானாக. ஹாபில் அமீர் அப்பா பள்ளி ஜமாத்தார்கள் பெருந்தன்மையுடன் ஜனாஸாவை அவர்கள் முஹல்லாஹ் மையவாடியில் நல்லடக்கம் செய்ய இசைந்துள்ளார்கள். அவர்களுக்கும் அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக.

மர்ஹூமா அவர்களுக்கு மக்கள் இருக்கிறார்களா, இருந்திருந்தால் இப்படி இவர்களை அனாதையாக திரிய விட்ட குற்றத்துக்கு இந்த அரசும் தண்டிக்கும். அல்லாஹ்வும் தண்டிப்பான். அல்லாஹ் அவர்கள் பாவங்களை மன்னித்து மேலான சுவர்க்க பதியை கொடுத்தருள்வானாக.

இது ஒரு படிப்பினை. வயது முதிர்ந்தவர்களை வெளியில் தனியாக செல்ல பிள்ளைகள் அனுமதிக்க கூடாது. பெரியவர்களும் தங்கள் முதுமையை கருத்தில் கொண்டு மக்களுடன் ஒத்துழைத்து செல்ல வேண்டும். இந்த நிலை யாருக்கும் வராமல் அல்லாஹ் பாது காப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37433

உங்களின் இந்த நல்ல செயலை வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக .

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நன்மையைச் செய்வோருக்கு நன்மாராயம்…!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [22 September 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 37434

மூதாட்டியின் ஜனாசாவைப் பொறுப்பேற்று நல்லடக்கம் செய்ய துணை நின்ற அமைப்பிற்கும் அதற்காக முயற்சி செய்த அத்தனை பேருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கியருள்வானாக! ஆமீன்.

இவ்வளவு பெரிய ஊரில் இவரை அடையாளம் காணவோ அல்லது அறிமுகம் உள்ளவர்களோ இல்லாது போனது வியப்புக்குரியதே! இன்றைய சூழலில் இணையதளங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்கள் இருந்தும் செய்தியை மக்களுக்கு எத்தி வைத்தும் இந்த மூதாட்டியை இன்னார்தான் எனக்கூறி ஏற்றுக்கொள்ள தெரிந்தவர்கள் யாரும் முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

எல்லாம் வல்ல நாயன் இவரது பிழைகளைப் பொறுத்து நற்பாக்கியத்தை அருள்வானாக! இவர் உள்ளுரில் சாதாரணமாக மரணித்திருந்தால் அது செய்தியாக வந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனை பேர்களுடைய துஆக்களும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை,

ஆக, இவர் செய்த ஏதோ நன்மைதான் அவரது மரணத்தை உலகறியச் செய்ததும் ஏராளமானோரது துஆக்களைப் பெற்றதும் என எண்ணி அவருக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [22 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37437

كل مسلم اخوة
என்ற நபி மொழிக்கொப்ப நம் சமுதாயத்தவர்களில் யாரும் அனாதை இல்லை என்பதனை முன்னின்று செயல்படுத்திய அனைத்து சகோதரர் களுக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

மரணித்த மூதாட்டியின் கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by m.a.c.mohamed aboobacker bakrin (chennai) [23 September 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 37445

இந்த விஷயத்தில் ஒற்றுமையாக நமதூர் மக்கள் இருப்பது போன்று எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக இருந்தால் நமது காயல் நகர் சிறப்பாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [23 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37446

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனிதாபமிக்க மனிதநேய நன்மைகளின் மற்றுமொரு மைல்கல். வல்ல இறைவன் மர்ஹூமான அந்த மூதாட்டியின் கபூரை விசாலமாகித்தந்தருள்வானாக!

நன்மைகளை நினைத்தமாத்திரத்திலேயே செய்ய சித்தமாகி எப்பொழுதும் முனைப்புடன் முந்திக்கொள்ளும் முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதரர்களே உங்களின் இதுபோன்ற புண்ணிய காரியங்கள் தான் படைத்தவனுக்கு பிகவும் பிடித்தமான காரியம் மட்டுமல்ல இதுதான் உண்மையான இபாதத்தும் கூட ,வல்லஅல்லாஹ உங்களின் இப்புண்ணிய பணிக்குறிய கூலியை பன்மடங்கு பெருக்கி உங்களைனைவர்களின் வாழ்க்கையையையும் சிறப்பாக்கித்தந்தருள்வானாக ஆமீன்! அலலாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [23 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37448

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

كل مسلم اخوة என்ற நபி மொழிக்கொப்ப நம் சமுதாயத்தவர்களில் யாரும் அனாதை இல்லை என்பதனை முன்னின்று செயல்படுத்திய அனைத்து சகோதரர் களுக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!

மரணித்த மூதாட்டியின் கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mauroof (Dubai) [23 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37452

உங்களது இந்த நற்செயலை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [23 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37455

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.
S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37471

முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதரர்களே..

உங்களது இந்த நற்செயலை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமின் -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by S.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain) [24 September 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37474

மொபாதஹி இதுவரைக்கும் உரிமை கோரவில்லையே... இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்காத என்று நினைத்தேன். அன்றைய தினமே வல்ல இறைவன் இந்த மனிதாபிமான தமுமுக, ஆம்புலன்ஸ் மூலமாக காயல்பட்டினம் சுலைமான் நகருக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியினர் உடலைக் குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்டு நல்லடக்கத்திற்கு ஆயத்தம் செய்தனர். இவர்களை மனம்விட்டு பாராட்டும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை ஆகையால் இவர்களுடைய ஹக்கில் அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன். வல்ல இறைகன் இவர்களின் பாவைங்களை மன்னித்து மென்மேலும் வளர துணை நிற்பானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37476

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன் <<

நமது ஊர் கிளை சார்பில் நல்லதோர் காரியம் செய்திட்ட ''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனிதாபமிக்க இந்த நற் செயல் அனைத்து பொது மக்களாலும் பாராட்ட பட கூடிய ஒரு நற் செயல் & அவர்களின் இந்த பண்பு உள்ள செயலால் இவர்கள் நம் யாவர்களின் மனதிலும் பல மடங்கு உயர்ந்து விட்டார்கள் .......

வல்ல நாயன் மர்ஹூமான அவர்களின் கபூரை விசாலமாகித்தந்தருள்வானாகவும் ஆமீன்.....

நமது ஊரில் பல நல்ல ,, நல்ல ,,காரியங்களை முனைப்புடன் ...செய்திடும் '' முஸ்லிம் முன்னேற்ற கழக சகோதரர்களே '' யாவர்களுக்கும் ....வல்ல இறைவன் சிறப்பாக்கித்தந்தருள்வானாக ஆமீன்.......

தொடரட்டும் தங்களின் பல நல்ல காரியங்கள் நம் ஊருக்காக ......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பெருமிதப்படும் செயல்
posted by Salai Sheikh SALEEM (Dubai) [25 September 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37486

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக செயல் வீரர்களுக்கு உலக முஸ்லீம்களின் சார்பில் பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும். ஆமீன்.

என்ன ஆச்சர்யம் அனாதையாய் வாழ்ந்து மரித்த அன்னைக்கு எத்துனை சொந்தங்களை அல்லாஹ் வழிகாட்டி இருக்கிறான். முஸ்லீம் என்ற ஒரு முகவரியை மட்டுமே தன்னுடன் வைத்து இறந்த மூதாட்டிக்கு , எப்படிப்பட்ட ஒரு கௌரவ வழியனுப்புதல். இந்த பதிவு மற்றும் நிழற்படங்களை பார்க்கும் போது எனது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு அதிர்வு ,,விளைவு கண்கள் குளமாகின்றன ...

யா அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு மறுமையில் சுவனபதியை கொடுப்பதோடு, இக்காரியத்தில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உனது ரஹ்மத்தை அள்ளி வீசுவாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Ahamed Sulaiman (Dubai) [25 September 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37494

அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவன் இந்த பெண்மணிக்கு அழகிய சுவனத்தை வழங்குவானாக ஆமீன் .

இந்த மூதாட்டி அனாதை அல்ல அவருடைய மக்கள் இருந்தால் அவர்கள்தான் அனாதைகள் குடும்பத்தினர்கள் இருந்தால் அவர்களும் அனாதைதான்.

இந்த மொத்த சமூகமும் , சமுதாயமும் அவருடைய சொந்தங்கள்தான் .

ஒரு கவி எழுதினான் :

வீட்டின் பெயரை அன்னை இல்லம் என்று வைத்து விட்டு தாயை அநாதை இல்லத்தில் வைதானான் தனையன் .

அந்த நிஜ வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .

காயல் யாரையும் அனாதையாக விட்டுவிடுவதிலை அது ஜனாஸாவாக இருந்தாளும் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களின் ஆயுளையும் வல்ல நாயன் வளமுடன் நீட்டிப்பானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by saburudeen (dubai) [26 September 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37502

யாராலும் உரிமை கோரபடாத மர்ஹுமா அவர்களின் உடலை பெற்று என் நண்பர்களான ஹசன் அப்துல்காதர், முஹ்ஸின் [முர்ஷித்] உள்ளிடோருடன் இணைந்து நல்லடக்க ஏற்பாடுகளை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நற் கூலியை தருவானாக.. இவர்களுக்கு உடல் வலிமையும்,வியாபாரத்தில் பரக்கத்தையும் அதிகரிக்க செய்து இந்த சமுதாயத்திற்காக மென் மேலும் பாடுபட துவாசெய்கிறேன்.மேலும் இச்சம்பவம் நம் சமுகத்திற்கு பாடமாகவும் நமது எந்த வயது முதிர்ந்த தாய் தந்தைக்கும் இந்நிலை ஏற்படாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்கிறேன் .வல்ல நாயன் இந்த மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானக . ஆமீன் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1435)?  (24/9/2014) [Views - 3020; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved